Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி விமான நிலையம் குறித்து ஆராய, இந்திய குழு யாழ்ப்பாணம் செல்கிறது…

Featured Replies

பலாலி விமான நிலையம் குறித்து ஆராய, இந்திய குழு யாழ்ப்பாணம் செல்கிறது…

Palali.jpg?resize=800%2C466
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் குறித்து ஆராய்வதற்காக இந்திய குழுவொன்று அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆராய்வதற்காக மூன்று இந்திய அதிகாரிகளை கொண்ட குழுவினர் இன்று (21.08.18) யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் உதவியுடன், பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாக யாழ்ப்பாணம் செல்லும் இந்திய அதிகாரிகள், பலாலி விமான நிலையத்தின் அமைவிடம் மற்றும் ஓடுபாதையின் நிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கை இந்திய அரசாங்கத்திடம் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/92206/

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடுவில் எதுவித நவீன தொழில்நுட்பங்களும் இல்லாது தமிழரகள் தமது மட்டுபடுத்தப்பட்ட வளங்களையும் உலகெலாம்வாழும் புலம்பெயர்ந்துவாழும் தொழில்நுட்ப விமானப்போக்குவரத்துக்கான கட்டுமானத்தொழில்நுட்ப அறிவுகொண்ட தமிழர்களையும் ஒருங்கிணைத்து நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதை சர்வதேச நியமங்களுடன் நிர்மானிக்கப்படாதுவிடினும் சிறிய வகை விமானங்கள் இறங்கி ஏறும் தகுதியுடனேயே நிர்மானிக்கப்பட்டது.

சிறீலங்கா அரசும் அதனை ஆளும் கையாலாகத சிங்களமும் அதன் அதிகாரிகளும் அதைக்கூட கண்டுகொண்டு பலாலி விமானத்தளத்தை நவீனப்படுத்தி அதை எமக்கான விமானநிலையமாக மாற்ற வக்கில்லாதவர்களாகியுள்ளார்கள்

இந்த அழகில் புலம்பெயர்தமிழர்கள் வடக்குக்கிழக்கில் அபிவிருக்தியில் கைகோர்க்கவேண்டுமென கூக்குரல் வேற.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

பலாலி விமான நிலையம் குறித்து ஆராய, இந்திய குழு யாழ்ப்பாணம் செல்கிறது…

... அதற்கமைவாக யாழ்ப்பாணம் செல்லும் இந்திய அதிகாரிகள்,  பலாலி விமான நிலையத்தின் அமைவிடம் மற்றும் ஓடுபாதையின் நிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கை இந்திய அரசாங்கத்திடம் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/92206/

அப்போ பயணிகள்,  தலைக் கவசம் அணிந்துகொண்டுதான் விமான நிலையத்திற்குள் செல்ல வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Elugnajiru said:

இரணைமடுவில் எதுவித நவீன தொழில்நுட்பங்களும் இல்லாது தமிழரகள் தமது மட்டுபடுத்தப்பட்ட வளங்களையும் உலகெலாம்வாழும் புலம்பெயர்ந்துவாழும் தொழில்நுட்ப விமானப்போக்குவரத்துக்கான கட்டுமானத்தொழில்நுட்ப அறிவுகொண்ட தமிழர்களையும் ஒருங்கிணைத்து நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதை சர்வதேச நியமங்களுடன் நிர்மானிக்கப்படாதுவிடினும் சிறிய வகை விமானங்கள் இறங்கி ஏறும் தகுதியுடனேயே நிர்மானிக்கப்பட்டது.

சிறீலங்கா அரசும் அதனை ஆளும் கையாலாகத சிங்களமும் அதன் அதிகாரிகளும் அதைக்கூட கண்டுகொண்டு பலாலி விமானத்தளத்தை நவீனப்படுத்தி அதை எமக்கான விமானநிலையமாக மாற்ற வக்கில்லாதவர்களாகியுள்ளார்கள்

இந்த அழகில் புலம்பெயர்தமிழர்கள் வடக்குக்கிழக்கில் அபிவிருக்தியில் கைகோர்க்கவேண்டுமென கூக்குரல் வேற.

அந்த விமான ஓடுபாதையால்தான்   இரணைமடு தண்ணீர் மேலதிகமாய் சேகரிக்க முடியாமல் இருப்பது வேதனையான ஒன்று தமிழ் அரசியவாதிகள் அதை வைத்து அரசியல் செய்வது அதை விட கேவலமான ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்

78 முறை கூரை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைம் அமைத்த வின்னாதி விண்ணர்கள்... உங்க வருகினம் போல கிடக்குது.

87 முதல் 90 வரை இருந்த இந்திய இராணுவத்திடம் இல்லாமல் போன வரைபடங்களா?

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

அப்போ பயணிகள்,  தலைக் கவசம் அணிந்துகொண்டுதான் விமான நிலையத்திற்குள் செல்ல வேண்டும்!

 

5 hours ago, Nathamuni said:

78 முறை கூரை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைம் அமைத்த வின்னாதி விண்ணர்கள்... உங்க வருகினம் போல கிடக்குது.

87 முதல் 90 வரை இருந்த இந்திய இராணுவத்திடம் இல்லாமல் போன வரைபடங்களா?

Bildergebnis für à®à®¿à®à¯à®à¯  Bildergebnis für à®à®¿à®à¯à®à¯

கூரைக்கு ... கிடுகு வேய்ந்தால் இடிந்து விழாது. நல்ல  குளிர்ச்சியாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை விமர்சனங்களுக்கப்பால் இது நடைமுறைக்கு வந்தால் மிகவும் நல்ல விடையம்..

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் விமான ஓடுபாதைபோட்டது விடுதலைப்புலிகள் அரசாங்கமில்லை அதை உடைத்துப்போட்டு இரணைமடுவை அபிவிருத்திசெய்யலாம்

நான் கூறவந்தது வேறவிடையம் அதாவது நம்மவர் மத்தியிலும் சிங்களவர்களிடமும் சிறந்த தொழில்நுட்ப அறிவுடையவர்கள் இருக்கிறார்கள்.
அரசாங்கத்திடம் பணம் இல்லையெனில் ஐம்பத்தியொரு விகிதம் அரசாங்கம் பெரும்பான்மையான பங்குகளை வைத்துக்கொண்டு மிகுதிப்பங்குகளை பொதுமக்களுக்கு வினியோகித்து தனது ஐம்பத்தியொரு விகிதப்பங்கிற்கான பணத்துக்கு அதே பொதுமக்களிடம் பணமுறிகளை வினியோகம்செய்து தனது பணதேவையையும் நிவர்த்திசெய்து பலாலி விமான நிலையத்தை ஒரு வரையறுக்கப்பட்ட கம்பனியாக நிர்வகிக்கலாம் சிறந்த நிர்வாக சபையையும் வடமாகாணசபையை பங்குதாரர்களாகவும் உள்வாங்கினால் புலம்பெயர்தமிழர் புலத்திலுள்ள தமிழர் அனைவரும் முதலீடு செய்வார்கள் ஒளிவுமறைவில்லாது நேரடியாக அரசாங்கம் தமிழ்மக்களிடம் வருதல்வேண்டும்  வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு அழைக்கும் பாங்கு அப்படித்தான் இருkகவேண்டும்.

அதற்குச்சமாந்தரமாக சிறு கைத்தொழில்களை ஊக்குவித்து விவசாயத்தையும் ஊக்குவித்தால் ஆபிரிக்க நாடுகளிலும் மலேசியா இந்தியா போன்ற நாடுகளிலும் புலம்பெயர் தமிழ் வியாபாரிகள் கொள்வனவு செய்யும் உணவுப்பொருதள் பழவகைகள் காய்கறிகளை எம்மால் நேரடியாகவே வடக்கிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும் 
 

இதனால் பெருமளவு அந்நியசெலவாணிக்கு ஈடான வருமானத்தை வடக்குத்தமிழர்கள் வருமானமாகப்பெறலாம் அபிவிருத்தி என்பது இப்படித்தான் இருக்கவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

நகைச்சுவை விமர்சனங்களுக்கப்பால் இது நடைமுறைக்கு வந்தால் மிகவும் நல்ல விடையம்..

ஜேர்மனியிலை இருந்து சென்னைக்கு போய் சென்னையிலையிருந்து பலாலிக்கு போகலாம் எண்டுறியள் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை இருந்து சென்னைக்கு போய் சென்னையிலையிருந்து பலாலிக்கு போகலாம் எண்டுறியள் :cool:

இதை நான் முதலிலே நினைத்தேன்.. ஆனால் பல "சிலோன் தமிழர்கள்" விரும்புவார்களா..? என்றொரு ஐயம் இருக்கிறது !

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

பெருமாள் விமான ஓடுபாதைபோட்டது விடுதலைப்புலிகள் அரசாங்கமில்லை அதை உடைத்துப்போட்டு இரணைமடுவை அபிவிருத்திசெய்யலாம்

ஓம் புலி போட்டதை இப்ப அவர்கள் உபயோகிக்கினம் வசதி வாய்ப்பாய் இருப்பதால் குளக்கட்டு தண்ணி சேகரிப்பை மட்டுபடுத்தி வைத்து இருக்கினம் அங்கிருப்பவர்களை கேட்டால் ஸ்ரீ யை திட்டினம் . நீங்கள் சொல்வது போல உடைத்து போட்டால் மிக்க மகிழ்ச்சி நடக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இதை நான் முதலிலே நினைத்தேன்.. ஆனால் பல "சிலோன் தமிழர்கள்" விரும்புவார்களா..? என்றொரு ஐயம் இருக்கிறது !

இது ஒரு தூண்டில் அவ்வளவே . உண்மையில் வன்னியன் நீங்கள் கூறுவது போல் சென்னையும் மதுரையும் ? டிரான்சிட் செய்வதை அநேகர் விரும்புவார் ஆனால் உண்மை வேறு ஏற்கனவே திருவானந்தபுரம் ,கொச்சின் ,கோழிகோடு போன்ற இடங்களுக்கு அதிக தடவழியை கொண்ட அரபுலக விமான நிறுவனம்களுக்கு உபரி வருமானமாய் இருக்கும் ( சிலோனின் அரபுலக கடனுக்கு இந்த விட்டு கொடுப்பு ?)அதே நேரம் சென்னை போன்ற இடம்களுக்கு ரிக்கெட் விலை அதிகமாயும் இருக்கும் . 

அப்படியான ரூட்டை சிலோன் தமிழ் விரும்பாது போக நிறைய காரணம் உள்ளது  வன்னியன் .

ஜெர்மனில் இருந்து சென்னைக்கு நேரே போகும் விமான நிறுவனம் ஜெர்மனில் உள்ளதா குசா ?

இங்கு மருது போன்றவர்கள் எட்டிபார்க்க வைக்க என்ன வழி?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு மருது போன்றவர்கள் எட்டிபார்க்க வைக்க என்ன வழி?

Ãhnliches Foto  Bildergebnis für நயனà¯à®¤à®¾à®°à®¾ 

மருதுவை... இங்கை, எட்டிப்  பார்க்க வைக்க சினிமா நடிகையின் படத்தை போட்டால்.... மோப்பம் பிடித்து, வந்து விடுவார். ?
நாதமுனியை...  இங்கை, எப்படி  இழுப்பது என்று தெரியவில்லை.?

  • தொடங்கியவர்

பலாலி வானூர்தித் தளத்தை -ஆராய்ந்தது இந்தியக் குழு!!

 

இந்­திய வானூர்­தி­கள் தற்­போ­துள்ள ஓடு­பாதை மற்­றும் வலை­ய­மைப்­புக்கு அமை­வாக தரை­யி­றங்க முடி­யுமா என்­பது தொடர்­பில் இந்­திய அதி­கா­ரி­கள் மூவர் நேற்று ஆய்வு செய்­துள்­ள­னர்.

கொழும்­பி­லி­ருந்து உலங்­கு­வா­னூர்தி மூலம் பலாலி வானூர்­தித் தளத்தை நேற்­றுக் காலை வந்­த­டைந்­த­னர். பலாலி வானூர்­தித் தளத்­தின் ஓடு­பா­தையை ஆய்வு செய்­த­னர். தற்­போது வானூர்­தி­கள் தரை­யி­றங்­கு­வது, கிளம்­பு­வது தொடர்­பான முறை­மை­க­ளைப் பார்­வை­யிட்­ட­னர்.

அது தொடர்­பான வலை­ய­மைப்­புக்­கள் எப்­படி இயங்­கு­வது என்­ப­தை­யும் ஆராய்ந்­த­னர்.  ஆய்­வு­க­ளின் பின்­னர் நேற்று மாலையே அதி­கா­ரி­கள் மூவ­ரும் கொழும்பு திரும்­பி­னார்­கள்.

பலாலி வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து தமி­ழ­கத்­துக்கு உட­ன­டி­யாக வானூர்­திச் சேவை­களை ஆரம்­பிப்­ப­தற்கு இணக்­கம் காணப்­பட்­டி­ருந்­தது.

அதற்கு அமை­வாக, ஆரம்­பக்­கட்ட அபி­வி­ருத்­திப் பணி­களை முன்­னெ­டுத்து வானூர்­திச் சேவையை ஆரம்­பித்த பின்­னர், பிராந்­திய வானூர்­தித் தள­மாக விரி­வா­கத் திட்­ட­மிட்­டுள்­ளது.

https://newuthayan.com/story/09/பலாலி-வானூர்தித்-தளத்தை-ஆராய்ந்தது-இந்தியக்-குழு.html

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இது ஒரு தூண்டில் அவ்வளவே . உண்மையில் வன்னியன் நீங்கள் கூறுவது போல் சென்னையும் மதுரையும் ? டிரான்சிட் செய்வதை அநேகர் விரும்புவார் ஆனால் உண்மை வேறு ஏற்கனவே திருவானந்தபுரம் ,கொச்சின் ,கோழிகோடு போன்ற இடங்களுக்கு அதிக தடவழியை கொண்ட அரபுலக விமான நிறுவனம்களுக்கு உபரி வருமானமாய் இருக்கும் ( சிலோனின் அரபுலக கடனுக்கு இந்த விட்டு கொடுப்பு ?)அதே நேரம் சென்னை போன்ற இடம்களுக்கு ரிக்கெட் விலை அதிகமாயும் இருக்கும் . 

அப்படியான ரூட்டை சிலோன் தமிழ் விரும்பாது போக நிறைய காரணம் உள்ளது  வன்னியன் .

ஜெர்மனில் இருந்து சென்னைக்கு நேரே போகும் விமான நிறுவனம் ஜெர்மனில் உள்ளதா குசா ?

இங்கு மருது போன்றவர்கள் எட்டிபார்க்க வைக்க என்ன வழி?

 

பாஞ், தமிழ்சிறி, குமாரசாமி, கவி அருணாசலம், நொச்சி மற்றும் பிற ஜெர்மனி வாழ் யாழ் உறவுகளுக்கு... Just a thought..! :)

 

image.jpg

 

சென்னை வந்தால், இடை தங்கும் நேரத்தில்(Transit) சுந்தரத் தமிழ் உச்சரிப்பைக் கேட்டு, சுற்றிப் பார்த்துவிட்டு, நேரடியாக யாழ்ப்பாணம் செல்லலாமில்லையா?
 
"ஃப்ராங்ஃபர்ட்" விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை(Non Stop) லுஃப்தான்சா(LH759) தினமும் இயக்குகிறதே?

  10 மணி நேர விமானப் பயணம்..!  Business-man-flying-economy-class-has-to

 

டிஸ்கி: ஆனால் சென்னை வரும்போது அவசியம் தலைக்கவசத்தோடு வரவேண்டும், சொல்லிப்போட்டன்..!

 

 

Edited by ராசவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.