Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில். மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பு

Featured Replies

யாழில். மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பு

 

யாழில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இன்று அதிகாலை  இனம் தெரியாத நபர்கள் எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்.வைத்திய சாலை வீதியில் உள்ள வீடொன்றிலையே இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது , 

குறித்த வீட்டினர் உறக்கத்தில் இருந்த வேளை இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்து , வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை தீயிட்டு எரித்துள்ளனர்.


அத்துடன் வீட்டின் யன்னல் மற்றும் கதவுகள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு உள்ளனர். அதனால் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தால் எழுந்து  அபயக்குரல் எழுப்பியதை அடுத்து  தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

தாக்குதலாளிகளின் கைகளில் வாள் உட்பட பயங்கரமான ஆயுதங்கள் காணப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழில் அண்மை காலமாக இல்லாதிருந்த வாள் வெட்டு , குழு சண்டைகள் என்பவை கடந்த இரு தினங்களாக மீண்டும் ஆரம்பமாகி யுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றினுள் இரவு வேளை புகுந்த குழு ஒன்று கடையில் இருந்த மூவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று உள்ளனர்.

அதேவேளை நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு திருநெல்வேலி பூதவராஜர் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி உள்நுழைந்த இளைஞர் குழு ஒன்று வீட்டின் யன்னல்கள் , கதவுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு , வீட்டின் மீது கண்ணாடி போத்தல்களால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

யாழில் மீண்டும் இவ்வாறன தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டு உள்ளது. 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136673/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இருந்தவரை சிங்களவரோடு இருந்த அச்சம்.... பிரபாகரன் போனபின்பு தமிழரைத்தேடி வந்துள்ளது. 

இது சிங்கள-பௌத்த பாதுகாப்புப் பயங்கரவாதிகளின் கைவரிசை என கடுமையாக சந்தேகிக்கப்படுகிறது!

சிங்கள-பௌத்த  பாதுகாப்புப் பயங்கரவாதிகளை யாழ் மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை இந்த சம்பவங்கள் மேலும் நியாயப்படுத்துகின்றன.  

26 minutes ago, போல் said:

இது சிங்கள-பௌத்த பாதுகாப்புப் பயங்கரவாதிகளின் கைவரிசை என கடுமையாக சந்தேகிக்கப்படுகிறது!

சிங்கள-பௌத்த  பாதுகாப்புப் பயங்கரவாதிகளை யாழ் மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை இந்த சம்பவங்கள் மேலும் நியாயப்படுத்துகின்றன.  

ஆமா, யாழ் ரௌடிகள் செய்த அட்டகாசத்துக்குள் எப்படி இனவாதம் புகுந்தது. இந்த ரௌடிகள் புலிகள் காலத்திலும் இருந்தார்கள். இப்பவும் இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள். எதோ சிங்கள போலீசும், இராணுவமும் பாத்துக்கொண்டு இருக்கேக்கே கொளுத்தியது மாதிரி கதை விடுறீங்களே - இது உங்களுக்கே நன்னாயிருக்கா போல் அவர்களே.

யதார்த்தம் என்று ஒன்று உண்டு. வெறும் துவேசத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பது சீக்கிரம் உங்களுக்கும் புரியும். துவேஷ வெடியை கொளுத்தி போட்டுவிட்டு நீங்கள் வளைகுடாவில் நின்மதியாய் இருக்கலாம் - ஆனால் மக்கள்?

இந்த புலுடாவெல்லாம் இனி பலிக்காது - மக்கள் உங்களையும் என்னையும் விட ரொம்ப கெட்டிக்காரர்கள்.

இனிமேலாவது எடுத்ததுக்கெல்லாம் சிங்கள அரசும், சிங்கள போலீசும், சிங்கள இராணுவமும்தான் காரணம் என்று கூறாதீர்கள். யாழ்ப்பாணத்தில் இன்று கொஞ்சமாவது சுமுக நிலைமை இருக்கென்றால் அதற்கு காரணமே இந்த போலீசார்தான். இவர்களும் இல்லை என்றால் யாழ்ப்பாணம் அதோ கெதிதான்!!!!!
 

  • கருத்துக்கள உறவுகள்

இனம் தெரியாத நபர்கள் எப்படியப்பா சிங்கள-பௌத்த பாதுகாப்புப் பயங்கரவாதிகளாக ... இரெண்டே வரிகளில் மாற்றப்பட்டார்கள்... 
எல்லாம் அந்த அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம் 

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவு பொலிசும் இராணுவமும் இருந்தும் இப்படியான தாக்குதல்கள் நிகழ்வதை நம்ப முடியாமல் உள்ளது.அதாவது அவர்களுக்கு தெரியாமல் நிகழ சாத்தியம் இல்லை.

29 minutes ago, nunavilan said:

உவ்வளவு பொலிசும் இராணுவமும் இருந்தும் இப்படியான தாக்குதல்கள் நிகழ்வதை நம்ப முடியாமல் உள்ளது.அதாவது அவர்களுக்கு தெரியாமல் நிகழ சாத்தியம் இல்லை.

அப்படி என்றால் புலிகளின் கட்டுப்பாட்டு காலங்களில் யாழில் நடந்த சமூக சீர்கேடுகள், கொலை, கொள்ளை ++++ எல்லாமே புலிகளுக்கு தெரிந்துதான் நடந்ததென்று சொல்ல வருகிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

அப்படி என்றால் புலிகளின் கட்டுப்பாட்டு காலங்களில் யாழில் நடந்த சமூக சீர்கேடுகள், கொலை, கொள்ளை ++++ எல்லாமே புலிகளுக்கு தெரிந்துதான் நடந்ததென்று சொல்ல வருகிறீர்களா? 

புலிகளின் எண்ணிக்கையின் எத்த்னை மடங்கு இராணுவமும் பொலிசும்?
 

4 hours ago, Sasi_varnam said:

இனம் தெரியாத நபர்கள் எப்படியப்பா சிங்கள-பௌத்த பாதுகாப்புப் பயங்கரவாதிகளாக ... இரெண்டே வரிகளில் மாற்றப்பட்டார்கள்... 
எல்லாம் அந்த அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம் 

இஸ்லாமிய மயமாக்கலின் ஒரு அங்கம் இது , தமிழ் மக்களை இயல்பு வாழ்க்கை வாழ விடாமல் பண்ணி குறைந்த விலைக்கு சொத்துக்களை அமுக்கும் திட்டம் தான் இது.

மன்னார் போய்விட்டது,முல்லைத்திவு போய்விட்டது, இனியென்ன!! யாழ்ப்பாணம் தான் மிச்சம்.

இறுதியில் சிங்களவனிடம் இருந்து விடுதலை என்று புறப்பட்டு முஸ்லிமுக்கு அடிமையானது தான் 35 வருட போராட்டம் கண்ட மிச்சம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிமோ தமிழனோ, எல்லாரும் சிங்களவனின் அடிமைகள்தான்.

வடக்கில் நடக்கும் பெரும்பாலான (99%) சமூக விரோத செயல்களுக்கு சிங்கள-பௌத்த பாதுகாப்புத் துறைப்  / சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் தான் நேரடி/பின்னனிக் காரணம் என்பது யாழ் மக்களுக்கு நன்றாக தெரியும். இதை மறைக்க அந்த சமூக விரோதிகளின் கைக்கூலிகள் படாதபாடுபட்டு வருவதும் கண்கூடு.

போதைப் பொருள், கடத்தல் தொழில் இருக்கும் சில தமிழர்கள் சிங்கள-பௌத்த அரச / பாதுகாப்புத் துறைப் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் இயங்குவது மிகவும் தெளிவாக தெரிந்த விடயம். இது பொய் என்று சிங்கள பௌத்த பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்க ஒருசில அடிவருடிக் கும்பல் அலைந்து திரிவதையும், அந்தக் கும்பலுக்கு ஜால்றா அடித்து திரிவதையும் பரவலாக காணலாம்.

விடுதலைப் புலிகள் காலத்தில் சிங்கள-பௌத்த அரச / பாதுகாப்புத் துறைப் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் சமூக விரோத செயலில் ஈடுபட்ட கும்பல் தப்ப முடியாது என்பதை உலகமே அறியும். அப்போது சமூக விரோதிகள் கொலை, கொள்ளைகளை நிகழ்த்திவிட்டு சிங்கள-பௌத்த அரச / பாதுகாப்புத் துறைப் பயங்கரவாதிகளின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று வாழ்வதையும் தமிழ் மக்கள் அறிவர்.

அப்படிப்பட்ட சமூக விரோதிகள் சிலர் தற்போது சிங்கள-பௌத்த அரச / பாதுகாப்புத் துறைப் பயங்கரவாதிகளின் உதவியுடன் நீண்டக்கால விசா பெற்று தமிழ் மண்ணை சீரழிக்கவும், தமிழ் பிரதேசங்களில் சமூகவிரோத செயல்களை ஊக்குவிக்கவும், சிங்கள-பௌத்த அரச / பாதுகாப்புத் துறைப் பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்கவும் செயற்பட்டு வருவதையும் தமிழ் மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

இவர்கள் அவ்வப்போது புனைகதைகளுடன் தமிழ் மண்ணில் சமூக விரோத செயற்பாடுகளுக்கு காரணமான சிங்கள-பௌத்த அரச / பாதுகாப்புத் துறைப் பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்க கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதையும் மூளையுள்ள தமிழ் மக்கள் கவனித்துதான் வருகிறார்கள். இந்த கைக்கூலிகள் சிறு கும்பலாக இயங்குவதையும் இவர்கள் மாறி மாறி வெள்ளையடிப்பதிலும் / பச்சையடிப்பதிலும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு மாபெரும் ஆய்வு தேவையில்லை.

வடக்கில் நடக்கும் பெரும்பாலான (99%) சமூக விரோத செயல்களுக்கு பயங்கரவாதிகள் தான் நேரடி/பின்னனிக் காரணம் என்பது யாழ் மக்களுக்கு நன்றாக தெரியும். இதை மறைக்க அந்த சமூக விரோதிகளின் கைக்கூலிகள் படாதபாடுபட்டு வருவதும் கண்கூடு.

போதைப் பொருள், கடத்தல் தொழில் இருக்கும் சில தமிழர்கள் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் இயங்குவது மிகவும் தெளிவாக தெரிந்த விடயம். இது பொய் என்று பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்க ஒருசில அடிவருடிக் கும்பல் அலைந்து திரிவதையும், அந்தக் கும்பலுக்கு ஜால்றா அடித்து திரிவதையும் பரவலாக காணலாம்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் சமூக விரோத செயலில் ஈடுபட்ட கும்பல் தப்ப முடியாது என்பதை உலகமே அறியும். அப்போது சமூக விரோதிகள் கொலை, கொள்ளைகளை நிகழ்த்திவிட்டு பயங்கரவாதிகளின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று வாழ்வதையும் தமிழ் மக்கள் அறிவர்.

அப்படிப்பட்ட சமூக விரோதிகள் சிலர் தற்போது பயங்கரவாதிகளின் உதவியுடன் நீண்டக்கால விசா பெற்று தமிழ் மண்ணை சீரழிக்கவும், தமிழ் பிரதேசங்களில் சமூகவிரோத செயல்களை ஊக்குவிக்கவும்,  பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்கவும் செயற்பட்டு வருவதையும் தமிழ் மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

இவர்கள் அவ்வப்போது புனைகதைகளுடன் தமிழ் மண்ணில் சமூக விரோத செயற்பாடுகளுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்க கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதையும் மூளையுள்ள தமிழ் மக்கள் கவனித்துதான் வருகிறார்கள். இந்த கைக்கூலிகள் சிறு கும்பலாக இயங்குவதையும் இவர்கள் மாறி மாறி வெள்ளையடிப்பதிலும் / பச்சையடிப்பதிலும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு மாபெரும் ஆய்வு தேவையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.