Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் போர்க் கப்பலைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யோர்தான் நாட்டுக்குச் சொந்தமான போர்க் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பான முல்லைத்தீவில் கரை ஒதுக்கியது.

பின்னர் இந்த கப்பல் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்த கப்பலை பார்வையிடுவதற்காக அதிகளவான சுற்றுலாப் பணிகள் முல்லைத்தீவுநோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் போர்க்கப்பலை பொது மக்கள் பார்வையிடுவதற்கு தற்போது இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

https://newuthayan.com/story/16/விடுதலைப்-புலிகளின்-கப்பலை-பார்வையிட-இராணுவத்தினர்-தடை.html

2 hours ago, பிழம்பு said:

விடுதலைப் புலிகளின் போர்க் கப்பலைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

மொத்தத்தில உசுப்பேத்தியே வாழ பழகிட்டீங்க சார் - இது விடுதலைப் புலிகளின் போர்க் கப்பல் இல்லை 

2 hours ago, பிழம்பு said:

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யோர்தான் நாட்டுக்குச் சொந்தமான போர்க் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பான முல்லைத்தீவில் கரை ஒதுக்கியது.

அடுத்தது இது யோர்தான் நாட்டுக்குச் சொந்தமான போர்க் கப்பலும் இல்லை - சாதாரண சரக்கு கப்பல் 

அப்புறமா இந்த கப்பல் எல்லாம் வெட்டி வித்தாச்சு வெறும் எலும்புகூடுதான் மிச்சம்.

இனிமேலாவது செய்திகளை இணைக்கும்போது அதை வாசித்து அது உண்மையா என்று பகுத்தறிந்து இணைக்கவும்.

 

நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஜீவன் சிவா said:

மொத்தத்தில உசுப்பேத்தியே வாழ பழகிட்டீங்க சார் - இது விடுதலைப் புலிகளின் போர்க் கப்பல் இல்லை 

அடுத்தது இது யோர்தான் நாட்டுக்குச் சொந்தமான போர்க் கப்பலும் இல்லை - சாதாரண சரக்கு கப்பல் 

அப்புறமா இந்த கப்பல் எல்லாம் வெட்டி வித்தாச்சு வெறும் எலும்புகூடுதான் மிச்சம்.

இனிமேலாவது செய்திகளை இணைக்கும்போது அதை வாசித்து அது உண்மையா என்று பகுத்தறிந்து இணைக்கவும்.

 

நன்றி 

இச் செய்தி வந்தது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் இணைய பதிப்பில். அவர்கள் ஒரு வேளை ஊரில் இருப்பவர்களை உசுப்பேத்துகின்றனர் போலும். அல்லது ஊரில் இருப்பவர்களும் விடுதலை புலிகள் என்று தலைப்பில் போட்டால் தான் விரும்பி வாசிக்கும் அளவுக்கு அவர்கள் இன்னும் புலிகள் மீது விசுவாசமாக இருக்கின்றார்கள் போலும்.

அத்துடன் செய்திகளை கொண்டு வந்து ஓட்டும் போது அது உண்மையா பொய்யா என்று பகுத்தறிந்து பார்த்து ஓட்டுவது இலகுவான காரியம் இல்லை. ஓரளவுக்காயினும் நம்பத்தகுந்த ஊடங்களில்  செய்தி வரும் போது அதை அப்படியே ஓட்டுகின்றோம். அப்படி ஓட்டும் செய்திகளில் தவறு இருப்பின் உங்களை போன்ற தெரிந்தவர்கள் தகுந்த விளக்கம் கொடுத்து உணமையை எடுத்துரையுங்கள்.

அத்துடன் நேரம் கிடைக்குமாயின் செய்திகளை பாகுபாய்ந்து, சரி பிழை பார்த்து நீங்களும் இங்கு ஓட்டலாம்.

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இச் செய்தி வந்தது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் இணைய பதிப்பில். அவர்கள் ஒரு வேளை ஊரில் இருப்பவர்களை உசுப்பேத்துகின்றனர் போலும். அல்லது ஊரில் இருப்பவர்களும் விடுதலை புலிகள் என்று தலைப்பில் போட்டால் தான் விரும்பி வாசிக்கும் அளவுக்கு அவர்கள் இன்னும் புலிகள் மீது விசுவாசமாக இருக்கின்றார்கள் போலும்.

அத்துடன் செய்திகளை கொண்டு வந்து ஓட்டும் போது அது உண்மையா பொய்யா என்று பகுத்தறிந்து பார்த்து ஓட்டுவது இலகுவான காரியம் இல்லை. ஓரளவுக்காயினும் நம்பத்தகுந்த ஊடங்களில்  செய்தி வரும் போது அதை அப்படியே ஓட்டுகின்றோம். அப்படி ஓட்டும் செய்திகளில் தவறு இருப்பின் உங்களை போன்ற தெரிந்தவர்கள் தகுந்த விளக்கம் கொடுத்து உணமையை எடுத்துரையுங்கள்.

அத்துடன் நேரம் கிடைக்குமாயின் செய்திகளை பாகுபாய்ந்து, சரி பிழை பார்த்து நீங்களும் இங்கு ஓட்டலாம்.

 

நன்றி

2. தலைப்பு
யாழ் கருத்துக்களத்தில் ஆரம்பிக்கப்படும் தலைப்புகள் பற்றிய பொதுவான விதிகள்:

  • ஆரம்பிக்கப்படும் திரிகளின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும்.
  • தலைப்புகள் சுருக்கமானதாகவும், பொருள்பொதிந்ததாகவும் எழுதப்படல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தைப் பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது.
  • வன்முறைகளையும், பாலியல் உணர்வுகளையும் தூண்டும் வகையிலான தலைப்புகள் இடப்படல் கூடாது.
  • பின்வரும் முறையில் தலைப்புகள் எழுதப்படல் ஆகாது:
    • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
    • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
    • குறியீடுகள்: (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , .)

இந்தியாவின் காக்கிநாடாவில் இருந்து ஜோடான் நாட்டுக்கு சென்றுகொண்டிருந்த அரிசி கப்பல் இயந்திர கோளாறால் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒதுங்கியது. அதிலிருந்த கணனி மற்றும் தொழினுட்ப கருவிகள் கடற்புலிகளாலும் அரிசி நிதி துறையாலும் கைப்பற்றப்பட்டன. புலனாய்வுத்துறையின் ஆரம்ப விசாரணைகளுக்கு பிறகு அரசியல்துறையூடாக அனைத்து கப்பல் பணியாளர்களும் ஜோர்டான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

முதலில் விடுதலைப்புலிகளின் பாவனைக்கு என்று ஒதுக்கிய அரிசி மிதமிஞ்சவே பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது. அது உள்ளூர் அரிசி உற்பத்தியை பாதித்து விவசாயிகள் விசனத்துக்குளாகினர்.

அந்த அரிசி, மாட்டுக்கு கரைச்சு வைக்கும் அளவுக்கு மலிந்துபோனது. 

அது தவிர அந்த கப்பல் கிபிர் தாக்குதலுக்கு உள்ளாககூடும் என்று எண்ணியமையால் கப்பலை வெட்டி பொதுமக்களின் உதவியுடன் அரிசி இறக்கும் பணி இடம்பெற்றது. ஊதியமாக அரிசியே வழங்கப்பட்டது.

குறிப்பு:

அந்த இடம் இறுதியுத்தகாலத்தில் “கப்பலடி” என்று அழைக்கப்பட்டது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஜீவன் சிவா said:

மொத்தத்தில உசுப்பேத்தியே வாழ பழகிட்டீங்க சார் - இது விடுதலைப் புலிகளின் போர்க் கப்பல் இல்லை 

அடுத்தது இது யோர்தான் நாட்டுக்குச் சொந்தமான போர்க் கப்பலும் இல்லை - சாதாரண சரக்கு கப்பல் 

அப்புறமா இந்த கப்பல் எல்லாம் வெட்டி வித்தாச்சு வெறும் எலும்புகூடுதான் மிச்சம்.

இனிமேலாவது செய்திகளை இணைக்கும்போது அதை வாசித்து அது உண்மையா என்று பகுத்தறிந்து இணைக்கவும்.

 

நன்றி 

இனிவரும் காலங்களில் செய்திகளை நேருக்கு நேர் பார்த்த பின்னர்தான் இங்கு இணைக்க வேண்டும் என்று சொல்லாத வரைக்கும் சந்தோசம் tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,செய்திகளை பார்த்து இணைக்கும் படி நிர்வாகம் அறிவித்துப் போட்டு ஒரு மட்டுவே? இப்படி செய்திகளை பார்க்காமல் இணைத்தால் மற்றவர் எப்படி ஒழுங்காக  இணைப்பர்?

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.