Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும்

Featured Replies

  • அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும்
 
 

அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும்

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஒரு­வாறு நடந்து முடிந்து ஆட்­சியை அமைக்­கின்ற வேலை­க­ளும் பூர்த்­தி­ ய­டைந்து­ விட்­டன. தமி­ழர் பகு­தி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அநே­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் நிர்­வா­ கத்­தைப் பொறுப்­பேற்­றுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் ஆயுட் காலம் எதிர்­வ­ரும் செப்­ரம்­பர் மாதத்­து­டன் நிறை­வு­பெ­ற­ வி­ருப்­ப­தால் அதற்­கான தேர்­த­லும் இடம்­பெ­ற­வேண்­டும். பழைய தேர்­தல் முறை­மை­யின் கீழ் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தல்­கள் இடம்­பெ­று­மென ஊகம் வௌி யி­டப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கிடைத்த கசப்­பான அனு­ப­வங்­கள் இந்த முடி­வுக்­குக் கார­ண­மாக ஆகி­யி­ருக்­கக்­கூ­டும்.

எதிர்­வ­ரும் வடக்கு  மாகா­ண­ச­பைத்  தேர்­த­லில் முத­ல­மைச்­சர்  வேட்­பா­ளர்  தெரிவு இல­கு­வா­ன தொன்­றாக  அமை­யப்­போ­வ­தில்லை

வடக்கு மாகாண சபைக்­கான முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரின் தெரிவு, கடந்­த­முறை போன்று இம்­முறை இல­கு­வா­ன­தாக இருக்­கப்­போ­வ­தில்­லை­யென்­பது இப்­போதே தெரிய ஆரம்­பித்து விட்­டது. தற்­போது முத­ல­மைச்­சர் பத­வியை வகித்­து­வ­ரும். சி.வி. விக்­னேஸ்­வ­ரன் அடுத்த தட­வை­யும் பதவி வகிப்­ப­தில் உள்ள தமது விருப்­பத்தை சூசகமாக வெளிப்படுத்தி யுள்ளார்.

ஆனால், அவ­ருக்கு நெருக்­க­மான சிலர் விக்­னேஸ்­வ­ரனை மீண்­டும் முத­ல­ மைச்­சர் வேட்­பா­ள­ராக நிய­மிப்­ப­தற்கு விரும்­பு­வ­தா­கத் தெரி­கின்­றது. ஆனால் கூட்­ட­மைப்­பின் சார்­பில் அவர் நிறுத்­தப்­படு­வதற்­கான சாத்­தி­யம் மிகக் குறை­வா­னதா­கவே காணப்­ப­டு­கின்­றது.

கூட்­ட­மைப்­பின் தலைமை, விக்­னேஸ்வரனை முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்­திய போதி­லும் அவர் அதற்­கான விசு­வாசத் தைக் காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்போதே அவர் தமது உண்­மை­யான சுய­ரூ­பத்­தைக் காட்­டி­விட்­டார்.

தேர்­தல் பரப்­பு­ரை­க­ளில் ஈடு­ப­டா­மல் அவர் ஒதுங்கி நின்­றமை இதைத் தௌிவாக எடுத்­துக் காட்­டி­விட்­டது. தமிழ் மக்­கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்ட போது கூட்­ட­மைப்பின் விருப்­பத்துக்கு மாறாக அதில் இணைந்து கொண்­ட­து­டன் இணைத்­த­லை­வர் பத­வி­யை­யும் ஏற்­றுக் கொண்­டார்.

தமக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­போது, வடக்கு முத­ல­மைச்­சர் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளின் ஆத­ர­வைத் திரட்­டு­வ­தில் ஈடு­பட்­டார். மாற்­றுத் தலைமை தொடர்­பான சிந்­தனை எழு­வ­தற்­கும் இவரே கார­ண­மாக இருந்­துள்­ளார்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் போதும் கூட்­ட­மைப்­பி­ லி­ருந்து விலகி நின்­றுள்­ளார். கூட்­ட­மைப்பு இக்­கட்­டா­ன­தொரு சூழ்­நி­லை­யில் இருந்­ததை இவர் அறிந்து கொண்டபோதி­லும் அதற்கு ஆத­ர­வான பரப்­பு­ரை­க­ளில் இவர் ஈடு­ப­ட­வில்லை.

எப்­போ­துமே  கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கும் வழக்­கம் கொண்ட
வடக்கு முத­ல­மைச்­சர்

ஆனால் தேர்­தல் முடி­வு­கள் வௌிவந்­த­போது கூட்­ட­மைப் பின் பிர­தான பங்­கா­ளி­யான தமி­ழ­ர­சுக் கட்­சியை எள்ளி நகை­யா­டும் விதத்­தில் கருத்­துக்­களை வௌியிட்­டார். தேர்­தல் முடி­வு­கள் தமி­ழ­ர­சுக் கட்­சிக்கு ஒரு நில­ந­டுக்­க­மா­கவே அமைந்­து­விட்­ட­தென அவர் கூறி­யதை என்­றுமே மறுக்க முடி­யாது.

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்றி பெற்­றி­ருக்­கு­மா­னால், கூட்­ட­மைப்பு தர்­ம­சங்­க­ட­மா­ன­தொரு நிலையை எதிர்­கொண்­டி­ருக்­கும். ஆனால் தலைமை அமைச்­சர் பெற்ற வெற்றி அதைக் காப்­பாற்­றி­விட்­டது என்ற போதி।­­லும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான சம்­பந்­த­னுக்கு எதி­ரா­கக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் பெரும் சவா­லாகவே மாறி­விட்­டது.

இதன் வாக்­கெ­டுப்­பின்­போது கூட்­ட­மைப்­பின் நண்­பர்­கள் யார்? எதி­ரி­கள் யார்? என்­ப­தும் தெரிந்­து­வி­டும்.

இந்த நிலை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் பத­விக்­குப் பொருத்­த­மான ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்­டிய முக்­கி­ய­மான பொறுப்பு கூட்­ட­மைப்­புக்கு உண்டு. இந்த முறை கடந்த முறை போலன்றி தேர்­த­லில் கடு­மை­யான போட்டி நில­வு­மென்­பதை எதிர்­பார்க்க முடி­யும்.

இந்த நிலை­யில் மக்­க­ளது ஏகோ­பித்த ஆத­ரவை ஈட்­டக்­கூ­டிய ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்­டிய அவ­சி­ய­தேவை ஏற்­பட்­டுள்­ளது.

ஆளு­மைத் திறன் மிக்­க­வர்­கள் மாகாண சபை வேட்­பா­ளர்­க­ளாக
களம் இறக்­கப்­ப­டல் வேண்­டும் கூட்­ட­மைப்பு எதைச் செய்­தா­லும் அதில் குறை காண்­கின்ற மன­நி­லை­யில் சிலர் உள்­ள­னர்.

அவர்­கள் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான வதந்­தி­க­ளைப் பரப்பி விடு­வ­தி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். மக்­க­ளில் ஒரு­ப­கு­தி­யி­னர் இவர்­கள் சொல்­வ­தை­யெல்­லாம் ஏற்­றுக்­கொள்­வ­தை­யும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

மக்­க­ளின் இந்த தவ­றான நட­வ­டிக்­கை­கள் களைந்­தெ­றி­யப்­ப­டல் வேண்­டும். இதற்கு ஆளுமை மிக்­க­வர்­கள் மாகா­ண­ச­பைக்­கான தேர்­தல் காலத்­தில் களம் இறக்­கப்­ப­டல் வேண்­டும். இதில் பிர­தா­ன­மா­னது முத­ல­மைச்­ச­ருக்­கான வேட்­பா­ளர் தெரிவு என்­பதைச் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

முத­ல­மைச்­ச­ருக் கான வேட்­பா­ளர் தெரி­வில் கடந்த முறை ஏற்­பட்ட தவ­று­க­ளைச் சீர்­செய்­வ­தற்கு கூட்­ட­மைப்பு திணறி வரு­வ­தைப் போன்­ற­தொரு நிலை இனி­யும் உரு­வா­கி­வி­டக் கூடாது. ஆகவே கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் தீர்க்­க­மாக ஒன்று கூடி ஆராய்ந்து மக்­க­ளால் ஏற்கப்படத்தக்க, தகுதி வாய்ந்த ஒரு­வரை முத­ல­மைச் சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்­டும்.

மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் சென்ற தடவை போன்று அமோக வெற்­றி­யைப் பெறு­வ­தற்கு இது மிக­வும் உப­யோ­ க­மா­ன­தாக விளங்­கும். என்­ன­தான் இருந்­தா­லும் விக்­னேஸ்­வ­ ரனை முன்­நி­றுத்தி ஆதாயம் பெறு­வ­தற்கு எதிர்த்­த­ரப்­பி­னர் முயற்­சிக்­கவே செய்­வார்­கள். இதற்­குத் தகுந்த பதி­ல­டியை வழங்­கு­வ­தும் கூட்­ட­மைப்­பின் தலை­யாய கட­மை­யா­கும்.

http://newuthayan.com/story/84340.html

இதுவரை தமிழ்மக்கள் கண்ட அரசியல்வாதிகளில் தமிழர் நலனுக்காக முழுமூச்சுடன் மிகச் சிறப்பாக செயற்பட்டவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை பொறுக்காத அரசியல் கயவர்களின் தயவில் இயக்கும் ஊடகங்கள் அவருக்கு எதிராக எழுதுவது ஆச்சரியம் இல்லை.

கயவர்களால் நடத்தப்படும் இந்த பத்திரிகைகள் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக்கட்சி செய்து வரும் ஜனநாயக விரோத செயல்களை ஒருபோதும் வெளிகொண்டுவருவதில்லை.

சிங்கள கொலைகாரர்களை வீட்டுக்கு அழைத்து பிறந்தநாள் கொண்டாடும் சுயநல அரசியல் கயவர்களின் ஊதுகுழலாக இருக்கும் அரைவேக்காட்டு பத்திரிகைகளின் போலிப் பிரச்சாரங்களை, பக்கசார்பான கருத்துக்களை மக்கள் எப்போதும் நம்பத் தயாரில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
ப்ளீஸ், அவர் தமிழ் மக்களுக்கு செய்த நல்ல விடயங்களை சொல்லுங்கள்
 
  • கருத்துக்கள உறவுகள்

அவர் வடமாகாண முதலமைச்சரா இருந்ததே தமிழ் மக்களுக்கு நன்மைதான்.

17 hours ago, ரதி said:
ப்ளீஸ், அவர் தமிழ் மக்களுக்கு செய்த நல்ல விடயங்களை சொல்லுங்கள்
 

சட்ட விரோத்மான இஸ்லாமிய குடியேற்றக்களை தடுத்தாரே , அது போதாதா ...!!!!

இல்லாவிடில் மன்னார் மாவட்டம் கைவிட்டு போனது போல் முழு வடக்கு மாகாணமும் போய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

 முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அவரை ஓரங்கட்டி விமர்சித்து அவருக்கு எதிராய் நடக்க வெளிக்கிட்டதால்  தான் அவரும் விலகிப் போக வேண்டிய கட்டாயத்திற்கு வந்தார்.  அதற்குரிய தண்டனையை  இந்தத் தேர்தலில் பெற்றும் கொண்டார்கள்.  ஆனால்  கற்றுக் கொள்ள வேண்டியதை ஏற்க மறுத்து யாரையாவது குற்றம் கூறி தவறை மறைக்கப் பார்க்கிறார்கள். இதற்கு உரிய தகுந்த தண்டனை  அடுத்த தேர்தலில் வனவாசமாக அமையலாம். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இப்பவே தயாராக இருப்பது நல்லது. இவர்களுடைய கட்சி  போன தேர்தலோடை மறைஞ்சு போகாமல் இன்று வரை  நின்று மூச்சு விடுவதும், இன்னொரு முதலமைச்சரை தேடுவதும் இன்றய முதலமைச்சரால்த்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎/‎04‎/‎2018 at 12:15 AM, Dash said:

சட்ட விரோத்மான இஸ்லாமிய குடியேற்றக்களை தடுத்தாரே , அது போதாதா ...!!!!

இல்லாவிடில் மன்னார் மாவட்டம் கைவிட்டு போனது போல் முழு வடக்கு மாகாணமும் போய் இருக்கும்.

என்னது யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் குடியேற்றம் இல்லையா tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

என்னது யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் குடியேற்றம் இல்லையா tw_confused:

இப்போது யாழில் உள்ளவர்கள் 1990ற்கு முன்னர் இருந்தவர்கள், 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.