Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மாணவன் மீது, "பகிடி வதை" தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

attacktype4803-720x450.jpg

யாழில் மாணவன் மீது தாக்குதல்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக குறித்த மாணவன்  பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஊடகவியலாளரும், பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள், பகிடிவதை எனக்கூறி, அவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தலைப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் குறித்த மாணவன், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://athavannews.com/யாழில்-மாணவன்-மீது-தாக்க/

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இவன்கள் மாறவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமிராண்டிகள். பகிடிவதை என்கிற பெயரில் சக மனிதர்களைக் கொடுமைப்படுத்தும் கொடூர குணம் கொண்ட விலங்குகள். விலங்குகள் கூட இவர்களைப்போல தனது சக விலங்கினைக் கொடுமைப்படுத்துவதில்லை.

இந்த அநியாயத்திற்கு இந்த மிருகங்கள் வைக்கும்  பெயர், ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதாம்.

1998 இல் என்று நினைக்கிறேன். பேராதனையில் பிரகாஷ் எனும் மாணவனை பகிடிவதை என்கிற பெயரில் கொன்றுவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பியோடிய மிருகம் இன்னும் அங்கேதான் இருக்கிறது. பிரகாஷ் கொல்லப்பட்டதற்குக் காரணம் அவன் கொழும்பில் வசதியாக வாழ்ந்துவந்ததும், குறுகிய காலத்திலேயே அவன் சீமா எனப்படும் இங்கிலாந்து கணக்காளர் சோதனைகளை முடித்திருந்ததும்தான்.

பகிடிவதையின்பொழுது அவனை டிப்ஸ் அடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். உடல்நிலை முடியாமலிருக்கிறது என்று அவன் சுருண்டு விழவும் சூழ்ந்துகொண்டு கால்களாலும் கைகளாலும் அடித்திருக்கிறார்கள். மயக்கமான அவன் வைத்தியசாலையில் உயிரிழந்திருக்கிறான். முன்னின்று நடத்திய மிருகம் வெளிநாடொன்றிற்குத் தப்பியோட, ஏனைய இருவரும் பிடிபட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். 

இவ்வாறே பார்த்தீபன் எனும் பொறியியல்ப் பீட மாணவனும் கரண்ட் ஷொட் எனப்படும் கரடுமுரடான சுவரில் முழங்கைகளில் மட்டுமே நிற்கச் சொல்லிவிட்டுக் கால்களைத் தட்டிவிடும் பகிடிவதையில் சுகயீனமுற்று கோமாவரை சென்றதும் நடந்தது.

பேராதனையிலும், யாழ்ப்பாணத்திலும் நடக்கும் இவ்வாறான காட்டுமிராண்டித்தனங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது கேட்கவோ யாருமில்லாததினால், தொடர்ந்தும் நடக்கிறது.

மொரட்டுவை, கொழும்பு பல்கலைக் கழகங்களில் இவர்களின் கொட்டம் அடக்கப்பட்டு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வதையை பகிடியாக செய்தால் அது வேதனை தராதா?!

6 hours ago, ragunathan said:

காட்டுமிராண்டிகள். பகிடிவதை என்கிற பெயரில் சக மனிதர்களைக் கொடுமைப்படுத்தும் கொடூர குணம் கொண்ட விலங்குகள். விலங்குகள் கூட இவர்களைப்போல தனது சக விலங்கினைக் கொடுமைப்படுத்துவதில்லை.

இந்த அநியாயத்திற்கு இந்த மிருகங்கள் வைக்கும்  பெயர், ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதாம்.

உங்கள் கருத்துடன் 100% உடன்படுகிறன்!

6 hours ago, ragunathan said:

பேராதனையிலும், யாழ்ப்பாணத்திலும் நடக்கும் இவ்வாறான காட்டுமிராண்டித்தனங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது கேட்கவோ யாருமில்லாததினால், தொடர்ந்தும் நடக்கிறது.

பேராதனையில இப்பவும் யாழ் இந்துக் கல்லூரியில் இருந்தும், பரு ஹாட்லி கல்லூரியில் இருந்தும் சென்று எஞ்சினீரிங் படிக்கும் காடையர்கள் பகிடிவதையில் காடைத்தனமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடமும் எல்லை மீறிய எஞ்சினீரிங் மாணவ காடையர்கள் சிலர் மீது விசாரணைகள் நடைபெறுகின்றன.

பெயர் விபரங்கள் உள்ளன. அவற்றை வெளியிடுவது முறையல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளெல்லாம் படிச்சு என்னத்தை சாதிக்கப்பாேகுதுகள்? இவ்வளவு படித்தும் எப்படி வாழவேண்டும் என்ற பண்பற்றவர்கள். பெற்றாேரும் கற்பித்த ஆசான்களும் வெட்கி தலைகுனிவதாேடு தம்மை வெளிப்படுத்தவும் தயங்குவர். புது மாணவருக்கு வழிகாட்டவேண்டியவர்கள் இப்படி கேவலமாய், இதுகள் என்ன பட்டம் பெறப்பாேகுதுகள்?  சகமாணவரை வேட்டையாடுதுகள்.

4 hours ago, satan said:

இதுகளெல்லாம் படிச்சு என்னத்தை சாதிக்கப்பாேகுதுகள்? இவ்வளவு படித்தும் எப்படி வாழவேண்டும் என்ற பண்பற்றவர்கள். பெற்றாேரும் கற்பித்த ஆசான்களும் வெட்கி தலைகுனிவதாேடு தம்மை வெளிப்படுத்தவும் தயங்குவர். புது மாணவருக்கு வழிகாட்டவேண்டியவர்கள் இப்படி கேவலமாய், இதுகள் என்ன பட்டம் பெறப்பாேகுதுகள்?  சகமாணவரை வேட்டையாடுதுகள்.

100% உண்மை!

தற்போது பேராதனையில எஞ்சினீரிங் படிக்கும் 2ம், 3ம், 4ம், வருட மாணவ காடையர்கள் பலரால் நடைபெறும் பகிடிவதை காடைத் தனத்துக்கு பெற்றோர்களும், யாழ் இந்துக் கல்லூரி, பரு ஹாட்லி கல்லூரி ஆசிரியர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்!

 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் அறிமுகம் (Induction)   மட்டும் போது. உடல் உள பாதிப்புக்களை தரத்தக்க பகிடிவதைகள் (Ragging ) சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளது. அதை எவரும் செய்யக் கூடாது. புதிய மாணவர்களும் அச்சமின்றி பகிடிவதைக்கு 'நோ' சொல்லிவிட வேண்டும். 

Image result for Ragging

Image result for Ragging

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.