Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார்.

எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன்.

திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான் கதவைத் தட்டினேன். அவர் திறக்கவில்லை.

பயந்துபோன நான் கதவை மோதித் திறந்தேன். அங்கே அவர் வேறொரு போனில் மெசேஜ் டைப் செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

அதைப் பிடுங்கிப் பார்த்தபோது, "எனக்கு போன் செய்யவேண்டாம். என் போன் என் அண்ணனிடம் இருக்கிறது" என்ற குறுந்தகவல் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டிருந்த அந்த நபருக்கு சென்றிருந்தது.

நான் அதிர்ந்துபோனேன். ஆனால், நான் வாய் திறக்கவில்லை. நான் ஏதாவது பேசப் போய் அவள் மீண்டும் தாழிட்டுக்கொண்டாலோ, வேறு ஏதாவது செய்துகொண்டாலோ என்ன செய்வது என்று சும்மா இருந்துவிட்டேன்.

மறுநாள் காலை என்னுடைய இரண்டு நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னுடைய அண்ணன் போன்றவர். முன்பே எங்களுக்குள் சண்டை வந்து பிரிந்திருந்தபோது பேசி எங்களை மீண்டும் சேர்த்து வைத்தவர்.

என்னோடு நல்லவிதமாக சேர்ந்து வாழும்படியும், சிறிது நாள் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் என் மனைவியிடம் இருவரும் பேசினர்.

ஆனால், இந்த முறை என் மனைவி பிடிவாதமாக இருந்தார். "இந்த" வாழ்க்கையை இனி வாழ முடியாது என்று சொல்லிவிட்டார்.

ஆனால் முன்பு போல அல்லாமல், இந்த முறை எங்கள் மூன்று வயது மகளை என்னிடமே விட்டுவிட்டுச் சென்றார். பிறகு விவாகரத்து விண்ணப்பித்து விவாகரத்தும் பெற்றார்.

நீதிமன்றத்தில்கூட "குழந்தையை அவரது தந்தை நன்கு கவனித்துக் கொள்வார். எனவே அவரிடமே அவள் இருக்கட்டும்," என்று நீதிபதி முன்பு கூறினார்.

என் மனம் உடைந்துபோனது. ஆனால், ஒரே மகிழ்ச்சி எங்கள் மகள் என்னோடு.

பிரிந்து செல்லுதல் - சித்தரிப்பு படம்

எங்களுடையது காதல் திருமணம். கல்லூரியில் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தபோது காதலித்தோம். அலை பாயுதே படத்தில் வருவதைப் போல, யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அமைதியாக இருந்தோம். கடைசியாக இருவரின் வீட்டிலும் சொன்னபோது பூகம்பம் வெடித்தது.

ஏராளமான பிரச்சனைகள். கடைசியாக இரு வீட்டிலும் ஒப்புக்கொண்டு அவர்கள் முறைப்படி கோயிலில் திருமணம் செய்துவைத்தனர்.

சிறிது காலம் என் பெற்றோருடன் சொந்த வீட்டில் வாழ்ந்தோம். எனக்கும் அப்பாவுக்கும் சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்து தனியாக வாடகை வீட்டில் நானும் மனைவியும் மட்டும் வாழ்ந்தோம்.

சொந்தமாக வீடுகட்டிய பிறகே குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார் என் மனைவி.

திருமணத்துக்குப் பின் மனைவி ஐ.டி. துறையில் பட்டமேற்படிப்பு படித்திருந்தார். எனவே நாங்கள் இருவரும் சென்னையில் குடியேறவேண்டும் என்று வற்புறுத்தினார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேண்டாம் என்றேன். இதனால் கோபித்துக்கொண்டு அம்மாவீட்டுக்குச் சென்று சிறிதுகாலம் இருந்தார். பிறகு பிரச்சனையை பேசித் தீர்த்தோம். அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

குழந்தை இல்லாததால் எங்களுக்குள் பிரச்சனை வருவதாக நினைத்தோம். எனவே குழந்தை பெற்றுக்கொண்டோம்.

குழந்தை பிறந்து மூன்று மாதமானபோது, என் மனைவிக்கு சென்னைக்கு குடி பெயரவேண்டும் என்ற ஆசை மீண்டும் வந்தது. அதையே வலியுறுத்தினார். நான் மறுத்தேன். இந்த முறை அவர் தனியாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்னை சென்றுவிட்டார். நான் பார்க்கச் சென்றதையும் அவர் விரும்பவில்லை. தம் விருப்பதை மீறி பார்க்க வருவதாக போலீசில் புகார் கொடுத்தார்.

நானும் அவரோடு சென்னைக்கு வரவில்லை என்று கோபம் என நினைத்தேன். பார்க்கப் போவதையும் தவிர்த்தேன்.

செல்போனை பறித்தல் - சித்தரிப்பு படம்

மனைவிக்கு சென்னையில் அவர் நினைத்ததைப் போல வேலை கிடைக்கவில்லை. திரும்பி ஊருக்கு வந்தும் தனியாகவே இருந்தார். ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்தார். குழந்தை ஊரிலேயே ஒரு பள்ளியில் படித்தாள். ஆனால், குழந்தையை பார்க்கப் போவது, மனைவியை கோப்படுத்தி மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பை கெடுத்துவிடும் என்று பயந்து நான் குழந்தையைக்கூட போய் பார்க்கவில்லை. இப்படி ஒன்றரை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். இந்நிலையில், அண்ணனைப் போன்ற என் நண்பர் மனைவியிடம் தூது சென்று எங்களை சேர்த்துவைத்தார்.

மீண்டும் வாழ்க்கை நன்றாகப் போவதாகவே தெரிந்தது. அப்போது என் மனைவிக்கு வேறொரு ஆணிடம் இருந்து அழைப்பு வந்தது. என்ன என்று விசாரித்தேன். பிரிந்திருந்த காலத்தில் அவரது அறிமுகம் ஏற்பட்டது என்றும். சட்டென துண்டித்தால் பிரச்சனை ஆகும் எனவே, மெதுவாக துண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்தபடி பேசினோம். "கடந்த காலத்தில் எது நடந்திருந்தாலும் பரவாயில்லை. பிரிந்திருந்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களால் எந்த பிரச்சனை என்றாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ அதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அத்தொடர்பை துண்டி" என்று சொன்னேன். அவர் ஏற்றுக் கொண்டார்.

ஆனால், அதன் பிறகும் ஒரு நாள் அதே நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆத்திரத்தில் நான் மனைவியின் போனை பறித்து வீசி உடைத்துவிட்டேன்.

அதன் பிறகும், இரவில் போன் வந்துகொண்டே இருந்தது. அவரையே பல முறை பேசச் சொன்னேன். பேசாததால் நான் எடுத்து பேசப்போனேன். பிறகு என்னென்னவோ நடந்துவிட்டது.

இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. அவர் பிரிந்து சென்று விவாகரத்து பெற்று வேறொருவரை திருமணமும் செய்துகொண்டார்.

நாங்கள் பிரிந்திருந்த காலத்தில் மீண்டும் மனைவியுடனும், குழந்தையுடனும் சேர்ந்து வாழவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது அதில் ஒன்று மட்டும் நடந்துவிட்டது. குழந்தையோடு மட்டும் வாழ்கிறேன். மற்றொன்று நடக்கவில்லை. மனைவி திரும்ப வந்து சேரவில்லை. எங்கள் வீட்டில் நான், அப்பா, அம்மா, தங்கை, தங்கையின் கணவர் என்று அனைவரும் மகளைப் பார்த்துக் கொள்கிறோம்.

விவாகரத்து பெற்ற காலத்தில் நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். அதில் இருந்து மீண்டு வர அதிக காலம் பிடித்தது. அந்தக் காலத்தில் என் மகள்தான் எனக்கு ஆறுதல் தந்து தேற்றினாள்.

பிறகு எனக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு, உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போதும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டது என் மகள்தான். அம்மாவுக்கு சர்க்கரை நோய். எப்போதும் அவருக்கு மாத்திரை எடுத்துத் தருவதும், இன்சுலின் ஊசி போடுவதும் 13 வயதான என் மகள்தான். அவளுக்கு நான் ஆறுதலாக இருப்பதை விட எங்களுக்கு அவள் ஆறுதலாக இருப்பதுதான் அதிகம்.

யாராவது என்னை விமர்சித்தாலும் எனக்காக பரிந்து பேசுவது மகள்தான்.

என்னை மனைவி விட்டுப் பிரிந்த நாளில் இருந்து ஒரு முறைகூட அம்மாவை அவள் கேட்டதும் இல்லை. அது பற்றிப் பேசியதும் இல்லை.

தாய் கவனித்து கொள்வதைபோல மகளை கவனிககும் தந்தை - சித்தரிப்பு படம்

சிறு வயதில் இருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்வது பாப்பாவுக்கு பிடிக்கும். எனவே அது போன்ற இடங்களுக்கு நிறைய அழைத்துச் சென்று விளக்குவேன். அது போன்ற பயணங்களின்போது யாராவது அவளிடம் அவள் தாயைப் பற்றி கேட்டால், அமைதியாக இருப்பாள். ஒன்று கேட்டவர் அந்தக் கேள்வியைக் கடந்து செல்லவேண்டும். அல்லது நான் தலையிட்டு சமாளிக்கவேண்டும்.

அம்மாவைப் பற்றி அவள் ஏதும் சொல்லாவிட்டாலும், அந்த மௌனம் புரிந்துகொள்ள முடியாததுதான். என் மனைவி உடன் இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

என்னை மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி சொல்கிறார்கள். எங்களுடையது காதல் திருமணம் என்பதால், பிரிவு, விவாகரத்து இதையெல்லாம் கடந்துவர எனக்கு நீண்டகாலம் பிடித்தது.

இப்போது என் மகளுக்கு 13 வயது. அவள் என்னோடு தனியாக அடிக்கடி பயணிப்பது எங்கள் பெற்றோருக்கு சங்கடமாக இருக்கிறது. அப்படி பயணிக்கும்போது அவள் பூப்பெய்திவிட்டால், என்னால் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறார்கள்.

அவளுக்கு கல்பனா சாவ்லா போல ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்று ஆசை. நன்றாகவும் படிக்கறாள். நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டால் இப்போதுபோல என் மகளோடு அதிக நேரம் செலவிட முடியாது என்று அச்சம் எனக்கு.

மீண்டும் திருமணம் செய்வது என்று நான் முடிவெடுத்தால் அதற்கு பாப்பா தடை சொல்லப்போவதில்லை. அது தவிர, இரண்டாவது திருமணம் செய்வதில் பொதுவாக முதல் திருமணத்தின் ஆண் குழந்தைகள்தான் பெரிய பிரச்சனையாக இருப்பார்கள். பெண் குழந்தைகளால் பெரிய பிரச்சனைகள் இருக்காது.

ஆனால், வேறொரு பெண் என் வாழ்க்கையில் வந்தால் பிரச்சனை வரலாம். தவறான புரிதல் வரலாம். வருகிற பெண் சரியாகவே மகளைக் கண்டித்தாலும், எனக்கு அது வேறுவிதமாக தோன்றலாம்.

அதனால், மீண்டும் கணவன் மனைவி பிரச்சனை வரலாம். அது போன்று இன்னுமொரு பிரச்சனையை சந்திக்க நான் தயாரில்லை. அதனால்தான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்க முடிவெடுத்தேன்.

இப்போது என் வாழ்க்கையின் மையப்புள்ளி என் செல்ல மகள் மட்டுமே.

(வட தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு நடுத்தர வயது ஆணுடன் நிகழ்த்திய உரையாடலின் அடிப்படையில் இதை எழுதியவர் பிபிசி தமிழ் செய்தியாளர் அ.தா.பாலசுப்ரமணியன். ஆண்கள் சந்திக்கும் பிரத்தியேக சிக்கல்கள் தொடர்பான இந்த #HisChoice சிறப்புத் தொடரைத் தயாரிப்பவர் பிபிசி செய்தியாளர் சுசீலா சிங்.)

https://www.bbc.com/tamil/india-45849592

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்த பிள்ளையை வைத்துக்கொண்டு மறுமணம் செய்வது வேலில போற ஓணானை பிடித்து வேட்டிக்குள்ள விட்டது போல் ஆகிவிடும். அதுதான் ஒருமுறை பட்டு தெளிந்தாச்சே பிறகென்ன வேண்டிக்கிடக்கு......!  tw_blush:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய௠à®à®µà®©à®¿à®¤à¯à®¤à¯ à®à¯à®³à¯à®µà®¤à¯à®ªà¯à®² à®®à®à®³à¯ à®à®µà®©à®¿à®à®à¯à®®à¯ தநà¯à®¤à¯ - à®à®¿à®¤à¯à®¤à®°à®¿à®ªà¯à®ªà¯ பà®à®®à¯

 

இதெல்லாம் தகப்பன்களால் மட்டுமே முடியும். :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2018 at 3:58 AM, குமாரசாமி said:

தாய௠à®à®µà®©à®¿à®¤à¯à®¤à¯ à®à¯à®³à¯à®µà®¤à¯à®ªà¯à®² à®®à®à®³à¯ à®à®µà®©à®¿à®à®à¯à®®à¯ தநà¯à®¤à¯ - à®à®¿à®¤à¯à®¤à®°à®¿à®ªà¯à®ªà¯ பà®à®®à¯

 

இதெல்லாம் தகப்பன்களால் மட்டுமே முடியும். :grin:

 

இப்படிச் சொல்லும்போது நம் மனதுக்கு இதமாகத்தான் இருக்கிறது. ஆனால் பொதுவாக அப்படிச் சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன், தோழர். மேற்கண்ட வாழ்க்கையில் தந்தை நம் மனதைத் தொடுகிறார். தற்காலச் சூழலில் இந்திய - இலங்கைச் சமூகங்களில் தாய்க்குத்தான் பெரும்பாலும் இந்நிலை ஏற்படுகிறது. வருங்காலம் எப்படியோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2018 at 12:28 AM, குமாரசாமி said:

தாய௠à®à®µà®©à®¿à®¤à¯à®¤à¯ à®à¯à®³à¯à®µà®¤à¯à®ªà¯à®² à®®à®à®³à¯ à®à®µà®©à®¿à®à®à¯à®®à¯ தநà¯à®¤à¯ - à®à®¿à®¤à¯à®¤à®°à®¿à®ªà¯à®ªà¯ பà®à®®à¯

 

இதெல்லாம் தகப்பன்களால் மட்டுமே முடியும். :grin:

இணைத்த காணொலி காணாமல் போனதால் மீள்பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகள்கள் அப்பாவின் மீது கொள்ளும் அன்பு அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப்  போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம்   அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது .   மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.   முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.   ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.   அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.   சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.   மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.   'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.   பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.   இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர்.    நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.   பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.   (தொடரும்........)
    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.