Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேக விஷ ஊசியினால் மரணமடைந்தோர் பெயர் விபர பட்டியலை தாருங்கள்- மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலை புலி இயக்க உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும், அதனால் பலர் சந்தேகத்துக்குட்பட்ட முறையில் இதுவரையில் மரணமடைந்துள்ளதாகவும் கூறி வடமாகாணசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு ஆகும். இப்படி சுமார் 105 பேர் மரணமடைந்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டது. இதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவிலும் ஒரு முன்னாள் போராளியால் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் மாகாணசபையின் அமைச்சர் திரு. டெனிஸ்வரன் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்தை  தெரிவித்து வருவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
 
எனவே இதுபற்றி, தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில் ஆராய்ந்து மேல் நடவடிக்கை எடுக்க நான் முடிவு செய்துள்ளேன். இது தொடர்பில் மேலும் தகவல்களை, உங்கள் மாகாண சுகாதார அமைச்சின் மூலமாக  பெற்று தாருங்கள். நீங்கள் தரும் தகவல் திரட்டில் புனர்வாழ்வு பயற்சிகள் பெற்று வீடு திரும்பிய பின்னர் சந்தேகத்துக்கு உள்ளான முறையில் இறந்து போனதாக கூறப்படும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர்கள், அடையாள அட்டை இலக்கம், கடைசியாக வாழ்ந்த விலாசம், பிரதேச செயலாளர் பிரிவு, இறந்தபோது அவர்களது வயது, அவர்களது இறப்பிற்கான அதிகாரப்பூர்வ மருத்துவ காரணம், இறந்த திகதி, தொடர்பு கொள்ளக்கூடிய குடும்ப உறுப்பினரது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை உள்ளடக்கி தாருங்கள் என வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள  மின்னஞ்சலில், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும்  கூறியுள்ளதாது,


இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் உங்களுடன், கொழும்பில் இருந்து பலாலிக்கு பயணிக்கும் வேளையில் நேரடியாக உரையாடியுள்ளேன். இந்த தகவல்களை பெற்று தரும்படி அப்போதும் கோரியிருந்தேன். இந்நிலையில் உங்கள் மாகாணசபையின் அமைச்சர் திரு. டெனிஸ்வரன் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்தை  தெரிவித்து வருவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். எனவே இது தொடர்பில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, நான் கோரியுள்ள விபரங்களை கூடிய விரைவில் எனக்கு அனுப்பி வையுங்கள்.
 
மேற்கண்ட  தகவல்கள் கிடைக்கப்படுமானால், இது தொடர்பில் காத்திரமான மேல் நடவடிக்கைகள் எடுக்க முடியும் என நான் நம்புகிறேன். ஏனையோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, இத்தகைய தகவல்கள் மேலும் வலுவடைய செய்யும். இத்தகையை சம்பவங்கள் நடைபெறவில்லை என வடக்கிலும், தெற்கிலும் கூறிவருவோருக்கும் இது பதிலாக அமையும் என நம்புகிறேன். அத்துடன் இந்த தகவல்கள் முழுமையாக இல்லாத நிலையில் இந்த குற்றச்சாட்டு ஏற்புடமை கொண்ட ஒரு குற்றச்சாட்டாக ஏற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கல் இருக்கின்றது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.             

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135056/language/ta-IN/article.aspx

அற்பனுக்கு மவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் - இந்தப் பழமொழி மனோ கணேசனின் அரைவேக்காட்டு அரசியலுக்கு நன்றாகவே பொருந்துகிறது.

1 வருடமாக அமைச்சர் என்ற தனது கனவு நாற்காலியை சூடேற்றிவரும் மனோ கணேசன் இதுவரை உருப்படியாக ஒன்றைக்கூட செய்ய வக்கில்லாமல் இருப்பது, வெற்று அரைவேக்காட்டு அறிக்கை அரசியல் செய்வது அவரது கையாலாகாத தன்மையையே காட்டுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பொலத்தான் எல்லோருடைய கதையும் கிடக்கு

கூட்டமைப்பு தொடர்ந்து தமக்குள் பலயீனமடைவதே இத்தனைக்கும் காரணம்..

மனோ கணேசன் கேட்பதில் தவறு என்ன உள்ளது?


 வடக்கு மாகாணசபை இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கு என்பதால் அதற்குரிய விடயங்களை சேகரித்து கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. குப்பன் சுப்பனிடம் இருந்து எல்லாம் ஆதாரம் கேக்காமல் பொறுப்புணர்வு உள்ள ஒரு சபையிடம் மனோ கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. வடக்கு மாகாண சபையும் தாம் நிறைவேற்றும் நூற்றூக்கணக்கான செயல் திறன் அற்ற தீர்மானங்க்களைப் போன்று இத் தீர்மானத்தினையும் கிடப்பில் போடாமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

வட மாகாணசபை சில மேற்குலக நாடுகளின் உதவியுடன் சில காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் அதைக் குழப்பும் வகையில் மனோகணேசன் அறிக்கை அரசியல் செய்து செயற்படுவதை அறியாதவரை மனோகணேசனின் உளறல்கள் அர்த்தமுள்ளவையாக புலப்படலாம். 

5 minutes ago, போல் said:

வட மாகாணசபை சில மேற்குலக நாடுகளின் உதவியுடன் சில காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் அதைக் குழப்பும் வகையில் மனோகணேசன் அறிக்கை அரசியல் செய்து செயற்படுவதை அறியாதவரை மனோகணேசனின் உளறல்கள் அர்த்தமுள்ளவையாக புலப்படலாம். 

எந்தெந்த மேற்கு நாடுகள் என்றும் என்னென்ன காத்திரமான நடவடிக்கைகள் என்றும் எமக்கும் அறியத் தரலாமே போல்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணுக்கு முன்னால் (2009) நடந்த இன அழிவுகளுக்கு போதிய அளவு ஆதாரங்கள்/ஒளிப்பதிவுள் இருக்கின்ற போதும் எவ்வித நடவடிக்கைகளும் இல்லாமல் வெறும் விசாரணைகள் எனும் பெயரில் பித்தலாட்டங்களே நடந்தேறுகின்றன.

நிலமைகள் இப்படியிருக்கும் போது ஊசி எனும் பெயரில் இன்னொரு மேடையமைத்து அரசியல் ஆதாயம் தேடும் படலம் ஆரம்பித்து விட்டது.

ஆதாரம் இருக்கிறதுக்கே ஒண்டையும் புடுங்கக்காணேல்லை.....இதுக்கை இன்னும் ஆதாரம் தேவையாம்!!!!!!!!!!tw_angry:

4 minutes ago, நிழலி said:

எந்தெந்த மேற்கு நாடுகள் என்றும் என்னென்ன காத்திரமான நடவடிக்கைகள் என்றும் எமக்கும் அறியத் தரலாமே போல்?

சிலவிஷயங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதால் குழப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் நிழலி.

இதுவரை அமெரிக்கா உதவியளிப்பதாக உறுதியளித்தது சிங்கள பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் வெளிப்படை. (இதன் பின்னரே மனோகணேசன் தனது உளறல் அரசியலை தொடங்கினார்). இதை குழப்புவதற்கு சிங்கள அரச பயங்கரவாத இயந்திரம் பல முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதைவிட 2 ஐரோப்பிய நாடுகள் உரிய நடைமுறைகள், அழுத்தங்கள் ஊடாக மருத்துவ உதவிகளை வழங்க முயற்சிகளை தொடங்கியுள்ளன.

நாளடைவில் விபரங்கள் தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

மனோ கணேசன் கேட்பதில் தவறு என்ன உள்ளது?


 வடக்கு மாகாணசபை இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கு என்பதால் அதற்குரிய விடயங்களை சேகரித்து கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. குப்பன் சுப்பனிடம் இருந்து எல்லாம் ஆதாரம் கேக்காமல் பொறுப்புணர்வு உள்ள ஒரு சபையிடம் மனோ கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. வடக்கு மாகாண சபையும் தாம் நிறைவேற்றும் நூற்றூக்கணக்கான செயல் திறன் அற்ற தீர்மானங்க்களைப் போன்று இத் தீர்மானத்தினையும் கிடப்பில் போடாமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

அவர்  இந்த விடயத்தையும் முதன்மைப்படுதியது எதற்கு??

அதற்கான பதில் தான் எனது

(இந்நிலையில் உங்கள் மாகாணசபையின் அமைச்சர் திரு. டெனிஸ்வரன் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்தை  தெரிவித்து வருவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.)


 

  • கருத்துக்கள உறவுகள்

5fbc4242-79a3-4f15-b7b7-d610cd1e0cf71.jp 

13962682_651052971728910_728217134345740

சென்ற பாராளுமன்றத் தேர்தலில்... மனோ கணேசனின் கட்சி,   வடக்கு + கிழக்கு மாகாணங்களில் போட்டியிடப் போவதாக ஒரு அறிக்கை விட்ட போது.... கூத்தமைப்புக்கு, குலை நடுக்கம் வந்து.. அலறி அடித்து ஓடித் திரிந்தவர்கள். 

மனோ.... வட, கிழக்கில்  போட்டியிட்டால்... பம்மாத்து சம்சும் கும்பலின் கூத்தமைப்பு ஒரு தொகுதியிலும் வெற்றி பெற சந்தர்ப்பம் இல்லை. ஏனென்றால்.... இந்தக் கும்பலை விட.... மனோ கணேசனுக்கு,  வடக்கு + கிழக்கு மாகாண தமிழர்களின் ஆதரவு  அதிகம்.
இவர்களின் பம்மாத்து அரசியலை விட... மனோ கணேசனின் அரசியல் எவ்வளவோ திறம்.

விஷ ஊசி விவகாரம்! தமிழர்களை கைவிட்டதா அமெரிக்கா?

விஷ ஊசி விவகாரம் தொடர்பாக பரிசோதனை செய்வதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் பின்வாங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னாள் போராளிகள் 14 பேர் வரை விஷ ஊசி பரிசோதனைக்கு வடக்கு முதலமைச்சரின் செயலகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் பரிசோதனை செய்வதற்குரிய உபகரணங்கள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து விஷ ஊசி பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்படுவோருக்கான பரிசோதனைகள் உள்ளுர் வைத்தியர்களின் ஊடாக மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய கிடைக்கின்றது.

இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சரை யாழ்ப்பாணத்தில் அண்மையில் சந்தித்த போது, விஷ ஊசியை பரிசோதனை செய்வதற்கு இணக்கம் காணப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/114733

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ  விடுதலைப்  புலிகள், தமது உயிருக்கும் மேலாக  நேசித்த....
ஈழத் தமிழ் இனத்தை. அழிக்க.... உதவி செய்த நாடுகள், எதுகும்.....
முன்னாள் போராளிகளின்.. விஷ ஊசி பரிசோதனையில் சம்பந்தப் பட அருகதை அற்றவர்கள்.

"வேலிக்கு.... ஓணான் சாட்சி"  என்ற கதையாக இருக்கப் படாது. 
ஒவ்வொரு பெறுமதி மிக்க... போராளி  மனிதனின், உயிர் சம்பந்தப் பட்ட விடயம் என்பதை, 
பம்மாத்து, சுத்துமாத்து.... தமிழ் / சிங்கள   அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.  

விஷ ஊசி சோதனைகளை அமெரிக்கர்கள் மேற்கொள்ளமாட்டார்கள்! - தகவல்

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளின்போது விஷஊசிகள் ஏற்றப்பட்டமை தொடர்பில், தாம் மருத்துவ சோதனைகளை நடத்த முடியாது என்றுஅமெரிக்கா கூறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் உத்தியோகபூர்வமாக இந்த தகவல் வெளியிடப்படவில்லை.யாழ்ப்பாணத்தில் சமூக சேவைகளிலும் மருத்துவ சேவைகளிலும் ஈடுபட்டுள்ள அமெரிக்கவிமானப்படையின் மருத்துவக் குழுவினர் இந்த மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளஉடன்பட்டுள்ளதாக முன்னதாக வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன்தெரிவித்திருந்தார்.

தற்போது அவரின் தரப்பே, அமரிக்க மருத்துவக் குழுவினர் இந்த சோதனைகளைமேற்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க மருத்துவக் குழுவினர் குறித்த சோதனைகளுக்கான தயார்நிலையில் வரைமையால் அவற்றைமேற்கொள்ள முடியாது என்பதே இதற்காக கூறப்பட்ட காரணமாக அமைந்துள்ளது.

இதற்கிடையில் இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, தமது கருத்து ஒன்றில் இந்தசோதனை அமெரிக்கர்கள் செய்யத்தேவையில்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மருத்துவர்களே மேற்கொள்ள முடியும் என்றுதெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்க மருத்துவக் குழுவினர் எதிர்வரும் திங்கட்கிழமையன்று தமது சேவைகளைநிறைவு செய்யவுள்ளனர்.

http://www.tamilwin.com/medical/01/114823

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீனமான மருத்துவர் குழு ஒன்றை அமைத்து புனர்வாழ்வு அளித்து "விடுதலை" செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு அடிப்படை பரிசோதனைகளை முன்னெடுக்கக்கூட அதிகாரமில்லாமல் இருப்பது வடமாகாணசபையின் துர்ப்பாக்கியம்.  

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.