Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்!

Featured Replies

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது அப்பகுதியில் அத்துமீறி விகாரை அமைத்திருக்கும் பௌத்த பிக்குகள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்னையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனை நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும், குறித்த பகுதியில் இன்னும் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை ஒன்றும், அதனை சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் காணப்படுவதாக பண்னையாளர்கள் கூறியுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று மாடு மேய்த்துக்கொண்டிருந்த வந்தாறுமூலை சித்தாண்டி பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று பண்னையாளர்கள் மீது அவ்விடத்திற்கு வருகை தந்து அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையின் விகாராதிபதியும் அவருடன் வருகை தந்த ஏனைய இரு பௌத்த பிக்குகளும் சேர்ந்து அந்த பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என கூறி கண்ணத்தில் அறைந்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, தாக்குதலுக்கு உள்ளான குமாரசாமி பேரின்பம் என்பவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மூன்று பண்னையாளர்கள் மீது குறித்த பௌத்த பிக்குகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அடியை வாங்கிக்கொண்ட மூன்று பண்ணையாளர்களும் இன்று இரவு வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும்,சம்பவம் குறித்து கிழக்குமாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளதுடன், நாளைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/131254?ref=home

  • தொடங்கியவர்

தமிழ் பண்ணையாளர்களை தாக்கிய பிக்குமார்..! சம்பவ இடத்திற்கு விரைந்த வியாளேந்திரன் எம்.பி

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் வைத்து மூன்று தமிழ் பண்ணையாளர்களை பிக்குமார் தாக்கிய சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சென்றிருந்தார்.

இதன்போது தாக்குதலுக்குள்ளான பண்ணையாளர்கள் உட்பட குறித்த பகுதியிலுள்ள பண்ணையாளர்களை சந்தித்ததுடன், சம்பவத்தையும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இருந்து மயிலத்தமடு, மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மாடுகளை துப்பாக்கியால் சுடுவது, கால்நடைகளை கடத்துவது, பெரும்பான்மை இனத்தவரினால் தமிழ் பண்ணையாளர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டுடிருக்கின்றது.

காலம் காலமாக குறித்த பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்கள் 372க்கு மேல் தங்களின் கால் நடைகளை வைத்துள்ளார்கள்.

கடந்த மஹிந்த ஆட்சி தொடக்கம் தற்போதைய மைத்திரி ஆட்சி வரை தமிழ் பண்ணையாளர்களின் சுமார் 1100 கால்நடைகளை கடத்தியிருக்கின்றார்கள்.

கடந்த வருடத்தில் கால் நடைக்கு தண்ணீர் கொடுக்க வந்த மற்றுமொரு தமிழ் பண்ணையாளர், பெரும்பான்மை இனத்தவரினால் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றார்.

மாந்திரி ஆற்றில் சட்ட விரோத மண் அகழ்வு இடம் பெறுகின்றது. இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்...? மட்டக்களப்பின் எல்லையிலுள்ள மண்ணை சட்ட விரோதமாக பெரும்பான்மை இனத்தவர்கள் கொள்ளையடிக்கின்றார்கள்.

சட்டவிரோத மீள்குயேற்றப் பகுதிக்குள் இரண்டு விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. முற்று முழுதாக தமிழர்களின் காணிக்குள் சட்ட விரோதமான முறையில் விகாரைகள்.

குறித்த மயிலத்தமடு மாதவணைப் அண்மித்த பகுதிகளில் சட்ட விரோத குடியேற்றங்களையும், நிரந்த வீடுகளையும் அமைப்பதை நிறுத்த நீதிமன்ற தடை உத்தரவு இருந்தபோதும், குறித்த விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழர்கள் வாழ்ந்த, குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளை குறிக்க வேண்டும் என பலர் பேசுகின்றார்களே தவிர, அதற்கான முன்னெடுப்புக்கள் கடந்த காலங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

மட்டக்களப்பின் எல்லை காவலர்களாக பல துன்பங்களையும், பிரச்சினைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் எமது தமிழ் பண்ணையாளர்களுக்குரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த மயிலத்தமடு, மாதவணை பண்ணையர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ,அதற்கான தீர்வினை உடனடியாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

 

http://www.tamilwin.com/community/01/131394?ref=editorpick

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரன் மட்டும் தான் மக்களோடு நிற்கிறார். மிகுதி கூட்டமைப்புக்கு வாய் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

வியாழேந்திரன் மட்டும் தான் மக்களோடு நிற்கிறார். மிகுதி கூட்டமைப்புக்கு வாய் தான்.

சும்மா... வாய் இல்லை, நாறல்  வாய். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

வியாழேந்திரன் மட்டும் தான் மக்களோடு நிற்கிறார். மிகுதி கூட்டமைப்புக்கு வாய் தான்.

மற்றவைக்கு சம் சும் இற்கு கழுவுவிடுவதிலேயே காலம் போகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, nunavilan said:

வியாழேந்திரன் மட்டும் தான் மக்களோடு நிற்கிறார். மிகுதி கூட்டமைப்புக்கு வாய் தான்.

அவையள் அங்கை கன கருமங்கள் பாக்கவேணுமெல்லோ.....இதுக்கெல்லாம் எங்கை நேரம்?.....ஆனால் ஒண்டு லெக்ஸன் வந்தால் நேரம் தானாய் தேடி வரும்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும்  குளிர்விட்டுப்போச்சு.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.