Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டியை வலியுறுத்தவில்லை! - லக்ஷ்மன் கிரியெல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையோ அல்லது பிராந்திய அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கலையே வலியுறுத்தவில்லை என அரசாங்கத்தின் அரசியல் சாசன சபையின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வடக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையோ அல்லது பிராந்திய அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கலையே வலியுறுத்தவில்லை என அரசாங்கத்தின் அரசியல் சாசன சபையின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

   

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இதுகுறித்து அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டதுடன், வடக்குத் தலைவர்கள் தற்போதைய மாகாண சபை கட்டமைப்பை வலுப்படுத்துமாறே வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டி அருப்பொல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, புதிய அரசியல் சாசனத் தயாரிப்புப் பணிகள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தார். பிரதமர் தலைமையிலான அரசியல் சாசன சபையில் தான் செயலாளராக இருப்பதாகக் கூறி அமைச்சர் கூட்டு எதிர்கட்சியினர் கூறுவது போல் அரசியல் சாசனம் தொடர்பில் இன்னமும் எந்தவொரு இறுதி முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

அதேவேளை பௌத்த சாசனத்திற்கோ சிங்கள மக்களுக்கோ எதிராக எந்தக் கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்த அவர், தமது அரசாங்கம் ஒருபோதும் அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அத்துடன் அரசியல சாசனம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுக்களில் கலந்துகொண்டு தமது யோசனைகளை முன்வைத்த வடக்கிலிருந்து வந்த அரசியல் தலைவர்கள் ஒருபோதும் சமஷ்டித் தீர்வையோ பிராந்திய அலகுகளையோ வலியுறுத்தவில்லை என்றும் தெரிவித்த அவர் அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பையே வலியுறுத்துவதாகவும் கூறினார்.

கடந்த காலங்களில் தனித் தமிழீழம் மற்றும் தமிழ் மக்களுக்கான சுயாட்சி அதிகாரம் குறித்து கதைத்த வடக்கைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது என்றும் அமைச்சர் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=163184&category=TamilNews&language=tamil

தமிழ் மக்கள் தமிழ் ஈழத்துக்கு நிகரான சமஷ்டியை கேட்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
 

#தமிழ் #தேசிய #கூட்டமைப்புக்குள் #சிலரும், #வெளியே #சிலரும் , #அரசாங்கத்தை #சேர்ந்த #சிலரும் , #ஒரு #சில #பேரினவாதிகளும் , #தமிழ் #தேசிய #கூட்டமைப்பை உடைப்பதற்காக பல திட்டங்களை தீட்டிவருகின்றார்கள்....

Posted by People's Liberation Organisation of Tamil Eelam - PLOTE on Samstag, 6. August 2016

 

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி, சுயாட்சி, மாகணசபைக் கட்டமைப்பு இவற்றுள் எந்தப் பெயரைச் சூட்டிப் பிள்ளையைத் தொட்டிலிட்டாலும் கவலையில்லை. பிள்ளையைச் சுதந்திரமாக அதன் தாய் (மண்ணில்) மடியில் வளரவிட்டால் போதும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

சமஷ்டி, சுயாட்சி, மாகணசபைக் கட்டமைப்பு இவற்றுள் எந்தப் பெயரைச் சூட்டிப் பிள்ளையைத் தொட்டிலிட்டாலும் கவலையில்லை. பிள்ளையைச் சுதந்திரமாக அதன் தாய் (மண்ணில்) மடியில் வளரவிட்டால் போதும். 

 

என்னதான் ஒற்றைக்காலில் நின்றாலும் சிங்கள அரசியல் வாதிகளிடமிருந்து ஒரு .....துரும்பையும் அசைக்கமுடியாது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8.8.2016 at 9:46 PM, தமிழரசு said:

கடந்த காலங்களில் தனித் தமிழீழம் மற்றும் தமிழ் மக்களுக்கான சுயாட்சி அதிகாரம் குறித்து கதைத்த வடக்கைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது என்றும் அமைச்சர் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

லெக்ஸன் நேரத்திலை வெட்டுவம் புடுங்குவம் எண்டினம்....இப்ப சிங்களம் எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டுது.....

சரி அது கிடக்கட்டும் இஞ்சை யாழ்களத்திலையும் இரண்டொரு பேர்  சம்சும் கோஷ்டியின்ரை உண்மை முகத்தை கதைச்சால் ஏதோ எரிமலையாய் வெடிச்சிச்சினம்....இப்ப அவையையும் காணேல்லை..tw_blush:
இப்பவந்து உங்கடை வீரத்தை காட்டுறது.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.