Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வெள்ளநிவாரண உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வெள்ளநிவாரண உதவி

 
வடக்கு மாகாணத்தில் தொடர்ந்த அதிகளவு மழைவீழ்சியினால் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுவாசல்கள் பாதிப்படைந்த நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ளதினை நீங்கள் அறிவீர்கள்.

அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் களத்தில் நின்று உதவி வரும் IBC தமிழ் ஊடக நிலையத்தினூடாக ருபா மூன்று இலட்சம் (300000) பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் புலன் பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்கள் இப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகின்றோம்.
 
 

 

ஐபிசி தமிழ் நிவாரண பணியுடன் கைகோர்த்த புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்!

இயற்கை அனர்த்தம் எமது உறவுகளைத் தொடர்ச்சியாக இன்னல்களுக்கு உட்படுத்திய வண்ணம் உள்ளது. இப்பொழுது ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தனால் மக்கள் தத்தளிக்கின்றனர். 14 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி எனும் ஆழிப்பேரலையால் எங்கள் உறவுகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தார்கள்.

அந்த நினைவுகள் மீட்டப்படும் இக்காலகட்டத்தில் மீண்டும் வன்னிமக்கள் மழை வெள்ளத்தால் தங்கள் குடியிருப்புகள், உடைகள் ,உடமைகள் யாவும் இழந்து இன்னல்களுக்கு உள்ளாகித் தவிக்கின்றார்கள்.

இந்நிலையில் மண்ணோடும் மக்களோடும் பணியாற்றிவரும் ஐபிசி தமிழ் தாயகக்கலையகத்தின் விசேட நிவாரண குழு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் களப்பணியில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் பெருமழை வெள்ளத்தனால் தத்தளிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தேவைப்பொருள்களை ஐபிசி தமிழ் ஊடாக வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னலுறும் மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

அத்துடன் புலம் பெயர் தேசங்களில் வாழ்ந்துவரும் உறவுகள், நிறுவனங்கள், பொது அமைப்புகள் எம்முடன் தொடர்பு கொண்டு வன்னி வாழ் மக்களுக்கு உடனடியாக உதவும் பணிகளில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

https://www.ibctamil.com/srilanka/80/111417?ref=home-imp-flag&fbclid=IwAR10sk6U1O8zaTpU3bGQjr5Y6cX7RsZaSPN1XHb0WoDXaV8E3kTs4D5HtjQ

 
இதையும் தவறாமல் படிங்க
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் புங்குடுதீவு ஒன்றியத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தங்களின் மேலான சேவைக்கு.....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்குடுதீவு ஒன்றியத்தின் சேவைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்....

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திற்கு ஒரு உதவி தேவை என்றவுடன்... முன்னணியில் நிற்கும் அமைப்புகளில்,
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் ஒன்று என்பதை மீண்டும் செய்து காட்டியுள்ளார்கள். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.