Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு முதல்வர் குறித்து மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ கூறிய கருத்துக்கு கடும் கண்டனம்..!

Featured Replies

மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ உட்பட தெற்கிலேயிருப்பவர்கள் எழுக தமிழ்ப் பேரணியையும், முதலமைச்சர் ஆற்றிய உரையையும் ஒரு தீவிரவாதப் போக்குடையதாகச் சித்தரிக்க விரும்புகிறார்கள்.

எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மக்களுடைய அபிலாசைகளாகச் சொல்லப்பட்டவை. அது தொடர்பாக என்ன நிலைப்பாடு? இது தொடர்பாக உங்களுக்கு மாற்றுக் கருத்திருக்கிறதா?

அல்லது அது தொடர்பாக வேறு பார்வைகள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் நிமல்கா பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் சொல்லாமல் வடமாகாண முதலமைச்சருடைய பிள்ளைகளை இந்த விடயத்தில் இழுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

இது மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமால்கா பெர்ணாண்டோ போன்றவர்களின் தராதரத்திற்குக் குறைவானது என தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளரும், யாழ். பல்கலைக் கழக விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போது கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்று வடமாகாண முதலமைச்சரும் தனது இரு பிள்ளைகளையும் போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டும் என தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமால்கா பெர்னாண்டோ கூறியிருப்பது தொடர்பில் ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பிய போது அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக வடமாகாண முதலமைச்சரை ஒரு தீவிரவாதியாகக் காட்டுவதும், அவரை அரசியற்பரப்பிலிருந்து ஓரங்கட்டுவது அல்லது விளிம்பு நிலைக்குத் தள்ளுகின்றதொரு முயற்சி தான் இடம்பெறுகின்றது

அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு அரசியல் கட்சிகளிருக்கிறார்கள். ஆனால், குறைந்தபட்சம் தெற்கிலே இருக்கின்ற சிவில் சமூக அமைப்புக்கள் தானும் மக்களால் எழுக தமிழ் பேரணியில் எழுப்பட்ட கோரிக்கைகளுக்குத் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்காமலிருப்பது தான் கவலை.

பொதுபலசேனாவும், மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமால்கா பெர்ணான்டோவும் வடக்கு முதலமைச்சரைத் தாக்கிப் பேசுகிறார்கள் என்றால் தெற்கிலே உள்ள அரசியல் எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது என்பதில் எங்களுக்கு மிகப் பெரிய கவலை தோன்றுகிறது.

எங்களுக்குப் பொதுபலசேனா அமைப்பைப் பற்றியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளைப் பற்றியும் தெரியும்.

ஆனால் தெற்கிலுள்ள முற்போக்கான சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அரசியலையும் தாண்டிப் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து கோரிக்கைகள் வைத்துப் போராடும் போது அந்தக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தாமல் இனவாத அரசியல் பேசுவது என்பது எவ்வாறு ஒரு ஆரோக்கியமான நல்லிணக்கமாக அமையும்?

பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்குப் பதில் என்ன? பதில் இல்லையா? இது குறித்து தென்னிலங்கையிலுள்ள சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாவது பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/politics/01/120165?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

சங்கா ,மஹேலவின்  ஊர்வலம் பார்த்தபின்...இந்தக் கதை தேவையிலை..அதிலு ஒரு பொண்னூ ஓடிவந்து மஹேலவை கட்டிபிடிக்கிறதப் பார்த்தால் ..விரைவில் நல்லிணாக்கம் வரும்..நாம நடுப்பாசை பேசுவம்...போட்டோ கிடக்கு போடமுடியவில்லை...கண் கொள்ளாக் காட்சி..இவ்வளவு நாளூமென்னென்றூ அடக்கி வைத்தா தெரியவில்லை...இதுக்கிள்ள யாழ்பாண பேப்பர் ஒன்றூ வேம்படி பொண்ணூகள் பற்றீ எழுதுது...தூ..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

சங்கா ,மஹேலவின்  ஊர்வலம் பார்த்தபின்...இந்தக் கதை தேவையிலை..அதிலு ஒரு பொண்னூ ஓடிவந்து மஹேலவை கட்டிபிடிக்கிறதப் பார்த்தால் ..விரைவில் நல்லிணாக்கம் வரும்..நாம நடுப்பாசை பேசுவம்...போட்டோ கிடக்கு போடமுடியவில்லை...கண் கொள்ளாக் காட்சி..இவ்வளவு நாளூமென்னென்றூ அடக்கி வைத்தா தெரியவில்லை...இதுக்கிள்ள யாழ்பாண பேப்பர் ஒன்றூ வேம்படி பொண்ணூகள் பற்றீ எழுதுது...தூ..

நான் அந்தப் போட்டோவை பார்த்தேன். அந்தப் பொண்ணு நல்லாத்தானே இணங்குது. :cool:

4 hours ago, alvayan said:

சங்கா ,மஹேலவின்  ஊர்வலம் பார்த்தபின்...இந்தக் கதை தேவையிலை..அதிலு ஒரு பொண்னூ ஓடிவந்து மஹேலவை கட்டிபிடிக்கிறதப் பார்த்தால் ..விரைவில் நல்லிணாக்கம் வரும்..நாம நடுப்பாசை பேசுவம்...போட்டோ கிடக்கு போடமுடியவில்லை...கண் கொள்ளாக் காட்சி..இவ்வளவு நாளூமென்னென்றூ அடக்கி வைத்தா தெரியவில்லை...இதுக்கிள்ள யாழ்பாண பேப்பர் ஒன்றூ வேம்படி பொண்ணூகள் பற்றீ எழுதுது...தூ..

ஏன் நம்ம முதலமைச்சர் மஹேல, சங்காவோட எடுத்த படம் நேற்று உதயனில வந்ததே பாக்கலியா? 

ஒரு பொண்ணு கட்டிப் பிடிக்கிறது மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரியுதோ. சிங்க கொடியோட சிங்காரமா ஒருவர் நிற்பது மட்டும் கண்ணுக்கு தெரியாதோ.

இந்த நடைபவனி, கரவெட்டி பிரதேச செயலகத்தை வந்தடைந்த போது, கரவெட்டி பிரதேச செயலகத்தால் சேகரிக்கப்பட்ட 4 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் காசோலை பிரதேச செயலர் ச.சிவசிறி, ஏற்பாட்டாளர்களிடம் வழங்கினார்.

தொடர்ந்து, நெல்லியடி வர்த்தக சங்கத்தினரால் 1 இலட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. 

நல்லிணக்கம் இப்படியும் வரலாமே!!!

 

article_1475815793-BULL%20%281%29.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு பிடித்த ஒரு ஆளை ஹக் பண்ணுவதில் என்ன தப்பு?...புலத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானும் செய்யலாம்,ஆனால் ஊரில் இருப்பவர்கள் மட்டும் இழுத்துப் போர்த்தி அடக்கமாய் இருக்கோணும்

16 hours ago, alvayan said:

சங்கா ,மஹேலவின்  ஊர்வலம் பார்த்தபின்...இந்தக் கதை தேவையிலை..அதிலு ஒரு பொண்னூ ஓடிவந்து மஹேலவை கட்டிபிடிக்கிறதப் பார்த்தால் ..விரைவில் நல்லிணாக்கம் வரும்..நாம நடுப்பாசை பேசுவம்...போட்டோ கிடக்கு போடமுடியவில்லை...கண் கொள்ளாக் காட்சி..இவ்வளவு நாளூமென்னென்றூ அடக்கி வைத்தா தெரியவில்லை...இதுக்கிள்ள யாழ்பாண பேப்பர் ஒன்றூ வேம்படி பொண்ணூகள் பற்றீ எழுதுது...தூ..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.