Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு

Featured Replies

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு

 
நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு
 

நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

http://uthayandaily.com/story/13182.html

  • தொடங்கியவர்

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: மகசீன் மீட்பு:-

IMG_8742-1024x768.jpg

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய் பாதுகாவலர் இலங்கை நேரம் இன்று பின் இரவு 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

 
யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்திருந்தனர்.
 
காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  அதில் சார்ஜென்ட் தர பொலிஸ் உத்தியோகஸ்தர் இரவு 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார்.
 
மகசீன் மீட்பு. 
 
அதேவேளை துப்பாக்கிதாரி வீழ்த்தி விட்டு சென்ற கைத்துப்பாக்கியின் மகசீன் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில்  தடயவியல் பிரிவினரால் மீட்கப்பட்டு உள்ளது.
 
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றில் இருந்து குறித்த துப்பாக்கியின் வெற்று மகசீன் மீட்கபட்டு உள்ளது.
 
IMG_8735-664x1024.jpg
 
IMG_8742-1024x768.jpg
 
 
 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சிறப்பான நீதிபதியை காப்பற்ற தன்னுயிரை ஈந்த இந்த வீரருக்கு அஞ்சலிகள்.

17 ஆண்டுகள் நம்பிக்கைக்குரியவராகக் கடமையாற்றிய இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு!

17 ஆண்டுகள் நம்பிக்கைக்குரியவராகக் கடமையாற்றிய இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு!

 

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 வருடங்களாக மெய்ப் பாதுகாவலராகக் கடமையாற்றிய மெய்ப்பாதுகாவலர் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயிற்றில் பலத்த காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்துக்கு நல்லூர் பின்வீதியில் மர்மநபர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாக்குதலின்போது நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் காயமடைந்ததுடன் ஒருவர் வயிற்றில் பலத்த காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரியை தீவகப் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

http://thuliyam.com/?p=74241

 

  • கருத்துக்கள உறவுகள்

17 ஆண்டுகள் மெய்ப் பாதுகாவலராக இருந்து, 
நேற்று கடமை நேரத்தில்... துப்பாக்கி  சூ ட்டில்  பலியாகியமை மிகவும்   கவலையான விடயம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

அதே நேரம்  தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரி கைது செய்யப் பட்டிருப்பது, 
பல உண்மைகளை வெளியே கொண்டு வர உதவும்.

  • தொடங்கியவர்

இளஞ்செழியனுடன் 17 வருடங்கள் பயணித்த மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு

 
இளஞ்செழியனுடன் 17 வருடங்கள் பயணித்த மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு

மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரான பொலிஸ் சார்­ஜன்ட் ஹேமச்­சந்­திர (வயது-51) நள்ளிரவு உயிரிழந்தார்.

இவ­ரது பிஸ்­ட­லைப் பறித்தே சிவி­லி­யன் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­யி­ருந்­தார். வலது வயிற்­றுப் பகு­தி­யால் உட்­பு­குந்த துப்­பாக்­கிச் சன்­னம் இடது வயிற்­றுப் பக்­கத்­தால் வெளி­யே­றி­யுள்­ளது. இத­னால் நுரை­யீ­ர­லில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. குருதிக் கசிவு ஏற்­பட்­டுள்­ளது. அவருக்கு உடனடியாகவே நேற்று மாலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவர்கள் குழாமின் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அதிக குருதிப் போக்குக் காரணமாக நள்ளிரவு 12.20 மணியளவில் ஹேமச்­சந்­திர உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.

பொலிஸ் சார்­ஜன்ட் ஹேம­சந்­திரஇ நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுக்கு 17 வரு­டங்­க­ளாக மெய்ப்­பா­து­கா­வ­ல­ரா­கப் பணி­யாற்றியுள்ளார்.

http://uthayandaily.com/story/13188.html

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting

  • தொடங்கியவர்

உயிரிழந்த மெய்பாதுகாவலருக்கு எஸ்.ஐயாக பதவி உயர்வு

 

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து நடத்தட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர, உப பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

நேற்று மாலை நல்லூர் ஆலயப் பின் வீதி வழியாகப் பயணித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.

அதில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

அவர்களில் பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர நேற்று இரவு 11 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இவர் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் கடமையாற்றி இருந்தார்.

மெய்ப்பாதுகாவலர்களின் சடுதியான செயற்பாட்டாலேயே மேல் நீதிமன்ற நீதிபதி பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

http://uthayandaily.com/story/13223.html

  • தொடங்கியவர்
மெய்பாதுகாவலரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர்
 

 

நல்லூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திர என்பவர் உயிரிழந்த சம்பவத்துக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்துள்ளார்.

“பணியிலிருக்கும் போது, சார்ஜன்ட் உயிரிழந்துள்ளமை சோகத்துக்குரிய விடயமே. இந்தக் கடினமான நேரத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு, ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மெய்பாதுகாவலரின்-குடும்பத்துக்கு-இரங்கல்-தெரிவித்தார்-பிரதமர்/175-201139

  • கருத்துக்கள உறவுகள்

நீதியைக் காத்த காவலனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!!!

  • தொடங்கியவர்

உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதரின் உடலுக்கு அஞ்சலி

 
உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதரின் உடலுக்கு அஞ்சலி
 

நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதரின் உடலுக்கு யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

http://uthayandaily.com/story/13295.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்

மெய்பாதுகாவலரின் உடலில் இருந்து 5 லீட்டர் இரத்தம் வெளியேறியது. 09 பயின்ட் இரத்தம் ஏற்றியும் உயிரை காக்க முடியவில்லை. – பணிப்பாளர் வருத்தம்

 

நல்லூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உடலில் இருந்து 5 லீட்டர் இரத்தம் வெளியேறியமையாலையே மரணம் சம்பவித்ததாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 
நல்லூர் பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
 
அது தொடர்பில் பணிப்பாளர் தெரிவிக்கையில் ,
 
யாழ்.போதன வைத்திய சாலைக்கு மாலை 5.25 மணியளவில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கொண்டு வரப்பட்டார். அப்போது அவருக்கு அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவர் சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
அதன் போது அவரது வயிற்றுபகுதியில் இருந்து பெருமளவான இரத்தம் வெளியேறி இருந்தது. சுமார் 5 லீட்டர் இரத்தம் அவருடைய உடலில் இருந்து வெளியேறி இருந்தது.
 
உடனடியாக அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டது. 09 பயின்ட் இரத்தம் ஏற்றப்பட்டு அவருடைய உயிரை காப்பாற்ற மூன்று மணி நேரம் சத்திர சிகிச்சை நிபுணர்கள் போராடினார்கள் அவருக்கு ஈரல் , குடல் பகுதி மற்றும் கீழ் பெரும் நாளங்களில் காயம் ஏற்பட்டு இருந்தது கீழ் பெரு நாளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அதிகளவில் இரத்த பெருக்கு ஏற்பட்டது.
 
சத்திர சிகிச்சையின் பின்னர் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு வைத்து மூன்று மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை 12.20 மணிக்கு உயிரிழந்தார். என்பதனை வைத்தியர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
 
உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரியும் தனது அறிக்கையில் அதிகளவான இரத்த பெருக்கினால் தான் மரணம் சம்பவித்தது என குறிப்பிட்டு உள்ளார்.
 
இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் இன்று காலை வைத்திய சிகிச்சையின் பின்னர் வைத்திய சாலையை விட்டு வெளியேறியுள்ளார். என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/33881

  • தொடங்கியவர்
யாழ்.பொலிஸ் நிலையத்தில் அஞ்சலி
 

image_14a1f2df50.jpgimage_df81b1cc16.jpgimage_93ad05feaf.jpgimage_a11b9cd344.jpgimage_747938a7ca.jpgimage_5eb312737f.jpgimage_0275067a39.jpg

எஸ்.நிதர்ஷன்

நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திரவின் உடல் யாழ்.பொலிஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது நீதிபதி மா.இளஞ்செழியனும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டார்.

அஞ்சலியின் பின்னர் ஹேமசந்திரவின் உடலை உறவினர்கள் அவரது சொந்த இடமான சிலாபத்துக்கு எடுத்துச்சென்றனர்.

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/யாழ்-பொலிஸ்-நிலையத்தில்-அஞ்சலி/46-201169

  • தொடங்கியவர்

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் அஞ்சலிக்காக உடல் – நெகிழ வைக்கும் காட்சிகள்

 

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் அவரது சொந்த இடமான சிலாபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்கள் மற்றும் வடமாகாண நீதிபதிகள், அரச உத்தியோகத்தர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான 51 வயதுடைய ஹேமரத்ன உயிரிழந்தார்.

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உடலை அவரது உறவினர்களிடம் கையளிப்பதற்காக வடமாகாண நீதிபதிகள் சிலாபத்துக்குச் சென்றிருந்தனர். தற்போது பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடலை அவரது உறவினர்களிடம் கையளித்துள்ளனர்.

http://uthayandaily.com/story/13394.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.