Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூவின மக்களுக்கும் பாகுபாடின்றித் தீர்வு ரணில் நேற்று உறுதி

Featured Replies

மூவின மக்­க­ளுக்­கும் பாகு­பா­டின்­றித் தீர்வு 

ரணில் நேற்று உறு­தி­

 
மூவின மக்­க­ளுக்­கும் பாகு­பா­டின்­றித் தீர்வு 
 

தமிழ், சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளுக்­குத் துளி­ய­ள­வே­னும் பாகு­பாடு காட்­டாத வகை­யி­லான அர­சி­யல் தீர்­வொன்றை இந்த நாடா­ளு­மன்­றத்­துக்­குள் அடை­ய­வேண்­டும் எனத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அர­சி­யல் வாழ்­வில் 40 வரு­டங்­களை நிறைவு செய்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு வாழ்த்­து­க­ளைத் தெரி­விக்­கும் பிரே­ரணை மீதான விவா­தம் நடை­பெற்­றது. இந்­தப் பிரே­ர­ணைக்கு  நன்றி தெரி­வித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­டாறு  கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:எனது 40வரு­ட­கால நாடா­ளு­மன்ற சேவை­யைப் பாராட்டி சிறப்பு சபை அமர்­வைக் கூட்டி விவா­தம் நடத்­து­வ­தற்கு கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தற்­கும், விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­றிய உறுப்­பி­னர்­க­ளுக்­கும் நன்­றி­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.

தேர்­த­லில் போட்­டி­யி­டு­மாறு மறைந்த அரச தலை­வர் ஜெ.ஆர். ஜய­வர்­த­னவே எனக்கு ஆலா­சனை வழங்­கி­னார். இதற்­காக அவ­ருக்கு நான் கட­மைப்­பட்­டுள்­ளேன். அவ­ரி­ட­மி­ருந்து நிறைய அனு­ப­வங்­களை இளை­ஞ­ராக இருந்த காலத்­தில் எனக்­கும் – எனது சகாக்­க­ளுக்­கும் பெறக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

அதன்­பி­றகு முன்­னாள் அரச தலை­வர் ஆர்.பிரே­ம­தா­ஸ­வின் கீழும் செயற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­புக் கிடைத்­தது. இவ்­விரு தலை­வர்­க­ளி­ட­மி­ருந்­தும் பல விட­யங்­க­ளைக்  கற்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தன. அதற்­காக அவர்­க­ளுக்கு நன்­றி­க­ளைத் தெரி­விக்­கின்­றேன்.

எதிர்­வ­ரி­சை­யில் இருப்­ப­தை­யும் சகித்­துக்­கொண்­டோம். எதிர்­வ­ரி­சைக்­குச் செல்­வ­தென்­பது, வல­கம்­பாகு மன்­னன் காட்­டுக்­கு­போ­ன­து­போல் ஓர் அனு­ப­வ­மா­கும். அத­னால், எதி­ரணி எப்­படி என்­பது எமக்கு மட்­டுமே தெரி­யும்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னும், அமைச்­சர் காமினி ஜய­விக்­ரம பெரே­ரா­வும் 40 ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே நாடா­ளு­மன்­றத்­துக்­குத் தெரி­வா­கி­னர்.

மூத்த உறுப்­பி­னர்­க­ளாக அவர்­கள் இரு­வ­ரும் இருக்­கின்­ற­னர். எனி­னும், என்­னை­போல் இந்த இரு­வ­ரும் தொடர்ச்­சி­யாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யில் அங்­கம் வகிக்­க­வில்லை.

கொள்கை அடிப்­ப­டை­யில் தனது கட்­சி­யு­டன் இணைந்து எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் பத­வி­யைத்  துறந்து  அன்று நாடா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து சென்­றார். இனப்­பி­ரச்­சி­னை­யைத் தீர்ப்­பது பற்­றிப் பேசப்­பட்­டது. இலங்கை – இந்­திய ஒப்­பந்­தம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னர் அவர் மீண்­டும் நாடா­ளு­மன்­றம் வந்­தார். பயங்­க­ர­வா­தப் பிரச்­சினை கார­ண­மாக ஒரு தடவை அவர்­க­ளுக்­குப் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­கப்­ப­ட­வில்லை.

அதே­போல் காமினி ஜய­விக்­ர­ம­பெ­ரேரா முத­ல­மைச்­ச­ராக தெரி­வா­கிச் சென்­றார். சிறந்த முத­ல­மைச்­ச­ரா­கச் செயற்­ப­டு­வது எப்­படி என்று காண்­பித்­தார். ஒரு­வர் கொள்­கைக்­கா­க­வும், மற்­றை­ய­வர் அபி­வி­ருத்­திக்­கா­க­வும் இந்த அவை­யில் இருந்து சென்­ற­னர்.

நாட்­டில் போர் முடி­வ­டைந்­து­விட்­டது. தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வும், பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னைக்­கான தீர்­வும் எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் கூறி­ய­து­போல் ஒன்­று­ட­னொன்று தொடர்­பு­பட்­ட­தா­கவே இருக்­கின்­றது.எனவே, சிங்­க­ளம், தமிழ், முஸ்­லிம் என அனைத்து இன மக்­க­ளை­யும் ஒன்­றி­ணைத்­துக்­கொண்டு நாம் இலங்­கை­ய­ராக பய­ணிக்­க­வேண்­டும்.

அதற்­கு­ரிய அர்ப்­ப­ணிப்பை தேசிய அரசு செய்­துள்­ளது. எந்­த­வொரு குடி­ம­க­னுக்­கும் துளி­ய­ள­வே­னும் பாகு­பாடு இல்­லாத வகை­யி­லான அர­சி­யல் தீர்­வொன்றை இந்த நாடா­ளு­மன்­றத்­துக்­குள் அடை­ய­வேண்­டும்.

அதே­போல் இரு முதன்­மைக் கட்­சி­க­ளும் அர­சில் இருக்­கின்­றன. எனவே, பின்­நோக்­கிப் பாராது – துணி­வு­டன்  பொரு­ளா­தார வளர்ச்­சியை அதி­க­ரித்து நாட்­டின் நிலை­யா­ன­தொரு – வளர்ச்­சி­மிகு அபி­வி­ருத்­திக்கு அடித்­த­ள­மி­ட­வேண்­டும். இவை அனைத்­தை­யும் செய்­வ­தற்­கான கேந்­திர நிலை­ய­மாக நாடா­ளு­மன்­றத்­தைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும்- என்­றார்.

http://newuthayan.com/story/16565.html

  • தொடங்கியவர்

இனப்­பி­ரச்­சி­னை தீர்­வுக்­காக துரி­த­மாக செயற்­ப­ட­வேண்டும்

P7-9f4d654b38323103e9d22185aa61927d2378e196.jpg

 

பிர­தமர் ரணில் தெரி­விப்பு; சிங்­கள,தமிழ் முஸ்­லி­ம்­க­ளுக்கு பாகு­பாடு இல்­லாத தீர்வு அவ­சியம் என்­கிறார் 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்­கையின் பொரு­ளா­தார வளர்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி என்­பன தேசிய பிரச்­சி­னை­யுடன் பின்னி பிணைந்­துள்­ளன. ஆகையால் இந்த பாரா­ளு­மன்­றத்­திற்குள் தமிழ் , முஸ்லிம், சிங்­க­ள­வர்­க­ளுக்கு சிறி­த­ளவும் பாகு­பாடு காட்­டாத தீர்­வினை வழங்க வேண்டும். அர­சாங்கம் என்ற வகையில் இந்த விட­யத்தில் நாம் துரி­த­மாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

என்­னுடன் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்­த­வர்­களில் தற்­போது உள்­ளவர் இரா.சம்­பந்­தனும் காமினி ஜய­விக்­கி­ரம பெரேராவுமாவர். ஆகவே அவர்­க­ளுக்கும் பாராட்­டு­களை தெரி­விக்­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

பாரா­ளு­மன்றம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை 10.30 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் ஆரம்­ப­மா­னது. இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தொடர்ச்­சி­யாக 40 ஆண்­டுகள் சேவை­யாற்­றி­மைக்கு வாழ்த்­து­களை தெரி­விக்கும் பிரே­ர­ணையின் போது அனைத்து கட்சி தலை­வர்­களும் வாழ்த்­து­களை தெரி­வித்­தனர். அதன் பின்னர் நன்றி தெரி­வித்து உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், எனது 40 வருட பாரா­ளு­மன்ற சேவையை முன்­னிட்டு இவ்­வா­றான பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தற்கு அனு­மதி வழங்­கிய கட்சி தலை­வர்­க­ளுக்கு நான் நன்றி கூற கட­மைப்­பட்­டுள்ளேன். நான் முதலில் அரச சட்­ட­வாக்க கழ­கத்­திற்கே வந்தேன். அதன்­பின்­னரே அது பாரா­ளு­மன்­ற­மாக மாற்­றப்­பட்­டது. என்னை அர­சி­ய­லுக்கு அழைத்து வந்­தவர் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜய­வர்­த­ன­வாகும். ஆகவே நான் அவ­ருக்கு நன்றி கூற கட­மைப்­பட்­ட­வ­னாகும்.  

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜய­வர்­த­ன­வு­டனும் ரண­சிங்க பிரே­ம­தா­ச­வுடன் நெருங்­கிய உற­வினை வைத்­தி­ருந்தேன். இந்த இரு­வ­ருடன் 20 வரு­டங்கள் பழ­கி­யதன் கார­ண­மாக எனக்கு பெரு­ம­ளவு அனு­ப­வங்­களை பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. ஆளும் கட்­சி­யாக இருக்கும் போதும் எதிர்க்­கட்­சிக்கு செல்லும் போது எனக்கு பல அனு­ப­வங்­களை பெற்றுக் கொள்ள முடிந்­தது. நாம் எதிர்க்­கட்­சிக்கு செல்லும் போது ஏற்­படும் வேதனை எமக்கு நன்கு தெரியும். எதிர்­கட்சி ஆச­னத்தில் அமர்­வது வல­கம்பா மன்னன் காட்­டுக்கு சென்ற கதையை போன்­றது.

நான் அர­சி­ய­லுக்கு வந்­ததில் இருந்து ஏற்­பட்ட சம்­ப­வங்கள் எனக்கு பெரும் அனு­ப­வத்தை கற்று தந்­நது. திறந்த பொரு­ளா­தார கொள்கை, இன­க­ல­வரம், இந்­திய - இலங்கை ஒப்­பந்தம், இந்­திய படையின் வருகை, 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் மாகாண சபை முறைமை அறி­மு­க­மா­னமை,பிரே­ம­தாச ஜனா­தி­ப­திக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை, ஜனா­தி­பதி மீது குண்டு தாக்­குதல், சமா­தான பேச்­சுக்கு சந்­தி­ரிக்கா அம்­மையார் தயா­ரா­னமை, விடு­தலை புலி­க­ளுடன் செய்­துக்­கொண்ட சமா­தான ஒப்­பந்தம், யுத்த வெற்றி, ஜனா­தி­பதி வேட்­பாளர் கைது, மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­னமை, தேசிய அர­சாங்கம் நிறு­வப்­படல் போன்ற சம்­ப­வங்கள் என்­னு­டைய வாழ்க்­கையில் மறக்க முடி­யாத அனு­பவ ங்களாகும். இதன் ஊடாக உறு­தி­யாக செயற்­பட கூடிய செயற்­திறன் எனக்கு கிடைத்­தது.

அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் அமைச்­ச­ரா­கவும் பிர­த­ம­ரா­கவும் எதிர்க்­கட்சி தலை­வ­ரா­கவும் அதன் பின்னர் மீண்டும் பிர­த­ம­ரா­கவும் மீண்டும் எதிர்­கட்சி தலை­வ­ரா­கவும் இருந்து நிறைய அனு­வங்­களை நான் கற்று தேர்ந்தேன்.

நான் பாரா­ளு­மன்­ற­த­திற்கு வரும் போது வந்­த­வர்­களில் தற்­போது இரா.சம்­பந்­தனும் காமினி ஜய­விக்­கி­ரம பெரே­ரா­வுமே உள்­ளனர். எனினும் இவ்­வி­ரு­வரும் தொடர்ந்து பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­க­வில்லை. இரா சம்­பந்தன் அவ­ரு­டைய கட்­சியின் தீர்­மா­னித்­திற்கு அமைய பாரா­ளு­மன்­றத்தை புறக்­க­ணித்து வெளி­யே­றினார். அதே­போன்று காமினி ஜய­விக்­கி­ரம பெரே­ராவும் 13 ஆவது திருத்­தச்­சட்டம் அமு­லான பின்னர் வடமேல் மாகாண முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக சென்று சிறந்த முத­ல­மைச்­ச­ராக செயற்­பட்டார். அதன்­பின்னர் இவ்­வி­ரு­வரும் மீண்டும் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகித்­தனர்.

எதிர்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் பேசும் போது தேசிய பொரு­ளா­தா­ரமும் அபி­வி­ருத்­தியும் தேசிய பிரச்­சி­னையும் என்னால் தீர்க்க வேண்­டி­யுள்­ளன என்றார். அதனை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். பொரு­ளா­தா­ரமும் அபி­வி­ருத்­தியும் தேசிய பிரச்­சி­னை­யுடன் பின்ன பிணைந்­த­வை­யாகும். ஆகவே தேசிய பிரச்­சி­னையை தீர்க்க வேண்­டி­யுள்­ளது. தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்­க­ளுக்கு சிறி­த­ளவும் பாகு­பாடு கட்­டாது சமத்­து­வ­மான முறையில் இந்த பாரா­ளு­மன்­றத்­திற்குள் தேசிய பிரச்­சி­னைக்கு எம்மால் தீர்வு வழங்க முடியும். ஆகவே இந்த விட­யத்தில் அர­சாங்கம் என்ற வகையில் நாம் துரி­த­மாக செயற்­பட வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்­துக்கு 70 வரு­டங்கள் பூர்த்­தி­யா­க­வுள்­ளன. இந்த சந்­தர்ப்த்தில் பாரா­ளு­மன்­றத்­திற்கு முழு அதி­கா­ரத்தை வழங்­க­வுள்ளோம். பாரா­ளு­மன்­றத்தின் குழுக்­களின் செயற்­பா­டு­களை வலுப்­ப­டுத்­த­வுள்ளோம்.

எனவே எனக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்கிய எனது பெற்றோர், மனைவி, கட்சி ஆதரவாளர்கள், எனது அலுவல ஊழியர்கள் அனைவருக்கு நன்றி கூறுகின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தில் நான் எனது வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் ஊடாக பெற்றதை நாட்டு மக்களுக்கு எடுத்து கூறலாம் என்று நினைக்கிறேன். இதன்படி நாட்டிலும் எமது வாழ்க்கையிலும் ஒழுக்கவியலை கட்டியெழுப்ப வேண்டும், பொறுமை நிச்சயம் அவசியமாகும், மற்றவர் மீது பொறாமை கொள்ளாது செயற்படல், வெற்றியையும் தோல்வியையும் சகஜமாக கையாளுதல் ஆகியவைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-05#page-1

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

மூவின மக்­க­ளுக்­கும் பாகு­பா­டின்­றித் தீர்வு 

ரணில் நேற்று உறு­தி­

 
மூவின மக்­க­ளுக்­கும் பாகு­பா­டின்­றித் தீர்வு 
 
 

இலங்கையில் 40 வருடங்களாக அரசியல் செய்த இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மூன்று இனங்களை மட்டுமே கண்டுவந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இலங்கையில் ஆறு இனங்களுக்குமேல் வாழ்வதாக விக்கிப்பீடியா தெரிவிக்கிறது. ஒரே குழப்பமாக இருக்கிறதே....  :( :shocked: :grin: 

 

விக்கிப்பீடியா

இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் சிங்களர் 74.88%
தமிழர் 15.37%
சோனகர் 9.23%
மலாயர் 0.2%
பறங்கியர் 0.18%
வேடர்கள் மற்றும் ஏனையோர் 0.14%

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிய... என்ர சின்ன வயசுக் காலத்தில்.. . ஜே ஆர் நடத்திய.. வட்ட மேசை மாநாட்டில் தொடங்கி இன்று வரை ரணில் இதைத் தான் சொல்லிக் கிட்டு இருக்கார். தீர்வு வந்ததே இல்லை. வரப் போவதும் இல்லை. மக்கள் தான் முழு முட்டாள்கள் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

மூவின மக்­க­ளுக்­கும் பாகு­பா­டின்­றித் தீர்வு 

ரணில் நேற்று உறு­தி­

உதுக்கு உங்களுக்கு 60...70 வருசம் தேவையோ????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உதுக்கு உங்களுக்கு 60...70 வருசம் தேவையோ????

இன்னும் 60 வருசத்திற்கு மேல் தேவைப்படும்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

குள்ளநரி

எதுக்கோ வாலை  ஆட்டுது..

தமிழர்களே உசாராதாகுங்கள்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.