Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாந்தோட்டை துறைமுகத்தை யார் வாங்கினாலும் பதவிக்கு வந்ததும் என்னால் பறிக்கப்படும்! - மகிந்த

Featured Replies

அம்பாந்தோட்டை துறைமுகத்தை யார் வாங்கினாலும் பதவிக்கு வந்ததும் என்னால் பறிக்கப்படும்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை யார் வேண்டினாலும், நான் பதவிக்கு வந்ததும் அவற்றையெல்லாம் பறிப்பேன் என மகிந்த சூளுரைத்துள்ளார்.

மத்தல மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுக நிறுவனங்களை கையகப்படுத்த இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் போட்டிபோடுகின்றன.

இது பற்றி பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், எனது ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களான, மத்தல, அம்பாந்தோட்டைத் துறைமுக நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனங்களையும் கொள்வனவு செய்வதற்கு சீன, இந்தியா முதலீட்டாளர்கள் முயற்சித்தாலும் எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

ஆனால், எமது ஆட்சியில் அவையனைத்தையும் மீண்டும் எமது அரசாங்கத்துக்கே எடுத்துக்கொள்வோம் என சூளுரைத்துள்ளார்.

http://thuliyam.com/?p=47974

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஓரு ஒராமாக போய் விளையடுப்பா ...tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தம்பி ஓரு ஒராமாக போய் விளையடுப்பா ...tw_dizzy:

இவருக்கும் ஒரு நப்பாசை.

அதேவேளை இவர்கள், தமிழருக்கு கொடுப்பதை பின்னர் பறிக்க கூடியவர்கள் - பதவிக்கு வந்தால்..

நம்மூர்ல அணில் ( மரத்தில் ) ஏறி ஓட விட்ட நாய் என்பார்கள். (அணில் ஏற, விட்ட நாய் ). கீழே நின்று மரத்தினை அண்ணாந்து பார்த்து குரைக்குமே, அதுதான் இவரும்  செய்கிறார்.

இந்த மனிதர்,பேராசையால் மேலும் 6 ஆண்டுகள் கிடைக்கும் என்று, இருந்த 2 ஆண்களையும் விட்டு இப்போ பேய் பிசாசுகள் போல அல்லாடிக் கொண்டு திரிகிறார். (உண்மையில் நாலுக்கு ஆக இரண்டினை விட்டார் )

சீனாக்காரன் விரும்பினாலும், அமெரிக்காகாரன் விட மாட்டான்.

தெரிந்தும், ஒரு சிறு நம்பிக்கை. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 அவளைக்  காணேல பிள்ளைகள் எத்தனை என்று  கணக்குப் போடுறார். உள்நாட்டுக்கை   குழப்புறது காணாதெண்டு சீனாக்காரனையும் குழப்பி, குட்டையில மீன் பிடிக்க வெளிக்கிட்டு எங்கேயோ வளமாய்  மாட்டுப்பட்டு பரிதவிக்கப்போறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே.... மத்தள விமான நிலையத்தை ஒருவரும் பயன் படுத்தாமையால்,
அரசுக்கு மாதம் தோறும் பல கோடி நட் டம் ஏற்படுவதாகவும், 
அதனால் ஒரு பகுதியை... நெல் களஞ்சியமாக பயன் படுத்துகின்றார்கள் என்று முன்பு  ஒரு செய்தி வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் கேள்விபட்டியளோ தெரியாது டிரைவிங்லை டிபென்சிவ் டிரைவிங் (defensive driving) எண்டும் ஒண்டிருக்கிறது. அது ரோட்டிலை நாங்கள் கவனமா வாகனத்தை ஓட்டினாலும் வேறை யாராவது பிழைவிட்டால் அதிலையிருந்து வருற ஆபத்திலையிருந்து எப்படி எங்களை காப்பற்றிக்கொள்வது என்பதை பற்றினது. இது டிரைவிங்குக்கு மட்டுமில்லை வேற கன விசத்துக்கும் பொருந்தும் என்பது என்ரை நிலைப்பாடு. எங்கடை தமிழ் அரசியல்வாதிகளிட்டை இந்த ரெக்னிக்  கொஞ்சமேனும் கிடையாது. கொஞ்சநாளைக்கு செய்து பார்த்தா தெரியும் நாங்க எங்கேயோ போயிடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

யாரும் கேள்விபட்டியளோ தெரியாது டிரைவிங்லை டிபென்சிவ் டிரைவிங் (defensive driving) எண்டும் ஒண்டிருக்கிறது. அது ரோட்டிலை நாங்கள் கவனமா வாகனத்தை ஓட்டினாலும் வேறை யாராவது பிழைவிட்டால் அதிலையிருந்து வருற ஆபத்திலையிருந்து எப்படி எங்களை காப்பற்றிக்கொள்வது என்பதை பற்றினது. இது டிரைவிங்குக்கு மட்டுமில்லை வேற கன விசத்துக்கும் பொருந்தும் என்பது என்ரை நிலைப்பாடு. எங்கடை தமிழ் அரசியல்வாதிகளிட்டை இந்த ரெக்னிக்  கொஞ்சமேனும் கிடையாது. கொஞ்சநாளைக்கு செய்து பார்த்தா தெரியும் நாங்க எங்கேயோ போயிடுவம்.

அவர்களுக்கு டிரைவிங்கே தெரியாது அதுக்குள்ள நீங்க..... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

யாரும் கேள்விபட்டியளோ தெரியாது டிரைவிங்லை டிபென்சிவ் டிரைவிங் (defensive driving) எண்டும் ஒண்டிருக்கிறது. அது ரோட்டிலை நாங்கள் கவனமா வாகனத்தை ஓட்டினாலும் வேறை யாராவது பிழைவிட்டால் அதிலையிருந்து வருற ஆபத்திலையிருந்து எப்படி எங்களை காப்பற்றிக்கொள்வது என்பதை பற்றினது. இது டிரைவிங்குக்கு மட்டுமில்லை வேற கன விசத்துக்கும் பொருந்தும் என்பது என்ரை நிலைப்பாடு. எங்கடை தமிழ் அரசியல்வாதிகளிட்டை இந்த ரெக்னிக்  கொஞ்சமேனும் கிடையாது. கொஞ்சநாளைக்கு செய்து பார்த்தா தெரியும் நாங்க எங்கேயோ போயிடுவம்.

விக்கியர் அதை செய்வதாலே, தெற்கில் அவ்வளவு குத்துமுறிவு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vanangaamudi said:

யாரும் கேள்விபட்டியளோ தெரியாது டிரைவிங்லை டிபென்சிவ் டிரைவிங் (defensive driving) எண்டும் ஒண்டிருக்கிறது. அது ரோட்டிலை நாங்கள் கவனமா வாகனத்தை ஓட்டினாலும் வேறை யாராவது பிழைவிட்டால் அதிலையிருந்து வருற ஆபத்திலையிருந்து எப்படி எங்களை காப்பற்றிக்கொள்வது என்பதை பற்றினது. இது டிரைவிங்குக்கு மட்டுமில்லை வேற கன விசத்துக்கும் பொருந்தும் என்பது என்ரை நிலைப்பாடு. எங்கடை தமிழ் அரசியல்வாதிகளிட்டை இந்த ரெக்னிக்  கொஞ்சமேனும் கிடையாது. கொஞ்சநாளைக்கு செய்து பார்த்தா தெரியும் நாங்க எங்கேயோ போயிடுவம்.

டிரம்பை உலகமே எள்ளி நகையாடியது. அந்தாள் இப்போ உலகத்தையே மொட்டையடித்து நல்லெண்ணையும் தந்து அரப்பும் தர ஆயுத்தமாகிவிட்டார்.

மகிந்தாவிடம் இருந்து ஆபத்து வரலாம் என்பதைப் புறம்தள்ளாது அதிலிருந்து தப்பித்துக் கொள்வதுபற்றியும் சிந்திப்பதும் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

டிரம்பை உலகமே எள்ளி நகையாடியது. அந்தாள் இப்போ உலகத்தையே மொட்டையடித்து நல்லெண்ணையும் தந்து அரப்பும் தர ஆயுத்தமாகிவிட்டார்.

மகிந்தாவிடம் இருந்து ஆபத்து வரலாம் என்பதைப் புறம்தள்ளாது அதிலிருந்து தப்பித்துக் கொள்வதுபற்றியும் சிந்திப்பதும் நல்லது. 

உலகம், 1958, 1977, 1983 போல் இல்லை.

மட்டக்களப்பு தூசணப் பிக்கரின் வாய் உலகம் முமுவதும் நிமிட நேரத்தில் பரவி விட்ட யதார்தம்.

மகிந்தர் வரமுடியாது. வந்தால் தமிழருக்கே நல்லது.

அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பிரித்தானிய சாம்ராஜ்யத்துக்கு, சிக்கல் வந்தது, கிற்லர் எனும் ஆஸ்திரியாவில் பிறந்து ஜேர்மனி வந்த ஒரு சாதாரண படைவீரரால்.

எங்கோயோ சண்டையிட்ட கிற்லரால், எங்கோயோ இருந்த இந்தியா, இலங்கைக்கு விடுதலை கிடைக்கவில்லையா...?

தமிழரைப் பொறத்தவரை, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இப்போது சிங்களவர்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு முடிவு இருந்தது போல் சிங்களவரது ஆட்சிக்கும் வந்தே தீரும் முடிவு.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அப்புகாத்துமாரும் அவைக்கு பைல் தூக்கி கொண்டு போற எடுபிடிகளும் தமிழர்ரை பிரச்சினையை தீர்ப்பினம் எண்டு மக்களை நம்பவைக்கினம். ஒருவரை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பிவைக்க ஜனநாயகத்திலை எந்த தடையும் இல்லை ஆனால் போனவர் என்னத்தை கிழிக்கிறார் என்பதுதான் முக்கியம். தமிழர் பிரச்சினை காலங் காலமா இழுத்தடிக்கப்பட்டு சின்னாபின்னப்பட்டுபோய் இருக்கு அதை தீர்க்க எங்கடை தமிழ் அப்புக்காத்து படிப்பு போதாது. யாராவது அரசியல் செய்யிறவையா இல்லாமல் அரசியல் படிச்சவையா பாத்து, முக்கியமா உலக அரசியல் விஞ்ஞானம் (political science) தெரிஞ்சவையை நாட்டிலை இருந்தா கூப்பிட்டு ஒப்படையுங்கோ. இல்லாட்டில் நிபுணர்குழு (Expert panel) ஒண்டை இறக்குமதிசெய்து  அவையிடை கையிலை  பொறுப்பை ஒப்படையுங்க எண்டு எங்கடை தமிழ்த்தலைமைகளுக்கு நல்ல பிரசர் குடுக்கவேணும்.  நீண்ட காலம் அதுக்கு தேவைப்பட்டால் கூட  நிபுணர் குழு தொடர்ச்சியா வேலை செய்வினம். அரசியல்லை எவர் வாறார் எவர் போறார் என்டோ எவர் எப்ப மண்டைய போடுவார்  எண்டோ நாங்க கவலைப்படத்தேவையில்லை. அதோடை வர்றவை போறவையும் சும்மாயில்லை அவை குழப்பியடிச்சிட்டுத்தான் போகினம்.போதாக்குறைக்கு நான் பெரிசு நீ பெரிசு எண்டு வியாக்கியானம் சொல்லி அப்புக்காத்துமார் தங்களுக்கிள்ளையும் ஏறுப்படுகினம், புடுங்குப்படுகினம். உது எங்களுக்கு தேவையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.