Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கூட்டுபாலியல் வன்புணர்வு முயற்சி : மாணவியின் சாதுரியத்தால் முறியடிப்பு.!

Featured Replies

யாழில் கூட்டுபாலியல் வன்புணர்வு முயற்சி : மாணவியின் சாதுரியத்தால் முறியடிப்பு.!

 

 

rape.jpg

யாழ்.காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வேனில் வந்த கும்பலொன்று  பாடசாலை சென்றுகொண்டிருந்த மாணவியொருவரை கடத்தி சென்று கூட்டுபாலியல் வண்புனர்வு செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர்.  

இருந்தபோதிலும் குறித்த மாணவி கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சித்ததையடுத்து  கடத்தல்காரர்கள் கொடிகாமம் பகுதியில் அம் மாணவியை வேனில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தள்ளிவிடப்பட்டிருந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை 7.30 மணியளவில் யாழ். காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பகுதியான மல்லாகத்தில் 18 வயதுடைய உயர்தரம் கற்கின்ற மாணவியொருவர் பாடசாலைக்கு சென்றுகொண்டு இருந்துள்ளார். 

இதன்போது வெள்ளைநிற வேனில் கும்பலொன்று குறித்த மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளது.

இவ்வாறு பின்தொடர்ந்து சென்ற 6 பேர் அடங்கிய கும்பலானது குறித்த மாணவி வீதியினை கடப்பதற்காக மஞ்சள் கோட்டினை அண்மித்த போது வேனில் சென்ற கும்பலானது மாணவியை இழுத்து வேனுக்குள் போட்டுக்கொண்டு கடத்தி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட மாணவியை வேனுக்குள் வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் அம் மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளனர். அத்துடன் மாணவிக்கு அருந்துவதற்கு ஏதோ ஒரு பானத்தையும் கொடுத்துள்ளனர்.

இருந்த போதிலும் குறித்த மாணவி அவ் கடத்தல்காரர்களுடன் கடுமையாக போரிட்டதுடன் அவர்கள் அருந்த கொடுத்த பானத்தையும் தட்டிவிட்டு அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு கடுமையாக முயற்சித்துள்ளார். இதனையடுத்து குறித்த கும்பலானது அம் மாணவியை கொடிக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியில் வேனில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். வேனில் இருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி கீழே வீழ்ந்ததால் அவரது காலில் காயமொன்று ஏற்பட்டதுடன் அவ்விடத்தில் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த சிலர் அம் மாணவியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு காயத்திற்கு மருந்துகள் கட்டப்பட்டிருப்பதாகவும் அவரை மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை,

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை தொடர்புகொண்டு வினவியபோது குறித்த கடத்தல் சம்பவமானது காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட தெல்லிபளை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளமையால் இது தொடர்பான விசாரனைகள் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இடம்பெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/21749

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே நடைபெறும்  வித்தியா கொலைவழக்கில் உள்ள இழுவல் தாமதம் அங்குள்ள தீய நோக்குடையவர்களை மேலும் மேலும் குற்றம் புரிய தூண்டுகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே நடைபெறும்  வித்தியா கொலைவழக்கில் உள்ள இழுவல் தாமதம் அங்குள்ள தீய நோக்குடையவர்களை மேலும் மேலும் குற்றம் புரிய தூண்டுகின்றது .

விந்தியா, நடிகை பாவனா, இந்த வான் கடத்தல் எல்லாமே ஒரே எண்ணத்துடன் தான் ஆரம்பித்தவை.

அதாவது பாதிக்கப்படும் பெண்ணோ, குடும்பமோ வெளியில் விசயம் தெரிந்தால் அவமானம் என்று வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு.

இந்தவகையில் இவர்கள் அல்லது அவர்களது குடும்பங்கள் துணிச்சலாக வெளியே வந்தது வரவேற்கத்தக்க அம்சம்.

நடிகை பாவனாவுக்கு நடந்த அதே கொடுமைதான் இந்தப் பெண்ணுக்கு நடந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

யாழ்.காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வேனில் வந்த கும்பலொன்று  பாடசாலை சென்றுகொண்டிருந்த மாணவியொருவரை கடத்தி சென்று கூட்டுபாலியல் வண்புனர்வு செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர்.  

1 hour ago, பெருமாள் said:

ஏற்கனவே நடைபெறும்  வித்தியா கொலைவழக்கில் உள்ள இழுவல் தாமதம் அங்குள்ள தீய நோக்குடையவர்களை மேலும் மேலும் குற்றம் புரிய தூண்டுகின்றது .

ஒரு நாடெண்டால் உதெல்லாம் நோர்மல் எண்டு சொல்லுவினம்.


அதை தட்டிக்கேட்டு நடுரோட்டிலை வைச்சு இரண்டு போட்டால் ஐயோ சும்மா இருக்கிற எங்கடை பிள்ளையளை தண்டிக்கிறாங்கள் எண்டுவினம்.

ஆக மிஞ்சிப்போனால் சகோதரப்படுகொலை எண்டு கதை/கட்டுரை/புத்தகம்/கவிதை எல்லாம் எழுதுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுத்தள்ளனும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

போட்டுத்தள்ளனும்.

இருட்டில

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாணவி தற்காப்புக்கலையில் (karatee, judo, martial arts for self defence) பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் ......... கடத்தியவர்கள்  சிலவேளைகளில் துண்டு வேண்டும் துணி வேண்டும் என்று ஊரவர்களேயே கேட்கும் நிலைமை இருந்திருக்கலாம்.

இது தற்காப்புக்கலையை  பயிற்றுவிக்ககூடியவர்களுக்கு ஓர் நல்ல சிறு தொழில் வாய்ப்பும் கூட.

இன்னும் ஓர் சிறு தொழில் வாய்ப்பும் இருக்கிறது, அதாவது personal safety gadgets சந்தைப்படுத்துதலும் விற்பனையும்.

இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் வகையில் வெட்டு தண்டனை கொடுக்கப்பட வேண்டும்!

சிங்கள-பௌத்த போலீஸ் கையாலாகாத போலீஸ் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

10 hours ago, குமாரசாமி said:

ஒரு நாடெண்டால் உதெல்லாம் நோர்மல் எண்டு சொல்லுவினம்.


அதை தட்டிக்கேட்டு நடுரோட்டிலை வைச்சு இரண்டு போட்டால் ஐயோ சும்மா இருக்கிற எங்கடை பிள்ளையளை தண்டிக்கிறாங்கள் எண்டுவினம்.

ஆக மிஞ்சிப்போனால் சகோதரப்படுகொலை எண்டு கதை/கட்டுரை/புத்தகம்/கவிதை எல்லாம் எழுதுவினம்.

புலிகளை எதிர்க்கும், எதிர்த்த  99% ஆனவர்கள் பாலியல் வன்முறையாளர்களாகவோ, திருடர்களாகவோ, கொலைகாரர்களாகவோ, குறுக்குவழியில் வாழ முயற்சித்தவர்களாகவோ, அற்ப ஆசைகளை கொண்டவர்களாகவோ, சமூக விரோதிகளாகவோ, தமிழின எதிரிகளின் எடுபிடிகளாகவோ, மதம்மாற்றும் வெறியர்களாகவோ, அல்லது சாதிவெறி கொண்டவர்களாகவோ தானே உள்ளனர் என்பது உலகறிந்த விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் வகையில் வெட்டு தண்டனை கொடுக்கப்பட வேண்டும்!

சிங்கள-பௌத்த போலீஸ் கையாலாகாத போலீஸ் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புலிகளை எதிர்க்கும், எதிர்த்த  99% ஆனவர்கள் பாலியல் வன்முறையாளர்களாகவோ, திருடர்களாகவோ, கொலைகாரர்களாகவோ, குறுக்குவழியில் வாழ முயற்சித்தவர்களாகவோ, அற்ப ஆசைகளை கொண்டவர்களாகவோ, சமூக விரோதிகளாகவோ, தமிழின எதிரிகளின் எடுபிடிகளாகவோ, மதம்மாற்றும் வெறியர்களாகவோ, அல்லது சாதிவெறி கொண்டவர்களாகவோ தானே உள்ளனர் என்பது உலகறிந்த விடயம்.

  நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று எடுத்திக்கொண்டாலும், ஓர் பெண் தான் வன்முறைக்காளக்கப்டும் வைப்புகளைத் தன்னால் இயன்ற அளவு தடுக்க வேண்டும்.

அதற்கு தான் சொல்கிறேன் தற்காப்புக்கலையம், personal safety gadget. 

மிகவும் முக்கியமாக, சிங்கள அரசு பாராமுக அணுகுமுறையால் ஓர் இனத்தின் இருப்பை அழிக்க முனையும் போது இது தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.