Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை நிறுத்துக…. இராணுவத்தை தண்டிக்க இடமளிக்கபோவதில்லை..!

Featured Replies

வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை நிறுத்துக…. இராணுவத்தை தண்டிக்க இடமளிக்கபோவதில்லை..!

 

north.jpg

நினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும்  வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும்  நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டிய வரும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரநாயக பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/20021

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் பலபக்ககங்களாலும் சீறுகின்றன. தமிழினம் மீண்டும் பேரழிவுக்குள் வீழ்ந்துவிடாதிருக்க கொல்லப்பட்டோர் கொல்லப்பட்டோராகவே போகட்டுமெனப் பேசாமலிருப்பதே மிச்சமுள்ள தமிழரைப் பாதுகாக்கும் வழியாகுமோ!

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை தண்டிக்கவிடமாட்டோம் என்று சொல்லும்போது ஒட்டுமொத்த சிறிலங்கா இராணுவமும் தண்டிக்கப்படப்போகிறது என்ற பீதியை கிளப்பிவிடுவதிலேயே சிங்களம் முனைப்புக்காட்டுகிறது. அப்படியாயின் இலட்சக்கணக்கில் கீழ்நிலை இராணுவம் குற்றவாளிகளாக இனங்காணப்படலாம் என்ற ஆணித்தரமான கூச்சலும் எழுகிறது. இந்த இடத்தில் யதார்த்தம் என்ன என்பதையும் இராணுவத்தில் யார் எந்த படிநிலையில் உள்ளவர்கள்  மற்றும் கட்டளை அதிகாரிகள் தண்டிக்கப்படலாம் என்பதிலும் சர்வதேச விதிமுறைகள் உள்ளன  என்பது அனைவருக்கும் புரிந்திருக்க நியாயமில்லை.

எனவே சம்பந்தன் சுமந்திரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் சிங்களத்தின் கேலிக்கூத்தை முறியடிக்க தெற்கில் உண்மையான  புரிதலை உருவாக்க தலைப்படவேண்டும். சிங்களவர் மத்தியில் பரப்புரைக்கான  வேலைத்திட்டங்களை தமிழர் தரப்பு உருவாக்கி செயற்படுத்தவேண்டும். அரசியலை வயிற்றுப்பிழைப்புக்கு தொழிலாக கொண்டவர்களுக்கு இதெல்லாம் கடினமான வேலையாகத்தான் தெரியும். 

எத்தனை தமிழ் அரசியல்வாதிகளுக்கு பிள்ளை குட்டி குடும்பம் இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்பதற்கு யாரிடமாவது விபரம் தெரிந்தால் இங்கே போட்டுவிடுங்கள். இப்படியான அரசியல்வாதிகள் தமிழருக்கு எந்தகாலத்திலும் சேவை செய்யப்போவதில்லை. இதை தமிழினமும் புரிந்து செயல்படவேண்டிய தருணமிது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nochchi said:

சிங்களம் பலபக்ககங்களாலும் சீறுகின்றன. தமிழினம் மீண்டும் பேரழிவுக்குள் வீழ்ந்துவிடாதிருக்க கொல்லப்பட்டோர் கொல்லப்பட்டோராகவே போகட்டுமெனப் பேசாமலிருப்பதே மிச்சமுள்ள தமிழரைப் பாதுகாக்கும் வழியாகுமோ!

தமிழன் சுத்தக் காந்தீயவாதியாக இருந்த போதும் சிங்களவன் அடிச்சிருக்கான் தானே. இப்ப என்னவோ அடிக்கமாட்டான் என்பது போல எப்படி அவனை நம்புறீங்க. சிங்களவன் அடிப்பான்.. அவனுக்குள்ள ஒரே பயம்.. புலம்பெயர்ந்துள்ள புலி எச்சங்கள் தான். அதனை மடக்குவதற்கு முடக்குவதற்கு வழி தேடிப்பார்க்கிறான்.. அவ்வளவே. தாயக மக்களையும் அதே பயத்தை காட்டி முடக்கினால்.. புலம்பெயர் புலி எச்சங்கள்.. முன்னாள் போராளிகள் போல முடக்கப்படலாம் என்று நினைக்கிறான் சிங்களவன். அப்ப தான்.. அவன் நினைக்கிற நேரம் தமிழனை அடிக்கலாம் கொல்லலாம்.. அதனை யாரும் தடுக்க முடியாது.. ஆனால்.. புலம்பெயர் புலி எச்சங்கள் இருந்தால்.. உலக அரங்கில் கூச்சல் போடுமே என்ற பயம் மட்டுமே இப்ப அவனை அடக்கி வாசிக்கச் செய்யுது. அதுவும் எம்மவர்களேலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு பலவீனப்பட்ட பின்.. சிங்களவன் இன்னும் தான் நினைச்சப்படி ஆடுவான். அதில் எம்மவர் சிலர் நல்லாக் குளிர் காய்வர். ஆனால்.. அப்பாவி தமிழ் மக்கள் மட்டும் விடிவின்றி வாழ்ந்து முடிவர்.:rolleyes:tw_angry:

சிங்கள அமைச்சர் உணரனும்.. இது நாடகங்கள் அல்ல... தாங்கள் விதைத்த வினையின் விளைவு என்று.  எனியும் அதனை தொடராது.. சிங்கள இராணுவத்தை கூப்பிட்டு தங்களோடு வைச்சுக் கொள்வதே.. செய்த வினைக்கான குறைந்த பட்ச நல்வினையாக இருக்க முடியும். மமதைச் சிங்களம் இதனை உணருமா என்பது பெரிய கேள்விக்குறியாகும். :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தை என்றுமே விட்டுக்கொடுக்காது இலங்கை அரசாங்கமும் சரி சிங்கள மக்களும் சரி  இவரின் பேச்சென்ன ஜனாதிபதியின் பேச்சும் சான்று 

51 minutes ago, vanangaamudi said:

எத்தனை தமிழ் அரசியல்வாதிகளுக்கு பிள்ளை குட்டி குடும்பம் இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்பதற்கு யாரிடமாவது விபரம் தெரிந்தால் இங்கே போட்டுவிடுங்கள். இப்படியான அரசியல்வாதிகள் தமிழருக்கு எந்தகாலத்திலும் சேவை செய்யப்போவதில்லை. இதை தமிழினமும் புரிந்து செயல்படவேண்டிய தருணமிது.

.............................................................................

On 15/5/2017 at 6:45 PM, நவீனன் said:

இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை

தமிழீழ தனி நாடே தமிழர்களுக்கு ஒரே தீர்வென சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் அடிக்கடி சொல்லி வருகிறார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.5.2017 at 3:15 PM, நவீனன் said:

நினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும்  வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும்  நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டிய வரும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

"தக்க பாடம் கற்பித்து கொடுக்க வேண்டிவரும்" எண்டதின்ரை சாரம்சம் ஆருக்கும் விளங்கிச்சுதோ????

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

"தக்க பாடம் கற்பித்து கொடுக்க வேண்டிவரும்" எண்டதின்ரை சாரம்சம் ஆருக்கும் விளங்கிச்சுதோ????

கு.சா அண்ணர் சும்மா பகிடியாய் எடுக்காதையுங்கோ. தமிழர் வெறும்கையோடை நிற்கிறம். குருதிகடலிலை கலந்து தமிழகத்தை நனைச்சாக்கூடக் கேக்க நாதியில்லை. அடக்கம் அடக்கம். 

21 hours ago, nedukkalapoovan said:

தமிழன் சுத்தக் காந்தீயவாதியாக இருந்த போதும் சிங்களவன் அடிச்சிருக்கான் தானே. இப்ப என்னவோ அடிக்கமாட்டான் என்பது போல எப்படி அவனை நம்புறீங்க. சிங்களவன் அடிப்பான்.. அவனுக்குள்ள ஒரே பயம்.. புலம்பெயர்ந்துள்ள புலி எச்சங்கள் தான். அதனை மடக்குவதற்கு முடக்குவதற்கு வழி தேடிப்பார்க்கிறான்.. அவ்வளவே. தாயக மக்களையும் அதே பயத்தை காட்டி முடக்கினால்.. புலம்பெயர் புலி எச்சங்கள்.. முன்னாள் போராளிகள் போல முடக்கப்படலாம் என்று நினைக்கிறான் சிங்களவன். அப்ப தான்.. அவன் நினைக்கிற நேரம் தமிழனை அடிக்கலாம் கொல்லலாம்.. அதனை யாரும் தடுக்க முடியாது.. ஆனால்.. புலம்பெயர் புலி எச்சங்கள் இருந்தால்.. உலக அரங்கில் கூச்சல் போடுமே என்ற பயம் மட்டுமே இப்ப அவனை அடக்கி வாசிக்கச் செய்யுது. அதுவும் எம்மவர்களேலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு பலவீனப்பட்ட பின்.. சிங்களவன் இன்னும் தான் நினைச்சப்படி ஆடுவான். அதில் எம்மவர் சிலர் நல்லாக் குளிர் காய்வர். ஆனால்.. அப்பாவி தமிழ் மக்கள் மட்டும் விடிவின்றி வாழ்ந்து முடிவர்.:rolleyes:tw_angry:

சிங்கள அமைச்சர் உணரனும்.. இது நாடகங்கள் அல்ல... தாங்கள் விதைத்த வினையின் விளைவு என்று.  எனியும் அதனை தொடராது.. சிங்கள இராணுவத்தை கூப்பிட்டு தங்களோடு வைச்சுக் கொள்வதே.. செய்த வினைக்கான குறைந்த பட்ச நல்வினையாக இருக்க முடியும். மமதைச் சிங்களம் இதனை உணருமா என்பது பெரிய கேள்விக்குறியாகும். :unsure:

சிங்களம் உணராதென்பதை அதிபர் மற்றும் வெளிநாட்டமைச்சர் இப்போது இவரென அனைவரது உரைகளும் ஒன்றையே உரைக்கின்றன. ஆனால் வெவ்வேறுபாணியில். இதிலை ரனில் என்ற நரிமட்டும் கதைக்காமற் காய்நகர்த்துது.  அதற்கு ஒரு எடுத்துக்காட்டு மோடி மஸ்தான் வந்துபோன கையோடை சீனாவுக்குப்போய் நீர்மூழ்கிவிவகாரத்தைத் தாஜாபண்ணித் தங்கடைகாரியத்தை சாதிக்க. எனவே சிங்களம் உணரவோ உருப்படியானதொரு தீர்வை முன்வைக்கவோ போவதில்லை. தமக்கு அழுத்தம்தராதவரைதான் கூத்தமைப்புன் தேன்நிலவு. என்று சீறுகிறார்களோ(ஒருவேளை உப்பபை்போட்டுச் சாப்பிட்டா) அன்றே தேன்நிலவு விடைபெறும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, போல் said:

தமிழீழ தனி நாடே தமிழர்களுக்கு ஒரே தீர்வென சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் அடிக்கடி சொல்லி வருகிறார்கள்!

அந்த அச்சத்தின் பிரதிபலிப்புக்கான கரணியத்தை சிங்களம் அறிந்தே வைத்தள்ளது. ஏனெனில் இனஅழிப்பை செய்தவொரு இனத்தோடு சேர்ந்துவாழ நிர்பந்திக்கும் உரிமை யாருக்கும் கிடையாதென்பதை சிங்களம் அறியும். அறியாவிடினும் மேற்கிலை இருந்துபோறவ ஒருகதைக்காவேணும் சுட்டாமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் ஏற்படும் பதட்டம். மறக்கப்பண்ணி முழுங்கடித்து மூடிவிட முனைய மூன்றாம் தலைமுறைக்கு விடயம் ஊட்டடப்படுவதானது  சிங்களத்துக்கு ஆரோக்கியமானதல்ல. மூன்றாம் தலைமுறையானது இருபகுதியிலும் ஒரு புதியபரிணாமத்துள் புரிந்துணர்வோடு வரலாற்றாய்வோடு உண்மைகளைக் கண்டறிந்து ஒரு நாகரிகமான தீர்வுக்குச் சென்றால் சிங்களம் என்ன செய்வதென்ற அங்கலாய்ப்பே.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

"தக்க பாடம் கற்பித்து கொடுக்க வேண்டிவரும்" எண்டதின்ரை சாரம்சம் ஆருக்கும் விளங்கிச்சுதோ????

உது விளங்கவில்லையே ....வலு சிம்பிள் 
மீண்டும் புலிகள் என்று சொல்லி மீதி இருக்கும் தமிழர்களையும் மனிதாபிமான யுத்தம் நடத்தி கொன்றொழிப்பது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.