Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலமைப்பு முன்னேறுகிறதா? மே -ஜுன் மாதத்திற்குள் பதில் வேண்டும்... நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

அரசியலமைப்பு முன்னேறுகிறதா? மே -ஜுன் மாதத்திற்குள் பதில் வேண்டும்... நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன்

 
அரசியலமைப்பு முன்னேறுகின்றதா என்பது மே -ஜுன் மாதத்திற்குள் தெளிவாகத் தெரியவேண்டும் என்ற காலக்கெடுவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அரசியலமைப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

Edited by நவீனன்

28wzet.jpg

  • தொடங்கியவர்

வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கம் அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை

 

 
 

வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கம் அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை

அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் வடக்கு கிழக்கு பிரதேசமெங்கும் அரச நிர்வாகம் முடக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்குள் அரசியல் தீர்வு முயற்சிகள் சரியான திசையில் முன்னேறுகின்றதா என்பதில் தெளிவான பதில் கிடைக்க வேண்டும் எனவும் அப்படி முன்னேறுமாக இருந்தால் இந்த வருட இறுதிக்குள் அவை நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற தெளிவான காலக்கெடு ஒன்றை தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கும் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காலப் பகுதிக்குள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனில், வடக்கு கிழக்கு மழுவதும் நிர்வாக முடக்கத்தினை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தினை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டமைப்பு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.(15

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-கிழக்கில்-நிர்வாக/

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவை மீண்டும் இணைக்கலாமே!

 

படத்துடன் செய்தி போட்டாலும் நம்புகிறார்கள் இல்லை.

நான் இணைத்த படம் இன்றய வீரகேசரியில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

எனது பதிவை மீண்டும் இணைக்கலாமே!

 

படத்துடன் செய்தி போட்டாலும் நம்புகிறார்கள் இல்லை.

நான் இணைத்த படம் இன்றய வீரகேசரியில் வந்தது.

யாழ் நிர்வாகம் ஏன் சில நேரங்களில் இப்படி நடந்து கொள்கிறது???

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி வாசிப்பவர்கள் யாருக்கும் உடம்பில் புல்லரிச்சா சுமந்திரனைகொண்டே சொறிஞ்சுவிடுங்கோ. 

அதைவிட இன்னுமொரு விடையம் அண்ணர் சுமந்திரன் வில்லெடுத்து வீசப்போறார் வாள் எடுத்துச் சுழட்டப்போறார் குறுக்கமறுக்க போகாதையுங்கோ அண்ணற்ற இலக்குத் தப்புறது ஒரு புறமிருக்க உங்கட உயிருக்கும் உத்தரவாதமில்லை.

 

Image may contain: 3 people, text

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

யாழ் நிர்வாகம் ஏன் சில நேரங்களில் இப்படி நடந்து கொள்கிறது???

உவங்க உப்படித் தான் பாஸ்,

இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்னர் ரணலின் சம்பூர் விஜயத்தை படத்துடன் "செய்தி திரட்டி"( வினோத, உடனடி உறுதிப்படுத்தாத) பகுதியில் இணைத்தேன், தூக்கினார்கள், ஆனால் அதே படங்களுடன் அடுத்தநாள் ஊர்புதினம் பகுதியில் இணைக்கப்பட்டது இணையச் செய்தியாக...

 

1 hour ago, Elugnajiru said:

இந்தச் செய்தி வாசிப்பவர்கள் யாருக்கும் உடம்பில் புல்லரிச்சா சுமந்திரனைகொண்டே சொறிஞ்சுவிடுங்கோ. 

அதைவிட இன்னுமொரு விடையம் அண்ணர் சுமந்திரன் வில்லெடுத்து வீசப்போறார் வாள் எடுத்துச் சுழட்டப்போறார் குறுக்கமறுக்க போகாதையுங்கோ அண்ணற்ற இலக்குத் தப்புறது ஒரு புறமிருக்க உங்கட உயிருக்கும் உத்தரவாதமில்லை.

 

மீரா
இந்த திரியில் நீங்கள் போட்ட முதல் பதிவு இது தான். இதற்கு முதல் இத் திரியில் வேறு எதனையும் பதிந்ததாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நிழலி said:

மீரா
இந்த திரியில் நீங்கள் போட்ட முதல் பதிவு இது தான். இதற்கு முதல் இத் திரியில் வேறு எதனையும் பதிந்ததாக தெரியவில்லை.

நிழலி, இந்த திரியின் செய்தியை, இன்றைய பத்திரிகையில் வந்த செய்திப் பதிவை படத்துடன்  இன்று காலை இணைத்திருந்தேன்,

ஆனால் அது நீக்கப்பட்டுவிட்டது.

 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்தால் சுமந்திரர் கெஞ்சிக் கேட்கிறமாதிரிக் கிடக்கு. உள்ள பார்த்தால் எச்சரிக்கை என்று சவடால் விடுகின்றார்.

செய்தி பழசானால் அதைக் கடாசிப்போட்டு புதிசா போட்டால் என்ன?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.