Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பசி பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பசியும் பார்வையும்

1210935614_1024x768_scary-red-eyes.jpg

 

திரும்பத் திரும்ப அவளைப் பார்க்கத் தோன்றியது. உருவம் இன்னும் திடகாத்திரமாக முகத்தில் ஆண்களுக்கே உரித்தான ஒரு வித தடிப்புடன் தாடைகள் அமைந்திருக்க என்னுடைய ஞாபகக்குழிக்குள் அவள் முகம்  தெரிந்ததுபோலும் தெரியாதது போலும் தளம்பல்பட்டுக் கொண்டிருக்க நான் அந்த முகத்தை யாரென்று ஊகிக்க மிக ஆழமாக உற்று நோக்கினேன். அவள் அருகில் இன்னும் ஒரு பெண் நளினத்தோடு முறுவலித்தபடி வெட்கச்சாயம் பூசியிருந்தாள் . முறுவலிட்டபடி இருந்தவளை இரசிப்பதா இல்லை மற்றவளை இனம் காண்பதா என்ற இரண்டு நிலையில் நான்

 

அந்த ஸ்காபுரொ மோல் பக்கம் விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துச் செல்வது வழக்கம் இன்றும் அப்படித்தான் அவ்விடத்தில் நான் பிடித்தமான உணவுகளை வாங்க பிள்ளைகள் இருவரும் என்னை இருக்கையை பார்க்கும்படி விட்டுவிட்டுசென்றுவிட்டார்கள். நான் நாலாபுறமும் பார்வையைச் சுழற்றியதில் அவள் அகப்பட்டாள். ஐயோ அவளை எனக்குத் தெரியும் ஆனால் எங்கு எவ்வாறு அவள் எனக்கு அறிமுகமாகியிருந்தாள் என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அவள் கறுப்பினத்துப் பெண், கட்டுக்கோப்பான உடல்வாகு, உரத்த குரலில் ஆளுமை பலமாகத் தெரிய… பக்கத்தில் இருந்தபெண்ணிடம் ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தாள். அவளின் உடல் மொழியை நான் முன்பு அவதானித்திருப்பதாக உள்ளம் சொல்லிக் கொண்டிருக்க இங்கிதமே இல்லாமல் நான் அவளை யார் என்று மீட்டெடுக்க மிக உன்னிப்பாக நோக்கிக் கொண்டிருந்தேன். ஏதேச்சையாக திரும்பிய அவள் பார்வை என்னைக் கண்டதும்  சட்டென்று நிலைத்தது.  அவளுக்குள்ளும் குழப்பம் தேங்குவதை உணர முடிந்தது. வெட்கநிலை அற்றதான ஏதோ ஒன்று மனதில் உறுத்த என் பார்வையை விலத்திக் கொண்டேன். ஆனால் விலகிய நோக்கலுக்கு அப்பால் மனம் தேடலுக்குள் இருந்து வெளிவர மறுத்தது.

 

உணவு வாங்கச் சென்ற பிள்ளைகள் உணவுடன் வர அவர்களுடன் கலகலப்பாக கதைபேசிக்கொண்டு உண்ண ஆரம்பித்தேன். ஏதோ உறுத்தியது மீள அவளைப்பார்த்தேன். என்னையே விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள். பக்கத்திலிருந்தவள் அவள் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தாள். எனக்கு புரிந்துவிட்டது.  அவள்  பார்வை அவளை எனக்கு 23 வருடங்களுக்குப் பின்னர் மீளவும் ஞாபகப்படுத்திவிட்டது. அவளும் நானும் ஒரே செல்டரில் இருந்தோம். அவள் 3 பிள்ளைகளுடன் தனித்திருந்தாள். 30 களின் மத்தியில் நீண்ட தனிமையில் அவ்விடத்தில் நீண்ட காலமாக வாழ்ந்திருந்தாள்.  எனக்கும் அவளுக்கும் படுக்கைகள் தவிர மற்றைய அனைத்தும் ஒரே பாவனையிடங்களாயிருந்தன. பார்த்தாலே பரவிக்கொள்ளும் நெருப்புப்போல மிக விரகமாக என் அருகே அவள் இருந்தாள். அவள் வயதை அவள் உணர்வை என்னால் அப்போது விளங்கிக்கொள்ளமுடியவில்லை. அவளைப்பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாக இருக்கும். அவளுக்கும் எனக்குமான குளியலறையைப்பாவிக்கும் போதெல்லாம் அருவருப்பாக இருக்கும். அவளிடம் இருந்து விலகி  ஓட செல்டரின் மேலதிகாரியிடம் முறையிட்டேன் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய செயல்களை இயல்பாக எடுத்துக்கொண்டார்கள். எனக்கு அவை இயல்பாகபடவில்லை. அதை இயல்பென்று எடுத்துக்கொள்ள முடியாமல்  நான் செல்டரைவிட்டு வெளியேறினேன். அன்று அவ்விடம் விட்டு வெளியேறி இருக்காவிட்டால் இன்று அந்தத் தகிக்கும் பார்வைக்குள் பலியாகியிருப்பேன்.

இன்னும் 23 வருடங்கள் கடந்தபின்னும் அவளுக்குள்ளிருந்த அவன் என்னை பசியோடு பார்த்துக்கொண்டிருக்க நான் அவசர அவசரமாக உணவை விழுங்கிக் கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறினேன். பின்னால் அவன் பார்வையில் இருந்த நெருப்பை மோலின் கண்ணாடிகள் என் முனனே கண் மறையும்வரை காட்டிக்கொண்டிருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வல்வை சகாறா said:

பசியும் பார்வையும்

1210935614_1024x768_scary-red-eyes.jpg

 

திரும்பத் திரும்ப அவளைப் பார்க்கத் தோன்றியது. உருவம் இன்னும் திடகாத்திரமாக முகத்தில் ஆண்களுக்கே உரித்தான ஒரு வித தடிப்புடன் தாடைகள் அமைந்திருக்க என்னுடைய ஞாபகக்குழிக்குள் அவள் முகம்  தெரிந்ததுபோலும் தெரியாதது போலும் தளம்பல்பட்டுக் கொண்டிருக்க நான் அந்த முகத்தை யாரென்று ஊகிக்க மிக ஆழமாக உற்று நோக்கினேன். அவள் அருகில் இன்னும் ஒரு பெண் நளினத்தோடு முறுவலித்தபடி வெட்கச்சாயம் பூசியிருந்தாள் . முறுவலிட்டபடி இருந்தவளை இரசிப்பதா இல்லை மற்றவளை இனம் காண்பதா என்ற இரண்டு நிலையில் நான்

 

அந்த ஸ்காபுரொ மோல் பக்கம் விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துச் செல்வது வழக்கம் இன்றும் அப்படித்தான் அவ்விடத்தில் நான் பிடித்தமான உணவுகளை வாங்க பிள்ளைகள் இருவரும் என்னை இருக்கையை பார்க்கும்படி விட்டுவிட்டுசென்றுவிட்டார்கள். நான் நாலாபுறமும் பார்வையைச் சுழற்றியதில் அவள் அகப்பட்டாள். ஐயோ அவளை எனக்குத் தெரியும் ஆனால் எங்கு எவ்வாறு அவள் எனக்கு அறிமுகமாகியிருந்தாள் என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அவள் கறுப்பினத்துப் பெண், கட்டுக்கோப்பான உடல்வாகு, உரத்த குரலில் ஆளுமை பலமாகத் தெரிய… பக்கத்தில் இருந்தபெண்ணிடம் ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தாள். அவளின் உடல் மொழியை நான் முன்பு அவதானித்திருப்பதாக உள்ளம் சொல்லிக் கொண்டிருக்க இங்கிதமே இல்லாமல் நான் அவளை யார் என்று மீட்டெடுக்க மிக உன்னிப்பாக நோக்கிக் கொண்டிருந்தேன். ஏதேச்சையாக திரும்பிய அவள் பார்வை என்னைக் கண்டதும்  சட்டென்று நிலைத்தது.  அவளுக்குள்ளும் குழப்பம் தேங்குவதை உணர முடிந்தது. வெட்கநிலை அற்றதான ஏதோ ஒன்று மனதில் உறுத்த என் பார்வையை விலத்திக் கொண்டேன். ஆனால் விலகிய நோக்கலுக்கு அப்பால் மனம் தேடலுக்குள் இருந்து வெளிவர மறுத்தது.

 

உணவு வாங்கச் சென்ற பிள்ளைகள் உணவுடன் வர அவர்களுடன் கலகலப்பாக கதைபேசிக்கொண்டு உண்ண ஆரம்பித்தேன். ஏதோ உறுத்தியது மீள அவளைப்பார்த்தேன். என்னையே விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள். பக்கத்திலிருந்தவள் அவள் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தாள். எனக்கு புரிந்துவிட்டது.  அவள்  பார்வை அவளை எனக்கு 23 வருடங்களுக்குப் பின்னர் மீளவும் ஞாபகப்படுத்திவிட்டது. அவளும் நானும் ஒரே செல்டரில் இருந்தோம். அவள் 3 பிள்ளைகளுடன் தனித்திருந்தாள். 30 களின் மத்தியில் நீண்ட தனிமையில் அவ்விடத்தில் நீண்ட காலமாக வாழ்ந்திருந்தாள்.  எனக்கும் அவளுக்கும் படுக்கைகள் தவிர மற்றைய அனைத்தும் ஒரே பாவனையிடங்களாயிருந்தன. பார்த்தாலே பரவிக்கொள்ளும் நெருப்புப்போல மிக விரகமாக என் அருகே அவள் இருந்தாள். அவள் வயதை அவள் உணர்வை என்னால் அப்போது விளங்கிக்கொள்ளமுடியவில்லை. அவளைப்பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாக இருக்கும். அவளுக்கும் எனக்குமான குளியலறையைப்பாவிக்கும் போதெல்லாம் அருவருப்பாக இருக்கும். அவளிடம் இருந்து விலகி  ஓட செல்டரின் மேலதிகாரியிடம் முறையிட்டேன் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய செயல்களை இயல்பாக எடுத்துக்கொண்டார்கள். எனக்கு அவை இயல்பாகபடவில்லை. அதை இயல்பென்று எடுத்துக்கொள்ள முடியாமல்  நான் செல்டரைவிட்டு வெளியேறினேன். அன்று அவ்விடம் விட்டு வெளியேறி இருக்காவிட்டால் இன்று அந்தத் தகிக்கும் பார்வைக்குள் பலியாகியிருப்பேன்.

இன்னும் 23 வருடங்கள் கடந்தபின்னும் அவளுக்குள்ளிருந்த அவன் என்னை பசியோடு பார்த்துக்கொண்டிருக்க நான் அவசர அவசரமாக உணவை விழுங்கிக் கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறினேன். பின்னால் அவன் பார்வையில் இருந்த நெருப்பை மோலின் கண்ணாடிகள் என் முனனே கண் மறையும்வரை காட்டிக்கொண்டிருந்தன.

ம்ம்ம் டொரோண்டோவில் நாளை "ப்ரைட் வீக்" அதற்கு முத்தாய்ப்பாய் சகாறா அக்காவின் இந்த குறுங்கதை. 
இன்று பச்சைக்கு தட்டுப்பாடு  நாளை :)tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

முற்றதுமல்லிகை இப்பதான் நீண்ட நாட்களின் பின்பு பூக்கின்றது....பகிர்வுக்கு நன்றிகள்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இன்றுதான் பார்த்தேன் கதை , முற்றத்து மல்லிகை என்று ரெண்டு ஓடிக்கொண்டு இருப்பதால் சில குழப்பம் ஏற்படுகிறது எது சுய் ஆக்கம் எது அடுத்தவர் ஆக்கம் இங்க வந்தது என்ற குழப்பம்  அதான் நானும் கவனிக்கல போலும் தெரிகிறது 

 

கண்கள் வேட்டையாடும் அது  மற்ற கண்ணுக்கு மட்டுமே புலப்படும்  ஒன்றை  எதிர்பார்த்து 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்பதான் பார்த்தேன்...., பசியை விட பார்வை கொல்லுது....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.