Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே – தடவியல் நிபுணரின் அதிர்ச்சி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mannar-4.jpg

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே – தடவியல் நிபுணரின் அதிர்ச்சி தகவல்

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அந்த புதைகுழி கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் தெரிவித்த கருத்து, ” மன்னார்மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்.

மனித எச்சங்கள் மண்ணின் தரம் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப அது பாதுகாக்கப்படும் காலம் வேறுபாடும். நான் நேரில் பார்த்த தடவியல் மருத்துவர் என்ற ரீதியில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கால அளவிற்கு உட்பட்டதல்ல என்றும் அது அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என கூறமுடியும்.

இலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவமுள்ள தடவியல் ஆய்வாளர்கள் இல்லை என்பது என் கருத்து. இவர்கள் உபயோகிக்கின்ற டேட்டிங் முறை தவிர்த்து மனித எலும்புக்கூட்டில் உள்ள பல்லை வைத்து சரியான பிறந்த நாளையே கண்டுபிடிக்க முடியும்.

சர்வதேச மனித உரிமை ஆணையகம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்” என கூறியுள்ளார்.

http://athavannews.com/மன்னார்-மனித-புதைகுழி-அர/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இது அதிர்ச்சித் தகவல் அல்ல.! உண்மையான தகவல் என நம்பலாம்.!! 😌

அதிர்ச்சித் தகவல் அமெரிக்காவில் இருந்து வந்தது. 😲

சிறீலங்க அரசில் தமிழர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் அப்பதவி கிடைத்தவரிடம் இருந்தும் அதிர்ச்சித் தகவல் வரலாம்.🤔 

இது எதிர்பார்த்த ஒன்றுதான் , கொஞ்ச நாள் முதல் தான் தமிழ் அரசியல் நரி சுத்துமாத்து சொன்னார் , முடிவுகள் அதிர்ச்சியாக இருக்கும் என்று ... ஆனால் இப்படியா ?

1 hour ago, பிரபாதாசன் said:

இது எதிர்பார்த்த ஒன்றுதான் , கொஞ்ச நாள் முதல் தான் தமிழ் அரசியல் நரி சுத்துமாத்து சொன்னார் , முடிவுகள் அதிர்ச்சியாக இருக்கும் என்று ... ஆனால் இப்படியா ?

இதற்கும் சுமந்திரன்தான் காரணமா?

  • கருத்துக்கள உறவுகள்

யார் இவர்? எந்த நாட்டு மருத்துவர்? இவரது பெயர் எலும்பு அகழ்வில் வந்ததாக நான் காணவில்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

mannar-4.jpg

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே – தடவியல் நிபுணரின் அதிர்ச்சி தகவல்

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அந்த புதைகுழி கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் தெரிவித்த கருத்து, ” மன்னார்மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்.

மனித எச்சங்கள் மண்ணின் தரம் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப அது பாதுகாக்கப்படும் காலம் வேறுபாடும். நான் நேரில் பார்த்த தடவியல் மருத்துவர் என்ற ரீதியில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கால அளவிற்கு உட்பட்டதல்ல என்றும் அது அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என கூறமுடியும்.

இலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவமுள்ள தடவியல் ஆய்வாளர்கள் இல்லை என்பது என் கருத்து. இவர்கள் உபயோகிக்கின்ற டேட்டிங் முறை தவிர்த்து மனித எலும்புக்கூட்டில் உள்ள பல்லை வைத்து சரியான பிறந்த நாளையே கண்டுபிடிக்க முடியும்.

சர்வதேச மனித உரிமை ஆணையகம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்” என கூறியுள்ளார்.

http://athavannews.com/மன்னார்-மனித-புதைகுழி-அர/

டாக்டர் செல்வா சுரேஷ் பல்லை வைத்து இறந்தவரின் வயதைக் கணிக்க முடியும் என்கிறார்! உண்மை, ஆனால் எலும்புக் கூட்டின் வயதை எப்படிப் பல்லு வைத்துக் கண்டு பிடிப்பதாம்? இறந்தவர் இறந்த நாளில் பல்லின் வயதும் அப்படியே நின்று விடுமே? 

எங்களுக்கு விரும்பின பதில் கிடைக்கும் வரை இப்படி யாரையாவது கொண்டு வந்து அலட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்! 

20 minutes ago, Justin said:

எங்களுக்கு விரும்பின பதில் கிடைக்கும் வரை இப்படி யாரையாவது கொண்டு வந்து அலட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்! 

 

நானும் எதோ புலிகளின் முகத்திரை இதோட கிழியும் எண்டு பாத்தா 

இப்படி சொதப்பிட்டானுங்களே 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

 

நானும் எதோ புலிகளின் முகத்திரை இதோட கிழியும் எண்டு பாத்தா 

இப்படி சொதப்பிட்டானுங்களே 

மேற்படி புதைகுழி உள்ள இடம் போர் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை இராணுவ கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளது. எனவே உங்களுக்கு புலி வாந்தி எடுக்க முடியாது என்பதை மிக்க மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

On 3/10/2019 at 10:02 PM, thulasie said:

இதற்கும் சுமந்திரன்தான் காரணமா?

அவர் காரணமானவர்களை காப்பாற்றுவதில் வல்லவர் .....ரொம்ப நல்லவர் .....தலைவிதி ?

On 3/10/2019 at 10:31 PM, Justin said:

டாக்டர் செல்வா சுரேஷ் பல்லை வைத்து இறந்தவரின் வயதைக் கணிக்க முடியும் என்கிறார்! உண்மை, ஆனால் எலும்புக் கூட்டின் வயதை எப்படிப் பல்லு வைத்துக் கண்டு பிடிப்பதாம்? இறந்தவர் இறந்த நாளில் பல்லின் வயதும் அப்படியே நின்று விடுமே? 

எங்களுக்கு விரும்பின பதில் கிடைக்கும் வரை இப்படி யாரையாவது கொண்டு வந்து அலட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்! 

என்ன இந்த படுகொலைக்கும் சிங்களத்துக்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்களா ? மண்ணில் புதையுண்ட இரும்பு கம்பி எப்படி 500 வருடமாகியும் துரு பிடிக்கவில்லை ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.