Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

Featured Replies

வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு
 

வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பால் நோய்ப் பிரிவு நிபுணத்துவ மருத்துவர் பிரியந்த படகல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் வட மாகாணத்தில் எட்டு எயிட்ஸ் நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர் எனவும், இதில் 36 பேர் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எயிட்ஸ் நோய் தொடர்பில் போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், நோய் பரவுவதனை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2016ம் ஆண்டில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/52427

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு அதிகமான மது பாவனை .போதைபொருள் பாவனைகள் ,முறையற்ற விபச்சாரம் அதனால் உருவாகும் உயிர் கொல்லி  நோய்கள் , தெருவில் பொதுமக்கள் நடக்கவே அஞ்சும் வாள் வெட்டு ரவுடி கலாச்சாரம் ,இரவுகளில் ஆட்கள் இருக்கும்போதே உடைமைகள் கள்வரிடம் இழக்கும் பரிதாபம் , எல்லாம் தொடர்கதையா போகுது ................

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக்கு கிடைக்கும் Aid'இல் தான் எந்த அதிகரிப்பையும் காணோம், சரி  Aids-சையாவது அதிகரிச்சு வைப்போம் எண்டு முடிவு பண்ணிட்டாங்களாக்கும்!

28 minutes ago, பெருமாள் said:

அளவுக்கு அதிகமான மது பாவனை .போதைபொருள் பாவனைகள் ,முறையற்ற விபச்சாரம் அதனால் உருவாகும் உயிர் கொல்லி  நோய்கள் , தெருவில் பொதுமக்கள் நடக்கவே அஞ்சும் வாள் வெட்டு ரவுடி கலாச்சாரம் ,இரவுகளில் ஆட்கள் இருக்கும்போதே உடைமைகள் கள்வரிடம் இழக்கும் பரிதாபம் , எல்லாம் தொடர்கதையா போகுது ................

புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பைச் சுலபமாக மறந்து விட்டீர்கள்.:11_blush:

விளிப்புணர்வு மூலம் தான் எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பாதுகாப்பு முறைகளைக் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் அதிகரிப்பைச் செய்தியாக்குபவர்கள்....தெற்கைப் பற்றி மூச்சு விடுவது கூட இல்லை!

ஏதோ வடக்கில் மட்டும் ...எயிட்ஸ் நோயாளிகள் அதிகரித்துக் கொண்டு போவது போன்ற மாயையைத் தோற்றுவிப்பது தான் நோக்கம் போலத் தெரிகின்றது!

இணையவன் மேலே கூறியது போல....பாதுகாப்பு முறைகள் மூலம் தான் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புங்கையூரன் said:

வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் அதிகரிப்பைச் செய்தியாக்குபவர்கள்....தெற்கைப் பற்றி மூச்சு விடுவது கூட இல்லை!

ஏதோ வடக்கில் மட்டும் ...எயிட்ஸ் நோயாளிகள் அதிகரித்துக் கொண்டு போவது போன்ற மாயையைத் தோற்றுவிப்பது தான் நோக்கம் போலத் தெரிகின்றது!

இணையவன் மேலே கூறியது போல....பாதுகாப்பு முறைகள் மூலம் தான் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்!

உண்மதான் புங்கை.....கவர்ச்சித் தலைப்பு......போடுறதிலை கில்லாடிகள்...

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, புங்கையூரன் said:

வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் அதிகரிப்பைச் செய்தியாக்குபவர்கள்....தெற்கைப் பற்றி மூச்சு விடுவது கூட இல்லை!

 

தெற்கில் நடப்பதுபற்றி தமிழர்கள் எதுக்கு கவலை படணும்?  வடக்கு ,கிழக்கில் நடப்பதுபற்றியே கவலைப்படவேண்டும் ஒவ்வொருத்தரும்! எயிட்ஸ் ஆனாலும் சரி, போதைவஸ்து, சமூக சீரழிவு என்று எதுவானாலும் சரி...வடக்கில் அதிகரிக்கும்போது தெற்கு எப்போதும் மகிழ்ச்சி கொள்ளுமே தவிர, அதிர்ச்சியடையாது! அப்புறம் நாங்கள் மட்டும் எதுக்கு.....?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

தெற்கில் நடப்பதுபற்றி தமிழர்கள் எதுக்கு கவலை படணும்?  வடக்கு ,கிழக்கில் நடப்பதுபற்றியே கவலைப்படவேண்டும் ஒவ்வொருத்தரும்! எயிட்ஸ் ஆனாலும் சரி, போதைவஸ்து, சமூக சீரழிவு என்று எதுவானாலும் சரி...வடக்கில் அதிகரிக்கும்போது தெற்கு எப்போதும் மகிழ்ச்சி கொள்ளுமே தவிர, அதிர்ச்சியடையாது! அப்புறம் நாங்கள் மட்டும் எதுக்கு.....?

வடக்கும் ..தெற்கும்...இன..மத...மொழி பேதங்களால் வேறு பட்டிருக்கலாம்!

எனினும்...மனித உணர்வுகள்..சதையின் தேவைகள்...இன மத மொழியின் எல்லைகளைக் கடந்தவை எனக் கருதுகிறேன், வளவன் !

வடக்கு நோக்கிப் பயணிக்கும்..பார ஊர்தி செலுத்துனர் ஒருவரும்...தெற்கு நோக்கிப் பயணிக்கும் ஒருவரும்...இடைக்கிடை தங்கி ஓய்வெடுக்கும் இடங்கள் பாதை நெடுகிலும் ...ஒரு காலத்தில் இருந்தன என்று அந்த நாட்களில் பேசிக்கொள்வார்கள்!

இதனால் தான்...தெற்கு நிச்சயம் கலைப்பட வேண்டியது....காலத்தின் கட்டாயம்!

கவலைப்படாமல் ....மகிழ்ச்சியடைந்தால்....நாளை இந்தப் பிரச்சனை அவர்களின் கதவுகளில்...நிச்சயம் தட்டும் என்பது எனது அனுமானம்!

  • கருத்துக்கள உறவுகள்

முந்தநாள் யாழ் வைத்தியசாலை வைத்தியர் பேசுவதை கேட்டேன் 

வளர்ச்சி அதிகரிக்கவில்லை எழுச்சிதான் அதிகரிக்கிறது வட கிழக்கில்  :rolleyes:

  • தொடங்கியவர்
 
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி. பரிசோதனை
 
 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி. பரிசோதனை

 

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் வடக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த 8 ஆயி­ரத்து 094 பேருக்கு எச்.ஐ.வி. பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள தயக்கம் எதுவுமின்றி துணிந்து முன்வாருங்கள்.

இவ்வாறு யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் பாலி­யல் தொற்று நோய்த் தடுப்­புப் பிரிவு கோரியுள்ளது. வடக்கில் இந்தத் தோற்றுக் காரண மாக இதுவரை 35 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று புள்ளி விவ ரங்கள் குறிப்பிடுகின்றன.

இதனைக் கட்டுப்படுத்துவது மிக அவசியம். அதனால் உங்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று நீங்கள் கருதினால் எந்த விதத் தயக்கமுமின்றி முன்வா ருங்கள் என்று தொற்று நோய்த் தடுப்­புப் பிரிவு கோரியுள்ளது.
இதுதவிர, இது தொடர்­பான புள்­ளி­ வி­வ­ரத்­தில் மேலும் தெரி­விக்கப்பட்டுள்ளதா­வது:

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் பாலி­யல் தடுப்பு நோய்ப் பிரிவு 2014ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

ஆரம்­பத்­தில் வடக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளும் வெளி­நாட்­டில் இருந்து நாடு திரும்­பி­யோ­ரும் எச்.ஐ.வி பரி­சோ­த­னைக்கு ஓர­ளவு வருகை தந்து பரி­சோ­தனை மேற்­கொண்­ட­னர். பின்­னர் எச்.ஐ.வி விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சித் திட்­டங்­க­ளில் சிலர் பரி­சோ­தனை மேற்­கொள்ள முன்­வந்­த­னர். தற்­போது படிப்­ப­டி­யாக பரி­சோ­த­னைக்கு வரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கின்­றது.

 

யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்­கும், வவு­னியா மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­கள் வசதி கருதி அனு­ரா­த­புர மருத்­து­வ­ம­னைக்­கும் பரி­சோ­த­னை­கள் மற்­றும் சிகிச்­சை­க­ளுக்­குச் செல்­கின்­ற­னர்.
விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சித் திட்­டங்­கள் பாட­சாலை, மற்­றும் பொது அமைப்­புக்­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதன்­போது 2 ஆயி­ரத்து 655 பேருக்­கும், கர்ப்­பி­ணித் தாய்­மார்­க­ளின் வழ­மை­யான பரி­சோ­த­னை­யில் 4 ஆயி­ரத்து 307 பேருக்­கும், இந்­தி­யா­வில் இருந்து வருகை தந்த 266 பேருக்­கும், தாமா­கவே முன்­வந்து பரி­சோ­தனை மேற்­கொண்ட 35 பேருக்­கும், கைதி­க­ளின் மருத்­துவ பரி­சோ­த­னை­யில் 219 பேருக்­கு­மாக 8ஆயி­ரத்து 94 பேருக்கு எச்.ஐ.வி பரி­சோ­த­னை­கள் இது­வரை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/51743.html

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

வடக்கும் ..தெற்கும்...இன..மத...மொழி பேதங்களால் வேறு பட்டிருக்கலாம்!

எனினும்...மனித உணர்வுகள்..சதையின் தேவைகள்...இன மத மொழியின் எல்லைகளைக் கடந்தவை எனக் கருதுகிறேன், வளவன் !

வடக்கு நோக்கிப் பயணிக்கும்..பார ஊர்தி செலுத்துனர் ஒருவரும்...தெற்கு நோக்கிப் பயணிக்கும் ஒருவரும்...இடைக்கிடை தங்கி ஓய்வெடுக்கும் இடங்கள் பாதை நெடுகிலும் ...ஒரு காலத்தில் இருந்தன என்று அந்த நாட்களில் பேசிக்கொள்வார்கள்!

இதனால் தான்...தெற்கு நிச்சயம் கலைப்பட வேண்டியது....காலத்தின் கட்டாயம்!

கவலைப்படாமல் ....மகிழ்ச்சியடைந்தால்....நாளை இந்தப் பிரச்சனை அவர்களின் கதவுகளில்...நிச்சயம் தட்டும் என்பது எனது அனுமானம்!

நீங்களா இப்படி பேசுறது? பல இடங்களில் தெளிவான உங்கள் பார்வையை கண்டிருக்கிறேனே! சரி போகட்டும், மனித உணர்வுகள் இனமொழி எல்லைகளை கடந்தவை என்பது தெற்குக்கு புரிந்திருந்தால் ஐந்து தசாப்த காலங்களாய் ஒரு சிறுபான்மை இனத்தை வருத்தி ,அகிம்சையோ, ஆயுதமோ எந்த வகையில் போராடினாலும் அதை அடக்கி ஒடுக்கி, சரி சிங்களவனிடம் வேலை பார்த்தவர்களை முதலமைச்சராக்கினால்கூட அவருக்கு புலி சாயம்பூசி, அது வேண்டாம் வேஷ்டி கட்டின பழைய அரசியல் கிழடுகளிடம் தலைமை கொடுத்து சிங்களவனுக்கு பிடிச்சமாதிரி நடந்தாலும், அதுக்கும் அரசியல் தீர்வு அதிகமா கொடுத்தால் தென்னிலங்கையில் ரத்த ஆறு ஓடும் என்று இன்றுவரை மிரட்டி, சமஷ்டி ,சட்டி பானை, அண்டா அலுமினியம் என்று ஏதாவது தீர்வு கேட்டால், போய் புலம்பெயர் தேசங்களில் அதையெல்லாம் கேளுங்கள் என்று எள்ளி நகையாடும் ஒரு இனப்பரம்பல் வாழும் பிரதேசம்..... இனியும் எங்களுக்காக கவலைப்படும், அவர்களை கவலைப்பட வைக்கலாம் என்று நம்புவது சம்மந்தன், சுமந்திரன் ரேஞ்சு ரகம், ஏனென்றால் அவர்களும் இப்படித்தானே தெற்கு எங்களுக்கு எதாவது செய்யும் என்ற நம்பிக்கையில் ரணிலோட சேர்ந்து சிங்கள தேசிய கொடியை உயர்த்தி பிடிக்கிறார்கள்! அரை நூற்றாண்டை கடந்துவிட்ட எங்கள் பிரச்சனையின் முதற்காரணியே...தெற்கின் மீதான அதீத நம்பிக்கை! எயிட்ஸ்ச பற்றி பேச வந்த இடத்தில Rights-ச பற்றி பேசிட்டோம் தப்புத்தான்!

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.