Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த படகு-12 சிங்களர்கள் கைது

Featured Replies

இந்திய கடற்படைத் தளபதி விடுதலைப் புலிகளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் - பழ. நெடுமாறன்

இந்திய கடற்படைத் தளபதி விடுதலைப் புலிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை விடுதலைப் புலிகளே சுட்டுக்கொன்றுவிட்டு, சிறீலங்கா கடற்படை மீது பழி சுமத்தி வருவதாக, இந்திய கடற்படைத் தளபதி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு கடற்றொழிலாளர்களைச் சுட்டுக் கொன்ற 12 சிங்களவர்களை இந்திய கடலோரக் கடற் படையினர் கைது செய்திருப்பதன் மூலம் உண்மை தெரிய வந்திருப்பதால், பழ. நெடுமாறன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள சிங்களவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் எனவும், சுட்டுக் கொல்லப்பட்ட 5 கன்னியாகுமரி கடற்றொழிலாளர்களுக்கும் சிறீலங்கா அரசு நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

pathivu

யாழ்களத்தின் தமிழக உறவுகளே:

மரியா படகுக் கொலைகாரக் காடையர்களின் கைது, பொலிஸ் தரப்பு விசாரணைகள் பற்றிய விபரங்களையும் அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் நாடகங்கள் பற்றியும் உங்கள் உள்ளுர் ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை யாழ் களத்தில் உடனுக்குடன் பதிவு செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சன் தொலைக்காட்சி தூத்துக்குடி பொலீஸை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில் கைது செய்யப்பட்டவர்களின் 6 பேர் தமிழக மீனவர்கள் என்றும் மிகுதி 6 பேர் இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்றும் தெரிவித்ததுடன் மீனவர்கள் தவறுதலாகவே இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தது..!

இதில் எது உல்டா எது உண்மை..????????! :blink::lol:<_<

பீ பீ சி தமிழோசை இச்செய்தியை சொல்லவில்லை கவனித்தீர்களா?

ஏதோ சதி நடக்கிறது

இந்த இரண்டு ஊடகங்களையும் பார்க்கும்/ கேக்கும் எம்மவர்களுக்கு -இவ்வூடகங்கள் நமக்குத் தேவையா?. இவை சிங்கள அரசுச் செய்திகளைத்தான் வெளியிடுகிறது. அவர்களுக்கு தமிழன் என்றால் கவலையில்லை

விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தைமட்டுமல்ல சிங்கள பொதுமக்களையும் விலைக்கு வேண்டிவிட்டார்களா?அப்படியாயின் மொத்த இலங்கையும் விடுதலைப்புலிகள் வசமா?சிந்திக்கவேண்டியவிடயம் தான்,விடுதலைப்புலிகளின் பயத்தினால் தான் ச்.சீ முழு இலங்கையுமா?வெட்கக்கேடு!

இப்படி தொடர்ந்து தமிழக மீனவர்களை கொலை செய்தால் தான் இந்திய அரசாங்கம் கூட்டு ரோந்துக்கு வருவார்கள் என்று சிங்களவனின் கள்ள கபட நாடகம் அம்பலப்பட்டு விட்டது. நல்லது இனியாவது தமிழக அரசு விழித்து கொள்ளவேண்டும்

சிறீ லங்கா கடற்படையினரே அல்லது கடற்படை உளவாளிகளே படகில் சென்றிருக்ககூடும். அல்லது சிறீ லங்கா சிங்கள காடையர் பாதாள உலக கோஸ்டியாகாவும் இது இருக்கலாம்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சன் தொலைக்காட்சி தூத்துக்குடி பொலீஸை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில் கைது செய்யப்பட்டவர்களின் 6 பேர் தமிழக மீனவர்கள் என்றும் மிகுதி 6 பேர் இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்றும் தெரிவித்ததுடன் மீனவர்கள் தவறுதலாகவே இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தது..!

இதில் எது உல்டா எது உண்மை..????????! :blink::lol:<_<

ஆ, இதில நீர் சண்டீவியை (சந்தா வாங்கி) விழுந்து விழுந்து பார்ப்பது உண்மை, இங்க வந்து சவுண்ட் வுடுறது உல்டா... :angry: :angry: :angry:

கைது செய்யப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டிருப்பின் அவர்கள் நிச்சயமாக அரசபடையைச் சேர்ந்தவர்களாகத்தானிருக்க வேண்டும். இனி நடைபெறப்போகும் காரியங்கள் அவற்றை மறைக்கும் நிகழ்வாகத்தானிருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மை புரியும். ஆக இலங்கை இந்திய நல்லுறவை குலைப்பதற்கு விடுதலைப்புலிகளிடம் கையூட்டுப் பெற்ற சிங்களவர்கள் இவர்கள் என அறிக்கை வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

''இந்த இரண்டு ஊடகங்களையும் பார்க்கும்ஃ கேக்கும் எம்மவர்களுக்கு -இவ்வூடகங்கள் நமக்குத் தேவையா?. இவை சிங்கள அரசுச் செய்திகளைத்தான் வெளியிடுகிறது.

அவர்களுக்கு தமிழன் என்றால் கவலையில்லை""

கந்தப்பு அண்ணே கனடாவில் தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுக்கும் வானொலியான

சீ ரீ ஆர் தனது ஒலிபரப்பில் பீ பீ சீ நிகழ்ச்சியையும் ஒலிபரப்பு செய்கின்றது

உங்களைப்போலவே ஒருசிலர் அதனை நிறுத்தும்படி சீ ரீ ஆரை கேட்டனர் நேயர்கள் சிலர்அதனை ஆமோதிக்கவில்லை ஒருநாளில் இரண்டுதடவைகள் ஒலிபரப்பியதை நிறுத்தி தற்பொழுது ஒருதடவைமடடும் ஒலிபரப்புகிறார்கள்

நமக்கு ஆகாதவர்கள்என்றாலும் அவர்களது மீடியாவை கேட்டால்தானே அவர்களது உண்மைமுகம்தெரியும்

அத்துடன் சந்தாகட்டி எந்த வருவாயையும் நாங்கள் அவர்களுக்கு கொடுக்கவில்லை

சந்தா கட்டியோ அல்லது பணம் கொடுத்து ரேடியோ வாங்கியோ அவர்களுக்கு வருவாய் கொடுக்காதவரை தப்பில்லை எனநினைக்கின்றேன்

சன் தொலைக்காட்சி தூத்துக்குடி பொலீஸை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில் கைது செய்யப்பட்டவர்களின் 6 பேர் தமிழக மீனவர்கள் என்றும் மிகுதி 6 பேர் இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்றும் தெரிவித்ததுடன் மீனவர்கள் தவறுதலாகவே இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தது..!

இதில் எது உல்டா எது உண்மை..????????!

ஆ, இதில நீர் சண்டீவியை (சந்தா வாங்கி) விழுந்து விழுந்து பார்ப்பது உண்மை, இங்க வந்து சவுண்ட் வுடுறது உல்டா... :angry: :angry: :angry:

சரியாக சொன்னீர்கள் டங். ஆனால் பொப்கோன் கொறித்துக்கொண்டு சன் தொல்லைக்காட்சி பார்க்கிறதை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். .:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

சன் தொலைக்காட்சி செய்தி சரி என்று தினத்தந்தியின் செய்தியினை வாசித்தால் புரியும். இந்திய மீனவர்களைக் கொலை செய்த 'மரியா' படகும், இந்தப்படகும் வேறானவை. வாசிக்க

http://www.dailythanthi.com/article.asp?Ne...sdate=4/13/2007

தினமணியில் வந்த செய்தி

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...ZLm&Topic=0

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை என்பது நெருப்பு!! அதை பஞ்சு போட்டு அணைக்க முற்பட்டால் இன்னும் கொழுந்து விட்டு எரியும்.

பிடிபட்டவர்கள் சிங்களவர்கள் என்பதை ஜெயாத் தொலைக்காட்சி சொல்லவே இல்லை. இத்தனை காலமும் விடுதலைப்புலிகள் ஆயுதம் கடத்துகின்றார்கள் என்பதுதான் தலைப்புச் செய்தியே!..

உண்மை வெளிவரும்..காலம் கொஞ்சம் தாமதித்தாலும் உண்மை வெல்லும்!..!

பார்க்கலாம்...இன்னும் எத்தனை எத்தனை பிடிபடப்போகின்றதோ என!.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் அழிவதில்லை

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது வெளியாகிய தமிழக ஊடகங்களில் இருந்து பிடிபட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்றும் அவர்களுக்கும் தமிழக மீனவர்களைக் கொலை செய்தவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. இவர்கள் வடபகுதி மீனவர்கள். மன்னார் கடல் எல்லையில் மீன்பிடிக்கும் போது ஏற்பட்ட, இயந்திரக்கோளாறு காரணத்தினால் இந்திய எல்லைக்குள் சென்று விட்டார்கள். அவர்களை தமிழக மீனவர்கள் காப்பாற்றி உள்ளார்கள். இவர்களின் படகின் பெயரும் மரியா. ஆனால் இந்த மரியாப் படகுக்கும், தமிழக மீனவர்களைக் கொன்ற படகுக்கும் சம்பந்தமில்லை. நான் இணைத்த தினத்தந்தி, தினமணி ஊடகங்களை வாசித்துப் பாருங்கள்.

இச் செய்தியில் நம்பகத்தன்மை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

பிடிபட்டவர்கள் சிங்களவர்களென்றும் அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டதே. அந்தக் கதை இப்போது என்ன காற்றோடு போச்சா?

பிடிபட்டவர்கள் சிங்களவரா இல்லையா என்பதையும் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் எப்படியானவை என்பதையும் ஒரு சிறு பிள்ளை பார்த்தாலே சொல்லிவிடும்.

இதில் செய்தி மாறாட்டத்துக்கு இடமேயில்லை !!!

பீ பீ சி தமிழோசை இச்செய்தியை சொல்லவில்லை கவனித்தீர்களா?

ஏதோ சதி நடக்கிறது

ஆமாம் இது இந்தியா RAW சம்மந்தபட்ட விடயமாக இருப்பதால் தமிழோசை இச் செய்தியை இருட்டடிப்பு செய்திருகிறார்கள் இதுவே தமிழர்கள் யாரும் கைது செய்யப்ப்ட்டிருந்தால் உடனே அடுத்த வினாடி புலிகள் என சந்தேகடுவோர் கைது எண்டு பரபரப்பா சொல்லி இருப்பார்கள். இவர்களை இனம் காண வேண்டும் எமது தமிழீழ மக்களும் தமிழகத்து மக்களும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த சிங்கள நாய்கள் அனைவரும் புலிகள் என்று இந்திய அரசாங்கள் மாத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்

  • கருத்துக்கள உறவுகள்

பிடிபட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள். அவர்களிடம் ஆயுதம் எதுவும் இருக்கவில்லை. வதந்தி காரணமாகவே செய்திகள் பிழையாக ஊடகங்களில் வந்தது

றோ, இந்திய கடற்படை, மத்திய அரசு.

இவை மூன்றும், முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்து, தமிழர்கள் விடயத்தில் தங்களால் எதுவும் செய்ய முடியுமென்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் வாய்மூடி மௌனமாக இருந்து தமிழர் என்பதை நாமும் நிரூபித்துள்ளோம்.

பிடிபட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள். அவர்களிடம் ஆயுதம் எதுவும் இருக்கவில்லை.

அப்பாவித்தழிழர் :rolleyes: :angry: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.