Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா கைவிடாதென்று நம்பியுள்ளனர் தமிழர்கள்! – மோடியிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

Featured Replies

மோடியை சந்தித்தது கரு ஜயசூரிய தலைமையிலான குழு 

 

 
 

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

karu.jpg

இந்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்தது.

இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

karu2.jpg

எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் இவர்கள், இந்தியாவின் அரசியல் தலைவர்களை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இந்திய பாராளுமன்றத்துக்கும் விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40084

  • தொடங்கியவர்

இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களை விரைவுபடுத்த சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இணக்கம்

 

SL-MPs-Modi-1-300x174.jpgசபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சிறிலங்காவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

புதுடெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவின் உதவியுடன் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும், அபிவிருத்தி, ஒத்துழைப்புத் திட்டங்களால் மக்களுக்கு கிடைத்துள்ள நன்மைகள் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டு நாடுகளினதும் பொருளாதாரங்கள் மற்றும் மக்களுக்கு நன்மையளிக்கும் இத்தகைய கூட்டு பொருளாதார திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தவும், சிறிலங்கா தரப்புக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவை வரவேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற தொடர்புகள் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளினதும், மாகாண மட்ட சட்டமன்றங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் புதிய முயற்சிகள்,  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையையும், மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

SL-MPs-Modi-1.jpgSL-MPs-Modi-2.jpg

http://www.puthinappalakai.net/2018/09/10/news/32814

  • தொடங்கியவர்

இந்தியா கைவிடாதென்று நம்பியுள்ளனர் தமிழர்கள்! – மோடியிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

 
 
SL-MPs-Modi-1-1.jpg
“வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். நீங்கள் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”
 
– இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.
 
இலங்கையில் இருந்து இந்தியா சென்றுள்ள அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு நேற்று இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தது. இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மோடியிடம் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
 
“போரால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்வதில் இந்தியா பெரும் உதவிகளை வழங்கி வருகின்றது. அதற்கு நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா அதிக அக்கறை செலுத்த வேண்டும். இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 
புதிய அரசமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுகளுடன் அந்தத் தீர்வு அமைய வேண்டும்.
 
இலங்கையின் தற்போதைய ஆட்சியில் நாம் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுகின்ற போதிலும் அவற்றின் வேகம் போதாமல் இருக்கின்றது” – என்றார்.
 
இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடி,
 
“எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடைனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றித் தீர்வைக் காணவேண்டும். இதனைக் கடந்த வருடம் மே மாதம் நான் இலங்கை வந்தபோதும் ஜனாதிபதி, பிரதமரிடம் எடுத்துக் கூறியிருந்தேன்” – என்றார்.

http://www.newsuthanthiran.com/2018/09/11/இந்தியா-கைவிடாதென்று-நம/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு தமிழர்களேயே.... மோடி, பழி  வாங்குகின்றார்.
இதற்குள்... ஈழத்தமிழர்களை காப்பாற்றப் போகின்றாராம்.

முதலில்... சம்பந்தன், ஈழத்தமிழர்களுக்கு செய்ய வேண்டியதை, ஒழுங்காக செய்திருந்தாலே,
டில்லிக்கு  காவடி எடுக்க வேண்டிய, அவசியம் ஏற்பட்டிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு .. கேட்ட பாரு .. நீ எங்கயோ போயிடப்பா .. வடிவேலு மொமண்ட் ?

  • தொடங்கியவர்

மோடியிடம் சம்பந்தனும், டக்ளசும் முன்வைத்த கோரிக்கைகள்

 

modi-sampanthan-300x200.jpgசிறுபான்மையினருக்கு அதிகாரங்களை உடனடியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதன் அவசியம் உள்ளிட்ட, இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், இந்தியப் பிரதமருடன் நேற்று கலந்துரையாடப்பட்டதாக ஐஎஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான எட்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்றுமுன்தினம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டது.

இந்தக் குழுவினர் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய அரசுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதி மக்களுக்கு அதிகாரங்களை பகிர்வதற்கு, 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கொழும்பை, இந்தியா இணங்க வைக்க வேண்டும் என்று, சிறிலங்கா குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோரியுள்ளனர்.

modi-sampanthan.jpg

இந்தச் சந்திப்பின் போது, இரா.சம்பந்தனும், டக்ளஸ் தேவானந்தாவும், 1987ஆம் ஆண்டின் இந்திய- சிறிலங்கா உடன்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன், வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், தமிழ்ப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மேலும் ஒரு இலட்சம் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் தாம் கோரிக்கை விடுத்ததாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு இந்திய உதவி வழங்க வேண்டும் என்றும், பிராந்திய இணைப்பை ஏற்படுத்தும் வகையில் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தாம் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/09/11/news/32838

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நவீனன் said:

எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடைனேயே இருப்போம்

ஐ லைட்டே இதான் ..?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:
வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். நீங்கள் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”
 
– இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

இதற்குப் பேர் ராஜதந்திரம் இல்லை!

பிச்சை எடுப்பு.....!

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள்.....?

*****

சொல்ல மறந்த மிச்ச கதை.

வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். தெற்கு சீனாவை நம்புகிறது....

உண்மையில் தெற்கு சீனாவை நம்புகிறது....... முழு நாடுமே இந்தியாவை நம்ப மறுக்கிறது...

  • தொடங்கியவர்

இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனோ

 

mano-720x450.jpg

தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக நட்பு நாடு என்ற ரீதியில் இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்திய விஜயத்தின் போது இலங்கை நாடாளுமன்றக் குழுவினர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்துள்ளனர்.

இதன்போது, மலையகத்திற்கான இந்திய வீடமைப்பு திட்டங்களை விரிவுப்படுத்தவும், விரைவுபடுத்தப்படவும் என இந்திய அரச தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வி, கலாசார, சமூக விகாரங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இந்திய தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இலங்கை-அரசாங்கத்திற்கு-இ/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

இந்தியா கைவிடாதென்று நம்பியுள்ளனர் தமிழர்கள்! – மோடியிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

 

உங்களால் முடியாவிட்டால் தாங்கள் இறங்கிறம் என்று வாசலில் வந்து குந்தியிட்டான் சைனாக்காரன் என்று ஒரு சொல்லு சொல்லியிருந்தால் காணும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.