Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த இளஞ்செழியன்

Featured Replies

இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த இளஞ்செழியன்

 

 
 

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்டவிரோதமாக கைதுசெய்து அவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இரணுவ சிப்பாய் ஆகிய இருவருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

sealiyan.jpg

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் (09.09.1998) யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரன் குணசேகரம் என்ற இளைஞர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் இரண்டு நாட்களில் சடலமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்.

இது தொடர்பில் 51 ஆவது முகாம் தளபதி முதலாம் எதிரியாகவும், யாழ்.512 ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி இரண்டாம் எதிரியாகவும், திருநெல்வேலி இராணுவ முகாம் இராணுவ அதிகாரி மூன்றாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இவ் வழக்கில் பல சாட்சியங்களது சாட்சியங்களையும், எதிரிதரப்பு சட்டத்தரணியினது வாதங்களை பரிசீலித்த மன்றானது இன்றைய தினம் இவ் வழக்கின் தீர்ப்புக்காக திகதியிட்டிருந்தது. 

இதன்படி இன்றைய தினம் காலை பதினொரு மணியளவில் நீதிபதி தனது தீர்ப்பினை திறந்த மன்றில் அறிவித்திருந்தார். அத்துடன் நீதிபதி தனது தீர்பில் இலங்கை உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகவும், சித்திரவதை தொடர்பான வழக்குகளிலும் வழங்கிய தீர்ப்புக்களையும், ஜ.நா.யுத்த குற்ற நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களையும் மேற்கோள்காட்டி தனது தண்டனை தீர்ப்பை வழங்கியிருந்தார்.

இவ் வழக்கின் முதலாம் எதிரியான 51 ஆவது படைத் தளபதி அச்சுவேலி முகாமை சேர்ந்தவர். அவர் குறித்த இளைஞனை கைது செய்தமை, தடுத்து வைத்தமை என்பனவற்றுடன் மாத்திரமே தொடர்புபட்டுள்ளதுடன் அவர் சித்திரவதை புரிந்தமை, கொலை செய்தமை என்பனவற்றுடன் தொடர்புபட்டார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாமையினால் அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் ஆதாரங்களூடாக பார்க்கின்ற போது இரண்டாம் எதிரியான இராணுவ கட்டளை தளபதி, மற்றும் திருநெல்வேலி இராணுவ முகாம் அதிகாரி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படுகின்றது.

எனவே குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நிருபிக்ப்ப்பட்ட 512 ஆம் படை பிரிவின் கட்டளை தளபதி மற்றும் திருநெல்வேலி இராணுவ அதிகாரி ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் கழுத்தில் சுருக்கிட்டு உடலில் இருந்து உயிர் பிரியும் வரை துக்கிலிட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு ஆணை பிறப்பித்தார்.

குறித்த மரண தண்டனை தீர்ப்பானது வாசிக்கப்படும் போது நீதிமன்றின் அனைத்து விளக்குகளும், அணைக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்ட பேனா முறித்து எறியப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் சில நிமிடம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38072

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்ப்பால் சிங்கள மக்களிடையே ஐயா சேர்த்து வைத்துள்ள நன்மதிப்பு குறைவடையும்...

  • கருத்துக்கள உறவுகள்

எனி இரண்டு புலி சந்தேக நபர்களுக்கும் மரண தண்டனை கொடுத்திட்டால்.. சிங்கள மாக்கள்.. திருப்தி ஆகிடுவினமில்ல.

நம்ம சட்டாம்பிமாருக்கு எஜமானர்களின் வீக் பொயின்ட் தெரியும்.. ஆனால்.. அவை மற்ற ஒன்றுக்கும் சரிப்பட்டு வரமாட்டினம். ?

  • கருத்துக்கள உறவுகள்

 

இளஞ்செழியன் விதித்த 2 மரண தண்டனைகளை, ரத்துச்செய்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை

 

இலங்கை இராணுவத்தினர் இருவருக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற தமிழ் நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களுடைய குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருக்கின்றனர்.
 
இவர்கள் இருவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
 
மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் தற்போது போகம்பறை சிறையில் உள்ளனர். மஹநுவர மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த இருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
யுத்தத்திற்கு சென்று உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக போராடிய இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தினால் இவர்களது குடும்பத்தினர் பெரும் துயரத்தில் உள்ளனர்.
 
யுத்த காலத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை செய்ய முடியும். அந்த வகையிலலேயே கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படும் ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்ற நபரை குறித்த இராணுவ வீரர்கள் யாழ். பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பாரப்படுத்தியுள்ளனர்.
 
இதை மட்டுமே இவர்கள் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்பவரை கொலை செய்து தடயங்கள் இல்லாமல் உடலை அழித்திருக்க முடியும்.
 
ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. இவர்கள் வைத்தியசாலையில் பாரப்படுத்தியது மட்டுமே இவர்கள் செய்தது.
 
இதற்காக மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற நிலையில் நேற்று நீதிபதி இளஞ்செழியனால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மரண தண்டனையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சற்றும் சகித்துக்கொள்ளவும் முடியாது.
 
தன்னை கொலை செய்ய வந்த நபருக்கே பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி இவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சட்டத்தரணி அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

இந்த தீர்ப்பால் சிங்கள மக்களிடையே ஐயா சேர்த்து வைத்துள்ள நன்மதிப்பு குறைவடையும்...

குற்றம் செய்தவன் யாராயிருப்பினும் குற்றம் குற்றமே. கோல் கோடாக் கொற்றம் கொற்றமே.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2018 at 12:49 AM, நவீனன் said:

எனவே குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நிருபிக்ப்ப்பட்ட 512 ஆம் படை பிரிவின் கட்டளை தளபதி மற்றும் திருநெல்வேலி இராணுவ அதிகாரி ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் கழுத்தில் சுருக்கிட்டு உடலில் இருந்து உயிர் பிரியும் வரை துக்கிலிட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு ஆணை பிறப்பித்தார்.

இதோட தூக்குதண்டனை பிரேரணையை ஜனாதிபதி கிடப்பில் போடப் போகிறார்.ஆதரவளித்த பிக்குகளும் பின்வாங்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி தமிழர் ஆனந்த சுதாகரனை விட முடியாத ஜனாதிபதி, இந்த சிங்களவர்களை விடவா போகிறார்? ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.