Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

Featured Replies

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

புளிச்சக்கீரை மட்டன் குழம்பு மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

 
ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

புளிச்சக்கீரை - 1 கட்டு
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 3-4
கிராம்பு - 2-3
பட்டை - 1 இன்ச்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :

* புளிச்சகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக்கீரையை சேர்த்து வதக்கி மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, வைத்துக் கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

* பின் அதில் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* விசில் போனதும், குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் புளிச்சக்கீரையை நன்கு மசித்து சேர்த்து கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து, பின் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

* ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு ரெடி!!!

http://www.maalaimalar.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரா உணவுகள் என்றாலே உறைப்பு தூக்கும் , அதிலும் இதில் இருதடவை காரம் சேர்க்கச் சொல்லியிருக்கு  கவனம். தேக்கரண்டியால் தூள் போடவும் .....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:

ஆந்திரா உணவுகள் என்றாலே உறைப்பு தூக்கும் , அதிலும் இதில் இருதடவை காரம் சேர்க்கச் சொல்லியிருக்கு  கவனம். தேக்கரண்டியால் தூள் போடவும் .....! tw_blush:

சுவியர்...

புளிச்ச கீரை எண்டால் எதை சொல்லுகிறார்கள் ?

  • தொடங்கியவர்
13 minutes ago, Nathamuni said:

சுவியர்...

புளிச்ச கீரை எண்டால் எதை சொல்லுகிறார்கள் ?

http://img.dinakaran.com/Healthnew/H_image/ht4297.jpg

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை

Date: 2016-02-17@ 15:37:27
ht4297.jpg

கட்டிகளை ஆற்ற கூடியதும், பித்தத்தை போக்கவல்லதும், உடல் வலி, வீக்கத்தை குணமாக்கும் தன்மை கொண்டதும், பசியை தூண்டக் கூடியதுமான புளிச்ச கீரையை பற்றி பார்ப்போம்.  புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது.புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.

புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது. வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.புளிச்ச கீரையின் மொட்டுக்களை பயன்படுத்தி வாய் கசப்பு, வாந்திக்கான மருந்து தயாரிக்கலாம்: இதற்கு தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை மொட்டுக்கள், மிளகுப் பொடி, தேன். சுமார் 10 மொட்டுக்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டிய பின் உப்பு, மிளகு, தேன் சேர்த்து கலந்து குடித்தால் தலைசுற்றல் சரியாகும். பித்த வாந்திக்கான மருந்தாகிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த கீரை புளிப்பு சத்தை உடையது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, அரிப்பு, மயக்கம் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. பித்த சமனியாக விளங்குகிறது. புளிச்ச கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதய நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. புளிச்ச கீரையை பயன்படுத்தி சூப் தயாரிக்கலாம்: தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை, பட்டை, பூண்டு, வெங்காயம், நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு.  

பாத்திரத்தில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன் ஒரு துண்டு பட்டை, 2 பல் பூண்டு தட்டி போடவும். வெங்காயம் வதங்கியவுடன் புளிச்ச கீரையை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி மிளகு பொடி சேர்த்து குடித்துவர உடல்நலம் பெறும். புளிச்ச கீரை உன்னதமான உணவு மற்றும் மருந்தாகிறது. ஊடு பயிராக பயிரிடப்படும் இது வாயு கோளாறுகளை போக்கும். சத்து குறைபாட்டினால் ஏற்படும் எலும்புருக்கி நோயை குணமாக்கும். வாந்தியை நிறுத்த கூடியது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரக கோளாறுகளை போக்கும். சிறுநீர் பெருக்கியாக உள்ளது.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=4307

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பால்கனியில் சாடிக்குள் வைத்திருக்கின்றேன். அதிகமாய் பருப்புக்குள் போட்டு சமைப்பதுண்டு....! tw_blush:

பகிர்வுக்கு நன்றி நவீனன்....!  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நானும் பால்கனியில் சாடிக்குள் வைத்திருக்கின்றேன். அதிகமாய் பருப்புக்குள் போட்டு சமைப்பதுண்டு....! tw_blush:

பகிர்வுக்கு நன்றி நவீனன்....!  

பெரிய பல்கனி போல கிடக்குது சுவியர்...

வேறு என்ன எல்லாம் கிடக்குது... கத்தரிக்காயும் இருக்குது எண்டு முன்னம் சொன்னனியள்...

புளிச்சகீரை.... வேறு பெயர் உண்டா? தமிழ் கடைகளில் கிடைக்கிறதா?

  • தொடங்கியவர்
54 minutes ago, Nathamuni said:

பெரிய பல்கனி போல கிடக்குது சுவியர்...

வேறு என்ன எல்லாம் கிடக்குது... கத்தரிக்காயும் இருக்குது எண்டு முன்னம் சொன்னனியள்...

புளிச்சகீரை.... வேறு பெயர் உண்டா? தமிழ் கடைகளில் கிடைக்கிறதா?

நானும் இதைத்தான் கேட்க நினைத்தேன்..:) எனக்கு பூ கன்று வைக்கவே இடம் போதவில்லை..

வேறு தமிழ் பெயர் இருக்கும் என்று நான் நம்பவில்லை.. ஆனால் லண்டனில் நிச்சயம் இருக்கும் தமிழ் கடைகளில்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

நானும் இதைத்தான் கேட்க நினைத்தேன்..:) எனக்கு பூ கன்று வைக்கவே இடம் போதவில்லை..

வேறு தமிழ் பெயர் இருக்கும் என்று நான் நம்பவில்லை.. ஆனால் லண்டனில் நிச்சயம் இருக்கும் தமிழ் கடைகளில்.

இரண்டு பால்கனி உண்டு, ஒன்று பெரிது, மற்றது சிறிது , பேபி றோஸ் ,பூக்கண்டுகள் ,6 மிளகாய் கண்டு, செரி தக்காளி 2 நிறைய காய்க்கும்,பிள்ளைகத்தாளை,கத்தரி 2 காய்த்திருக்கு,தேசிக் கண்டு சிறியது 3, அருகம் புல்லு பிள்ளையாருக்கு , பாகற்காய் கொடி விட்டுக் கொண்டு போகுது. குளிர் வந்திட்டுது இனி காய்க்காது, ஊர் குண்டு மல்லிகை, மாதுளங் கண்டு, துளசி சிகப்பும், பச்சையும் கண்ணனுக்கு, கள்ளி கண்டுகள், மல்லி இலைக்கண்டுகள்,புளிச்சல் கீரை இங்குள்ள கறிக்கு வாசனை சேர்க்கும் தைன் ,லாவண்டர் போன்ற சில, பிறைஸ் பழக் கண்டுகள் 6,குளிருக்கும் வெளியே இருக்கும் காட்டு மல்லிகை,இரு நீளமான சாடிக்குள் வெங்காயம், இஞ்சி நாலைந்து ,ஸீஸன் பூக்கண்டுகள் தினமும் சுவாமிக்கு வைக்க, இவைதவிர வீட்டுக்குள் 18/20 வருடங்களாக பிள்ளைகளாக இருக்கும் 4/6 மரங்கள் (ஆலம் இலைபோல் இரண்டு வகை, இத்தி இலைபோல் ஒன்று,மணிபிளாண்ட், தொங்கும் பூ உள்ள ஒரு செடி,பச்சை வெத்திலைபோல் ஒரு செடி ..... ஆஹா எனக்கே கண்பட்டுடும் போல இருக்கு....!!

இனி குளிர் துடங்குவதால் சிலவற்றை வீட்டுக்குள் எடுத்து வைக்க வேண்டும். சும்மா ஒரு மனமகிழ்ச்சிக்கும், சமயத்தில் மனிசியின் புடுங்குப் பாடுகளில் இருந்து தப்புவதற்கும்..., ஓண்டுக்குள் ஒன்றாய் பழகிட்டம் உங்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்லி ஆறுவது ....! tw_blush:

Edited by suvy
எழுத்துப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

வெந்தயக் கீரையையா புளிச்ச கீரை என சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

வெந்தயக் கீரையையா புளிச்ச கீரை என சொல்கிறீர்கள்?

வெந்தயக் கீரை வேறு இது வேறு... புளிச்சக் தனியாக ஆக்க முடியாது , பன்னிர் போல சப்போட்டாத்தான் இயங்கும்....! tw_blush:

கற்பூரவல்லியும் நாலுமணிக் கண்டும்கூட இருக்கு....! 

Edited by suvy
சிறு திருத்தம்.

  • தொடங்கியவர்
24 minutes ago, ரதி said:

வெந்தயக் கீரையையா புளிச்ச கீரை என சொல்கிறீர்கள்?

http://www.idhayamtv.in/wp-content/uploads/2016/04/88475945-venthaiyanm.jpg

 

வெந்தய கீரை

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவியண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

நான் புளிச்ச கீரையை தமிழ் கடையில் கண்ட ஞாபகம் இல்லை. இனி மேல் போனால் விசாரித்துப் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

நான் புளிச்ச கீரையை தமிழ் கடையில் கண்ட ஞாபகம் இல்லை. இனி மேல் போனால் விசாரித்துப் பார்க்க வேண்டும்.

நான் நினைக்கேல்ல கடைகளில் கிடைக்கும் என்று , சில சமயம் வாரச் சந்தைகளில் கிடைக்கலாம்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://img.dinakaran.com/Healthnew/H_image/ht4297.jpg

அட இதுதான் புளிக்கீரை....நான் ஊரிலை இருக்கேக்கை இலையை பச்சையாகவே கடிச்சு அமுக்கியிருக்கிறன். வித்தியாசமான புளியாய் இருக்கும். சமைச்சு சாப்பிட்ட ஞாபகம் இல்லை......
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

http://img.dinakaran.com/Healthnew/H_image/ht4297.jpg

அட இதுதான் புளிக்கீரை....நான் ஊரிலை இருக்கேக்கை இலையை பச்சையாகவே கடிச்சு அமுக்கியிருக்கிறன். வித்தியாசமான புளியாய் இருக்கும். சமைச்சு சாப்பிட்ட ஞாபகம் இல்லை......
 

ஊரில் இதனை.... பனங் கீரை, என்று சொல்வார்கள் குமாரசாமி அண்ணை.
திருநெல்வேலி சந்தையில்.... இடைக்கிடை விற்பனை செய்வார்கள்.
மிகவும் ருசியானது, நினைக்கவே வாயூறுது. :grin:

18 hours ago, suvy said:

கற்பூரவல்லியும் நாலுமணிக் கண்டும்கூட இருக்கு....! 

கோமளவல்லி  சீ கற்பூரவல்லி இருக்கட்டும் உந்த நாலுமணிக்கண்டுக்கு ஐரோப்பிய நேரவித்தியாசம் தெரியுமா அல்லது இலங்கை 4 மணிக்குத்தான் பூக்குதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

கோமளவல்லி  சீ கற்பூரவல்லி இருக்கட்டும் உந்த நாலுமணிக்கண்டுக்கு ஐரோப்பிய நேரவித்தியாசம் தெரியுமா அல்லது இலங்கை 4 மணிக்குத்தான் பூக்குதா?

இங்கும் பின்னேரம்தான் பூக்கும், இதில் பிங்க், மஞ்சள், சிகப்பு என்று இருக்கு. என்னிடம் இருப்பது பிங்க் ....! tw_blush: அவையும் எங்களைப்போல்தான் இடத்துக்கு ஏற்றாற் போல் தங்களை மாத்திக்குவினம்.

யப்பான் றோஸ் பல நிறங்கள் + வித்தியாசமான சைஸ் பூக்கள் ,வாடாமல்லி, காகிதப் பூ (போகன்வில்லா). எல்லாம் வாங்க முடியும். ஆனால் இவைகள் என்னிடம் இல்லை. வாழைகள், மணி வாழைகள்  நிறைய வீடுகளில் வைத்திருக்கின்றார்கள். tw_blush:

2 hours ago, suvy said:

யப்பான் றோஸ் பல நிறங்கள் + வித்தியாசமான சைஸ் பூக்கள் ,வாடாமல்லி, காகிதப் பூ (போகன்வில்லா). எல்லாம் வாங்க முடியும்.

பிரான்சில் இருந்து எனது நண்பரின் தங்கை குடும்பம் ஆகஸ்டில் என்னுடன் 3 கிழமைகள் தங்கி இருந்தார்கள். போகும்போது ஜீவன் அண்ணை உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது பிரான்சில் இருந்தால் ஏதாவது தந்து விடுங்கோ கொடுக்கிறோம் என்கிறார்கள். நான்தான் அப்படி ஒருவரும் இல்லை என்றேன். குடும்பத்தில் 5 பேர் - 150 கிலோவை நிரப்ப இராசவள்ளி கூட வாங்கினார்கள். தெரிந்திருந்தால் சீனியாஸ் முதல் வாடாமல்லிகை விதைகள் வரை உங்களுக்கு அனுப்பி இருக்கலாம். எனக்கும் மரங்கள் + பூக்கள் மீது ஒரு காதல்தான். பாக்கலாம் அப்படி ஒரு சந்தர்ப்பம் மறுபடியும் கிடைத்தால் தொடர்பு கொள்ளுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கறிவேப்பிலை கண்டு ஒன்று வைக்கத்தான் விருப்பம். நல்ல விதைகள் கிடைத்தால் பல்லால் கடித்தாவது குருத்தை வெளியில் எடுத்துக் போடுவேன். பெர்லினில் எனது சகலை ஒரு சிறு கண்டு வைத்திருக்கின்றார்....! tw_blush:

சீனியாஸ் எல்லாம் பல வெரைட்டிகளில் இங்கு கிடைக்குது.....! குளிருக்கு எல்லாத்தையும் வீட்டுக்குள் வைக்கேலாதுதானே, 2 ஈரோக்கு 6 கண்டு வீதம் எடுக்கலாம்.....! tw_blush: 

1 hour ago, suvy said:

எனக்கு கறிவேப்பிலை கண்டு ஒன்று வைக்கத்தான் விருப்பம்.

நம்மட நவீனன் 2 கறிவேப்பிலை கண்டுகளை கனடாவிலஇருந்து கொண்டு வந்து வைத்திருக்கிறார் - இரண்டும் முளைத்திருந்தால் ஒண்டை லாவலாமே. இல்லாட்டி நம்ம சுமேரியர் கறிவேப்பிலை கண்டுகள் விக்கிறாராம் - வாங்குங்கோ.

 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஜீவன் சிவா said:

நம்மட நவீனன் 2 கறிவேப்பிலை கண்டுகளை கனடாவிலஇருந்து கொண்டு வந்து வைத்திருக்கிறார் - இரண்டும் முளைத்திருந்தால் ஒண்டை லாவலாமே. இல்லாட்டி நம்ம சுமேரியர் கறிவேப்பிலை கண்டுகள் விக்கிறாராம் - வாங்குங்கோ.

 

அடுத்த தடவை நான் வடக்கை போனாலும் சரி கிழக்கை போனாலும் சரி கறிவேப்பிலை கண்டு உண்டு...!  tw_blush:

கடவுளே சுமேயின் கொன்சவேற்றிவ்  சேவ்ரியாய் முடிஞ்சிடனும்....! நவீனன் எனக்கு தாற கண்டு மட்டும் ரொம்ப ஜோராய் வளரனும்...!  tw_blush:

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்புக்கும் கறிவேப்பிலைக்கும் என்ன சம்பந்தம் எண்டு யாராவது கேட்கமுதல் ஜீவன் எஸ்கேப்.

  • தொடங்கியவர்
3 hours ago, suvy said:

எனக்கு கறிவேப்பிலை கண்டு ஒன்று வைக்கத்தான் விருப்பம். நல்ல விதைகள் கிடைத்தால் பல்லால் கடித்தாவது குருத்தை வெளியில் எடுத்துக் போடுவேன். பெர்லினில் எனது சகலை ஒரு சிறு கண்டு வைத்திருக்கின்றார்....! tw_blush:

 

நான் ebay இல் வாங்கினேன். ஆனால் முளைக்கவே இல்லை..:(

2 hours ago, ஜீவன் சிவா said:

நம்மட நவீனன் 2 கறிவேப்பிலை கண்டுகளை கனடாவிலஇருந்து கொண்டு வந்து வைத்திருக்கிறார் - இரண்டும் முளைத்திருந்தால் ஒண்டை லாவலாமே. இல்லாட்டி நம்ம சுமேரியர் கறிவேப்பிலை கண்டுகள் விக்கிறாராம் - வாங்குங்கோ.

 

டூ லேட்.. அது அடுத்த நாளே கை மாறிவிட்டது.

1 hour ago, suvy said:

 

கடவுளே சுமேயின் கொன்சவேற்றிவ்  சேவ்ரியாய் முடிஞ்சிடனும்....!

:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.