Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்மானம் எடுக்கவில்லை ஆழமாக சிந்திக்கின்றோம்: கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறுகின்றார்

Featured Replies

தீர்மானம் எடுக்கவில்லை ஆழமாக சிந்திக்கின்றோம்: கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறுகின்றார்

06-406105390e2cc053591a16e10ec0b4582fb8fe16.jpg

 

(எம்.மனோ சித்திரா)

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நாம் தீர்மானம் எடுத்துவிட்டதாக பலர் நினைக்கின்றா ர்கள். ஆனால் அப்படி இடம்பெறவில்லை. இத் தகைய சூழ்நிலையில் ஆழமாக நாம் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடுள்ளது.   

எமது மக்களிடையே மனதில் உள்ள குழப்பங்களை நாம் அறிந்துள்ளோம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளிலி்ருந்து அவர்களின் குழப்பமும் தெ ளிவாகியிருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் ஆழமாக சிந்தித்து முடிவெடுப்போம் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றுவரும் கம்பன் விழா நிகழ்வில் நேற்று முன்தினம் மாலை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,

வெறுமனே பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவராக மட்டும் இல்லாமல் சிறந்த தலைவர்களாகவும் மக்களின் வழிகாட்டியாகவும் இருந்து நாங்கள் செய்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளில் போட்டிகள், இழுபறிகள் எல்லாம் அந்த ஆசனத்திற்காக நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் நாளாந்தம் பார்த்துக் கொண்டிருக்கின்ற தருணம் இது. ஏன் இந்த ஆசனத்திற்கு இப்படியான‍ போட்டி. ஏன் என்ற கேள்விக்கு அப்பால் ஆசனங்களுக்காக நிகழ்கின்ற போட்டிகளில் பல கேள்விகள் மனதில் எழுகின்றன. முக்கியமாக உள்ளூராட்சி சபைகளில் நியமனங்களை கொடுக்க விளைகின்ற போது அதற்கேற்ற போட்டியைப் பார்க்கும் போது இதற்காகத் தானா நம் இனம் தேடித்திரிந்தோம். உரிமைக்காக உயிர் கொடுத்து போராடிய இனம் என பெருமையாக வீரப்பேச்சு பேசுகின்ற வேளையிலே உண்மையான களத்திலே நிகழ்ந்த நிகழ்வுகள் இதுதான்.

விசேடமான அம்சம் என்னவெனில் எதற்கெடுத்தாலும் அவன் துரோகி நான் தியாகி என பரவலாக எம்மக்கள் மத்தியில் மாறி மாறி கூறப்படுகின்ற கூற்றுக்கள். அவ் வார்த்தைகளின் ஆழமான அர்த்தங்களை புரிந்து கொள்ளாது சில்லறைத்தனமாக அவற்றை உபயோகிப்பது காலத்தால் எம் இனத்திற்கு ஏற்பட்ட கேவலம் என்பதை நான் நினைக்கின்றேன். அச்சொற்களுக்கு அர்த்தங்களுங்க உண்டு. இலங்கையில் அச் சொல்லை யாருக்கும் பொருத்த முடியாது. பொருத்தவும் கூடாது ஆனால் எங்கள் மத்தியில் அவர்களின் இப்படியான போக்கிற்கு மாறாக வித்தியாசமாக சொல்லிவிட்டால் துரோகி என்ற பட்டம் உடனடியாக பொருத்தப்படுகின்றது.

இன்றைய நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் தலைமையை தீர்மானிக்கும் சக்தி உங்களுடைய கையில் உள்ளது என்று சிலர் கூறுகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையிலேயே மக்கள் பிரதிநிதிகள் 15 பேரைக் கொண்டிருக்கின்றவர்கள் எப்படி நடந்து ‍கொள்ளுவார்கள் என்பதை தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கின்றது எனப் பலர் எதிர்பார்க்கின்றார்கள். அது உண்மையே. நாங்கள் எப்படியாக நடந்து கொள்ள வேண்டும்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் பாரிய எதிர்பார்ப்போடு நாங்கள் அரியாசனத்தில் ஏற்றினோம். இன்னுமொருவரை கூட்டு சேர்த்து நல்லாட்சி என்று கூறினோம். ஆனால் அதனை திரும்பிப் பார்க்கும் போது அவ்வாறு அமைந்திருக்கின்றதா இல்லை. ஆனால் எங்களுக்கு முன்பாக இருக்கின்ற பிரிவுகள் என்ன அதிலே ஏமாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மை. அந்த ஏமாற்றத்தின் காரணமாக நாம் என்ன செய்யலாம் என்கின்ற கேள்வி பெரிய ஒரு கேள்விக்குரியதாக எங்கள் முன்னிலையில் இருக்கின்றது. இன்னொரு மாற்றத்தை ஏற்படுத்துவோமா?. இன்னுமொரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் அது எப்படியான மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது? மீண்டும் பழைய காலத்தை ஏற்படுத்தப் போகின்றதா? மூன்று வருடத்திற்கு முன்பிருந்த நிலைக்கு ஏற்படுத்த போகின்றதா? அல்லது பழைய காலத்திற்கு வழிவகுக்கப் போகிறோமா?. பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் தீர்மானங்கள் எடுத்துவிட்டார்கள் என்று, அப்படியல்ல தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாய தேவைப்பாடு உள்ளது. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

எமது மக்களிடையே மனதில் உள்ள குழப்பங்களை அறிந்திருக்கின்றோம். நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளிலிருந்து அவர்களின் குழப்பமும் தெளிவாகியுள்ளது. இவ்வாறான சூழலில் நாங்கள் பிரநிதிகளாக குழப்பத்தை மட்டும் வெளிப்படுத்த முடியாது. தலைவர்களாகவும் மக்களின் வழிகாட்டியாகவும் நாம் செயற்பட வேண்டும். என்ன செய்யலாம் என்கின்ற அந்த கேள்வியோடு போராடிக் கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தா

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-02#page-1

  • தொடங்கியவர்
நம்பிக்கையில்லாப் பிரேரணை; கூட்டமைப்புக்குள்ளும் கருத்து முரண்பாடு?
 
 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானமே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தீர்மானமாக இருக்குமென, அந்த கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு இடையில் இன்றும் நாளையும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான விடயத்தில், கூட்டமைப்பிற்கும் சில கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ்மிரர் வினவியது. இதற்கு பதிலளித்த சித்தார்த்தன் "இன்றும் நாளையும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். இதன் பின்னர் கூட்டமைப்பு ஏகமனதாக எடுக்கும் தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்  இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக, பிரதமருக்கு ஈபிஆர்எல்எப் அனுப்பிவைத்துள்ள கடிதத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்துக்கான பதிலைப் பொறுத்தே, பிரேரணை தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியுமென அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈபிஆர்எல்எப் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியிருந்தாலும், அந்த கட்சிக்கு காணப்படும் நாடாளுமன்ற உறுப்புரிமையானது கூட்டமைப்பின் ஊடாகவே பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் பின்னர், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா?  என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நம்பிக்கையில்லாப்-பிரேரணை-கூட்டமைப்புக்குள்ளும்-கருத்து-முரண்பாடு/175-213670

  • தொடங்கியவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவினை ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை

(இராஜதுரை ஹஷான்)

 

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிதானந்த அளுத்கமகே, பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளது. ஆனால் தமிழ் கூட்டமைப்பு குறித்த விடயம் தொடர்பில்  ஒருதலைப்பட்சமாகவெ செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

tna.jpg

நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறந்த தீர்மானத்தினை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளார். கட்சிக்குள்  தற்போது தோற்றம் பெற்றுள்ள கருத்தொற்றுமை இன்மையே இதற்கு முக்கிய காரணியாக காணப்படுகின்றது.

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது சுமந்திரனின் கருத்தாக காணப்படுகின்றது .மறுபுறம் பிரதமருக்கு எதிராக தமது அபிப்பிராயத்தை கட்சி ரீதியாக வெளிப்படுத்த வேண்டும் என்பது கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தாக காணப்படுகின்றது.

 

கட்சியின் இரு வேறுபட்ட கருத்துக்களினையும் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இரா.சம்பந்தன் நுணுக்கமாக அவதானித்து வருகின்றார். கட்சியின் தலைவர் என்ற வகையில் வாக்கெடுப்பிற்கு சமுகம் தராமல் இருப்பது இவரது கருத்தாக காணப்படுகின்றது.

 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமது அரசியல் நோக்கங்களை காரணம் காட்டாமல் சாதாரண பிரஜைகள் என்ற நிலையில் இருந்து செயற்பட வேண்டும் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள நம்பிக்கையில்லா பிரேரணையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகடைக்காயாக பயன்படுத்தக் கூடாது. எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியின் பெருமைகளை கடந்த கால  அரசாங்கத்தின் ஊடாக எதிர்கட்சி தலைவர் அறிந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/32150

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, நவீனன் said:

தீர்மானம் எடுக்கவில்லை ஆழமாக சிந்திக்கின்றோம்: கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறுகின்றார்

கவனம் ஐயா!  கனக்க ஆழமாய்  சிந்திக்காதேங்கோ....மண்டை தட்டிப்போடும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கவனம் ஐயா!  கனக்க ஆழமாய்  சிந்திக்காதேங்கோ....மண்டை தட்டிப்போடும்.

ஏற்கனவே பெட்டி பரிமாறியாச்சு என்று கேள்வி.
 

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் எல்லாம் வெட்டி புடுங்கிவிட்டோம் 
என்று சொன்னது ரீலா ?? 
 

  • தொடங்கியவர்

ரணிலுக்கு ஆதரவா? – கூட்டமைப்பின் முடிவு இன்று

 

tna-300x198.jpgசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று முடிவெடுக்கவுள்ளது.

இன்று காலை கூட்டமைப்பு இதுபற்றி முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, இன்று பிற்பகல் நடக்கவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக இன்னமும் எமது கட்சி முடிவெதையும் எடுக்கவில்லை.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும். இதில் எமது நிலைப்பாடு என்னவென்று முடிவு செய்யப்படும்.

கூட்டமைப்பில் உள்ள சில கட்சிகள், வேறுவேறு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. ஈபிஆர்எல்எவ்வின் ஒரு உறுப்பினர், கூட்டமைப்பில் இருந்து விலகி,  சுதந்திரமாகவே வாக்களிப்பார்.

எனினும், ஏனைய 15 உறுப்பினர்களும்,இன்றைய கூட்டத்தில் ஒரே நிலைப்பாட்டை எடுப்பார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2018/04/03/news/30177

  • தொடங்கியவர்

இறுதி தீர்மானம் 2 மணிக்கு.!

 

 
 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் இன்று காலை கூடியது. எனினும் குறித்த கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்ததையிட்டு மீண்டும் 2 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பு இடம்பெறுவதுடன் அதன்பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்ததையிட்டு, அவசரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஜனாதிபதி மாளிகைக்கு சற்றுமுன்னர் சென்றுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/32178

  • தொடங்கியவர்

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் சம்பந்தன் தெரிவித்தது என்ன ?

 

 

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லையென தெரிவித்துள்ளார்.

maithri.jpg

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் இன்று காலை கூடியது. 

எனினும் குறித்த கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் எட்டப்படாது நிறைவடைந்த நிலையில் மீண்டும் 2 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பு இடம்பெறுவதுடன் அதன்பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்ததையிட்டு, அவசரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லையென தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/32183

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது சுமந்திரனின் கருத்தாக காணப்படுகின்றது 

சம்பந்தர் இவரின் சொல்லை தட்ட மாட்டார் என நினைக்கிறேன்.tw_blush:

  • தொடங்கியவர்

மைத்திரியைச் சந்தித்தார் சம்பந்தன் – இன்றிரவு முடிவை அறிவிப்பார்

 

sampoor-ms-3-300x199.jpgசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவரது செயலகத்தில் சந்தித்தது.

இன்றிரவு தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக முடிவெடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்த முடிவு தெரியப்படுத்தப்படும் என்று இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா அதிபரிடம் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மீது அனைத்து தரப்பினரினதும் கவனம் தற்போது குவிந்துள்ளது.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலையும் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/04/03/news/30188

  • தொடங்கியவர்

சம்பந்தன் மைத்திரி தர்க்கம். ரணிலுக்கு ஆதரவாக செயற்பட கூட்டமைப்பு முடிவு

 

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடுமையாக விவாதித்துள்ளார். அதேவேளை நடுநிலை வகிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டார் என்றும் தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பந்தன் மைத்திரி தர்க்கம்.  ரணிலுக்கு ஆதரவாக செயற்பட கூட்டமைப்பு முடிவு

இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கத்தை சீர்குலைக்க இடமளிக்க வேண்டாம் எனறு சம்பந்தன் வலியுறுத்தினார் என்றும் கூறப்படுகின்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அலுவலகமும் அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு கூறினாலும், இருவரும் பேசிய விடயங்கள் முழுமையாக எதுவும் வெளியிடப்படவில்லை என ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய நோக்கம் குறித்து சம்பந்தன் விளக்கமளித்தார். அதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னரான அரசியல் சூழலில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும் சம்பந்தன் ஆவேசமாக எடுத்துக் கூறியதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால் சிங்கள இனவாதிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சேறுபூசுவார்கள் எனவும் அதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். 

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சம்பந்தன், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளார்.

ஆனாலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தன் கூறியுள்ளார் என கட்சித் தகவல்கள் தெரிவிப்பதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழ் மக்கள் சார்பான கோரிக்கை ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் 15 உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர் எனவும் கூட்டமைப்புத் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

பிரேரணைக்கு எதிராகவும், நடுநிலை வகிக்க வேண்டும் என்றும், அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மூன்று வகையான கருத்துக்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே நிலவியது. ஆனாலும் சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை விளக்கமளித்த பின்னர் ஆதரவாக வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன என்று ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவரும் கருத்து வெயிட விரும்பவில்லை என்றும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் கூறினார்.

https://news.ibctamil.com/ta/politics/Sampanthan-MS

  • தொடங்கியவர்
’மக்களின் ஆணையை மதியுங்கள்’
 
 

2015ஆம் ஆண்டில், மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரியது என, அக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமிழ்மிரருக்கு இன்று (03) தெரிவித்தார்.


ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் இன்று இடம்பெற்றது. கூட்டமைப்புச் சார்பாக, அதன் தலைவர் இரா. சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டனர்.


இதன்போது, 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை, இரண்டு தலைவர்களும் (ஜனாதிபதியும் பிரதமரும்) மதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை, கூட்டமைப்பு முன்வைத்ததாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி, அதன்போது வழங்கப்பட்ட வலுவான சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவது குறித்தே, குறியாக இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மக்களின்-ஆணையை-மதியுங்கள்/175-213831

  • தொடங்கியவர்
  • கூட்டமைப்பு உறுப்பினர்கள் 13 பேர் ரணிலுக்கு ஆதரவு!!
 
 

கூட்டமைப்பு உறுப்பினர்கள் 13 பேர் ரணிலுக்கு ஆதரவு!!

 

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 13 பேர் ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களுடன் இன்று மாலை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பல்வேறு நிபந்தனையுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்மைப்பு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில், இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

http://newuthayan.com/story/81256.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, Maruthankerny said:

கடந்த வருடம் எல்லாம் வெட்டி புடுங்கிவிட்டோம் 
என்று சொன்னது ரீலா ?? 
 

கடந்த வருடம் எண்டு முற்றுப்புள்ளி வைச்சு சொல்லக்கூடாது கண்டியளோ.....

எண்டைக்கு அமீர்&கோ அரசியல் செய்ய வெளிக்கிட்டுதுகளோ....அண்டு தொடக்கம் ஒரே ரீல் ரீலாய்த்தானே ஓடுது..

On 4/2/2018 at 10:33 AM, நவீனன் said:

தீர்மானம் எடுக்கவில்லை ஆழமாக சிந்திக்கின்றோம்: கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறுகின்றார்

பெற்ற இலஞ்சங்களுக்கு ஆதரவாக நடக்க பல தடைகள் வந்துள்ளது எனத் தெரிகிறது. எனினும் தமிழ் மக்களை ஏமாற்றும் பணி தொடர்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.