Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் பயங்கரவாத தாக்குதல் குறித்து சாட்சியமளித்த யுவதியிடம் அந்தரங்கப் பகுதி முடிகள் குறித்து கேள்வி எழுப்பிய பொலிஸார்: ஊடகவியல் மாணவி எதிர்கொண்ட அதிர்ச்சி அனுபவம்

Featured Replies

லண்டன் பயங்கரவாத தாக்குதல் குறித்து சாட்சியமளித்த யுவதியிடம் அந்தரங்கப் பகுதி முடிகள் குறித்து கேள்வி எழுப்பிய பொலிஸார்: ஊடகவியல் மாணவி எதிர்கொண்ட அதிர்ச்சி அனுபவம்

Mirium-waker-khan.jpgபிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, மாணவ குழுவொன்றுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்த கலப்பின யுவதியொருவரை விசாரித்த பொலிஸார் மிகவும் மோசமான கேள்விகளை கேட்ட விடயம் அம்பலமாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி கார் ஒன்றை மக்கள் மீது மோதி நடத்திய தாக்குதலில் பாதசாரிகள் நால்வர் உயிரிழந்ததனர்.

அத்துடன் தாக்குதல்தாரியின் கத்திக் குத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

அவ்வேளையில், ஷீபீல்ட் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் கற்கை நெறியொன்றைப் பயின்று கொண்டிருந்த, மிரியம் வோல்கர் கான் எனும் இந்த யுவதி, 40 பேரடங்கிய மாணவர்கள் குழுவொன்றுடன் இணைந்து நாடாளுமன்றத்தை பார்வையிடச் சென்றிருந்தார்.

தாக்குதலை நேரில் கண்ட மிரியம் வோக்கர் கான், இது தொடர்பாக பொலிஸாரிடம் வாக்குமூலம் ஒன்றையும் அளித்தார். இவர் பாகிஸ்தானிய கலப்பு கொண்டவர்.

சில தினங்களின் பின்னர் அவரின் வீட்டுக்கு, ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் சார்பில் மேற்கு யோர்க்ஷயர் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சென்று விசாரணை நடத்தினர்.

கலப்பினத்தவரான மிரியம் வோக்கர் கான் தற்போது பிபிசியியில் பயிலுநர் ஊடகவியலாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில், மேற்படி அதிகாரிகள் அபத்தமான விசாரணைகள் குறித்த விடயங்களை அவர் பகிரங்கமாக்கியுள்ளார்.

முதலில் எனது இனத்துவ தோற்றத்தை விபரிக்குமாறு கேட்கப்பட்டபோது, இனத்துவ தோற்றம் என்றால் என்னவென்று தான் வியப்படைந்ததாகவும் உண்மையில் அவ்வாறு ஒன்று இல்லை எனவும் மிரியம் வோக்கர் கான் தெரிவித்துள்ளார்.

மேற்படி அதிகாரிகளின் அடுத்த கேள்வி அந்த யுவதிக்கு மேலும் அதிர்ச்சியளித்தது. “அதன்பின், எனது உடலிலுள்ள முடிகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

எனது இடுப்புப் பகுதியிலுள்ள முடிகள் குறித்துத் தெரிவிக்குமாறு கேட்டனர். அவை வளரவிடப் பட்டுள்ளனவா, ஷேவ் செய்யப்பட்டுள்ளனவா, வெக்ஸ் செய்யப்பட்டுள்ளனவா, ட்ரிம் செய்யப்பட்டுள்ளனவா என கேட்டார்கள்.

Mirium-waker-khan-.jpg

ஒரு கட்டத்தில், சாட்சியின் வாக்குமூலத்தில் ஏன் இத்தகைய கேள்விகளைக் கேட்கிறீர்கள் என நான் அவர்களிடம் கேட்டேன்.

அப்போது, “நாம் ஒவ்வொருவரிடமும் இக் கேள்வியைக் கேட்போம்” என அதிகாரி ஒருவர் பதிலளித்தார் என மிரியம் வோக்கர் கான் தெரிவித்துள்ளார்.

மேற்படி மாணவக் குழுவில் தன்னை மாத்திரமே பொலிஸார் வீட்டுக்கு வந்து விசாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவக் குழுவினரை அழைத்துச் சென்ற விரிவுரையாளர் டேவிட் ஹோம்ஸும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ் விவகாரம் தொடர்பாக ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் தெரிவிக்கையில் மேற்படி தாக்குதலுக்கும் தனிப்பட்ட, அந்தரங்க வர்ணிப்புகளுக்கும் தொடர்பில்லை.

எனவே இத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டமை தவறான ஒரு விடயம்” எனத் தெரிவித்துள்ளனர்.

http://metronews.lk/?p=14758

  • கருத்துக்கள உறவுகள்

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாக முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில் பொட்டு வைத்த பெண்களை தாக்கியதும்...மீசை வைத்த ஆண்களை தாக்கியதும்...
ஆபிரிக்க நாடுகளில் சுன்னத்து செய்யாதவரின் அடையாளம் அறிந்ததும்.....

குரானின் வசனங்களை உச்சரிக்கச்சொன்னதும்..ஞாபகத்திற்கு வருகின்றது.


வெள்ளைகளும் இப்ப கிளீன் சேவ் எண்டததை இந்த இடத்தில் சொல்லியே ஆகணும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இவ தேவையில்லாமல் பிரச்சினைய கிளப்பிறா தேவையில்லாமல் அவர்கள் இவவை குறிவைத்து இருக்கமாட்டினம்  .

  • கருத்துக்கள உறவுகள்

போலிஸ் ஏன் அப்படிக் கேட்டது என்பதற்கான காரணம் எனக்குத் தெரியும்!

அவர்கள் எதை இந்தப் பெண்ணிடமிருந்து அறிய முயன்றார்கள் என்றும் என்னால் ஊகிக்க முடிகின்றது!

ஆனால் நான் சொல்ல மாட்டன்!:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

போலிஸ் ஏன் அப்படிக் கேட்டது என்பதற்கான காரணம் எனக்குத் தெரியும்!

அவர்கள் எதை இந்தப் பெண்ணிடமிருந்து அறிய முயன்றார்கள் என்றும் என்னால் ஊகிக்க முடிகின்றது!

ஆனால் நான் சொல்ல மாட்டன்!:unsure:

புங்கையூரான்.... தான்  சொல்ல மாட்டன் என்று நடப்பு அடித்தாலும், எங்களுக்கும்  விஷயம் தெரியும்.  :grin:

பாகிஸ்தானிய கலப்பு  இனத்தவரான....  "மிரியம் வோக்கர் கான்"  இடம்  போலீசார்...
இடுப்புப் பகுதியிலுள்ள முடிகள்...  வளரவிடப் பட்டுள்ளனவா, ஷேவ் செய்யப்பட்டுள்ளனவா, வெக்ஸ் செய்யப்பட்டுள்ளனவா, ட்ரிம் செய்யப்பட்டுள்ளனவா என கேட்டதற்கு காரணம்....

அவை.... வழக்கம் போல  வளர விடப் பட்டிருந்தால், அவர் தீவிர மத நம்பிக்கை அற்றவர் என்ற முடிவுக்கும்,
அங்கு  "கிளீன்  சேவ்"  எடுப்பவராக இருந்தால்....  தீவிர மத நம்பிக்கை உள்ளவர் என்ற முடிவுக்கு வந்து..
அவரிடம்.., தாக்குதல் சம்பவம் குறித்து மேலும் தகவல்களை பெறலாம் என்று, லண்டன் போலீசார்  நினைத்து இருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.