Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வேஸ்வரன் கல்வியமைச்சர்! அனந்தி புனர்வாழ்வு மீள்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வேஸ்வரன் கல்வியமைச்சர்! அனந்தி புனர்வாழ்வு மீள்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர்!

Written by Chief Editor | June 28, 2017 | Comments Off on சர்வேஸ்வரன் கல்வியமைச்சர்! அனந்தி புனர்வாழ்வு மீள்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர்!

ananthi_sashitharan.jpgkanthaiya-sarveswaran.jpgஅமைச்சரவை இழுபறி முடிவுக்குவந்துள்ளது. சர்வேஸ்வரன் கல்வி விளையாட்டு பண்பாட்டு அலுவல்கள்  அமைச்சர்ராகவும்  அனந்தி சசிதரன்  புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சமூகசேவைகள் மகளீர் விவகாரம்  மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பில் முதலமைச்சர் ஆளுனருக்கு இன்று சிபாரிசுகளை வழங்கியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நடைபெறும். முதலமைச்சர் விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினை தனது வசம் வைத்துள்ளார். இதன்மூலம் வெற்றிடமாயிருந்த அமைச்சர் பொறுப்புகள் விடயம் முடிவுக்கு வருகின்றது.

இதேவேளை இன்றுமாலை முதலமைச்சர் ஆதரவு அணி மாகாணசபை உறுப்பினர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே விசாரணை அறிக்கை மீதான சர்ச்சைகளை அடுத்து இராஜினாமா செய்திருந்த குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரின் அமைச்சுக்களை முதல்வர் தன்வசம் எடுத்திருந்தார் .நேற்று முன்தினம் தமிழரசுக்கட்சி கல்வியமைச்சராக ஆர்னோல்ட் அவர்களை நியமிக்குமாறு முதல்வருக்கு பிரேரித்திருந்தது எனினும் அதனை முதல்வர் ஏற்க மறுத்திருந்தார்.

முதலமைச்சரினை பதவி கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சியினை முறியடிக்க தன்னுடன் நின்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சர்களை தெரிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம்  ஆளும் கட்சியில் முதல்வர் அணி  தனியாக செயற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.e-jaffna.com/archives/83824

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

-----முதலமைச்சரினை பதவி கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சியினை முறியடிக்க தன்னுடன் நின்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சர்களை தெரிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம்  ஆளும் கட்சியில் முதல்வர் அணி  தனியாக செயற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுதான்... சரி. 
முதலமைச்சர்  விக்னேஸ்வரனின் முடிவு பாராட்டுக்குரியது.
இறுதிப் போர் படு கொலைகளை, சர்வதேச அளவில் கொண்டு சென்ற, 
அனந்தி சசிதரனுக்கு... அமைச்சர்  பதவி கொடுத்து, கௌரவித்தமையை வரவேற்கின்றோம். :)    

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிழுக்க
பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காதம் வழிபரமகுருவும்

செயல் திறன் அறவே
அற்ற சீடர்கள்
அவர்களது
பரமார்த்த குருவுடன்
ஒன்று சேர்ந்தனர் காண்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, வைரவன் said:

முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிழுக்க
பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காதம் வழிபரமகுருவும்

செயல் திறன் அறவே
அற்ற சீடர்கள்
அவர்களது
பரமார்த்த குருவுடன்
ஒன்று சேர்ந்தனர் காண்

கல்வியமைச்சராக ஆர்னோல்ட் அவர்களை  ஆதரிக்கிறீர்களா??

மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்காமலேயே  இவ்வாறு தூற்றுவது எவ்வளவு சரியானது??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அதுதான்... சரி. 
முதலமைச்சர்  விக்னேஸ்வரனின் முடிவு பாராட்டுக்குரியது.
இறுதிப் போர் படு கொலைகளை, சர்வதேச அளவில் கொண்டு சென்ற, 
அனந்தி சசிதரனுக்கு... அமைச்சர்  பதவி கொடுத்து, கௌரவித்தமையை வரவேற்கின்றோம். :)    

அனந்தி அவர்களின் தெரிவு  பல விடயங்களை  தமிழரசுக்கட்சிக்கு சொல்கிறது...

அவர்களுக்குப்புரிந்தால் நல்லது...

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

அனந்தி அவர்களின் தெரிவு  பல விடயங்களை  தமிழரசுக்கட்சிக்கு சொல்கிறது...

அவர்களுக்குப்புரிந்தால் நல்லது...

"சம் / சும்"  என்ற,  இரட்டையருக்கு tw_heartbreak:  புரிய வேண்டும். புரியா விட்டால்...... tw_glasses:
"குருட்டுக் கோழி.... இருட்டு அறையில், விட்டத்தில்.... பறந்த"  கதையாக  இருக்கும். :117_eyes: tw_yum:

Edited by தமிழ் சிறி

1 hour ago, தமிழ் சிறி said:

"சம் / சும்"  என்ற,  இரட்டையருக்கு tw_heartbreak:  புரிய வேண்டும். புரியா விட்டால்...... tw_glasses:
"குருட்டுக் கோழி.... இருட்டு அறையில், விட்டத்தில்.... பறந்த"  கதையாக  இருக்கும். :117_eyes: tw_yum:

கெடு குடி சொற் கேளாது அண்ணா 

வடமாகாண புதிய அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன்

 

வடமாகாண புதிய அமைச்சர்களாக  க.சர்வேஸ்வரன் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் 3 மாதங்களுக்கு தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை விசாரணை செய்ய என முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு கல்வி அமைச்சர் மற்றும், விவசாய அமைச்சர் ஆகியோரை பதவி விலக பரிந்துரை செய்திருந்தது.

அதனை அடுத்து குறித்த இரு அமைச்சர்களையும் பதவியை தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் கேட்டதற்கிணங்க  கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

அந்த நிலைமையில் கந்தையா சர்வேஷ்வரனை மாகாண கல்வி அமைச்சராகவும்,  திருமதி அனந்தி சசிதரனை மகளீர் விவகார , கூட்டுறவு அமைச்சராக தற்காலிகமாக 3 மாதங்களுக்கு முதலமைச்சர் நியமித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரையில் முதலமைச்சரின் இல்லத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கிய 14 உறுப்பினர்களை சந்தித்து பேசியிருந்தார். அத்துடன் விவசாய நீர்ப்பாசன அமைச்சினை முதலமைச்சர் தன் வசம் வைத்துள்ளார்   என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நாளைய தினம் இருவரும் தமது அமைச்சு பொறுப்புக்களை வடமாகாண ஆளுநர் முன்பாக ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.

http://globaltamilnews.net/archives/31233

விவசாய அமைச்சு விக்கியிடமே

 
 
விவசாய அமைச்சு விக்கியிடமே
 

மூன்று மாத காலத்துக்கு அமைச்சர்களாக திருமதி அனந்தி சசிதரனையும், மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரனையும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்பாக இருவரும் இன்று காலை 10 மணிக்கு சத்தியப்பிரமாணம் மேற்கொண்டு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடனும் பங்காளிக் கட்சிகளுடனும் பேசியே அமைச்சர்கள் நியமனம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். திருமதி அனந்தி சசிதரனை அமைச்சராக நியமிக்க முதலமைச்சர் விருப்பம் வெளியிட்டபோதும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை உள்ளமையால் தமிழ் அரசுக் கட்சி அதனை நிராகரித்திருந்தது. தமது தரப்பில் இருந்து மாகாண சபை உறுப்பினர் இ.ஆனோல்ட்டை அமைச்சுப் பதவிக்கு தமிழ் அரசுக் கட்சி பரிந்துரை செய்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேச்சு நடத்தாமலும், பங்காளிக் கட்சிகளுடன் ஆராயாமலும் முதலமைச்சர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஸ்பிரேமசந்திரனின் சகோதரரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான க.சர்வேஸ்வரனும், சமூகசேவை, மறுவாழ்வு, மகளிர் விவகார அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநருடன் முதலமைச்சர் இந்த நியமனங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போது ஆளுநர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இ.ஆனோல்ட்டை பரிந்துரைத்த கடிதத்தின் பிரதியை எனக்கு அனுப்பியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனைக் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

நாளை (இன்று) அமைச்சர்கள் பதவியேற்புக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று மதியம் ஆளுநருக்குத் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், நேற்று மாலை 6 மணிக்கு தனக்கு ஆதரவாக கையெழுத்திட்ட 15 பேரை மாத்திரம் அழைத்துச் சந்திப்பு நடத்தினார்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கும்போது, எனது அமைச்சுக்கு மேலதிகமாக இரு அமைச்சுக்களையும் வைத்திருப்பதால் பல சிக்கல்கள் வருகின்றது. இதனால் தற்காலிக ஏற்பாடாக 3 மாதங்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்களை, திருமதி அனந்தி சசிதரனுக்கும், க.சர்வேஸ்வரனுக்கும் வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டார். விவசாய அமைச்சு தன்னிடமே தொடர்ந்தும் இருக்கும் என்றும் முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

http://uthayandaily.com/story/8337.html

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண 4 அமைச்சுக்களில் 2 தமிழரசுக்கட்சிக்கும், 1 EPRLF, 1 TELO  என்று பிரிக்கப்பட்டு இருந்தது. இப்போது பதவி விலக்கப்பட்ட EPRLF ஐங்கரநேசனுக்கு பதிலாக சுரேசின் தம்பி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மற்றய அமைச்சு நிச்சயம் தமிழரசுக்கட்சிக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அனந்திக்கு இதை வழங்கியதிலிருந்து முதலமைச்சர் மீண்டும் பிரச்சனையை தொடங்குகிறார். 

மேலும் வட மாகாண ஆளுநருக்கு ஆனோல்டின் பரிந்துரைக் கடிதத்தை தமிழரசுக்கட்சி அனுப்பியது பிழையானது.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அவர்களுக்கு அமைச்சராக இருக்க அனைத்து தகுதியும் உண்டு .......

ஆனால் காலம் அறிந்து ...
எனும்போது இது சரியாக படவில்லை 

முதல்வரின் உண்மையான எதிரிகளின் ஆழம் தெரியாது 
காலைவிடுவது போல இருக்கிறது.

முதலமைச்சருக்கு இது இன்னமும் பாதிப்பை கொடுக்கலாம். 

இப்போதைய சூழலில் சி வி யை முதல்வராக 
நீடிக்க செய்வதே எமக்கு தேவையானது.
இன்னொரு தேர்தலுடன் காய்களை நகர்த்தி இருக்கலாம். 

 

suma-sri

முதல்வருக்கு சவால்விடும் சிறீதரன், சுமந்திரன்!

மக்களின் அமோக ஆதரவு இருக்கிறதென்று முதலமைச்சர் நம்புவாராக இருந்தால் மாகாண சபையைக் கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றுக் காட்டவேண்டும் என்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மாகாண சபையில் நடைபெறும் குழப்பகரமான நிகழ்வு தொடர்பாக தனது நிலைப்பாட்டை விளக்குமுகமாக கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்வொன்றில் திரு.சுமந்திரன் அவர்கள் முதல்வருக்கு இப்பகிரங்கச் சவாலைவிடுத்துள்ளார்

தமிழரசுகட்சியால் அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்ட ஆர்னோல்ட் அவர்களின் தெரிவை முதலமைச்சர் நிராகரித்து அனந்தி சசிதரனை அமைச்சராக முதலமைச்சர் தெரிவு செய்த முடிவை விமர்சித்த ஆபிரகாம் சுமந்திரன் , மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கும் விக்கினேஸ்வரனின் வீடு அமைந்துள்ள ஒடுங்கிய வீதியில் திரண்ட மக்களின் எண்ணிக்கை 102 பேர்தான் என்றார்.

மக்களுக்கு நன்றி என்ற பெயரில் ‘நந்தவனத்து ஆண்டிகள்’ என தம்மை முதல்வர் விமர்சனம் செய்துள்ளது நாகரிகமில்லாத செயல் என்ற சுமந்திரன், விக்கினேஸ்வரன் அவர்களுக்கு மக்களின் ஆதரவு இருக்குமென்றால் மாகாண சபையைக் கலைத்து தேர்தலைச் சந்திக்கவேண்டும் என சிறீதரன் தெரிவித்த கருத்தையே தானும் முன்வைப்பதாகத் தெரிவித்தார்.

http://tamilleader.org/?p=2570

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

 

suma-sri

முதல்வருக்கு சவால்விடும் சிறீதரன், சுமந்திரன்!

மக்களின் அமோக ஆதரவு இருக்கிறதென்று முதலமைச்சர் நம்புவாராக இருந்தால் மாகாண சபையைக் கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றுக் காட்டவேண்டும் என்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மாகாண சபையில் நடைபெறும் குழப்பகரமான நிகழ்வு தொடர்பாக தனது நிலைப்பாட்டை விளக்குமுகமாக கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்வொன்றில் திரு.சுமந்திரன் அவர்கள் முதல்வருக்கு இப்பகிரங்கச் சவாலைவிடுத்துள்ளார்

தமிழரசுகட்சியால் அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்ட ஆர்னோல்ட் அவர்களின் தெரிவை முதலமைச்சர் நிராகரித்து அனந்தி சசிதரனை அமைச்சராக முதலமைச்சர் தெரிவு செய்த முடிவை விமர்சித்த ஆபிரகாம் சுமந்திரன் , மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கும் விக்கினேஸ்வரனின் வீடு அமைந்துள்ள ஒடுங்கிய வீதியில் திரண்ட மக்களின் எண்ணிக்கை 102 பேர்தான் என்றார்.

மக்களுக்கு நன்றி என்ற பெயரில் ‘நந்தவனத்து ஆண்டிகள்’ என தம்மை முதல்வர் விமர்சனம் செய்துள்ளது நாகரிகமில்லாத செயல் என்ற சுமந்திரன், விக்கினேஸ்வரன் அவர்களுக்கு மக்களின் ஆதரவு இருக்குமென்றால் மாகாண சபையைக் கலைத்து தேர்தலைச் சந்திக்கவேண்டும் என சிறீதரன் தெரிவித்த கருத்தையே தானும் முன்வைப்பதாகத் தெரிவித்தார்.

http://tamilleader.org/?p=2570

 

 

 

 

சுமந்திரன் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பது இந்தக் கருத்திலிருந்து தெரிகின்றது. விக்கி ஐயா மீது   அவருக்கு இருக்கும் காழ்ப்புணர்வும் தெரிகின்றது

சுமந்திரன் போன்ற ---- தமிழரின் சாபக் கேடு! அடுத்த தேர்தலில் இந்தக் ---- முழுக்கையாக தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.