Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் விடுகதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

  • Replies 2.2k
  • Views 319.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

ஊர் ஊராக சுற்றி வருவேன் , ஆனால் ஒரு மூலையில் கிடப்பேன், நான் யார்?

Ãhnliches Foto

செருப்பு. (பாதணிகள்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி 
நான் எதிர் பார்த்த பதில் இதுவல்ல
(செருப்பும் பொருந்துகிறது)
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

வரவுக்கு நன்றி 
நான் எதிர் பார்த்த பதில் இதுவல்ல
(செருப்பும் பொருந்துகிறது)

Bildergebnis für à®à¯à®à¯à®à®¿à®³à¯ à®à®à¯à®

சைக்கிள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: முத்திரை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அங்கமுத்து வாசல் சென்றேன் அங்கு தொங்கு முத்து ஆடக் கண்டேன், அதை எடுத்து வாயில் போட்டால் ஆடிப் போனேன், அது என்ன? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம் பெற்றோர்களின் கதை

Image may contain: tree, plant, outdoor and nature

 

ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.

கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.
என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.

அதற்கு அவன்_இல்லை இப்பொது வயதாகி விட்டது_எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,
ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,.....

மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது.

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.

மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.

அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.

மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது.

அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.

அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.

அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும்அதுதான்...

 

FB

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

அங்கமுத்து வாசல் சென்றேன் அங்கு தொங்கு முத்து ஆடக் கண்டேன், அதை எடுத்து வாயில் போட்டால் ஆடிப் போனேன், அது என்ன? 

Ãhnliches Foto

மாதுளம்பழம்.

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "grapes image moving gif"

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்த பதில்: மிளகாய் 
மாதுளம் பழமும் வரலாம் 
வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இப்ப எல்லாம், வேலை முடிந்து வந்தால், மகனை கூட்டிக்  கொண்டு கிரிக்கெட்டுக்கு போக வேண்டும். சில வேலை நடுவராகவும் நிக்க வேண்டும். வீட்டுக்கு வர 9 மணி ஆகி விடும். சனி ஞாயிறு சொல்லத் தேவையில்லை. எனக்கும் கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவற விடுவதில்லை. தினமும் யாழுக்கு வர முடிவதில்லை.

 

அண்ணன் தம்பி சேரா விட்டால் ஊருக்கெல்லாம் கொண்டாட்டம் , அது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, Ahasthiyan said:

 

இப்ப எல்லாம், வேலை முடிந்து வந்தால், மகனை கூட்டிக்  கொண்டு கிரிக்கெட்டுக்கு போக வேண்டும். சில வேலை நடுவராகவும் நிக்க வேண்டும். வீட்டுக்கு வர 9 மணி ஆகி விடும். சனி ஞாயிறு சொல்லத் தேவையில்லை. எனக்கும் கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவற விடுவதில்லை. தினமும் யாழுக்கு வர முடிவதில்லை.

 

அண்ணன் தம்பி சேரா விட்டால் ஊருக்கெல்லாம் கொண்டாட்டம் , அது என்ன?

தண்டவாளம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

அண்ணன் தம்பி சேரா விட்டால் ஊருக்கெல்லாம் கொண்டாட்டம் , அது என்ன?

Bildergebnis für railway line gif

தண்டவாளம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: தண்டவாளம் 
பதில் அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

 

கோட்டையிலே குமுதவல்லி செட்டி; அவன் பெண்டாட்டி எருமைக்கடாய் மட்டி; அவள் பிள்ளை நவரத்தினக் கட்டி, அது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

முத்துச் சிப்பி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: பலாப்பழம் 

 

 

ஆயிரம் கண்ணழகி அமரவும் வைப்பாள், சொகுசாக  தூங்கவும் வைப்பாள் , அவள் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

சரியான பதில்: பலாப்பழம் 

 

 

ஆயிரம் கண்ணழகி அமரவும் வைப்பாள், சொகுசாக  தூங்கவும் வைப்பாள் , அவள் யார்?

பிரப்பம் கதிரை....ஈச்சார்!

  • கருத்துக்கள உறவுகள்

 நுளம்பு வலை 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

 

 

 

ஆயிரம் கண்ணழகி அமரவும் வைப்பாள், சொகுசாக  தூங்கவும் வைப்பாள் , அவள் யார்?

காம்பால் (hammock)

hammock-accessory-stand-tri-beam-d1-01.j

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

ஆயிரம் கண்ணழகி அமரவும் வைப்பாள், சொகுசாக  தூங்கவும் வைப்பாள் , அவள் யார்?

Teak Wood Easy Chair Ãhnliches Foto

ஈச்சார்.  (Easy Chair)

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "à®à®¯à®¿à®±à¯à®±à¯ à®à®à¯à®à®¿à®²à¯"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதில்:  நார்கட்டில்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

நாலு உலக்கை குத்தி வர இரண்டு முறம் புடைத்து வர துடுப்பு துழாவி வர துரை மக்கள் ஏறி வர, அது என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "elephant travaling  moving gif"

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Ahasthiyan said:

நாலு உலக்கை குத்தி வர இரண்டு முறம் புடைத்து வர துடுப்பு துழாவி வர துரை மக்கள் ஏறி வர, அது என்ன ?

Elephant GIF

யானை.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Ahasthiyan said:

பதில்:  நார்கட்டில்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

நாலு உலக்கை குத்தி வர இரண்டு முறம் புடைத்து வர துடுப்பு துழாவி வர துரை மக்கள் ஏறி வர, அது என்ன ?

யானை....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.