Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”..... எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”.....

எம்.ஏ.சுமந்திரன்

 

 

 

Suma-athirvu.png?resize=800%2C547

“தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது. அதற்குச் சாத்தியமில்லை. ஆனால், தானே விரும்புகின்ற தனது நான்காவது தெரிவின்படி, கட்சி அரசியலைவிட்டு விலகி — இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து — தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க அவர் முன்வருவாரானால் – அவரோடு இணங்கி, அவரது (விக்கினேஸ்வரனின்) தலைமைக்குக் கீழ், மிகவும் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.” என வசந்தம் தொலைக்காட்சி, அதிர்வு நிகழ்ச்சியில் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  அத்துடன் காலியில் இடம்பெற்ற கருத்தரங்கில் சமஸ்டி பற்றி  தான் கூறிய சந்தர்ப்பம், கேட்கப்பட்ட கேள்வி, அந்தச் சூழல் என்பவற்றை புரிந்து கொள்ளாமல் ஒரு பகுதியை மட்டும் வைத்து விவாதங்கள் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளார்…

 

அவரது முழுமையான செவ்வியை இந்த இணைப்பில் பார்க்கலாம்.. கேட்கலாம்..

 

M.A. சுமந்திரன் (வசந்தம் தொலைக்காட்சி, அதிர்வு நிகழ்ச்சி, 05/09/2018)

http://globaltamilnews.net/2018/94539/

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் சந்தோசமாக செயற்பட தயார்! எம்.ஏ.சுமந்திரன்

 

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் சந்தோசமாக செயற்பட தயாராக இருக்கின்றோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய எம்.ஏ.சுமந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“காலியில் இடம்பெற்ற கருத்தரங்கில் சமஸ்டி பற்றி தான் கூறிய சந்தர்ப்பம், கேட்கப்பட்ட கேள்வி, அந்தச் சூழல் என்பவற்றை புரிந்து கொள்ளாமல் ஒரு பகுதியை மட்டும் வைத்து விவாதங்கள் தொடர்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது.

அதற்குச் சாத்தியமில்லை. எனவே, வடமாகாண முதலமைச்சர் தான் விரும்புகின்ற தனது நான்காவது தெரிவினை கையில் எடுக்க வேண்டும்.

கட்சி அரசியலைவிட்டு விலகி, இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க விக்னேஸ்வரன் முன்வருவாரானால், அவரோடு இணங்கி, அவரது தலைமைக்குக் கீழ், மிகவும் சந்தோசமாக செயற்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

வடமாகாண முதலமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைபில் இருந்து வெளியேறி, கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டால் அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்க முடியாது.

அது அவர் செய்கின்ற தவறு. இந்நிலையில், தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்காமல் இருக்க நாங்கள் தேர்தலில் மோதிக்கொள்ள கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்ட தொடரில் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், ”என்னிடம் தற்போது நான்கு மாற்றுவழிகள் தரப்பட்டுள்ளன.

இதில், நான்காவது தெரிவாக கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilwin.com/politics/01/192729?ref=home-top-trending

4 hours ago, நவீனன் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது. அதற்குச் சாத்தியமில்லை.

சுமந்திரன் போலவே காலம் காலமாக நக்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் இப்படித்தான் கருத்துக் கூறுவார்கள்!
 
தலைமை சரியில்லை என்றால் தலைமையை மாற்றுவதே ஒரேவழி! தலைமை சரியில்லை என்பதை 99% ஆனவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்!

மேலும் சுமந்திரன் போன்ற அரைவேக்காட்டு சட்டத்தரணிகளை, எட்டப்பப் புத்தியுள்ளவர்களை  எந்தக் காரணம் கொண்டும் தமிழர் தீர்வு விடயங்களில் இணைத்துக்கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, போல் said:

தலைமை சரியில்லை என்றால் தலைமையை மாற்றுவதே ஒரேவழி! தலைமை சரியில்லை என்பதை 99% ஆனவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்!

யாரை தலைவராக நீங்கள் முன்மொழிகிறீர்கள்?

சுமேந்திரன் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் சந்தோசமாக செயற்பட தயார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.

விக்னேஸ்வரனின் தலைமையை நீங்கள் ஏற்க தயாரா?

18 hours ago, Jude said:

யாரை தலைவராக நீங்கள் முன்மொழிகிறீர்கள்?

விக்னேஸ்வரனின் தலைமையை நீங்கள் ஏற்க தயாரா?

இதைத் தெரிந்து கொள்வதால் உங்களுக்கு என்ன இலாபம்? கிடைக்கும் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, போல் said:

 என்ன இலாபம்? கிடைக்கும் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படுமா? 

 உங்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகரிக்குமா என்பதை றோ தான் சொல்ல வேண்டும். விக்னெஸ்வரனை ஆதரித்தால் உங்கள் வருமானம் கூடலாம்.
  இலங்கையில் பிரச்சினை  நீடிப்பது இந்தியாவுக்கு தேவை - உங்களுக்கு வருமானம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்,  
சுமந்திரன்....  வருகின்ற தேர்தலில் இருந்து அரசியலில் இருந்து விலகப்  போவாதாக,  
தெரிவித்து இருந்த செய்தியை, யாழ். களத்தில் வாசித்து சந்தோசம் அடைந்தேன்.
அப்படியானவர்.... என்னத்துக்கு,  தலைமை  விடயத்தில் அலட்டிக் கொள்கிறார்.

On 9/8/2018 at 9:15 AM, Jude said:

 உங்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகரிக்குமா என்பதை றோ தான் சொல்ல வேண்டும். விக்னெஸ்வரனை ஆதரித்தால் உங்கள் வருமானம் கூடலாம்.   இலங்கையில் பிரச்சினை  நீடிப்பது இந்தியாவுக்கு தேவை - உங்களுக்கு வருமானம்.

உங்களைப் போல மற்றவர்கள் மிகக்  கேவலமாக பிழைப்பு நடத்துவதில்லை என்பதை விளங்கிக்கொள்ளுவது  நல்லது! 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தெரிவு  செய்தும் கூட்டமைப்பு மிக முக்கிய பாத்திரத்தை ஏற்காமல் விக்கி போன்றவர்களை எதிர்பார்க்கிறோம் என்று எடுத்துக்கொள்ளலாமா??  இல்லை சுத்துமாத்து அப்புக்காத்து  நேரத்துக்கு ஏற்ப சுத்துவார்  என வழமை போல் எதிர்பார்க்கலாமா??

On 9/6/2018 at 10:28 PM, Jude said:

யாரை தலைவராக நீங்கள் முன்மொழிகிறீர்கள்?

சுமேந்திரன் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் சந்தோசமாக செயற்பட தயார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.

விக்னேஸ்வரனின் தலைமையை நீங்கள் ஏற்க தயாரா?

விக்கிக்கு எதிராக செயற்பட்டவர்களில்  சுமந்திரன் முதன்மையானவர் ஆவார். அதன் கருத்து சுத்துமாத்து சுமந்திரன் என்பது பொதுமக்களே புரியும் போது நீங்கள் எப்படி ஆகாசத்தில் இருந்து வழமை போல பூ மழைகள் ...................tw_tounge_xd:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

விக்கிக்கு எதிராக செயற்பட்டவர்களில்  சுமந்திரன் முதன்மையானவர் ஆவார். 

விக்னேஸ்வரனை வட-கிழக்கு அரசியலுக்கு வலிந்து கேட்டு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர் விக்னேஸ்வரனின் விருப்பத்துக்கு உரிய மாணாக்கருள் முக்கியமானவரான சுமேந்திரன். விக்னேஸ்வரனுக்கு எதிராக சுமேந்திரன் மாறியதற்கு இரண்டு காரணங்கள்:

  1. கனடாவில் சேர்க்கப்பட்ட பணத்தை இலங்கைக்கு எடுத்துவருமாறு அமேரிக்கா வந்த விக்னேஸ்வரனை சுமேந்திரன் கேட்டபோது விக்னேஸ்வரன் மறுத்து விட்டார். இது சட்டசிக்கலை தனக்கு உண்டாக்கும் என்பதனால் விக்னேஸ்வரன் மறுத்தார். ஆனால் விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆன  மாகாணசபை தேர்தலுக்கு சுமேந்திரன் கனடா வந்து இப்படியாக சட்டவிரோதம் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகவும்  பணத்தை சேர்த்து இலங்கைக்கு கொண்டு வந்து சேர்த்தவர். அதனால் சுமேந்திரனுக்கு விக்னேஸ்வரனில் பகைமை வந்து விட்டது.
  2. இலங்கைக்குள் ஒரு சாத்தியமான தீர்வு என்பதில் சுமேந்திரனும் விக்னேஸ்வரனும் முன்னர் ஒரே கருத்தை கொண்டு இருந்தனர். வட-கிழக்கின் சாதாரண மக்களுடனும், விடுதலைபுலிகளின் புலம்பெயர்ந்த முன்னாள் அரசியல்  தலைவர்களுடனும் விக்னேஸ்வரன் தொடர்புகளை ஏற்படுத்திய பின்னர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய உணர்வாளராகவும், நாட்டில் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்விலும் பார்க்க போர்க்குற்றங்கள், சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றிய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் மாறி விட்டார். ஆகவே விக்னேஸ்வரனை சுமேந்திரன் அரசியலுக்கு கொண்டு வந்த நோக்கம் பாதிக்கப் பட்டு விட்டது.
4 hours ago, nunavilan said:

அதன் கருத்து சுத்துமாத்து சுமந்திரன் என்பது பொதுமக்களே புரியும் போது நீங்கள் எப்படி ஆகாசத்தில் இருந்து வழமை போல பூ மழைகள் ...................tw_tounge_xd:

இலங்கை தமிழர் பிரச்சினை மிகவும் சிக்கலானது. எல்லோரும் விரும்பும் தீர்வு என்று ஒரு தீர்வு இதற்கு சாத்தியம் இல்லை. எல்லோருக்கும் தேவையான உரிமைகளுடன் கூடிய தீர்வு சாத்தியம் ஆனால் பொது மக்கள் அந்த தீர்வை பிரேரிக்கும் அளவுக்கு இது சுலபமான விடயம் அல்ல. அரச கட்டமைப்பு சட்டத்துறை சார்ந்த விடயம். ஆகவே சுமேந்திரன் போன்ற சட்டத்தரணிகளே அந்த துறை பற்றிய இந்த தீர்வில் சிறப்பாக முயற்சி செய்ய முடியும். விக்னேஸ்வரனும் நீதியரசராக இருந்தவர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பதிலேயே அவரது ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

சுமேந்திரன் கட்சி  அரசியலை விட்டு விலகும் நோக்கத்தையும் தெரிவித்து இருக்கிறார். விக்னேவரனும் அந்த நோக்கத்தை தெரிவித்து உள்ளதை சுமேந்திரன் வரவேற்று உள்ளதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 

சுமேந்திரனுக்கு எதிரான அபிப்பிராயங்கள் பெரும்பாலும் ஒரே இலங்கைக்குள் தீர்வு கிடைப்பதை விரும்பாத சக்திகளால் தமிழ் மக்களின் மீது திணிக்கப்படும் அபிப்ப்பிராயங்கள். இதனால்  பொதுமக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். பொதுமக்கள் தவறாக முடிவு எடுபப்து எமது அரசியல் வரலாற்றில் அதிகமானது. மீண்டும் மீண்டும் தீர்வை தராத அரசியல்வாதிகளை தெரிவு செய்வது முதல் தேர்தலை புறக்கணித்து மகிந்தவை பதவிக்கு கொண்டு வந்து விடுதலை போராட்டத்தை அழித்தது உட்பட, எமது மக்கள் தவறான முடிவுகளை எடுத்ததற்கு தாராளமாக ஆதாரங்கள் உள்ளன.

5 hours ago, போல் said:

உங்களைப் போல மற்றவர்கள் மிகக்  கேவலமாக பிழைப்பு நடத்துவதில்லை என்பதை விளங்கிக்கொள்ளுவது  நல்லது! 

உங்கள் பிழைப்பு எப்படி நடக்கிறது என்று நாம் தினம் தினம் தான் பார்க்கிறோமே? 

அழியும் மூன்றாம் உலக நாடான இலங்கையில் இருந்து கொண்டு இணையத்தில் றோவுக்கு தேவையானதை செய்யும் பிழைப்பு உங்களுக்கு மேலானதாக தெரியலாம், ஆனால் உங்கள் கருத்துகளை படிப்பவர்கள் உங்களை அறிவார்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/6/2018 at 3:09 PM, நவீனன் said:

“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”.....

எம்.ஏ.சுமந்திரன்

 

சுமந்திரன் ஐயா மிக முக்கியமான பாத்திரம் எண்டு இதைத்தான் சொல்லுறார் ....

à®à®³à¯à®³à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.