Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து அவரது இல்லத்தின் முன் திரண்ட மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வைரவன் said:

 

இரண்டாம் வாய்ப்பை
பயன்படுத்தியாவது  
விக்கி ஐயா மக்களின்
மனதை வெல்லும்
வண்ணம் ஏதாவது செய்கின்றாரா
என பார்ப்பம்
(அதற்கு அவரின் குரு பிரேமானந்தா ஜி
அருள் புரியட்டும் )

 

ஏன் இன்னும் சம்பந்தரும் ,சுமத்திரனும் தெருவில் இறங்கி  விக்கிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முன்வரவில்லை..மக்கள் பிஞ்ச செருப்பால் அடிப்பார்கள் என்ற பயமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, putthan said:

ஏன் இன்னும் சம்பந்தரும் ,சுமத்திரனும் தெருவில் இறங்கி  விக்கிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முன்வரவில்லை..மக்கள் பிஞ்ச செருப்பால் அடிப்பார்கள் என்ற பயமா?

ஐயா புத்தன் அவர்களே!
தெருவில் இறங்குவது அவர்களின் பழக்கமுமில்லை. வழக்கமுமில்லை. தேவையேற்படின் தேர்தல் காலத்தில் மட்டும் பழக்கவழக்கங்களை கொஞ்சம் தளர்த்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

ஏன் இன்னும் சம்பந்தரும் ,சுமத்திரனும் தெருவில் இறங்கி  விக்கிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முன்வரவில்லை..மக்கள் பிஞ்ச செருப்பால் அடிப்பார்கள் என்ற பயமா?

பூஸ்வாக்கள் தெருவில் இறங்குவதில்லை. tw_blush:

வடமாகாண சபை விவகாரத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவளிப்பது முக்கியம் தான். ஆனால் அவரது அரசியல் பாத்திரம் என்ன என்பதை புரிந்து ஆதரவு அளிப்பது அவசியம் .
கூட்டமைப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான குறைந்தபட்ச உடனடிக் கண்ணியே விக்னேஸ்வரன். அது அவசியமான கண்ணியும் கூட. ஆனால் விக்னேச்வரனே தமிழரின் அரசியல் எதிர்காலத்தை மீட்க கூடியவர் அல்ல . அப்படி ஒரு ஆளுமையாக அவர் தன்னை நிரூபித்ததும் இல்லை.

அப்படியிருக்க அவருக்கான ஆதரவு ஆர்ப்பாட்டம் என்று சொல்லி மக்களை அவரின் வீட்டின் முன்னால் நிற்கவைத்து யாசிப்பது மக்களை குருட்டு அரசியலின் பால் தள்ளிவிடும். ஈழத்தமிழரிடம் இதுவரை இல்லாத இந்த இழி அரசியல் கலாச்சாரத்தை எவர் கொண்டுவதாலும் ஏற்கக்கூடியதல்ல. இது மேலும் மேலும் தலைவர்களுக்கு ஒளிவட்டம் வரையும் அரசியல் நடைமுறையை கொண்டுவந்து சேர்க்கும். இது ஒரு அசிங்கமான அரசியல் செயல் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.
கூட்டமைப்புக்குள் நிலவும் நுண் அரசியல். அந்த முரண்பாட்டை கையாளும் இலங்கை அரசு மற்றும் வெளிச்சக்திகள் பற்றிய அறிவூட்டலே மக்களுக்கு வேண்டியது. அதன் அடிப்படையிலேயே முதலமைச்சருக்கான ஆதரவுப் போராட்டம் வழிநடத்தப்பட வேண்டும். ஆதரவை அரசியல் அம்பலப்படுத்தலில் இருந்து தொடங்க வேண்டும் .

சில நூறு மக்களை மன்றாட விட்டு ஒளி வட்டம் கீற கூடாது. அது சரி என்று ஆகினால் பல நூறு மக்களை மன்றாட வைத்து பென்னம் பெரிய ஒளிவட்டத்தை மறு தரப்பு கீறும் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும் . .

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், தாடி, கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப்

 

நஞ்சுண்ட காடு குணா.கவியழகன்

https://www.facebook.com/நஞ்சுண்ட-காடு-குணாகவியழகன்-343959755806018/?hc_ref=NEWSFEED&fref=nf

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

கூட்டமைப்புக்குள் நிலவும் நுண் அரசியல். அந்த முரண்பாட்டை கையாளும் இலங்கை அரசு மற்றும் வெளிச்சக்திகள் பற்றிய அறிவூட்டலே மக்களுக்கு வேண்டியது.

மக்களுக்கு இதை யார் விளங்கப்படுத்த போகிறார்கள்?ஒரு சில கட்டுரையாளர்கள் அரசியல் கட்டுரை வரையலாம்....ஆனால் மக்கள் வாசிக்கமாட்டார்கள்...ஒளிவட்டங்களை வைத்து ஒரளவு தங்களது தலைவரை புரிந்து கொள்ளும் அளவுக்கு அரசியல் அறிவு தமிழ் மக்களுக்குண்டு.......சம்பந்தருக்கோ சுமத்திரனுக்கோ இன்னும் ஒளிவட்டம் வரையாமல் மக்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்.

On 17/06/2017 at 1:49 AM, குமாரசாமி said:

ஐயா புத்தன் அவர்களே!
தெருவில் இறங்குவது அவர்களின் பழக்கமுமில்லை. வழக்கமுமில்லை. தேவையேற்படின் தேர்தல் காலத்தில் மட்டும் பழக்கவழக்கங்களை கொஞ்சம் தளர்த்துவார்கள்.

எங்கட வெங்காயங்களும் அதுக்கு தான் வாக்களிக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Dash said:

எங்கட வெங்காயங்களும் அதுக்கு தான் வாக்களிக்கும்

தமிழர் தேசத்திற்கும் எமது மக்களுக்கும் வாத்தியும் பிரம்பும் மட்டுமே இன்றைய தேவை. பரீட்சையில் சித்தியடைந்த பின் பிரம்பை சுழட்டி எறியலாம்.

6 hours ago, குமாரசாமி said:

தமிழர் தேசத்திற்கும் எமது மக்களுக்கும் வாத்தியும் பிரம்பும் மட்டுமே இன்றைய தேவை. பரீட்சையில் சித்தியடைந்த பின் பிரம்பை சுழட்டி எறியலாம்.

நல்லா சொன்னியல் போங்கோ, வாத்தியார் சரியில்லை என்று வாத்தியாரை மாற்றுவீனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Dash said:

நல்லா சொன்னியல் போங்கோ, வாத்தியார் சரியில்லை என்று வாத்தியாரை மாற்றுவீனம்

நல்ல அரசியலுக்கும் அடி உதை கட்டாயம் தேவை எண்டதை பிரம்பை உதாரணம் காட்டினன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/16/2017 at 7:08 PM, putthan said:

ஏன் இன்னும் சம்பந்தரும் ,சுமத்திரனும் தெருவில் இறங்கி  விக்கிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முன்வரவில்லை..மக்கள் பிஞ்ச செருப்பால் அடிப்பார்கள் என்ற பயமா?

தம்பி புத்தன்
விக்கிக்கு எதிராக மக்களை எல்லாம் திரட்டி
வீதிக்கு இறங்க அவர் ஒன்றும்
அப்படி பெரிய ஆள் இல்லை
கண்டியளோ
நம்பிக்ககையில்லா தீர்மானம் ஒன்றே
போதும் அவர அகற்ற

உது விக்கி ஐயாவுக்கும் புரிஞ்சதால் தான்
அன்புள்ள சாம் என்று தொடங்கி
கடிதம் எழுதி குற்றம் நிரூபிக்கப்படாத
இரண்டு பேரின் மேல் எந்த நடவடிக்கையும்
எடுக்க மாட்டன் என்று சொல்லி
மிச்ச இரண்டு பேரிலும்
நடவடிக்கை எடுக்கின்றார்

கடைசியல எதை சம்/சும் நினைத்தார்களோ
அதுதான் நடந்தது
விக்கி ஐயா கடைசியில்
சம்/சும் சொன்னதைதான்
செய்கின்றார்

 

இப்படி எல்லாம் கருத்து எழுதினவரை
கேவலப்படுத்தி
அதை மருதர் வந்து திருத்தும் அளவுக்கு
உங்கள் நாகரீகம் இருக்கு ராசா

அதுவும் விசுகர், வந்து எனக்கு
நாகரீகம் படிப்பிக்கிறார் பாருங்கள்
அதை எண்ணி கெக்களம் கட்டி
சிரிச்சு புரை ஏறிப் போச்சு தம்பி
நாங்களும் யாழை பல வருடங்களாக
வாசிச்சுக் கொண்டு தான் வாரம்

1 hour ago, வைரவன் said:

தம்பி புத்தன்
விக்கிக்கு எதிராக மக்களை எல்லாம் திரட்டி
வீதிக்கு இறங்க அவர் ஒன்றும்
அப்படி பெரிய ஆள் இல்லை
கண்டியளோ
நம்பிக்ககையில்லா தீர்மானம் ஒன்றே
போதும் அவர அகற்ற

உது விக்கி ஐயாவுக்கும் புரிஞ்சதால் தான்
அன்புள்ள சாம் என்று தொடங்கி
கடிதம் எழுதி குற்றம் நிரூபிக்கப்படாத
இரண்டு பேரின் மேல் எந்த நடவடிக்கையும்
எடுக்க மாட்டன் என்று சொல்லி
மிச்ச இரண்டு பேரிலும்
நடவடிக்கை எடுக்கின்றார்

கடைசியல எதை சம்/சும் நினைத்தார்களோ
அதுதான் நடந்தது
விக்கி ஐயா கடைசியில்
சம்/சும் சொன்னதைதான்
செய்கின்றார்

முதல்வரின் நிபந்தனைக்கு இணங்கிக் கொள்கிறோம் - சம்பந்தன்

 
14970.jpg
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை யில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என்றும் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று எழுதிய கடிதத்துக்கு, நேற்றைய தினமே அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அக்கடிதத்தில்,
 
19.06.2017 
கௌரவ நீதியரசர்  சி.வி .விக்னேஸ்வரன்
முதலமைச்சர் வட மாகாணம்
 
அன்புக்குரிய விக்னேஸ்,
தங்களது 19.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி.
நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.
 
மேலும் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த விடயம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்து ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருட்திரு. வண பிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது. 
சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்ககூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன். 
 
நான் தற்போது தொலைபேசியில் கௌரவ வட மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன்.
எல்லாம் நலமாகவே அமையட்டும். 
 
நாம் வெகுவிரைவில் சந்தித்தது பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கிறேன். 
உண்மையுள்ள,
இரா. சம்பந்தன்
தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

முதல்வரின் நிபந்தனைக்கு இணங்கிக் கொள்கிறோம் - சம்பந்தன்

 

 
14970.jpg
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை யில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என்றும் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று எழுதிய கடிதத்துக்கு, நேற்றைய தினமே அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அக்கடிதத்தில்,
 
19.06.2017 
கௌரவ நீதியரசர்  சி.வி .விக்னேஸ்வரன்
முதலமைச்சர் வட மாகாணம்
 
அன்புக்குரிய விக்னேஸ்,
தங்களது 19.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி.
நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.
 
மேலும் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த விடயம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்து ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருட்திரு. வண பிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது. 
சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்ககூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன். 
 
நான் தற்போது தொலைபேசியில் கௌரவ வட மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன்.
எல்லாம் நலமாகவே அமையட்டும். 
 
நாம் வெகுவிரைவில் சந்தித்தது பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கிறேன். 
உண்மையுள்ள,
இரா. சம்பந்தன்
தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் கண்ணில் விளக்கெண்ணய் விட்டுப்
பார்த்தன்
பிறகு பெரிய பூதக்கண்ணாடி போட்டுப்
பார்த்தன்
சாம் மின் கடிதத்தில் உங்கள் (முதல்வர்) நிபந்தனைக்கு
இணங்கிக் கொள்கின்றோம் என்று ஒரு இடத்திலும்
இல்லை
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்
மற்றும்
பேரருட்திரு. வண பிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர்
எழுதிய மூன்று நிபந்தனைகள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது

ஓ.
தலைப்பில் இருக்குதா
அது தமிழ் தேசிய முன்னனியின் ஆதரவு
இடம்புரி பேப்பர் போட்ட தலைப்பு
அடிக்கும் நானூரு பத்திரிகைகளையாவது
விற்க வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி அய்யாவிற்கு இது தான் நல்ல சந்தர்ப்பம் தமிழர்களிற்க்கு தலமை ஏற்று மற்ற பழசுகளை வீட்டிற்க்கு அனுப்ப.

7 hours ago, வைரவன் said:

நான் கண்ணில் விளக்கெண்ணய் விட்டுப்
பார்த்தன்
பிறகு பெரிய பூதக்கண்ணாடி போட்டுப்
பார்த்தன்

கண்கெட்டபிறகு விளக்கெண்ணையும் பூதக்கண்ணாடியும் பயன்பபடாது!

  • தொடங்கியவர்
12 hours ago, வைரவன் said:

இடம்புரி பேப்பர்

ஓ நீங்கள் ஊதியன் பத்திரிகை விசிறியோ?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வைரவன் said:

தம்பி புத்தன்
விக்கிக்கு எதிராக மக்களை எல்லாம் திரட்டி
வீதிக்கு இறங்க அவர் ஒன்றும்
அப்படி பெரிய ஆள் இல்லை
கண்டியளோ
நம்பிக்ககையில்லா தீர்மானம் ஒன்றே
போதும் அவர அகற்ற

உது விக்கி ஐயாவுக்கும் புரிஞ்சதால் தான்
அன்புள்ள சாம் என்று தொடங்கி
கடிதம் எழுதி குற்றம் நிரூபிக்கப்படாத
இரண்டு பேரின் மேல் எந்த நடவடிக்கையும்
எடுக்க மாட்டன் என்று சொல்லி
மிச்ச இரண்டு பேரிலும்
நடவடிக்கை எடுக்கின்றார்

கடைசியல எதை சம்/சும் நினைத்தார்களோ
அதுதான் நடந்தது
விக்கி ஐயா கடைசியில்
சம்/சும் சொன்னதைதான்
செய்கின்றார்

 

இப்படி எல்லாம் கருத்து எழுதினவரை
கேவலப்படுத்தி
அதை மருதர் வந்து திருத்தும் அளவுக்கு
உங்கள் நாகரீகம் இருக்கு ராசா

அதுவும் விசுகர், வந்து எனக்கு
நாகரீகம் படிப்பிக்கிறார் பாருங்கள்
அதை எண்ணி கெக்களம் கட்டி
சிரிச்சு புரை ஏறிப் போச்சு தம்பி
நாங்களும் யாழை பல வருடங்களாக
வாசிச்சுக் கொண்டு தான் வாரம்

அண்ணோய் நான் யாழ்களத்தை வாசிக்கிறதில்லை ,சும்மா விக்கியருக்கு செம்பு தூக்கத்தான் வந்து இரண்டு கிறுக்கு கிறுக்கிறனான்.மற்றது உங்களை போன்று எனக்கு அதித அரசியல் அறிவு இல்லை.

வடமாகாணசபை தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேணும் என்பதுதான் எனது விருப்பம்.

அண்ணோய் ஒருத்தரும் ஒருத்தருக்கும் நாகரிகம் படிப்பிக்க வேண்டிய நிலையில் இல்லை ....எல்லோரும் ஒருத்தரை பார்த்தவுடனேயோ அல்லது எழுத்தை வைத்தோ அவர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

16 hours ago, வைரவன் said:

 

இப்படி எல்லாம் கருத்து எழுதினவரை
கேவலப்படுத்தி
அதை மருதர் வந்து திருத்தும் அளவுக்கு
உங்கள் நாகரீகம் இருக்கு ராசா

அதுவும் விசுகர், வந்து எனக்கு
நாகரீகம் படிப்பிக்கிறார் பாருங்கள்
அதை எண்ணி கெக்களம் கட்டி
சிரிச்சு புரை ஏறிப் போச்சு தம்பி
நாங்களும் யாழை பல வருடங்களாக
வாசிச்சுக் கொண்டு தான் வாரம்

எப்படி கருத்து எழுதினேன் ,எப்ப மருதர் வந்து திருத்தினவர் ,அண்ணோய் உங்களுக்கு சிரிப்பு வந்தால் சிரியுங்கோ ...ஆனால் என்ன கருத்துக்கு என்று சொல்லிப்போட்டு சிரியுங்கோ..அண்ணோய் சத்தியமா நீங்கள் என்ன சொல்ல வாறீயள் என்று புரியல்ல ஒருக்கா விளக்கமா சொல்லுறீயளே.

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வைரவன் said:

அதுவும் விசுகர், வந்து எனக்கு
நாகரீகம் படிப்பிக்கிறார் பாருங்கள்
அதை எண்ணி கெக்களம் கட்டி
சிரிச்சு புரை ஏறிப் போச்சு தம்பி
நாங்களும் யாழை பல வருடங்களாக
வாசிச்சுக் கொண்டு தான் வாரம்

சொற்களில்  மரியாதை என்று  சொன்னது

எனக்கும் சேர்த்து இருவருக்கும் தான்

நான்  ஒன்றும் திறமில்லை

சாதாரண  மனிதன்

என்னை கோபப்படுத்தினால் நானும் தொடங்கிவிடுவேன் என்பதற்கான முன்னெச்சரிக்கையே  அது

இதுவரை  யாழிலும்  சரி வெளியிலும் சரி 

கருத்துக்கு தேவையற்ற கோபமூட்டல்களுக்கு நானும் தரமிறங்கி  இருக்கின்றேன்

அது தேவையா? என்பதே அந்த மரியாதையான சொற்களை எதிர்பார்த்த கருத்து

மற்றும்படி

சிரிப்பதற்கோ

அல்லது எவ்வாறான சொற்களை  பாவிப்பது என்பது பற்றியோ நீங்கள் மட்டுமே தீர்மானிக்கமுடியும்

தீர்மானிக்கவேண்டும்.

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

அண்ணோய் ஒருத்தரும் ஒருத்தருக்கும் நாகரிகம் படிப்பிக்க வேண்டிய நிலையில் இல்லை ....எல்லோரும் ஒருத்தரை பார்த்தவுடனேயோ அல்லது எழுத்தை வைத்தோ அவர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

எப்படி கருத்து எழுதினேன் ,எப்ப மருதர் வந்து திருத்தினவர் ,அண்ணோய் உங்களுக்கு சிரிப்பு வந்தால் சிரியுங்கோ ...ஆனால் என்ன கருத்துக்கு என்று சொல்லிப்போட்டு சிரியுங்கோ..அண்ணோய் சத்தியமா நீங்கள் என்ன சொல்ல வாறீயள் என்று புரியல்ல ஒருக்கா விளக்கமா சொல்லுறீயளே.

மன்னிக்கவும்
இதில ஒரு பிழை நடந்துட்டுது

நான் எப்போதும் தமிழன் எனும்
கருத்தாளர் இன்னொரு திரியில்
வைச்ச கருத்துக்கு அங்கு
பதில் வைக்க வெளிக்கிட்டு
தவறுதலாக் இங்கு
ஒட்டிவிட்டேன்

யாழ் இணையத்தில்
எழுதுவது  இன்னும்
எனக்கு சரியாக பரிச்சயமாகவில்லை
கூகிளில் தமிழ் எழுதி பிறகு
இங்கு பிரதியிடுவதால்
தவறு விட்டு விட்டென்
ஆனால் விரைவில்
பழகிவிடுவேன்

நீங்கள் நாகரீகமற்று
எதையும் எழுதவில்லை
மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வைரவன் said:

மன்னிக்கவும்
இதில ஒரு பிழை நடந்துட்டுது

நான் எப்போதும் தமிழன் எனும்
கருத்தாளர் இன்னொரு திரியில்
வைச்ச கருத்துக்கு அங்கு
பதில் வைக்க வெளிக்கிட்டு
தவறுதலாக் இங்கு
ஒட்டிவிட்டேன்

யாழ் இணையத்தில்
எழுதுவது  இன்னும்
எனக்கு சரியாக பரிச்சயமாகவில்லை
கூகிளில் தமிழ் எழுதி பிறகு
இங்கு பிரதியிடுவதால்
தவறு விட்டு விட்டென்
ஆனால் விரைவில்
பழகிவிடுவேன்

நீங்கள் நாகரீகமற்று
எதையும் எழுதவில்லை
மன்னிக்கவும்

விளக்கத்திற்கு நன்றிகள் .....:10_wink:..மனசு இலகுவானது மாதிரி ஒரு பிலிங்...தொடருவோம்...கருத்தாடுவோம்..:10_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.