Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பத் தயாராகும் 2,508 இலங்கைத் தமிழர்கள்

Featured Replies

தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பத் தயாராகும் 2,508 இலங்கைத் தமிழர்கள்
 
 
தமிழகத்திலிருந்து   தாயகம் திரும்பத் தயாராகும் 2,508 இலங்கைத் தமிழர்கள்
தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் 2,508 இலங்கைத் தமிழர்கள், நாடு திரும்புவதற்குத் தயாராக உள்ளதுடன்.
அவர்கள் தாயகம் திரும்புவதற்கு இந்திய அரசாங்கத்தின் கப்பல் சேவையை எதிர்பார்த்துள்ளனர்.
 
தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளின் இந்தப்பட்டியல் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், கையளிக்கப்பட்டுள்ளதாக ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனர் எஸ்.சி.சந்திரகாசன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் சுஸ்மா சுவராஜை சந்தித்த போது, அவர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவரிடம் கையளிக்கப்பட்டதாகவும் சந்திரகாசன் குறிப்பிட்டார்.
 
தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு கட்டணமின்றி கப்பல் வசதிகளை செய்து கொடுக்கத் தயார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உறுதியளித்திருந்தார்.
 
தாயகம் திரும்ப விரும்பும் அகதிகள் தொடர்பான பட்டியல். இலங்கை அரசாங்கம், தமிழ் நாடு அரசு, வடக்கு மாகாண முதலமை ச்சர் மற்றும் ஆளுனர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் பட்டியலின் படி, தாயகம் திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளவர்களில் மன்னாரைச் சேர்ந்த 745 பேரும், திருகோணமலையைச் சேர்ந்த 654 பேரும், வவுனியாவைச் சேர்ந்த 574 பேரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 236 பேரும், கிளிநொச்சியைச் சேர்ந்த 148 பேரும், மட்டக்களப்பைச் சேர்ந்த 117 பேரும், கொழும்பைச் சேர்ந்த 6 பேரும், கண்டியைச் சேர்ந்த ஒருவரும் அடங்கியுள்ளனர்.
 
இந்தப் பட்டியலில் தாயகம் திரும்ப விரும்புபவரின் அடையாள அட்டை இலக்கம், அவரது பெயர், வயது, தந்தையின் பெயர், தங்கியுள்ள அகதி முகாம், இலங்கைக்கு திரும்ப விரும்புகின்ற இடம், விரும்பும் பயண மார்க்கம் என்பன உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
 
தமிழ்நாட்டின் கடலூர், இராமேஸ்வரம் துறைமுகங்களில் இருந்து காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களுக்கு, தலா 500 பேர் வீதம் அகதிகளை கப்பல்களில் அனுப்பிவைக்க முடியும் என்றும் சந்திரகாசன் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/18852

திரும்பும் அகதிகள் வரவேற்கப்பட வேண்டியவர்கள்!

இவர்களில் காணிகள் இல்லாதவர்களுக்கு குறைந்தது 1/2 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையிலான (குடும்ப அளவிற்கு ஏற்ப) காணிகளும், வீடமைப்புத் திட்டமும், 2 வருடங்களுக்கு வாழ்வாதாரமும்  வழங்க வேண்டியது இவர்கள் சொத்துக்களை நாசம் செய்த சிங்கள-பௌத்த அரசின் முதலாவது கடமையாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் வாழ்வாதாரமும் சிறுவர்களின் கல்வி, மற்றும் வைத்திய சேவைகளும் சிறப்பான வகையில் செயல்படுத்தப் பட வேண்டும்...!

  • கருத்துக்கள உறவுகள்

 ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் இருக்கும் அகதிகள் வந்தாகவேண்டும் வந்தால் ஓரளவேனும் நிலத்தை தமிழர்கள் கையில் வைத்து கொள்ளலாம் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு தொடரப்பட்டுள்ளது இதூ பற்றிய செய்திகள் தெரிந்தும் மொளனமான மந்தைகளாக இருக்கின்றறனர் ஆனால் பிள்ளையான் காலத்தில் இது தடுத்து நிறுத்தி வைக்கப்பபட்டது ஆனால் இன்று 18 நாளுக்குள் முளைத்த பள்ளி வாயில் பல ஏக்கர் காணிகள் களவாடப்பட்டு வருகிறது  வருத்தம் அளிக்கிறது

8 hours ago, முனிவர் ஜீ said:

 ஆனால் பிள்ளையான் காலத்தில் இது தடுத்து நிறுத்தி வைக்கப்பபட்டது ஆனால் இன்று 18 நாளுக்குள் முளைத்த பள்ளி வாயில் பல ஏக்கர் காணிகள் களவாடப்பட்டு வருகிறது  வருத்தம் அளிக்கிறது

இந்த விடயத்தில் பிள்ளையான் மட்டுமல்ல கருணாவின் நடவடிக்கைகளாலும் கள்ளக்காணி பிடிக்கும் முஸ்லீம் காடையர்களின் அராஜகங்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தன.  பிற்காலத்தில் இவர்கள் புத்தி பேதலித்து வழிதவறிச் சென்றதால் கிழக்கு மாகாணம் பாரிய அழிவுகளை சந்தித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, போல் said:

இந்த விடயத்தில் பிள்ளையான் மட்டுமல்ல கருணாவின் நடவடிக்கைகளாலும் கள்ளக்காணி பிடிக்கும் முஸ்லீம் காடையர்களின் அராஜகங்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தன.  பிற்காலத்தில் இவர்கள் புத்தி பேதலித்து வழிதவறிச் சென்றதால் கிழக்கு மாகாணம் பாரிய அழிவுகளை சந்தித்தது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் முதலமைச்சர் உருவாக்கப்பட்டதில் இருந்து  தான் தொடர்கிறது  இன்னும் ஒருதகவல் ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கென அடியாள் கூட்டமும் செயல்படுவதால் கிழக்கு மாகாணம் அரித்து எடுக்கப்படுகிறது என்று கூறுகிறேன்

5 hours ago, முனிவர் ஜீ said:

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் முதலமைச்சர் உருவாக்கப்பட்டதில் இருந்து  தான் தொடர்கிறது  இன்னும் ஒருதகவல் ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கென அடியாள் கூட்டமும் செயல்படுவதால் கிழக்கு மாகாணம் அரித்து எடுக்கப்படுகிறது என்று கூறுகிறேன்

கிழக்கில் சில பிரதேசங்களாவது தமிழர் கையில் இருக்கு, ஆனால் வடக்கு மாகாணம்இன்னும் சில வருடங்களில் முழுவதும் இஸ்லாமியமயப்படுத்தப்பட்டுவிடும்.

Edited by Dash

9 hours ago, முனிவர் ஜீ said:

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் முதலமைச்சர் உருவாக்கப்பட்டதில் இருந்து  தான் தொடர்கிறது  இன்னும் ஒருதகவல் ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கென அடியாள் கூட்டமும் செயல்படுவதால் கிழக்கு மாகாணம் அரித்து எடுக்கப்படுகிறது என்று கூறுகிறேன்

முன்பு கிழக்கு மாகாணத்துக்கு அடிக்கடி வருபவன். கடந்த 5, 6 வருடங்களாக வரும் சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. எந்தெந்த பகுதிகளில் கள்ளகாணிகள் பிடிக்கப்படுகின்றன என்ற விபரங்களை சேகரித்து இங்கு பதியுங்கள். தற்போது திருகோணமலைப் பிராந்தியத்தில் முஸ்லீம் காடையர்களால் களவாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் காணிகள் பற்றிய விபரங்களை சேகரித்து வருகிறோம். 

முஸ்லீம் காடையர்கள் மட்டுமல்ல சிங்களக் காடையர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் காணிகள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

முன்பு கிழக்கு மாகாணத்துக்கு அடிக்கடி வருபவன். கடந்த 5, 6 வருடங்களாக வரும் சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. எந்தெந்த பகுதிகளில் கள்ளகாணிகள் பிடிக்கப்படுகின்றன என்ற விபரங்களை சேகரித்து இங்கு பதியுங்கள். தற்போது திருகோணமலைப் பிராந்தியத்தில் முஸ்லீம் காடையர்களால் களவாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் காணிகள் பற்றிய விபரங்களை சேகரித்து வருகிறோம். 

முஸ்லீம் காடையர்கள் மட்டுமல்ல சிங்களக் காடையர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் காணிகள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

விபரங்கள்  இருக்கிரது தேவைப்படுமிடத்தில் கொடுக்கப்படும் சில தமிழ் பண முதலைகளூம் அடக்கம் இதில் என்னத்த சொல்வது :cool:

On 13/10/2016 at 8:56 AM, போல் said:

திரும்பும் அகதிகள் வரவேற்கப்பட வேண்டியவர்கள்!

இவர்களில் காணிகள் இல்லாதவர்களுக்கு குறைந்தது 1/2 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையிலான (குடும்ப அளவிற்கு ஏற்ப) காணிகளும், வீடமைப்புத் திட்டமும், 2 வருடங்களுக்கு வாழ்வாதாரமும்  வழங்க வேண்டியது இவர்கள் சொத்துக்களை நாசம் செய்த சிங்கள-பௌத்த அரசின் முதலாவது கடமையாகும். 

கொழும்பில் வாழும் தமிழ் மக்களை வன்னிக்கு இடம் பெயர்த்தினால் என்னா ?? முஸ்லிம்களின் அராஜ்ஜாகத்தை இலகுவில் அடக்கலாம் 

1 minute ago, Dash said:

கொழும்பில் வாழும் தமிழ் மக்களை வன்னிக்கு இடம் பெயர்த்தினால் என்னா ?? முஸ்லிம்களின் அராஜ்ஜாகத்தை இலகுவில் அடக்கலாம் 

முதலில் அகதிகள் வரட்டுமே!

பின்னர் கொழும்பிலுள்ள தமிழர்கள் அகதிகளாக வருவர்!

38 minutes ago, போல் said:

முதலில் அகதிகள் வரட்டுமே!

பின்னர் கொழும்பிலுள்ள தமிழர்கள் அகதிகளாக வருவர்!

தமிழன் முஸ்லிமுடன் பொருளாதார தொடர்புகளை நிறுத்தினாலே அரைவாசி பிரச்சனை முடிந்து விடும். 

முஸ்லீம் வியாபாரங்களை புறக்கணிக்குமாறு வெளிப்படையான பிரச்சாரங்கள் நடத்த வேண்டும்!!!!

3 hours ago, Dash said:

கொழும்பில் வாழும் தமிழ் மக்களை வன்னிக்கு இடம் பெயர்த்தினால் என்னா ?? முஸ்லிம்களின் அராஜ்ஜாகத்தை இலகுவில் அடக்கலாம் 

 

3 hours ago, போல் said:

முதலில் அகதிகள் வரட்டுமே!

பின்னர் கொழும்பிலுள்ள தமிழர்கள் அகதிகளாக வருவர்!

அப்ப மேலை நாடுகளில் உள்ள போலி அகதிகள் எப்ப வருவார்கள் அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

 

அப்ப மேலை நாடுகளில் உள்ள போலி அகதிகள் எப்ப வருவார்கள் அண்ணை?

ஆற அமர இருந்து யோசிக்க வேண்டிய கேள்வியும் கூட போல் அவர்களை அழைக்கிறேன் :unsure:

7 hours ago, ஜீவன் சிவா said:

 

அப்ப மேலை நாடுகளில் உள்ள போலி அகதிகள் எப்ப வருவார்கள் அண்ணை?

போலி அகதிகளின் விபரத்தை தந்தால் அவர்களை எப்படி வரவைப்பது என்று ஒரு முடிவெடுக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.10.2016 at 2:16 PM, ஜீவன் சிவா said:

அப்ப மேலை நாடுகளில் உள்ள போலி அகதிகள் எப்ப வருவார்கள் அண்ணை?

புலிகள் அழிஞ்சால் நாங்கள் ஊருக்கு சந்தோசமாக போவம் எண்டு சொன்ன ஆக்கள் கனபேர் அமசடக்காய் மழையிலை நனைஞ்ச கோழிமாதிரி கூனிகுறுகிக்கொண்டு திரியினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.