Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு: ட்ரம்ப்

Featured Replies

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு: ட்ரம்ப்

 

 
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உடன் பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் | படம்: ராய்ட்டர்ஸ்
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உடன் பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் | படம்: ராய்ட்டர்ஸ்
 
 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு. இது அந்நாட்டுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சந்திப்பு வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்கு, வாழ்த்துகளை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசும்போது, "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவாகும். இதனால் இங்கிலாந்துக்கு தனி அடையாளம் கிடைத்துள்ளது" என்றார்.

ட்ரம்ப்புடான சந்திப்பு குறித்து தெரசா மே கூறும்போது, "இந்த வருடத்தின் இறுதியில் இங்கிலாந்து வர ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க - இங்கிலாந்து பாதுகாப்பு உறவு என்பது மிக ஆழமானது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பரஸ்பர தேசிய நலன்களை உள்ளடக்கியது" என்று கூறினார்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவரை சந்தித்த முதல் உலகத் தலைவர் தெரசா மே ஆவார்.

http://tamil.thehindu.com/world/ஐரோப்பிய-ஒன்றியத்திலிருந்து-இங்கிலாந்து-வெளியேறியது-சிறந்த-முடிவு-ட்ரம்ப்/article9507047.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே

அமெரிக்கா கொடியிலுள்ள நட்சத்திரங்களையும் தனியே விட்டால்

தனி  அடையாளம் தெரியுமே...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு: ட்ரம்ப்

 

 
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உடன் பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் | படம்: ராய்ட்டர்ஸ்
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உடன் பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் | படம்: ராய்ட்டர்ஸ்
 
 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு. இது அந்நாட்டுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சந்திப்பு வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்கு, வாழ்த்துகளை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசும்போது, "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவாகும். இதனால் இங்கிலாந்துக்கு தனி அடையாளம் கிடைத்துள்ளது" என்றார்.

ட்ரம்ப்புடான சந்திப்பு குறித்து தெரசா மே கூறும்போது, "இந்த வருடத்தின் இறுதியில் இங்கிலாந்து வர ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க - இங்கிலாந்து பாதுகாப்பு உறவு என்பது மிக ஆழமானது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பரஸ்பர தேசிய நலன்களை உள்ளடக்கியது" என்று கூறினார்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவரை சந்தித்த முதல் உலகத் தலைவர் தெரசா மே ஆவார்.

http://tamil.thehindu.com/world/ஐரோப்பிய-ஒன்றியத்திலிருந்து-இங்கிலாந்து-வெளியேறியது-சிறந்த-முடிவு-ட்ரம்ப்/article9507047.ece?homepage=true

 

அந்தாள் பேசும் பொது பிரிட்டிஷ் பிரதமர் என்கிறார்.

இவனுகளோ, இங்கிலாந்து பிரதமர் என்கிறார்கள்.

பத்திரிகை நடத்தும் லட்ச்சணம்.:unsure:

உண்மையில் பிரிட்டன் தாய் நாடு. நாம் சொல்லும் தொப்பிள் கோடி உறவு.

ஆனால், உலக வல்லரசு என நினைப்பதாலும், பணம் இருப்பதாலும், இவர்கள் அங்கே ஓடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இடம் பொருள் காலம் ..............அறிந்து !

உலக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.
முன்னெச்சரிக்கைதான் அவசியமானது.

இப்போ இவர்கள் ஹிட்லரின் முடிவுக்கு திரும்பி சென்று இருக்கிறார்கள்.
சீனாவின் வளர்ச்சி என்பதை இனி தடுக்க முடியாது. அந்த வளர்ச்சியில் வேண்டுமானால் 
நாமும் பங்குதாரர் ஆகலாம் ...... உலக புகழ் வர்த்தக வல்லுனர்களின் கருத்தும் கணிப்பும் இது.

ஹிட்லர் படை எடுத்தது ஜெர்மனிய பொருட்களை சந்தை படுத்தவே.
தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் ஜெர்மனியரிடம் இருந்தது .... ஆனால் 
உலகின் முக்கிய நாடுகள் பிரிடிஷ் ... ஸ்பானிஸ் .... பிரெஞ்சு .... ஒல்லாந்து ... போர்த்துகேசு போன்ற நாடுகளின் 
காலனியத்தினுள் இருந்ததால் ஜெர்மனிக்கு சந்தை இருக்கவில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் 
எனும் நிலையில்தான் ஹிட்ட்லரின் படை எடுப்பு இருந்தது.

இப்போ இவர்கள் இருவரும் கூடி ... மீண்டும் ரவுடி தனம் செய்து நாடுகளை 
மிரட்டி தமது பொருட்களை விற்கலாம் என்று எண்ணுகிறார்கள் ...... இது எப்போதோ மலை ஏறி போன விடயம்.
தவிர என்ன பொருள் வேண்டும் என்றாலும் ... கொண்டுவந்து கொட்டிட சீனா இருக்கிறது.
இவர்களிடம் கையேந்தும் நிலையில் உலகில் எந்த நாடும் இப்போது இல்லை.

இவர்கள் உலகை மிரட்டிதான் மருத்துவ பொருட்களை உலகம் பூராக விற்றார்கள்.
பிரேசிலும் ...இந்தியாவும் நீ செய்வதை செய் .... எமக்கும் செய்ய தெரியும் என்று பிரிந்து சென்று 
இப்போ 15 வருடம் ஆகிறது .... உலகின்  தற்கால  நிலவரங்கள் புரியாது ...
தற்கொலை முடிவில் செல்லுகிறார்கள்.

தெரேசா அம்மைக்கு இப்போ வேறு வழியில்லை...
ஒரே ஒரு வழி இந்த முட்டாளுடன் கூடி குடியை கெடுப்பதுதான்! 

  • கருத்துக்கள உறவுகள்

மலினமான கொள்கைகள்..என்றும் உலகத்தை அபாய நிலைக்கே கொண்டு செல்லும் என்பது உலகம் அறிந்ததே!

ஹிட்லரின் கொள்கையைப் போல....எஸ்.டபிள்யூ. ஆர். டி.. போன்றவர்களின் கொள்கைகளின் விளைவுகள் அனைவரும் அறிந்ததே!

அமேரிக்கா செய்வது போல... ஏனைய நாடுகளும்... கோகோ கோலா, கே.எப்.சி., கே மார்ட், கொஸ்கோ , கூகிள், மைக்ரோசொப்ட், இன்டெல், போன்றவற்றையும் தடை செய்தால் நட்டம் அமெரிக்காவுக்கே என்பதை டிரம்ப் கவனத்தில் எடுக்கவில்லைப் போலும்!

ட்ரம்ப் தெரிவு ...தற்செயலாக் ஏற்பட்ட விபத்து அல்ல என்பது எனது கருத்து! அத்துடன் மிகப்பெரிய வர்த்தகராக வர்ணிக்கப் படும் இவர், மூன்று தடவைகள் வங்குரோத்து நிலைக்குத் தனது நிறுவனங்களைக் கொண்டு சென்றவர் என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர்!

அமெரிக்காவைச் சீன பலவந்தப் படுத்தி..வர்த்தகத்தில் ஈடு படுத்தவில்லை! அமெரிக்கர்களால் இயலாமையை அது பயன்படுத்திக் கொண்டது என்பது தான் உண்மை! 

காலம் பதில் கூறும்!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, புங்கையூரன் said:

மலினமான கொள்கைகள்..என்றும் உலகத்தை அபாய நிலைக்கே கொண்டு செல்லும் என்பது உலகம் அறிந்ததே!

ஹிட்லரின் கொள்கையைப் போல....எஸ்.டபிள்யூ. ஆர். டி.. போன்றவர்களின் கொள்கைகளின் விளைவுகள் அனைவரும் அறிந்ததே!

அமேரிக்கா செய்வது போல... ஏனைய நாடுகளும்... கோகோ கோலா, கே.எப்.சி., கே மார்ட், கொஸ்கோ , கூகிள், மைக்ரோசொப்ட், இன்டெல், போன்றவற்றையும் தடை செய்தால் நட்டம் அமெரிக்காவுக்கே என்பதை டிரம்ப் கவனத்தில் எடுக்கவில்லைப் போலும்!

ட்ரம்ப் தெரிவு ...தற்செயலாக் ஏற்பட்ட விபத்து அல்ல என்பது எனது கருத்து! அத்துடன் மிகப்பெரிய வர்த்தகராக வர்ணிக்கப் படும் இவர், மூன்று தடவைகள் வங்குரோத்து நிலைக்குத் தனது நிறுவனங்களைக் கொண்டு சென்றவர் என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர்!

அமெரிக்காவைச் சீன பலவந்தப் படுத்தி..வர்த்தகத்தில் ஈடு படுத்தவில்லை! அமெரிக்கர்களால் இயலாமையை அது பயன்படுத்திக் கொண்டது என்பது தான் உண்மை! 

காலம் பதில் கூறும்!

 

பல நாட்களாக நானும் இதையே யோசித்தேன். மற்றவர்களுக்கு தடை மற்றும் மதில் எழுப்புபவர் தன் நாட்டின் பரிபாலனங்கள் எந்த அளவிற்கு முடக்கப்படும் பின் தள்ளப்படும் என்பதை இவர் யோசிக்கவில்லையா?

சீனா மற்றும் ஐரோப்பிய அரேபிய நாடுகளை புறம் தள்ளி இவரால் என்ன செய்ய முடியும்?
ஒரு முட்டாள் வியாபாரியும் அரசியல் சூனியமும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.