Jump to content

சாதியம்- உடன் பிறந்தே கொல்லும் வியாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே!

ஒரு விடயம் மட்டும் சொல்ல முடியும், நெடுங்காலபோவனை எதிர்ப்பதாக நினைத்து, தமிழ் வளர்த்த, பெரியார்களை அசிங்கப்படுத்துவது உண்மையில் மிகக் கீழ்தரமானது. என்னைப் பொறுத்தவரைக்கும் நெடு... ஒரு திருத்த முடியாத ஜன்மம். அவர் எதையும் ஆதரிக்கின்றார் என்பதற்காக, எம் முன்னோர்களைக் கீழ்தரமாக விவாதிக்காதீர்கள்.

வெள்ளைச்சுவரில் கறுத்தைப் புள்ளியை மட்டும் நோக்கும் மூடர்களைப் போல, நோக்கி, எம் முன்னோர்களை அசிங்கம் செய்தால், அடுத்த தலைமுறை பிறமொழியில் வாழ்ந்தபடி எம்மைக் குறி வைக்கும் என்பதை மறுக்க வேண்டாம்.

நெடுக்காலபோவனை மையமாக வைத்து விவாதத்தை திசை திருப்ப முற்படுவது தவறானது. அவர்கள் ஒன்றும் நெடுக்காலபோவனை திட்ட வேண்டும் என்று பெரியாரை இங்கு கொண்டு வரவும் நாவலரைத் திட்டவும் ஆரம்பிக்கவில்லை. உங்கள் போன்றோர் இப்படியான நிலையை நெடுக்காலபோவனுக்கு எதிரான நிலை என்பதாக காட்டுவதை உங்களின் பலவீனமாகவே கருதுகின்றோம். நெடுக்காலபோவன் ஒன்றும் தெருக்குச்சியல்ல. கண்டவரெல்லாம் எடுத்து முறித்து விளையாட. உங்களிடம் அவர்களின் கருத்தை எதிர்கொள்ளத் திராணி இருந்தால் கருத்தை கருத்தோடு பகருங்கள். நெடுக்காலபோவனை அநாவசியமாக இதற்குள் உள் நுழைப்பதும் நீங்கள் எல்லாம் ஏதோ உத்தமர்கள் போலவும் நெடுக்காலபோவனுக்கு வழிகாட்டும் மேதைகள் போலவும் தோற்றம் காட்டுவதை நிறுத்தி விடயத்தோடு மட்டும் பேசிக் கொள்ளுங்கள். அநாவசியமான கருத்துக்களால் சமூகத்தில் உள்ள மாறுபட்ட பார்வைகளை எல்லாம் நெடுக்கலாபோவனின் விளைவுகள் என்று எம் தலையில் கட்டிவிட்டு கருத்தியலில் வெட்டி விழுத்திவிட்டதாக பெருமிதம் கொள்ள வேண்டாம். உடனடியாகவே இப்படியான குருட்டுத்தனமான அறிவிலித்தனமான குற்றச்சாட்டுக்களை நெடுக்காலபோவன் மீது வைப்பதை நிறுத்துங்கள். கள நிர்வாகத்தினரும் இப்படியான கருத்துக்களை பக்கச்சார்பாக அனுமதிப்பதை நிறுத்த வேண்டும். :P :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply

மருதங்கேணி சொன்னது போல் ஒன்றும் இல்லாதவனிடம் போய் சாதியத்தை விட்டுக்குடுக்கச் சொல்லி போதனை செய்தால் பலன் இல்லை என்பது உண்மை. ஆனால் ஒப்பீட்டளவில் புலம்பெயர்ந்த சமூகங்களில் எத்தனையே விதமான வாழ்க்கை முறைகள் நல்ல உதாரணங்கள் முன்னேற்றகரமான சந்தர்ப்பங்களை கொண்டிருக்கும் எம்மால் ஏன் இன்னமும் சாதியத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லை?

இந்த விவாதத் தொடரை ஆரம்பித்து வைத்த கட்டுரை புலம்பெயர்ந்தவர்கள் ஓடிவரும் பொழுது மறக்காமல் தூக்கி வந்து இங்கு உருவாகிய உருவாகிக் கொண்டிருக்கும் சமூகத்திற்கும் சாதியத்தைப் பரப்புவது பற்றித்தான் எழுதப்பட்டது.

இங்கு பலரும் விவாதத்தில் (என்னைப் பொறுத்த வரை) வெகுவாக திசை திரும்பி தாயகத்தில் சாதியை எப்படி ஒழிப்பது அங்குள்ள ஆதரவாளர்களும் சாதியத்தை விடவில்லை அங்கிருந்து வரும் திருமண விளம்பரங்கள் சாதியைக் குறிப்பிடுகின்றன வன்னியில் உள்ள மாடுகளின் குறியை வைத்து உரிமையாளரின் சாதிபை பிடிக்கலாம் என்கின்றனர். அங்குள்ளவர்கள் ஏகப்பட்ட நெருக்கடிகளில் இருக்கிறார்கள். ஒரு சாதாரண வாழ்க்கை என்பதை பல தசாப்த்தங்களாக அனுபவிக்காதவர்கள் 1-2 சந்ததிதகள் அப்படியே பிறந்து வழர்ந்தும் விட்டார்கள். அன்றாட அடிப்படை வாழ்விற்கே பல்வேறு சவால்களை எதிர்கொள்பவர்கள். இந்த அவலங்கள் மத்தியில் சமூகச் சீர்திருத்தங்கள் முன்னேற்றகரமான சிந்தனைகள் மாற்றங்கள் என்பது மிகவும் கடினமானது இருந்தாலும் புலிகள் எவ்வளவோ நல்லவிடையங்களை வியக்கத்தக்க முறையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் இங்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் பல்வேறு கலாச்சாரங்கள் இனங்கள் மதங்கள் மத்தியில் வாழும் எம்மால் ஏன் சாதியத்தை அறவே இன்னமும் வேரறுக்க முடியவில்லை? சுதந்திரமான அறிவியலை மய்யப்படுத்திய முற்போக்கான நாடுகளில் வாழும் எம்மால் ஏன் முடியவில்லை என்பது தான் இங்கு நாம் விவாதிக்க வேண்டியது.

தாயகத்தில் புலிகள் சாதியத்தை ஒழிப்பார்களா இல்லையா எப்போ ஒழிப்பார்கள் என்று எம்மால் பொறுப்பேற்க முடியாத பங்களிக்க முடியாத ஒன்றைப்பற்றி நீட்டி முழக்கி வெற்று விவாதங்கள் பக்கம் பக்கமாக வேண்டாம்.

இங்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் எம்மால் ஏன் இன்னமும் முற்றாக ஒழிக்க முடியவில்லை எப்போ ஒழிக்கப் போகிறோம் என்பது தான் எமக்கு பொருத்தமான விவாதக் கோணம். புலம்பெயர்ந்த சமூகத்தவர்கள் மத்தியில் சாதியம் என்ற பலவீனம் இருக்கும் வரை அதை எதிரிகளும் துரோகிகளும தேசியத்திற்கு எதிரான ஒற்றுமையான எழுச்சிக்கு தடையாக தேவையான நேரத்தில் பொருத்தமான வடிவத்தில் பாவிப்பார்கள் என்பது தான் நாம் எல்லோரும் மேலதிகமாக உணர்ந்து கொள்ள வேண்டியது. சாதியம் இன்று வெளிப்படையாகப் பேசப்படவில்லை அவரவர் வீடுகளில் dinner table talk ஆக தனிப்பட்ட மட்டங்களில் பேசபடுகிறது என்று நிம்மதியாக இருந்துவிட முடியாது. கருணாவின் துரோகத்திற்கு முன்னரும் பிரதேசவாதம் எம்மவர்கள் மத்தியில் dinner table talk ஆகத்தான் இருந்தது. இந்த அபாயத்தைத்தான் சிவாசின்னப் பொடியின் கட்டுரை விளக்க முற்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தை விட புகலிடத்தில் மனிதனை மலினப்படுத்தும் பாகுபாடுகள் பல. அவற்றின் ஆதிக்கம் உள்ளவரை இவையும் தொடரும். ஆக மனிதனை மலினப்படுத்தும் பாகுபாடுகள் அனைவற்றிற்கும் எதிராக கருத்தியல் விழிப்புணர்ச்சி என்பது அறிவியல் சார்ந்து சமூகவியல் சார்ந்து எழும் போது இவையும் காணாமல் போகும். மற்றும்படி காலத்துக்கு காலம் ஆளாளுக்கு சாதி மதம் நிறம் என்று ஒழிப்புக் கோசம் போட்டுக் கொண்டு இருப்பது மட்டும் நடக்கும். மக்கள் மனங்களில் உள்ள எண்ணக்கருக்களில் அவை போதிய மாற்றங்களையோ தாக்கங்களையோ பண்ணப் போவது என்பது பகற்கனவு மட்டுமே..! :P :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியை அழிக்க நினைப்பவர் ஒவ்வொருவரும், முதலில் தன்னில் இருந்து தொடங்கவேண்டும், தன்னைவிட உயர்ந்த சாதிக்காறன் அவமதிக்கும்போது கோபம்கொள்ளும் அவனுக்கு, தன்னை விட தாழ்ந்தசாதிக்காறனை அவதிக்கும் போது இனிக்கிறது, அவனை சரிசமனாக பாவிக்க மறுக்கிறான், அவனோடு உறவுகொள்ள தயங்குகிறான், எப்போதும் தாழ்ந்தசாதி என கருதுவோருடன் மோதும் போதும், அவன் இலகுவாக அவனை வீழ்த்த பிரயோகிக்கும் ஆயுதம் சாதியை இழுத்து கதைப்பதுதான்.

கஷ்ரப்பட்டு உழைக்கும் ஏழை ஒரு வேளை உணவுக்குகாக ஏங்கவும், உழையாது தொந்தி வளர்பவர்கள் உண்டு கழிக்கவுமே சாதி உருவாக்கப்பட்து, தொந்தி வளர்ப்பவர் தொடர்ந்து நோகாமல் வாழவே சாதியை எண்ணை ஊற்றி வளர்க்கிறார்கள்.

தன்னை விட உயர்சாதி என கருதுவோர் தன்னை சமனாக மதிக்க வேண்டும் என எண்ணுபவர்கள், தம்மைவிட தாழ்ந்தசாதி என கருதுவோரை சமனாக மதிக்க தயாரா? என தம்மைத்தாமே கேட்டுக்கொள்ளவேண்டும். மாற்றம் என்பது முதலிம் தன்னில் இருந்து தொடங்கவேண்டும்.

கணனிக்கு முன்னிருந்து டொக்கு டொக்கு என்று என்னதான் எழுதி தள்ளினாலும் முதலில் தான் எப்படி இருக்கிறேன் என்று தன்னைதானே உராய்ந்து பார்க்கவேண்டும். :rolleyes::rolleyes::unsure:

Link to comment
Share on other sites

ஆறுமுக நாவலர் பற்றி தனியாக தலைப்பு ஒன்று போட்டுள்ளேன். நாவலரைப் பற்றி அங்கு வைத்துக் கொள்வோம்.

இதில் பலர் சொன்னது போன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள சாதி பற்றி பேசுவோம்.

புலம்பெயர்ந்த நாடுகளிலே சாதியம் என்பது குறைவான ஆனால் முக்கியமான தருணங்களில் வெளிப்படுகிறது.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உயர்சாதி என்று தன்னை சொல்கின்ற வேளாள சமூகம் ஈழத்தை போன்று, மற்றைய சாதியினர் வீடுகளின் உணவு உண்பதை தவிர்ப்பது, விலகி நிற்பது போன்றவைகளை செய்வதில்லை. இது ஒரு சிறிய முன்னேற்றம். (இது வெகு சிலரிடம் இன்றும் இருக்கிறது என்பது வேதனையான உண்மை)

ஆனால் வேளாள சமூகம் சாதியை காதல், திருமணம் போன்ற தருணங்களில் வெளிப்படுத்துகிறது.

இன்றைய இளம் தலைமுறை கூட காதலிக்கும் போது சாதி குறித்து விசாரிக்கிறது.

இந்தப் போக்கு மிக அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் வேளாள சமூகத்திடம் காணப்படுகிறது.

ஆனால் இன்றைக்கும் புலம்பெயர்ந்து வாழும் பார்ப்பன சமூகத்தினர் திருமணம் போன்ற விடயங்களோடு மற்றைய சமூகத்தினரோடு நெருங்கிப் பழகுவதையும், விருந்து உண்பதையும், விருந்தோம்புவதையும் தவிர்த்தே வருகிறார்கள்.

இப்படி இரண்டு சமூகம் சாதியை புலம்பெயர் நாடுகளில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாதி பற்றி பேசுபவர்கள் இந்த இரண்டு விடயம் குறித்து விவாதிக்க வேண்டும். ஒன்றை விவாதிப்போம், மற்றதை விவாதித்தால் சாமி கண்ணைக் குத்தி விடும் என்பதால்தான் சாதி தொடர்ந்தும் புலம்பெயர் நாடுகளில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்சில் நடந்த ஓர் உண்மைக் கதை

அவள் மிகவும் அழகானவள். படித்துப் பட்டம் பெற்றவள். பண்பாடு என்றால் என்னவென்று அந்தப் பெண்ணிடமே கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஈழத்தில் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். அந்தப் பெண் ஒருவனைக் காதலித்தாள். பொடியன் உயர்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்.

இருவரையும் சேர்ந்து வைக்கும் பொறுப்பை அடியேன் எடுத்துக் கொண்டேன். பொடியன் வீட்டில் கடும் எதிர்ப்பு. அனைத்துத் தகுதிகளும் இருந்தும் பொடியன் வீட்டார் அவளை கேவலமான சொற்களால் திட்டியதாக பொடியன் என்னிடம் கூறினான். அந்த _____ நாயையா செய்யப் போகிறாய் என்று அவளது சாதியைக் காட்டி அவளை இழிவு படுத்தினர். இதை அந்தப் பெண் என்னிடம் வேதனையுடன் கூறிய போது, நான் அந்தச் சாதியின் பொருளைக் கூறி நீங்கள் அதையா செய்கிறீர்கள் இல்லையே! கணக்கியல் துறையில் பட்டம் பெற்றிருக்கிறீர்கள் என்று அவளுக்கு ஆறுதல் கூறினேன். அப்போது அவள் அந்தத் தொழிலை தனது அப்பா தாத்தா கூட செய்ததில்லை என்றாள். அதன் பின் நண்பர்கள் உதவியுடன் திருமணமும் நடத்தி வைத்தோம். ஆனால் பொடியன் வீட்டில் இன்றளவும் பிரச்சனைதான்

சாதிய நஞ்சு புலம் பெயர் நாடுகளிலும் வேரூன்றி உள்ளது.

சாதி ஒழிப்புக்கு கலப்புத் திழுமணமே மிகச் சிறந்த வழி. அடுத்தடுத்த தலைமுறைகளில் அது நிச்சயம் காணாமல் போய்விடும்.

Link to comment
Share on other sites

சாதியமும் புலிகளும் என்கிற தலைப்பில் புலிகளின் அதிகார பூர்வ ஏடான விடுதலைப் புலிகளில் (இதழ்:20,தை, 1991) வந்த கட்டுரை இது.

இணைப்பு இங்கே http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/20-09.pdf

காலங்காலமாக தமிழீழ சமூகத்தின் உணவுடன் கலந்திருந்த வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியைய் இழந்து வருகின்றது.எமது 18 வருடகால ஆயுதப் போராட்டம் இதைச் சாதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர சாதியத்தின் முனையும் மழுங்கி வருகின்றது.

அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்கு முறையின் வெளிப்பாடுகளை சிற் சில இடங்களில் இன்றும் காணக் கூடியதாகவே உள்ளது.அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவந்துடன் கட்டுரை ஆரம்பமாகின்றது.

சாதியம் தொடர்பான புலிகளின் கருத்தை இக் கட்டுரை தொட்டுச் செல்கின்றது.

யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம்.அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணிக் கிணறு இருகிறது.அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனி மனிதருக்குச் சொந்தமானது.அந்தத் தனி மனிதர் தன்னை ஒரு உயர் சாதிக்காரர் என எண்ணிக் கொள்பவர்.அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்படோர் எனப்படும் ஒரு மக்களும் பிரிவும் இருக்கிறது.இந்த மக்களுக்கு குடி தண்ணீர் வசதி இல்லை.அவர்களிந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள்.தண்ணீர் அள்ளுவதற்கு முயற்ச்சிக்கிறார்கள்.இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடி வருகிறார்.தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்கிறார்.தாழ்த்தப்பட்டோ

Link to comment
Share on other sites

அற்புதன் ஆகா என்ன அற்புதமான விளக்கம் அதுவும் ஆதாரத்துடன்...உண்மையில் உங்கள் விவாதம் பிரமாதம்.

பாராட்டுக்கள்..இப்படிப்பட்ட கருத்துக்கள் மிக முக்கியமானவை..

Link to comment
Share on other sites

சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால

நீதி வழுவா நெறிமுறையில் மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

பட்டாங்கிலுள்ளபடி.

சாதி அமைப்பு பிறப்பால் வருவதல்ல. தற்காலத்தில் சாதியமைப்பு

விளங்கிக் கொள்ளப்பட்ட முறைக்கும் இந்து சமயம் பொறுப்பல்ல.

சாதியத்தை ஒரு சார்பார் தங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்தப்

புறப்பட்டதினால்தான் இந்துசமயம் அதற்குள் இழுத்து விடப்பட்டது.

ஓளவையாரின் இந்தப் பாடல் காலத்திலேயே சாதியவெறி தலைவிரித்தா

டியதனால்தான் இந்தப் பாடலே பாடப்பட்டிருக்கலாம்.

ஆனால் தற்போது இந்நிலை குறிப்பிடத்தக்க அளவு

இல்லாமலே போய்விட்டதெனலாம். தாயகத்திலோ புலத்திலோ நண்பர்களி

டத்தில் இந்த ஏற்றத் தாழ்வுகளை நாம் அறிகின்றோமா?

சிலவேளைகளில் திருமணப் பேச்சுக்களின் போது இதுவெளிப்படுகிறது.

அதுவும் மிகவும் அடக்கமான குரலாகத்தானிருக்கும்.சாதியத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலவளர்ச்சியின் போக்கில் சமூகத்தின் சிந்தனையும் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது.

அதன் ஒரு நிலையே முன்பு ஒரு சிறிய வகுப்பாக இருந்த சாதிய எதிர்ப்பு கொள்கை இன்று பெரியவகுப்பாக மாறியமை.

எனவே இன்றைய காலத்தின் பௌகுத்தறிவுப் போதினிகளாகத் திகளும் சபேசனோ, இளங்கோவோ அந்த நாவலர் காலத்தில் இருந்திருந்தால், காலப்பாதிப்பிற்கு உட்படாமல் இப்படியேதான் அவர்களின் சிந்தனாவாதம் இருந்திருக்கும் என்று கூற முடியுமா?

எனவே முன்னோர்களில் தேடும் குற்றங்களுக்கு காலப்பாதிப்பே காரணமாகக் கருதி அவற்றை விட்டு விடுவதே அறிவுடமையாகும்.

மேலைத்தேய அறிஞ்ஞர்களின் கருத்துக்கள்,

பூமிதட்டையானது என்ற தகவல்களோடு இருந்ததற்க்காக எத்தனையோ அரிய சிந்தனைகளையும் சேர்த்து எறிய தயாராக இருக்கவில்லை உலகம்.

காலவளர்ச்சியின் அறிவியல் நிலைக்கு உடன்பாடானவைகளை உள்வாங்குவதும், ஃதிலாதனவைகளை கைவிடுவதும் தான் அறிவுடமை.

இளங்கோவிடம் இருக்கும் கடவுள்மறுப்பு கொள்கையைவிட என்னுடையது தீவிரமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் மதத்தை வேரோடு சாய்க்க வேண்டும் என்ற சிந்தனை சிறிதும் கொண்டிருக்க வில்லை.

சமூகவளர்ச்சியின் ஆரோக்கியத்துக்கு பாதகமானவைகளை நீக்குவோம். நன்மை தருவன வற்றை போற்றுவோம்.

குறைகளயே கண்டுபிடித்து அதன் மூலத்தையே குற்றவாளி ஆக்கு வதற்கே துள்ளிக்குதித்த படி இங்கே வாதடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் அடுக்கும் குற்றங்களுக் கெல்லாம் அதை இந்துமதத்தில் வைத்தமைக்காக பழிப்பொறுப்புக்கு பிரதினிதித்துவப் படப்போவது யார்?

கடவுள்களாலா இவை அனைத்தும் எழுதப் பட்டது என்று சொல்கிறார்கள்.

பலவிதமான சிந்தனாவாதிகளால் அன்றைய கால அறிவியல்வளர்ச்சி நிலைக்கேற்ப்ப காலம், காலமாக படைக்கப்பட்டு வந்த தத்துவங்களின் குறை, நிறைகளுக்கு மதம் எப்படிப் பொறுப்பாகும்.

Link to comment
Share on other sites

நான் எழுதிய இந்த கட்டுரைக்கு பதில் கருத்துக்களை முன்வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. ஏற்கனவே இந்தக்களத்தில் யாழ்ப்பாணச் சாதியமும் ஈழத் தழிழரும் என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடந்துகொண்டிருந்தது. அந்த விவாதப் போக்கு ஆரோக்கியமில்லாமல் சென்று கொண்டிப்பதாக எனக்குத் தென்பட்டதால் அதை நெறிப்படுத்துவதற்காக இந்தக் கட்டுரையை எழுதினேன். இந்தக் கட்டுரையை பலர் நன்கு புரிந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். சிலர் தங்கள் மனதில் தோன்றியதை எழுதினார்கள். எந்தவொரு கருத்துக்கும் எதிர்கருத்து உண்டென்பதையும் எனக்கு என்னுடைய கருத்தை செல்வதற்கு எந்தளவுக்கு உரிமையுண்டோ அந்தளவுக்கு மற்றவர்களுக்கும் எனது கருத்துக்கு எதிர்கருத்துச் சொல்வதற்கும் அபிப்பிராயம் சொல்வதற்கும் உரிமையுண்டென்பதையும் நான் ஏற்றுக் கொள்பவன் என்ற வகையில் இங்கே முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன்.

இப்போது நம்முன் சில கேள்விகள் இருக்கின்றன. அதாவது …..

1. புலம்பெயர்ந்த நாடுகளில் நம்மவர்கள் மத்தியில் சாதியம் இருக்கிறதா?

2. நமது இளைய தலைமுறை சாதிய உணர்வூட்டி வளர்க்கப்படுகிறதா?

3. இளைய தலைமுறையினர் அடையாளம் இழப்பதற்கும் வன்முறைக் கும்பலாக மாறுவதற்கும் சாதியம் துணை போகிறதா?

4. புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் தாயக விடுதலைக்காக ஓரணியில் திரள்வதற்கு சாதியம் தடையாக இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதில்.. ஆம் நூறு வீதம் உண்மை என்பது தான். இல்லை இது தவறு என்று நினைப்பவர்கள் உங்கள் கருத்தைச் சொல்லாம்.

அடுத்து இன்னொரு கோணத்திலே சில கேள்விகளை கேட்டுப்பார்ப்போம்..

1. சாதியைப் பற்றி நாங்கள் ஊடகங்களில் கதைக்கத் தேவையில்லை. கதைப்பதால் தான் அது வளரும் நாங்கள் அதைப்பற்றி கதைக்காவிட்டால் அது தானாக அழிந்துவிடும் என்று கூறுவது சரியா?

2. புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் - தாயகத்தை கண்ணால் பாத்திராத குழந்தைகளைப் பார்த்து நீங்கள் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்று கூறும்போது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் மீதும் ஏற்படுகின்ற வெறுப்பை தமிழ் தேசித்துக்கு எதிரான வெறுப்பாக சித்தரிப்பது சரியா?

3. ஒரு வேளை சாப்பாட்டுக்கான அரிசி மரக்கறி மீன் இறைச்சி வகைகளை வாங்கும் போது கூட தரம் பார்த்து தேடி வாங்கும் போது வாழ்நாள் முழுதும் தொடரக்கூடிய திருமண பந்தத்தில் சாதி பார்ப்பதில் என்ன தவறு என்று கேட்பது சரியா?

4. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களுக்கு பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கத் தெரியாது. ஊத்தையர்களும் குழப்படிக்காரர்களுமான அவர்களது பிள்ளைகளுடன் எங்களது பிள்ளைகள் சேர்ந்து கெட்டுப் போய்விடக் கூடாது என்று நினைக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது என்று சொல்வது சரியா?

பிழை என்பது தான் என்னுடைய பதில். இல்லை இவையெல்லாம் சரியான நியாயமான கருத்துக்கள் என்று நினைப்பவர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.

எனவே நான் என்னுடைய கருத்தியல் தளத்தில் 'புலம் பெயர்ந்த நாடுகளில் சாதியத்தக்கு புத்துயிர் அளிக்கப்படுகிறது. அது இளைய தலை முறையினரை அடையாளம் இழக்கச் செய்கிறது. தாயக விடுதலைக்காக நாங்கள் எல்லோரும் ஒன்றுபடுவதை தடுக்கிறது' என்ற முடிவுகளோடு இந்தக் கட்டுரையைத் தொடர்கிறேன்

புலம்பெயர்ந்த நாடுகளில் சாதியத்துக்கு புத்துயிர் ஊட்டப்படுவதற்கு நம்மவர்களுக்கு எற்பட்டள்ள மனஅழுத்தங்களும் அதனால் எற்பட்டுள்ள ஒருவிதமான மனநோயும் தான் அடிப்படைக் காரணங்களாகும்.

1970 களின் முற்பகுதி வரை மேற்குலகிற்கு புலம் பெயர்வது என்பது உயர்கல்வியின் நிமித்தமும் தொழில் நிமித்தமுமே நடைபெற்றது. அதிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த மிகவும் வசதி படைத்த மேற்தட்டு பிரிவினருக்கே அது சாத்தியமானது. அதிலும் எலிசபெத் மகாராணி குடியிருக்கும் இலண்டன் மாநகருக்கு செல்வதும் அவரது மொழியான ஆங்கில மொழியில் கல்வி கற்பதும் இந்துக்கள் கைலாசத்தக்கும் வைகுண்டத்துக்கும் செல்வதை கிடைத்தற்கரிய பெரும் பேறாக கருதியதற்கு ஒப்பானதாக இருந்தது. தமிழர்தாயகத்திலிருந்த ஏனைய மக்களுக்கு லண்டன் செல்வதும் தங்களது பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வி கற்பிப்பது என்பதும் ஒரு கனவாகத் தான் இருந்தது. ஆனால் 1977 க்கு பின்னர் பௌத்த சிங்கள பேரின வாதம் முனைப்புடன் தமிழ் மக்களை அழிக்கத் தொடங்கிய பின்பு இந்த நிலைமை மாறி இந்தக் கனவை நனவாக்கலாம் என்ற நிலைமை உருவானது. ஆனால் புலம்பெயர்ந்த எல்லோராலும் லண்டன் மாநகரத்துக்கு செல்வது சாத்தியமில்லாமல் போனது. கடலிலே பயணம் செய்யும் கப்பல் புயலிலே சிக்கி தனது பயணத்தை தொடரமுடியாமல் ஏதோ ஒரு நாட்டின் கரையை தொடுவது போலவே நம்மவர்களும் பிரான்ஸ் சுவீஸ் ஜேர்மனி இத்தாலி ஸ்கண்டிநேவியன் நாடுகள் என்ற பல நாடுகளில் தஞ்சமடைந்தார்கள். ஒரு கட்டத்திற்குப் பின்னர் ஏதாவது ஒரு நாட்டுக்குச் சென்றால் சரி என்ற நிலைமை வந்துவிட்டது.

நன்கு படித்த அல்லது ஓரளவுக்கு படித்த ஆங்கிலம் தெரிந்த ஒரு பிரிவினரும் அடிப்படை கல்வியை மட்டும் பெற்ற பிரிவினருமாக எமது மக்கள் இந்த நாடுகளில் தஞ்சமடைந்து போது பழக்கமில்லாத சூழலும் முன்னொரு போதும் கேட்றிந்திராத மொழியும் அவர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்து. ஜேர்மன் சுவீஸ் போன்ற நாடுகளில் சமூக உதவிகளும் தங்குமிட வசதிகளும் கிடைத்தாலும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இவர்களே உழைத்து அதனை பெற வேண்டிய நிலை இருந்து.

உழைப்பு என்று வருகிற போது மொழி தெரியாத நிலையில் அடிமட்ட வேலைகளைத் தான் செய்ய வேண்டி இருந்து. படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடின்றி எல்லாரும் எச்சில் கோப்பை கழுவினார்கள் கழிப்பறைகளை துப்பரவாக்கினார்கள். குப்பை அள்ளினார்கள். இந்த வேலைகள் அவ்வளவு சுலபமானவையாக இருக்கவில்லை. மொழி தெரியாத நம்மவர்களை வெள்ளை முதலாளிகள் கசக்கிப் பிழிந்தர்கள். என்ன தான் தொழில் சட்டங்கள் ஜனநாயக மரபுகள் இருந்தாலும் நம்பவர்கள் நவீன அடிமைகளாவே பாரிஸ் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டார்கள். இந்த மோசமான தொழில் ரீதியான அடக்கு முறை என்பது குடாநாட்டில் இருந்து புலம் பெயாந்து வந்த மேல்தட்டு மக்கள் ஓருபோதும் அனுபவித்திராத ஒன்றாகும். அதேவேளை அவர்கள் இங்கு செய்த அந்தத் தொழில்களும் காலாகாலமாக இழிவான தொழில்களாக அவர்கள் கருதியவையாகும். 'ஐயோ எங்களுடைய நிலை இப்படியாகிவிட்டதே' என்று இது அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை கொடுத்தது. மறுபறத்தில் பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு இந்த அடக்கு முறையோ இந்தத் தொழில்களோ ஒன்று புதியவை அல்ல. தாயகத்தில் ஒரு குளிர் சாதனப்பெட்டி வாங்குவது தொலைகாட்சி பெட்டி வாங்குவது வீட்டை ஆடப்பரப் பொருட்களால் அலங்கரிப்பது இவையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவையாக இருந்தன. ஆனால் இங்கே அதெல்லாம் அவர்களுக்கு சாத்தியமானது. பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள் பெரிய ஷோ கேசுகள் செட்டிகள் என்று ஆடம்பரப் பொருட்களாக வாங்கிக்குவித்து தங்களது கனவுகளை அவர்கள் நிறைவேற்றினார்கள்.

உண்மையில் ஒரு சமூகத்தில் தொழில் ரீதியான வேறுபாடுகள் ஒழிந்து பொருளாதார சமத்தவம் எற்படும் போது அந்தச் சமூகத்தக்குள் இருக்கும் அனைத்து எற்றத்தாழ்வுகளும் மறைந்துவிடும் என்பது ஒரு பொதுவான அரசியல் கோட்பாடு.

ஆனால் நமது சமூகம் ஒரு சாதிய சமூகமாக இருப்பதால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக போட்டியும் பொறாமையும் ஊரில் அப்படி இருந்தது இப்படி இருந்தது என்ற ஒப்பீடுகளும் தான் வளர்ந்தன.

நான் எற்கனவே குறிப்பிட்ட படி ஒவ்வொரு சாதிய அலகும் தன்னை தானே தன்னளவில் புனிதர்கள் என்ற நினைப்போடு மற்ற சாதிய அலகுகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதால் ஏனைய சமூகங்களிலும் இனங்கள் மத்தியிலும் ஏற்பட்ட தொழில் புரட்சி பொருளாதார மாற்றம் மற்றும் அரசில் புரட்சிகளால் வர்க்க அடிப்படையிலான காரணங்களின் அடிப்படையில் இருந்த சாதி அமைப்பு தகர்ந்தது போல எங்கள் மத்தியில் இருக்கும் சாதி அமைப்பு தகரவில்லை.

இங்குள்ள மக்கள் தங்களை தங்களது வட்டத்தின் மேலாண்மையை நிலையை நிறுத்தவதற்கு சாதியத்துக்கு புத்துயிர் அளித்தார்கள். அடித் தட்டு மக்களின் பிள்ளைகளுக்கும் தங்களது பிள்ளைகளுக்கும் இடையில் காதல் எற்பட்ட சாதிக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தங்களது பிள்ளைகளுக்கு சாதியப் பெருமைகளை சொல்லிக் கொடுத்தார்கள். தொழில் ரீதியாக பொருளாதார ரீதியாக காட்ட முடியாத தங்கள் மேலாண்மையை இவர்கள் சமுக அமைப்புக்கள் பொது நிறுவனங்கள் கோவில்கள் என்பவற்றின் பிரமுகர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டு தங்கள் வட்டத்தை பலப்படுத்திக் கொள்ள மறு பகுதியினர் நுகர் பொருள் கலாச்சாரத்தக்குள் விழுந்து தேசிய சிந்தனையை மறந்து வட்டி சீட்டு என்ற ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

லண்டனிலே இது முதலில் சென்ற டமிழ்சுக்கும் பிறகு சென்ற டேர்ட்டி டமிழ்சுக்குமான பிரச்சனையாக இருக்கிறது. சுவீஸ் நேர்வே போன்ற நாடுகளிலே தாயகச் செயற்பாட்டாளர்களின் முன்மாதிரியான செயற்பாடுகள் இந்த முரண்பாட்டைபெருமளவுக்கு குறைத்தருக்கிறன.

சாதியம் புலம் பெயர்ந்த இளைய சமூகத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதறகு சில உதாரணங்களை கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

1998 மாம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் இருந்த ஒரு இளைஞர் கும்பல் ஒன்றில் இருந்து அட்டகாசம் செய்து வந்த கபில் என்ற இளைஞனை நான் சந்தித்து அவன் அப்படி மாறியதற்கான காரணத்தைக் கேட்டேன். கட்டைப்பிராயை சேர்ந்த அவனுக்கு தந்தை இல்லை. தாய் மட்டும் தான் தாயையும் அவனையும் தாய் மாமன் தான் பிரான்சுக்கு கூப்பிட்டார். 10 வயதில் பிரான்சுக்கு வந்த அவனை தாய் துப்பரவு பணி செய்தே படிப்பித்தார். நன்றாகப் படித்து மருத்துவகல்லூரியில் 3ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நேரத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாக் கொண்ட சட்டக் கல்வி பயின்ற வந்த ஒரு பெண்ணை அவன் 3 வருடமாக காதலித்தான். இந்த விடயம் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் இவனின் பூர்வீகத்தை ஆராந்து இவன் சாதி குறைந்தவன் தகுதி இல்லாதவன் என்று கூறி அந்தப் பெண்ணின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிட்டார்கள். அத்தோடு இலண்டனில் இருந்த தங்கள் உறவுக்கார பொடியன் ஓருவனுக்கும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்க எற்பாடு செய்து விட்டனர். இதை அறிந்த அவன் தனது நண்பர்களோடு சேர்ந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ய முற்பட்டபோது காவல்துறையினர் பிடித்து விட்டனர். தன்னை வலுக்கட்டாயமாக கடத்த முற்பட்டது என்று அந்தப் பெண் கொடுத்த முறைப்பாட்டால் இவனுக்கு 18 மாதம் சிறைத் தண்டனை கிடைத்தது. இவன் சிறைத் தண்டனை அனுபவித்த நேரத்தில் அவளுக்கு திருமணமாகிவிட்டது. தண்டனை முடிந்து வெளியே வந்தவன் படிப்பை தொடராது குடிக்கப்பழகி சமூகத்தின் மீதான வெறுப்பால் தெருச் சண்டியனாக மாறிவிட்டான். நாடு போராட்டம் அவனது தாய்பட்ட கஷ்டம் இவை பற்றி எல்லாம் நான் அவனுக்கு எடுத்து விளக்க முற்பட்ட போது அவன் அதை கேட்கும் கட்டத்தை தாண்டி விட்டான்.

இன்னொரு இளைஞனின் கதை வித்தியாசமானது.

அவனது பெயர் கஜன். அவனது தாய்க்கு அவனது அப்பா இரண்டாம் தாரம். முதன் கணவன் அபுதாபியில் வேலைக்குப் போனபோது இறந்துவிட்டார். அவருடன் அபுதாபில் வேலை செய்த அவனது தாய் அவருக்குப் பிறந்த ஒரு மகனுடன் 1981 ம் ஆண்டு பிரான்சக்கு வந்தா. 1983 ம் ஆண்டு இங்கே பாரிசில் அவனது தந்தையை காதலித்து இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டா. 1984 ம் ஆண்டு இவன் பிறந்தான். 1993 ம் ஆண்டு இவனது தந்தை சாதி குறைந்தவர் என்று இவனது தாய்க்கு தெரியவருகிறது. அதிலிருந்து தனக்கு பொய் சொல்லி ஏமாற்றி விட்டதாக ஒவ்வொருநாளும் வீட்டில் சண்டை. தனது முதல் தாரத்து மகனை லண்டனில் இருந்த தனது சகோதரனுடன் தங்கி இருந்து படிக்க அனுப்பி வைத்த கஜனின் தாய் தகப்பனின் மேலுள்ள கோபத்தை வைத்து இவனுக்கு அடிப்பதும் 'கொப்பன்ரை புத்திதானே உனக்கு இருக்கும்' என்று இவனை திட்டி அவமானப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். பொறுத்தப் பொறுத்துப் பார்த்த அவன் தனது 16 வது வயதில் விட்டை விட்டு வெளியேறி லா சப்பல் குழுக்களுடன் சேர்ந்து அவர்களுடனேயே தங்க ஆரம்பித்தான். நீ செய்தது சரியா உன்னுடைய எதிர்காலம் பற்றி சிந்தித்தியா என்று நான் அவனைக் கேட்ட போது “எதிர்காலமா அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இப்ப நான் சந்தோசமா இருக்கிறன். இப்ப என்னை ஒருதரும் பேச மாட்டினம். எனக்கு ஒருதரும் அடிக்க மாட்டினம்” என்றான்.

இப்படி சாதி என்ற கொடிய மனநோயால் சிரழிக்கப்பட்ட நூற்றக்கணக்கான இளைஞர்களுடைய வரலாற்றை பக்கம் பக்கமாக என்னால் உதாரணம் காட்டமுடியும். தயவு செய்து இந்தப் பிரச்சனையை நாங்கள் விதண்டாவாதம் செய்வது - மூடி மறைக்க நினைப்பது என்று இல்லாமல் இந்தக்களத்தில் வந்து பதிவுகளை செய்யக் கூடிய - இவற்றைப் படிக்கக் கூடிய இளைய தலைமுறையினர் புலம் பெயர்ந்த சமூத்தில் இதை ஒழிப்பதற்கு அடுத்த தலைமுறைக்கு இது பரவாமல் தடுப்பதற்கு உங்களைப் போன்ற இளைஞர்களது எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை அதன் பாதிப்பக்களில் இருந்து மீட்பதற்கு என்ன செய்லாம் என்பதை தயவு செய்து ஆக்கபூர்வமாக அலசுங்கள். தாயக விடுதலையை விரைந்து முன்னெடுப்பதற்கு தேசித்தலைவர் புலம்பெர்ந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் நப்பிக்கையை காப்பாற்றுவதற்கு இருக்கும் தடைக்கற்களை தகர்ப்பதில் உங்களுடன் நானும் கை கோர்க்கிறேன்

சிவா சின்னப்பொடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சிவா சின்னப்பொடி அவர்களே! உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மைதான். உங்களோடு இணைந்து செயலாற்ற உறுதியாக இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவா சின்னப்பொடி அவர்களே நீங்கள் கூறிய கதைகள் நிதர்சனத்தை எடுத்துக்காட்டினாலும், சாதியம் ஒன்றுக்கான காரணத்துக்காக காதல் தோல்விகள், ஏமாற்றங்களால் மட்டும் கும்பல்களுடன் சேர்ந்து குடிப்பது, தவறான செய்கைகளில் ஈடுபடுவது என்பது போன்ற நிகழ்வுகள் நடப்பது இல்லை.

கும்பலுடன் சேர்வதில் சாதியம் ஒரு பொருட்டாகவே கருதப்படுவது இல்லை.

Link to comment
Share on other sites

இன்று நண்பகல்12.20 க்கு ஒறிலா வீல் நகரத்திலிருந்து பாரிஸ் ஊடாக கோர்பய் எசன் நகரத்தக்குச் செல்லும் RER -D புறநகர விரைவுத் தொடருந்தில் பயணித்த போது சார்சல் நகரத்தில் ஏறிய இரண்டு தமிழ் இளைஞர்களது உரையாடல் என் கவனத்தை ஈர்த்து….

இளைஞன்1.. மச்சான் நான் பரிசுக்குள்ள ஒரு ஸ்ரூடியோ (ஒரு அறை மட்டுமுள்ள குடியிருப்பு ) எடுக்கப்போறன்..

இளைஞன2 எந்த இடத்தில பார்த்திருக்கிறாய்..

இளைஞன்1.. பொபினியலை மெற்றேவுக்கு பகத்தில 780 யுரோ வாடகை. எங்கடை பொடியள்ஆரும் இந்தால் சொல்லு சமறிக்கு வச்சிருக்கலாம்.

இளைஞன்2.. எங்கடைபொடியள் எண்டு எனக்குத் தெரிஞ்சதா ஒருதரும்இல்லை.ஆனால் என்னோடை வேலை செய்யிற ஒரு பொடியன் வீடு தேடுறான். நான் வேணுமெண்டால் அவனட்டை சொல்லிப் பாக்கிறன்….

இளைஞன்1 ஆள் ஆர் எந்த ஊர் என்ன மாதிரி..?

இளைஞன்2 அவன் நல்ல பொடியன் சங்கானையோ பண்டத்தரிப்போ சொந்த ஊர் எண்டு நினைக்கிறேன்.அவன் “ந” எண்டு நினைக்கிறன்.

இளைஞன்1 ஐயோ வேண்டாம். ஊந்த ‘நனா’ ‘பனா’க்களோடை ஒரு வீட்டுக்கை இருந்து ஒண்டா திண்டு குடிச்து எண்டு ஊருக்குத் தெரிஞ்சால் எங்டை ஆக்கள் கலியாணம் கட்ட பொம்பிளையே தரமாட்டாங்களடாப்பா..நீ எங்கடை பொடியள் ஆரும் இருந்தால் சொல்லு…..

எழும்பி கன்னத்தை பொத்தி குடுக்க வேண்டும் என்று ஆத்திரம் வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி ஒழிஞ்சு போச்சு... சும்மா சும்மா சாதி இருக்கெண்டு சொல்லி நீங்கதான் மக்களிட்ட சாதிய திணிக்கிறிங்க :P

போர்சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?

போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்றுவேண்டுமானால் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. மறைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாகக் கூறினால். ராணுவம் குண்டு வீசப்போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர்பிழைக்க ஒடி கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படி நிலை வெளிபடும். ஓடி தஞ்சமடையும் போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.

இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்த பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும்,உத்திரவுகளையு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டி20 உலகக்கோப்பை: கவலை தரும் ரோஹித், ஹர்திக் - குழப்பமான சிக்னல் தரும் இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ’வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ள’ அணியாக (favourites) ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் நுழைகிறது. அடுத்த நான்கு வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி, ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளையும் தீவிர ஆய்வுகளையும் எதிர்கொள்ளும். 2007 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு முதலாவது உலகக்கோப்பையை வென்ற இந்தியாவால் அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியவில்லை. பணம், செல்வாக்கு மற்றும் திறமை இருந்த போதிலும் முக்கிய கிரிக்கெட் சாம்பியன் பட்டங்கள் இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. 2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பிறகு இந்தியா எந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர்களில் பட்டம் வென்றதில்லை. அதன் பிறகு, மூன்று சிறந்த கேப்டன்கள் - எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மற்றும் இரண்டு பிரபலமான தலைமை பயிற்சியாளர்கள் - ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மற்ற தொடர்களில் சிறந்த வெற்றிகளை பெற்ற போதிலும், ஐசிசி தொடர்களில் தோல்வியடைந்தனர். கடந்த ஆண்டு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த துரதிர்ஷ்டத்தை இந்தியா இந்த முறை முறியடிக்க முடியுமா? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல் பந்தயங்களில் அதிக ரன் குவித்த விராட் கோலி, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். இந்திய அணித் தேர்வில் குழப்பமான சிக்னல் 2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), வீரர்களின் உடல் தகுதியை மதிப்பிடுவதற்கும், இந்திய அணியின் தேர்வில் செல்வாக்கு செலுத்தும் அம்சமாகவும் இருந்துவருகிறது. டி20 போட்டிகளுக்கும், சில சமயங்களில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இது பொருந்தும். ஐபிஎல் பந்தயங்களில் நிலவும் கடுமையான போட்டியும், அழுத்தமும் வீரர்களின் திறனையும், மன உறுதியையும் சோதிக்கிறது. இருப்பினும் ஐபிஎல் 2024 இன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குழப்பமான சமிக்ஞைகளை அளிக்கிறது. ரோஹித் ஷர்மாவின் அதிரடி தொடக்க பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஒரு வீரரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடும் ரிங்கு சிங் 15 வீரர்கள் கொண்ட முக்கிய அணியில் இல்லை. ரிசர்வ் வீரர்களில் அவரும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த 'பெரிய சாதனையாளர்' என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த சுப்மன் கில், ரிசர்வ் வீரர்களில் ஒருவராக உள்ளார். விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் 2024-ல் அதிக ரன்கள் எடுத்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களில் கூட இல்லை. சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கெய்க்வாட் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, இந்தியாவின் 2022 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷல் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல்-லில் மட்டை வீச்சாளர்களை நடுநடுங்க வைத்த பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. நட்சத்திர வீரர்கள் கோலி, பும்ரா ஐபிஎல் 2024 இன் ஃபார்ம் அடிப்படையில் பல வீரர்களைச் சேர்த்தது மற்றும் குறிப்பிடத்தக்க சில புறக்கணிப்புகள், பாரம்பரிய தேர்வு முறைக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளது. விராட் கோலியும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்கள். போட்டியின் நடுப்பகுதியில் கோலியின் ஸ்டிரைக் ரேட் மீதான விமர்சனம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பிறகு அவர் அற்புதமாக பேட்டிங் செய்து சந்தேகப்பட்டவர்களை அமைதிப்படுத்தினார். முன்னணி ரன் எடுத்தவர் என்ற முறையில் அவர் கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். பும்ரா மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்காவிட்டாலும் (மூன்றாவது இடத்தைப் பிடித்தார்) அவர் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தார் என்பது உண்மை. அவரது பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் சிக்கனமாக இருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாகவே அவர் கொடுத்தார். அவர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டாலும் கூட பும்ராவின் அபாரமான திறமையும், ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அவரை ஆக்கியது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு அற்புதமான டெஸ்ட் தொடரின் மூலம் பும்ரா, சம கால வேகப்பந்து வீச்சாளர்களில் நிகரில்லாதவராக திகழ்கிறார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, குல்தீப் யாதவ் (வலது) மற்றும் ரவீந்திர ஜடேஜா (இடது) இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்கின்றனர். ரிஷப் பந்தின் வலுவான மறுபிரவேசம் இந்த அணியில் கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஒப்பாக நான் கருதும் ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே. இது ஐபிஎல் 2024 இல் அவர் செய்த சாதனைகளின் புள்ளிவிவரங்களுக்காக அல்ல. மாறாக உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து அவர் செய்த குறிப்பிடத்தக்க மற்றும் வலுவான மறுபிரவேசத்திற்காக. இந்த காயம் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு அவரை ஆட்டத்தில் இருந்து விலக்கி வைத்திருந்தது. இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்த ரிஷப் பந்தின் சுதந்திரமான, அதிரடியான மற்றும் புதுமையான பேட்டிங் மீண்டும் திரும்பியிருப்பது உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நம்பிக்கையை தருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் அதிரடி வீரர் சிவம் துபே. ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இங்கிருந்து இந்திய அணியின் பலம் குறையத் தொடங்குகிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் 2024 இல் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால் சிறப்பாக எதையும் சாதிக்கவில்லை. மற்ற வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றனர். பும்ராவின் முக்கிய ஜோடியான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பெரும்பாலான நேரங்களில் பின்தங்கியே இருந்தார்.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து ரிஷப் பந்த் ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்திய அணிக்கு கவலை தரும் ரோஹித், ஹர்திக் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிட்ச்கள் (ஆடுகளங்கள்) எப்படி இருக்கும் என்பது உலகக் கோப்பையில் எல்லா அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். ஆனால் மூன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நிலையற்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் (புதியவர்கள் கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர்) இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலின் கூர்மை குறைவாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மோசமான ஐபிஎல் ஃபார்ம்தான் முக்கிய கவலை. மும்பை இந்தியன்ஸில் கேப்டன்சி மாற்றத்தால் எழுந்த சர்ச்சை அணியின் ஒற்றுமையை பாதித்தது. தொடக்க பேட்ஸ்மேனாக ரோஹித்தின் அதிரடி பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இது ஒருநாள் உலகக் கோப்பையில் நிரூபணமானது. பினிஷர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டர் என பாண்டியாவின் ஆல்ரவுண்டர் திறமையும் முக்கியமானது. பாண்டியா தனது ஆட்டத்திறமையின் உச்சத்தில் இல்லாமல் இருப்பது அணியின் சமநிலையை சீர்குலைக்கக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி தலைமையிலான இந்திய அணி, 2007ஆம் ஆண்டு முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்றது. டி20 உலகக்கோப்பை யாருக்கு? இந்தியாவின் தேர்வாளர்கள் நெருக்கடி காலத்திட்டம் உட்பட எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பல நட்சத்திர வீரர்கள் கேள்விக்குரிய ஃபார்மில் இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டில் உள்ள திறமையின் ஆழம் இதை சாத்தியமாக்குகிறது. ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு ஒரு சோதனைக் களமாகவும், உலகெங்கிலும் உள்ள (பாகிஸ்தான் தவிர) சிறந்த டி20 வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பை உருவாக்கிய பல வீரர்கள் தங்கள் நாட்டிற்காக களம் இறங்கத் தயாராக உள்ளனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் மற்றும் கடந்த ஆண்டு முதல் வெற்றிகளைக் குவித்து வரும் ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டத்திற்கான முக்கிய போட்டியாளர்களில் அடங்குவார்கள். உலகக் கோப்பையின் முந்தைய 8 சீசன்களில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஆறு வெவ்வேறு நாடுகள் சாம்பியன் ஆயின. கிரிக்கெட்டின் இந்த வடிவத்தில் எந்த ஒரு அணியும் வெற்றிபெறக் கூடும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இந்தியாவின் பேட்டிங் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆதிக்கத்தை தக்க வைக்குமா இந்தியா? ஆப்கானிஸ்தான் போன்ற வலுவாக போராடக் கூடிய அணிகள், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்த முடியும். ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதை செய்து காட்டியது. இந்த உலகக் கோப்பை போட்டியின் வெற்றியாளரைக் கணிப்பது சிரமம் என்பது மட்டுமல்ல, முற்றிலும் முட்டாள்தனமானதும் கூட. எல்லா அணிகளும் தங்கள் உச்ச திறனுடன் விளையாட வேண்டும். லீக் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இரண்டு பரம எதிரிகளுக்கு இடையேயான போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் "முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய" போட்டியாகக் கருதப்படுகிறது. உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்தப் பந்தயம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே தோல்வியை விரும்பாது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் (ODI மற்றும் T20) பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளை குவித்துள்ள இந்தியா, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தாண்டி தங்கள் பார்வையை செலுத்த வேண்டும். பாகிஸ்தானை வீழ்த்துவது ஒரு படிக்கல் மட்டுமே. உலகக் கோப்பையை வெல்வதே முந்தைய இழப்புகளுக்கு ஈடுசெய்வதாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/ckkk69xgl6qo
    • சென்ற தலைமுறையினர் மாமிசத்தை கிழமைக்கு ஒரு முறைதான் உண்பார்கள். அதுகும் கோவில் கொடியேற்றங்கள் தொடங்கி விட்டால் மாதக் கணக்கில் மரக்கறி உணவுதான். இப்போதைய மரக்கறிகள் கூட... இரசாயனம் கலந்த விளைச்சலுடன் தான் கிடைக்கின்றது.   இன்று  கிழமையில் 6 நாளும் மாமிசம்தான். அந்த இறைச்சி தரும் மிருகங்களும், பறவைகளும் ஆரோக்கியமாகவும், சதைப்பிடிப்பாகவும் இருக்க  அதிக ஊட்ட  சத்துக்களையும், நோய் எதிர்ப்பு குளிசைகளான "அன்ரி பயோட்டிக்" போன்ற மருந்துகளை உணவில்   அளவுக்கு அதிகமாகவே கலந்து கொடுக்கும் போது... அந்த இறைச்சியை உண்ணும் மனிதனும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து ஒரு கட்டத்ததில்  நோயாளி ஆகி விடுகின்றான். எங்கும் எதிலும் வியாபாரம் முக்கியமாகி விட்ட நிலையில் மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. 
    • முதல் 8 ஓவர்களில் கனடாவின் பக்கம் இருந்த ஆட்டம் அடுத்த 5 வர்களில் அமேரிக்கா பக்கம் திரும்பியது. முதல் போட்டியில் என் கணிப்பு வென்றது🤣
    • 👍..... இப்படியே எல்லா அணிகளும், கனடா போல, அமெரிக்காவோட விளையாடினால், அமெரிக்கா உலக கோப்பையையே வென்றுவிடும்....🤣 🤣.... நான் இப்ப ஃபோன் எடுத்தால், 'கிரிக்கட்டா, அப்படின்னா என்ன?' என்று கேட்பாங்கள் நந்தன்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.