Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை, ஈழம் சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்றால் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல முடியுமா..?  embaras.gif

 

tamil-eelam-independence-vote-1.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முடியாது பலகாரணம் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு அருகில்.... இந்தியா என்னும், நாடு இருக்கும் வரையில்.... 
தமிழீழம் என்ற ஒரு நாடு கிடைக்க சந்தர்ப்பம் இல்லை என்பதே... கசப்பான உண்மை.

விடுதலைப் புலிகள்.... தம்மால் முடிந்த, அதி உச்ச கட்டமைப்புக்களுடன்...
கடற்படை, விமானப் படை,  தரைப்படை, கரும்புலிகள் படை என்று உருவாக்கியிருந்தும்....
இந்தியாவின்... சகுனி விளையாட்டுக்களால்... எல்லாம் வீணாகி போய் விட்டது.

முதலில்... இந்தியா... 
யூகோ சிலாவியா, ரஷ்யா  போல்... பல நாடுகளாக உடைய வேண்டும்.
ஆகக்  குறைத்தது...  ஆரியம், திராவிடம் என்று.... வடக்கு, தெற்காக பிரிய வேண்டும்.
அதற்குப் பின்பே... தமிழீழம் சாத்தியம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

முடியாது பலகாரணம் உள்ளது .

பெருமாள்...  இப்படியான விடயங்களை, நன்றாக எழுதக் கூடியவர்.
ஒற்றை வரியில்... அவரின் கருத்து, இருந்தமை எமக்கு ஏமாற்றம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ராசவன்னியன் said:

ஒருவேளை, ஈழம் சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்றால் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல முடியுமா..?  embaras.gif

 

tamil-eelam-independence-vote-1.jpg

 

 

ஐயா! தமிழ்நாடு பிரிந்தால் வெள்ளைக்கலர் கதாநாயகிகளுக்கு எங்கே போவீர்கள்? tw_blush:

Bildergebnis für vadivelu sister comedy

நகைச்சுவைக்கு கூட தமிழிச்சியை / கறுப்பை நக்கலாய்த்தானே   காட்டியிருக்கின்றார்கள். :(

Ähnliches Foto

Edited by குமாரசாமி
நா

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சுதந்திரப் போரின் போது....மகாத்மா காந்திக்குப் பணம் கொடுத்தவர்களும் ..அவரது பத்திரிகைக்குச் சந்தா தாரர்களும்...தமிழ் நாட்டில் தான் அதிகம் இருந்தார்கள்! ஏனெனில் தென்னாபிரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர்களில் அநேகமானோர் தமிழர்களாக இருந்தமை தான் காரணம்!

இரண்டாவது உலக மகா யுத்தத்தில் பிரித்தானிய பேரரசுக்கு...போர் விமானம் வாங்கி...அன்பளித்து மகிழ்ந்தவர்கள்...சிங்கப்பூர் தமிழர்கள்!

அந்த விமானத்துக்கு...அவர்கள் வைத்த செல்லப் பெயர்....Jaffna.

இலங்ககைக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர்களில்...லண்டனுக்குக் கப்பலில் சென்று...முன்னிடத்தில் நின்றவர் சேர். பொன். இராமநாதன் அவர்கள்! அவரைத் தேரில் வைத்துத் தோளில் காவி மகிழ்ந்தது சிங்களம்!

எல்லாமே....இந்தியா என்ற நாதாரி தலை எடுக்கும் வரை தான்....நிலைத்தது!

ஆதாரமேயில்லாத இராமாயணத்தில் வரும் குரங்குகள் எனவும்....வேதங்களில் விபரிக்கப் படும்...அரக்கர்கள் எனவும்...கறுப்பு நிறம் கொண்ட...தூய கலப்பில்லாத...இந்திய கண்டத்தின் மூத்த குடிமக்களைத் திட்டமிட்டு...யாக குண்டத்தில் தள்ளி விட்டு...எக்காளமிடுகின்றது.....இந்திய தேசம்!

இதனால்....இந்தியாவைத் தள்ளிப் படுக்க வைப்பதில்....வெற்றி கொண்டால் மாத்திரமே....தமிழனால் 'தனியாகப் பிரிந்து செல்ல முடியும்!

இந்தியா என்னும் தேசம் உருவாகாது இருந்திருந்தால்....ஆசியக் கண்டம்...அமைதி பொங்கும் தேசங்களினால்...அலங்கரிக்கப் பட்டிருக்கும்! இதில்...சிங்களமும் உள்ளடக்கம்!

 

Quote

ஒருவேளை, ஈழம் சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்றால் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல முடியுமா..?

 

இலங்கையில் தனிநாடு உருவானால் தமிழ்நாட்டுக்கும் தனிநாட்டுச் சிந்தனைன வந்துவிடும் என்றே ஈழத்தமிழர்கள் அழிவுக்கு இந்தியா மத்திய அதிகாரவர்க்கம்  துணைபோனது. அவ்வாறு துணைபோனதன் எதிர்விளைவுதான் இன்று தமழித்தேசீயவாதம் தமிழ்நாட்டில் சற்று மேலோங்கியிருக்கின்றது. 

தமிழகமோ அல்லது பிற மாநிலங்களோ பிரிவது என்பது மத்திய அரசு மாநிலவாரியாக செய்யும் அடக்குமுறை பாரபட்சம் மொழித்திணிப்பு வளங்களை சுரண்டுதல் போன்ற பல விசயங்களோடு சம்மந்தப்பட்டது. 

பிரிவினை என்பதற்கு ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியும் புரட்சியும் அடிப்படையாகும் ஆனால் இந்த அடிப்படையை சாதியம் வகுப்புவாதம் தீண்டாமை போன்ற பல அலகுகளால் தகர்த்தே இந்தியா என்ற தேசம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதியம் வகுப்புவாதம் தீண்டாமை ஒழிந்து தமிழன் மலையாளி கன்னடன் தெலுங்கன் என்ற நிலை வரும்போது இந்தியா என்ற கட்டமைப்பும் உடையும். 

ஆனால் பிரிவினையை தீர்மானிப்பதில் பிரிந்து போக விரும்புபவர்களை விட அதிக வலிமை பிரிவதால் யாருக்கு என்ன லாப நட்டம் என்பதிலேயே அதிகம் உண்டு. இந்தியா உடைவதால் அமரிக்கா சீனா ரசியா ஐரோப்பாவுக்கு என்ன லாபம். உடையாமல் இருப்பதால் என்ன லாபம்.  இவையே பிரதானமானது. தற்போது பிரியாமல் இருப்பதே ஏகாதிபத்தியத்துக்கு அதிக லாபம். இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. அடுத்து வரும் காலங்களிலும் இந்தியாவின் உணவு உற்பத்தி வீழ்ச்சியும் ஏகாதிபத்திய நாடுகளின் உணவு உற்பத்தி வளரச்சியும் இந்தியா உடையாமல் இருப்பதுக்கு ஏதுவாக உள்ளது. 

உலகமயமாக்கல் இந்தியமயமாக்கல் இவைகளை கடந்து இனத்தேசீயமானது சாதி மத வகுப்புவாங்களை கழைந்து மேலோங்கவேண்டும். அவ்வாறு மேலோங்கும்போதும் கூட  தற்சார்பு பொருளாதாரமும் வளரவேண்டும். தற்சார்புப் பொருளாதரத்துக்கு ஏகாதிபத்தியநாடுகள் ஈடமளிக்காது.  அவ்வாறு இடமளிக்காத போது பிரிந்தும் அடிமைவாழ்வுபோலாகிவிடும். உதராணமாக ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றும் இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகவே இருக்கின்றது. அணுகுண்டு வைத்திருந்தால்போல் இந்தியா விடுதலைபெற்று சர்வ சுதந்திரம் பெற்ற நாடு என்று பொருள் இல்லை.  இந்தியாவின் தேயிலை சக்கரை அரிசி விலையை தீர்மானிப்பது மேற்குநாடுகளே அன்றி இந்தியா அல்ல.  உலகமயமாக்கல் என்பதன் பின்பு பிரிவினை என்பது மிகச் சிக்கலான விசயம். யூரியுப் எல்லாம் ஆழப்போறான் தமிழன் பாடல்தான் நுறு விதமாக வெளியிடுகின்றார்கள். கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனால் நடமுறைச் சாத்தியம் என்பது ஏகப்பட்ட விசயங்கள் அதிகாரங்கள் பணம் ஏகாதிபத்தியம் சம்மந்தப்பட்டது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சண்டமாருதன் said:

...

ஆனால் பிரிவினையை தீர்மானிப்பதில் பிரிந்து போக விரும்புபவர்களை விட அதிக வலிமை பிரிவதால் யாருக்கு என்ன லாப நட்டம் என்பதிலேயே அதிகம் உண்டு. இந்தியா உடைவதால் அமரிக்கா சீனா ரசியா ஐரோப்பாவுக்கு என்ன லாபம். உடையாமல் இருப்பதால் என்ன லாபம்.  இவையே பிரதானமானது. தற்போது பிரியாமல் இருப்பதே ஏகாதிபத்தியத்துக்கு அதிக லாபம். இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. அடுத்து வரும் காலங்களிலும் இந்தியாவின் உணவு உற்பத்தி வீழ்ச்சியும் ஏகாதிபத்திய நாடுகளின் உணவு உற்பத்தி வளரச்சியும் இந்தியா உடையாமல் இருப்பதுக்கு ஏதுவாக உள்ளது. 

....

இது தான் உண்மையென தோன்றுகிறது.. என்னதான் இந்திய வல்லரசு கானல் நீரை நினைத்து இடித்தாலும், அது ஏகாதிபத்தியத்துக்கு இன்னமும் அடிமைதான்.

இந்த சகதியில் சிக்கி உழலும் தலைவிதி தமிழனுக்கு...!

காலம் மாறும், சந்தர்ப்பமும் வரும், பயன்படுத்தலாமென  காத்திருக்க வேண்டியதுதான்.

3 hours ago, குமாரசாமி said:

ஐயா! தமிழ்நாடு பிரிந்தால் வெள்ளைக்கலர் கதாநாயகிகளுக்கு எங்கே போவீர்கள்? tw_blush:

கைச்சுவைக்கு கூட தமிழிச்சியை / கறுப்பை நக்கலாய்த்தானே   காட்டியிருக்கின்றார்கள். :(

தம்மிடம் இல்லாததைப் அடுத்த இடத்தில் பார்த்து ஏங்குவது மனிதனின் இயல்புதானே ஐயா?

இக்கரைக்கு அக்கரை பச்சை.. :grin:

குழுமத்திற்கு வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.