Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலிய முருங்கைகாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, புங்கையூரன் said:

ஜஸ்டின்....மீண்டும் கண்டது மிக்க மகிழ்ச்சி...!

எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்!

நன்றிகள்! இருப்பேன்!

58 minutes ago, Justin said:

GMO உணவுகள் மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பதாக நடு நிலையான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் படவில்லை.  ஆனால், இணையக் குப்பையைக் கிளறினால் Institute for Responsible Technology (IRT) எனும் ஒரு அமைப்பு மூலம், GMO உணவுகள் புற்று நோய் முதற் கொண்டு எல்லா நோய்களையும் தரும் என்று  நிரூபிக்கும் ஆய்வுகள் பல காணக் கிடைக்கலாம். ஆனால் இந்த ஆய்வை வேறெந்த ஆய்வு கூடங்களும் பல நூறு தடவைகள் செய்து பார்த்தும் IRT கண்ட முடிவுகளை மீளக் கண்டு பிடிக்க முடியவில்லை! இதனால் இந்த அமைப்பின் ஆய்வு முடிவுகள் நம்பகமற்ற பிதற்றல்கள் என்பது பரவலான அபிப்பிராயம். 

மேலே நிழலி குறிப்பிட்ட அவுஸ் முருங்கைக் காய் முதல் பல உணவுத் தாவரங்கள் பூச்சிகள் பீடைகளிடமிருந்து காப்பதற்காக Bacillus thuringiensis (Bt) எனும் ஒரு நுண்ணுயுரின் ஜீன் ஒன்றை உள்ளடக்கியிருக்கக் கூடும். இதனால் இது GMO உணவாக இருக்கலாம். ஆனால் அது முருங்கை மரத்திற்கு பூச்சி பீடைகளிடமிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு ஏற்பாடு மட்டுமே!. இந்த நுண்ணுயிர் சில பூச்சி இனங்களை மட்டுமே பாதிக்கும் ஒன்று, மேலும் அந்த நுண்ணுயிர் அல்லாமல் அதன் ஒரு ஜீன் மட்டுமே முருங்கையில் உள்ளடக்கப் பட்டிருப்பதால் சாப்பிடுபவருக்கு ஒரு தீமையும் இல்லை! இந்த பக்ரீறியாவை ஒரு திரவ வடிவில் கடையில் விற்கிறார்கள். வாங்கி கோடை காலத்தில் மரத்தில் விசிறி விட்டால், மயிர்க்கொட்டிகளை உருவாக்கும் பூச்சிகள் அண்டாமல் காக்கலாம்! பக்ரீறியாவை நீங்கள் குடித்தால் கூட உங்களுக்கு எதுவும் ஆகாது (அதற்காக குடித்து விட வேண்டாம்!)

 

 

 

இந்த றவுண்ட் அப்  மருந்தால் புற்றுநோய்க்கு உள்ளனவர்கள் 5000 த்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்துள்ளனர்.  இழப்பீடாக 289 மில்லியன் டொலரை மொன்சான்ரொவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.  இதைத் தான் முதல் வீடியோவில்  ஒரு கிளாஸ் குடிக்கலாம் என்று மொன்சான்ரோ பேச்சாளர் சொல்கின்றார்  பின்னர் மறுக்கின்றரர்.

இங்கு இவற்றை பாவிக்கும் போது கையுறை மற்றும் மாஸ்க் அணிந்து பாவிக்கின்றார்கள். போரின் பின்னர் இலங்கையில் தமிழர் பிரசேத்தில் றவுண்டப் மிகப் பிரபலம். அங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லை. 

ஆய்வுகள் எப்போதும் பணம்படைத்த கார்பரேட்டுகளுக்கு சாதகமாகவே இருக்கும். அவற்றை அடிப்படையாக வைத்து மக்களுக்கு பாதிப்பில்லை ஒருகிளாஸ் பக்டிரியாவை வேண்டுமானால் குடிக்கலாம் என்று நாங்களே சொல்வது எந்த விதத்தில் நியாயமானது என்று புரியவில்லை ! 

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் அலுவலகம் வந்தவுடன் யாழ்க் களத்தை பார்க்கலாமென திறந்தால் இந்த முருங்கைக்காய் தலைப்புதான் எங்கும் வியாபித்திருக்கிறது.

கிழிஞ்சது போ..! 

சரி, ஆராய்ச்சியின் முடிவுதான் என்ன?  psychanalyste.gif

உண்மையா..? smileydocteur.gif

கட்டுக்கதையா..?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, சண்டமாருதன் said:

 

 

 

இந்த றவுண்ட் அப்  மருந்தால் புற்றுநோய்க்கு உள்ளனவர்கள் 5000 த்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்துள்ளனர்.  இழப்பீடாக 289 மில்லியன் டொலரை மொன்சான்ரொவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.  இதைத் தான் முதல் வீடியோவில்  ஒரு கிளாஸ் குடிக்கலாம் என்று மொன்சான்ரோ பேச்சாளர் சொல்கின்றார்  பின்னர் மறுக்கின்றரர்.

இங்கு இவற்றை பாவிக்கும் போது கையுறை மற்றும் மாஸ்க் அணிந்து பாவிக்கின்றார்கள். போரின் பின்னர் இலங்கையில் தமிழர் பிரசேத்தில் றவுண்டப் மிகப் பிரபலம். அங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லை. 

ஆய்வுகள் எப்போதும் பணம்படைத்த கார்பரேட்டுகளுக்கு சாதகமாகவே இருக்கும். அவற்றை அடிப்படையாக வைத்து மக்களுக்கு பாதிப்பில்லை ஒருகிளாஸ் பக்டிரியாவை வேண்டுமானால் குடிக்கலாம் என்று நாங்களே சொல்வது எந்த விதத்தில் நியாயமானது என்று புரியவில்லை ! 

அன்புள்ள சண்டமாருதன், நாம் பேசிக் கொண்டிருப்பது GMO உணவுகளில் இருக்கும் பக்ரீரியாவின் ஜீன் அல்லது அந்த பக்ரீரியா மனிதனுக்குப் பாதிப்பில்லை என்பது பற்றி. நீங்கள் மொன்சான்ரோவின் (அந்த தாவரங்களை உருவாக்கும் கம்பனி) விற்கும் கிளைபொசேற் என்ற வேறொரு இரசாயனம் பற்றிய வீடியோவைப் பதிலாக இட்டிருக்கிறீர்கள்! கிளைபொசேற் பாவித்ததால் புற்று நோய் வந்ததாக அந்த ஆயிரக்கணக்கான பேர்களில் நிரூபிக்க இயலாது! கோர்ட் தீர்ப்புக் கொடுத்திருப்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒரு அமைப்பான IARC இனால் ஆய்வு கூட எலிகளிலும், சில meta-analysis ஆய்வுகள் மூலமும் "கிளைபொசெட் புற்று நோய்க் காரணியாக இருக்கக் கூடும்" (group 2a) என்ற முடிவை அடிப்படையாக வைத்துத் தான். நீங்கள் சொல்லும் இரசாயனமும் நான் சொல்லும் பூச்சிகளை மட்டுமே தாக்கும் என்று நிரூபிக்கப் பட்ட பக்ரீரியாவும் ஒன்றல்ல! நான் குடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று சொன்னத்ற்குக் காரணம், இந்த பக்ரீறியா ஏற்கனவே எங்கள் தாவரங்கள் வளரும் மண்ணில் இருக்கின்றன. நீங்கள் ஒர்கானிக் தாவரங்களை சாப்பிடும் போது கூட இவற்றில் சில ஆயிரங்களை உள்ளெடுப்பீர்கள். பாதிப்பில்லை, ஏன் அப்படி இல்லை என்று கூட மூலக் கூற்று லெவலில் கண்டறிந்திருக்கிறார்கள். போலி விஞ்ஞானம் (pseudo-science)  இப்படியான பச்சைத் தண்ணி பக்ரீரியாவையும் சந்தேகத்திற்குரிய இரசாயனத்தையும் கலந்து ஒரு உண்மை போல மக்களைப் பயமுறுத்துவது தான் இப்போதைய போக்காக இருக்கிறது! 

மற்ற படி பணம் படைத்தவர் பக்கம் தான் தீர்ப்பு சாதகம் என்றால், எப்படி மொன்சான்ரோவிற்கு எதிராக அமெரிக்காவில் தீர்ப்பு வந்தது? கொஞ்சம் விஞ்ஞானத்தையும் நம்ப வேண்டும், சிஸ்ரத்தையும் நம்ப வேண்டும். செயற்கையாக விஞ்ஞானம் உருவாக்குவது எல்லாம் ஆபத்தானதாகத் தான் இருக்க வேண்டுமில்லை! 1500 இல் 40 ஆக இருந்த மனித வாழ்வு காலம் இன்று 65 வரை உயர்ந்திருப்பதூ செயற்கையாக விஞ்ஞானம் உருவாக்கிய antibiotic உட்பட்ட பல விடயங்களால் தான்!

பி.கு: நீங்கள் ஆய்வுகள் எப்போதும் கார்பரேட் பக்கம் என்று எழுதியிருப்பதை நான் கவனிக்கவில்லை!  தீர்ப்புகள் என்று வாசித்து விட்டேன். நான் அறிய கார்பரேட் காரர்கள் அல்ல பெரும்பாலான ஆய்வுகளை நிதி கொடுத்து நடாத்துவது. அப்படி நடத்தப் படும் ஆய்வுகளை இலகுவாக சஞ்சிகைகள் பிரசுரிக்காது! மக்களின் வரிப் பணத்தில் பல் கலைக் கழகங்களில் செய்யப் படும் ஆய்வுகளே நம்பிக்கையானவையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறன. நான் நடு நிலையான ஆய்வுகள் என்று முதலே குறிப்பிட்டிருப்பது இவற்றைத் தான்! விஞ்ஞானிகள் கூலிக்கு மாரடிக்க வேண்டிய நிலை  இன்னும் வரவில்லை! அடிக்கும் ஒரு சிலரும் ஓரங்கட்டப் படும் நிலையே இருக்கிறது!

Edited by Justin
திருத்தம் சேர்க்கப் பட்டது

1 hour ago, Justin said:

அன்புள்ள சண்டமாருதன், நாம் பேசிக் கொண்டிருப்பது GMO உணவுகளில் இருக்கும் பக்ரீரியாவின் ஜீன் அல்லது அந்த பக்ரீரியா மனிதனுக்குப் பாதிப்பில்லை என்பது பற்றி. நீங்கள் மொன்சான்ரோவின் (அந்த தாவரங்களை உருவாக்கும் கம்பனி) விற்கும் கிளைபொசேற் என்ற வேறொரு இரசாயனம் பற்றிய வீடியோவைப் பதிலாக இட்டிருக்கிறீர்கள்! கிளைபொசேற் பாவித்ததால் புற்று நோய் வந்ததாக அந்த ஆயிரக்கணக்கான பேர்களில் நிரூபிக்க இயலாது! கோர்ட் தீர்ப்புக் கொடுத்திருப்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒரு அமைப்பான IARC இனால் ஆய்வு கூட எலிகளிலும், சில meta-analysis ஆய்வுகள் மூலமும் "கிளைபொசெட் புற்று நோய்க் காரணியாக இருக்கக் கூடும்" (group 2a) என்ற முடிவை அடிப்படையாக வைத்துத் தான். நீங்கள் சொல்லும் இரசாயனமும் நான் சொல்லும் பூச்சிகளை மட்டுமே தாக்கும் என்று நிரூபிக்கப் பட்ட பக்ரீரியாவும் ஒன்றல்ல! நான் குடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று சொன்னத்ற்குக் காரணம், இந்த பக்ரீறியா ஏற்கனவே எங்கள் தாவரங்கள் வளரும் மண்ணில் இருக்கின்றன. நீங்கள் ஒர்கானிக் தாவரங்களை சாப்பிடும் போது கூட இவற்றில் சில ஆயிரங்களை உள்ளெடுப்பீர்கள். பாதிப்பில்லை, ஏன் அப்படி இல்லை என்று கூட மூலக் கூற்று லெவலில் கண்டறிந்திருக்கிறார்கள். போலி விஞ்ஞானம் (pseudo-science)  இப்படியான பச்சைத் தண்ணி பக்ரீரியாவையும் சந்தேகத்திற்குரிய இரசாயனத்தையும் கலந்து ஒரு உண்மை போல மக்களைப் பயமுறுத்துவது தான் இப்போதைய போக்காக இருக்கிறது! 

மற்ற படி பணம் படைத்தவர் பக்கம் தான் தீர்ப்பு சாதகம் என்றால், எப்படி மொன்சான்ரோவிற்கு எதிராக அமெரிக்காவில் தீர்ப்பு வந்தது? கொஞ்சம் விஞ்ஞானத்தையும் நம்ப வேண்டும், சிஸ்ரத்தையும் நம்ப வேண்டும். செயற்கையாக விஞ்ஞானம் உருவாக்குவது எல்லாம் ஆபத்தானதாகத் தான் இருக்க வேண்டுமில்லை! 1500 இல் 40 ஆக இருந்த மனித வாழ்வு காலம் இன்று 65 வரை உயர்ந்திருப்பதூ செயற்கையாக விஞ்ஞானம் உருவாக்கிய antibiotic உட்பட்ட பல விடயங்களால் தான்!

பி.கு: நீங்கள் ஆய்வுகள் எப்போதும் கார்பரேட் பக்கம் என்று எழுதியிருப்பதை நான் கவனிக்கவில்லை!  தீர்ப்புகள் என்று வாசித்து விட்டேன். நான் அறிய கார்பரேட் காரர்கள் அல்ல பெரும்பாலான ஆய்வுகளை நிதி கொடுத்து நடாத்துவது. அப்படி நடத்தப் படும் ஆய்வுகளை இலகுவாக சஞ்சிகைகள் பிரசுரிக்காது! மக்களின் வரிப் பணத்தில் பல் கலைக் கழகங்களில் செய்யப் படும் ஆய்வுகளே நம்பிக்கையானவையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறன. நான் நடு நிலையான ஆய்வுகள் என்று முதலே குறிப்பிட்டிருப்பது இவற்றைத் தான்! விஞ்ஞானிகள் கூலிக்கு மாரடிக்க வேண்டிய நிலை  இன்னும் வரவில்லை! அடிக்கும் ஒரு சிலரும் ஓரங்கட்டப் படும் நிலையே இருக்கிறது!

 

bt ஐ குடித்தால் ஒரு தீங்கும் இல்லை என்று நீங்கள் சொன்னதுபோலவே றவுண்டப்பைக் குடித்தாலும் தீங்கில்லை என்று மொன்சான்ரோ பேச்சாளர் சொன்னார். அதை எடுத்துக்காட்டவே எனது பதிலை எழுதினேன்.

மரபணுமாற்றப்பட்ட உணவுகள் அச்சுறுத்தலாகவே அணுகப்படுகின்றது. உலகம் முழுவதும் இவற்றைத் தடைசெய்வதற்கான போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. 

அதிக விழைச்சல், அதிக லாபம் என்ற நோக்கில் உணவு உற்பத்தியை நகர்த்தும் முதலாளித்துவத்துத்திற்கே மரபணுமாற்றம் சார்ந்த விஞ்ஞானம் முதற்படி சாதகமானது தவிர ஏழைகளின் பசியாற்றுவதற்கோ இல்லை மனுடத்தின் ஆரோக்கியத்தில் கரிசனை கொண்டு இல்லை. 

இங்கே எதுவும் வியாபாரததுககு அப்பாற்படட மானுட நேயத்தில் இல்லை. மரபணுமாறறபபடும் உணவும் வியாபாரம் கானசரும் வியாபாரம மருத்துவமும் மிகபபெரும் வியாபாரம். அனைத்தும் வியாபாரச் சுழற்சிக்குள் உட்பட்டது. 

நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் நடுநிலை என்ற ஒன்று கிடையாது. நடுநிலை என்பதன் அர்த்தமே கெடுதலுக்கு துணைபோதல் ஆகும். ஆதலால் நடுநிலை ஆய்வுகள் என்பதில் உடன்பாடுகிடையாது. 

மரபணுமாற்றப்பட்ட உணவுகள் ஆரோககியம் என்பது உஙகள் நிலைப்பாடாக இருக்கலாம் ஆனால் அவை மனிதகுலத்துக்கு ஆபத்தானது என்பது எனது நிலைப்பாடு. இநத நிலைப்பாட்டில் எந்த ஒரு கருத்து இணக்கப்பாட்டிற்கும் வாய்பே இல்லை. ' அவரவரின் புரிதல் சார்ந்தது. உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சண்டமாருதன் said:

 

bt ஐ குடித்தால் ஒரு தீங்கும் இல்லை என்று நீங்கள் சொன்னதுபோலவே றவுண்டப்பைக் குடித்தாலும் தீங்கில்லை என்று மொன்சான்ரோ பேச்சாளர் சொன்னார். அதை எடுத்துக்காட்டவே எனது பதிலை எழுதினேன்.

மரபணுமாற்றப்பட்ட உணவுகள் அச்சுறுத்தலாகவே அணுகப்படுகின்றது. உலகம் முழுவதும் இவற்றைத் தடைசெய்வதற்கான போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. 

அதிக விழைச்சல், அதிக லாபம் என்ற நோக்கில் உணவு உற்பத்தியை நகர்த்தும் முதலாளித்துவத்துத்திற்கே மரபணுமாற்றம் சார்ந்த விஞ்ஞானம் முதற்படி சாதகமானது தவிர ஏழைகளின் பசியாற்றுவதற்கோ இல்லை மனுடத்தின் ஆரோக்கியத்தில் கரிசனை கொண்டு இல்லை. 

இங்கே எதுவும் வியாபாரததுககு அப்பாற்படட மானுட நேயத்தில் இல்லை. மரபணுமாறறபபடும் உணவும் வியாபாரம் கானசரும் வியாபாரம மருத்துவமும் மிகபபெரும் வியாபாரம். அனைத்தும் வியாபாரச் சுழற்சிக்குள் உட்பட்டது. 

நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் நடுநிலை என்ற ஒன்று கிடையாது. நடுநிலை என்பதன் அர்த்தமே கெடுதலுக்கு துணைபோதல் ஆகும். ஆதலால் நடுநிலை ஆய்வுகள் என்பதில் உடன்பாடுகிடையாது. 

மரபணுமாற்றப்பட்ட உணவுகள் ஆரோககியம் என்பது உஙகள் நிலைப்பாடாக இருக்கலாம் ஆனால் அவை மனிதகுலத்துக்கு ஆபத்தானது என்பது எனது நிலைப்பாடு. இநத நிலைப்பாட்டில் எந்த ஒரு கருத்து இணக்கப்பாட்டிற்கும் வாய்பே இல்லை. ' அவரவரின் புரிதல் சார்ந்தது. உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள்.

 

சண்டமாருதன், உங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக  இணையத்தில் பெயர், பின்புலம் தெரியாதோரால் ஏற்றப் படும் வீடியோக்கள் தவிர்ந்த விஞ்ஞான  ஆதாரங்கள் ஏதும் உண்டா? அபிப்பிராயம் என்பது அபிப்பிராயம் மட்டுமே! தரவுகள் எங்கே? இலக்கங்கள் வரைபுகள் எங்கே? உணவுகளால் இத்தனை பேருக்கு இந்த தீங்குகள் வந்தது என்ற சொலிட்டான தரவுகள் தேவையில்லையா? இது அரசியல் வாதிகளின் தேர்தல் அல்லவே இனம், கட்சி மதம் பார்த்து முடிவுகள் எடுக்க? 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இணையத்தில் இருக்கிறதை பார்த்துவிட்டு காங்கேரியன் செய்த வேலை .

http://upriser.com/posts/hungarians-just-destroyed-all-monsanto-gmo-corn-fields 

Hungary-Burns-Monsanto-Crops-740x477.png?zoom=2&fit=810%2C9999

 

gmo-brazil-soybeans_735_350

சிகரெட் வரும்போது என்ன விளம்பரம் குடுத்தார்கள் இப்போ ஒளித்துவைத்து விற்கிறார்கள் .

ஒரு சாதாரண கம்பளி பூச்ச்சியை விட்டுவைக்காத நுட்ப்பம் இயற்கையாக உள்ள மற்றைய பங்காளர்களை விட்டு வைக்குமா ? முக்கியமாய் தேனிக்கள் வாழ்வியல் முழுதாக சிதைக்கப்படும் பின்பு எல்லோரும் மன்செண்டோ இருக்கும் இடத்தை பார்த்து கோயில் போல் கும்பிட வேண்டி வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

விதைகள் இயற்க்கைக்கு சொந்தம் அமெரிக்காவின் கொம்பனிக்கு அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

தகவலுக்கு நன்றி பெருமாள். GMO என்ன விதத்தில் மனித உடலை பாதிக்கும் என்று தெரியுமா?

உடலை பாதிக்கும் என்று எழுதி வந்த கட்டுரைகள் ஒரு கிழமையில் தூக்க பட்டு மன்னிப்பும் கேட்டவர்கள் அந்த ஆராட்ச்சி செய்த விஞ்ஞனியையும் தண்ணியில்லா காட்டுக்கு தூக்கி அடித்தவர்கள் எல்லாம் இங்கு லண்டனில் நடந்தது கனகாலம் ஆகி விட்டது மறந்தும் விட்டது அந்த விவசாய செய்தி பத்திரிகையின் பெயர் தேடிக்கொண்டு இருக்கிறன் .

இப்போது நிரூபிக்கப்படவில்லை எனும் வாதத்தை வைத்து சின்கியடிக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

சும்மா இணையத்தில் இருக்கிறதை பார்த்துவிட்டு காங்கேரியன் செய்த வேலை .

http://upriser.com/posts/hungarians-just-destroyed-all-monsanto-gmo-corn-fields 

Hungary-Burns-Monsanto-Crops-740x477.png?zoom=2&fit=810%2C9999

 

gmo-brazil-soybeans_735_350

சிகரெட் வரும்போது என்ன விளம்பரம் குடுத்தார்கள் இப்போ ஒளித்துவைத்து விற்கிறார்கள் .

ஒரு சாதாரண கம்பளி பூச்ச்சியை விட்டுவைக்காத நுட்ப்பம் இயற்கையாக உள்ள மற்றைய பங்காளர்களை விட்டு வைக்குமா ? முக்கியமாய் தேனிக்கள் வாழ்வியல் முழுதாக சிதைக்கப்படும் பின்பு எல்லோரும் மன்செண்டோ இருக்கும் இடத்தை பார்த்து கோயில் போல் கும்பிட வேண்டி வரும் .

ஹங்கேரியன் செய்தால் அவன் எங்கே பார்த்துச் செய்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்பது வேறொரு மனநிலை பெருமாள்! தரவுகளைத் தந்து பேசுங்கள், திரி சரியாக நகரும்! அபிப்பிராயமொன்றை ஏற்படுத்தி விட்டு அதற்கு சான்றுகளாக இணையக் குப்பைகளைக் கிளறுவது ஒன்றையும் புதிதாக அறிய விடாது. GMO உணவு மனிதனில் நோய் உருவாக்கியது என்று ஒரு மதிப்பு மிக்க ஆய்வு கூடம் (ஹார்வார்ட், ஹொப்கின்ஸ் இன்ன பிற போன்ற) செய்து வெளியிட்ட தகவலை இணையுங்கள்! யூ டியூப் வீடியோக்களுக்கு என்னிடம் துலங்கல் இல்லை!

நன்றி!

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/18/2018 at 5:26 AM, புங்கையூரன் said:

வடமாநிலத்தில்...டார்வின்...கதரின் போன்ற இடங்களில்..காடுகளில் முருங்கை மரங்கள் வளர்கின்றன! எனவே இயற்கையாக வளருகின்றன என்றே நினைக்கிறேன்! உள்ளூர் வாசிகள் ...இவற்றைச் சாப்பிடுவதில்லைப் போல உள்ளது! ஆனால்..ஐரோப்பியர் முருங்கைக் காய்களைக் குதிரைகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்! மேற்கு ஆபிரிக்காவில்....முருங்கைக் காய் மரங்கள் உண்டு! எனினும் ....அங்குள்ளவர்கள்...அதனைப் பேய் பிசாசுகளுடன் தொடர்பு படுத்தியிருப்பதால்...அவர்கள்....முருங்கைக் காய் சாப்பிடுவதில்லை! நாங்கள்...இருந்த காலத்தில்...உயிரியல் படிப்பிப்பவர்களிடம் கெஞ்சி....பிரக்டிகல் செய்யத் தேவை...என்று மாணவர்களிடம் கூறி....முருங்கைக்காயைப் பெற்றுக்கொள்வதுண்டு!

அதேபோலத் தான்....பலாப்பழங்களும்...மல்லிகை வாசம் கூறியது போல...குயின்ஸ்லாந்து பகுதிகளில்....மரங்களில்..பழுத்து...வெடித்த படியே கிடக்கும்! ஒருவரும்...கண்டு கொள்வதில்லை!

சுமே,  சிட்னியில்...முருங்கை மரங்கள் வளரும் எனினும்....குயின்ஸ்லாந்து..அல்லது வட மாநிலங்களில் வளர்வது போல...அடர்த்தியாகவும்...உயரமாகவும் வளர்வதில்லை! வீட்டில் நிற்கும் முருங்கையில்...ஒரு மூன்று நான்கு மாதங்களுக்குக் காய்கள் பிடுங்கக் கூடியதாக இருக்கும்! ஆனால்...நிறைய இலைகள் கிடைக்கும்! வறுக்கலாம்!

தென் மாநிலம், மேற்கு அவுஸ்திரேலியா போன்ற இடங்களிலும்...முருங்கை, பலா, புளி போன்ற மரங்கள் அதிகமாக வளரும்!

கள உறவு...உடையார் காரை இடையில் நிறுத்திவிட்டு...புளியங்காய் பொறுக்கும் வழக்கம் உள்ளவர் என்று ஒரு முறை அவர் எழுதிய நினைவு உண்டு!

புங்கை இப்ப பெறுக்க கிடைப்பதில்லை, வேலை இடம் மாற்றிவிட்டார்கள் .

வீட்டில் மூன்று முருங்கை மரம் நிற்கின்றது, பசளையாக உணவுக்கழிவுகள் தான் பயன்படுத்துகின்றனான், நல்ல பெருந்த காய்கள் கிடுக்கும், அவித்து பதப்படுத்தினால் வருடம் முழுக்க சமைக்கலாம்.

நிழலி முருங்கைக்காய் ஏற்றுமதி செய்வது Brisbane இல் இருந்து, எனது நண்பர் லண்டனில் கடை வைத்திருக்கின்றார் அவர்தான் சென்னவர். பெரிய இடத்தில் முருங்கை பண்ணை வைத்து எல்லா இடமும் அவர்தான் ஏற்றுமதி செய்கின்றார் என்று ,

இங்குள்ள முருங்கை காய்கள், நல்ல மொத்தம், அடுத்த முறை வீட்டு முருங்கைகாய் மரத்தில் இருக்கும் போது படம் எடுத்து இணைத்து விடுகின்றேன்,  படத்தில் போட்டதைவிட இன்னும் மொத்தமாக வரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.