Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த

Featured Replies

எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை.

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும் அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை.

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளமை கவலையளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%80-2/

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI  ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்க‌ முதல் யோசிச்சு இருக்க வேணும் மாத்தையா...
குண்டு வைத்தர்வர்கள் தங்களுக்கு பிரச்சனை என்று சொல்லவில்லையே ...அவர்களுடைய பிரச்சனை எல்லோரும் அல்லாவை வணங்க வேண்டும் என்று ....இது நடக்கிற காரியமா?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, putthan said:

கடன் வாங்க‌ முதல் யோசிச்சு இருக்க வேணும் மாத்தையா...
குண்டு வைத்தர்வர்கள் தங்களுக்கு பிரச்சனை என்று சொல்லவில்லையே ...அவர்களுடைய பிரச்சனை எல்லோரும் அல்லாவை வணங்க வேண்டும் என்று ....இது நடக்கிற காரியமா?

அல்லாவை வணங்க வேண்டும் என்று குண்டு வைத்தவர்கள் பகடைக் காய்கள். இவர்களின் திட்டமும், குண்டுகளும் இயக்கிய விதமும் உயர்தர இராணுவ துல்லியத்துடன் வேறு சக்தியால் செய்யப் பட்டவை. அந்த சக்தி பாகிஸ்தானின் ISI. நோக்கம் கோத்தாவை ஜனாதிபதி ஆக்குவது. யாருக்காக? சீனாவுக்காக.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

கோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI  ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.

நல்ல கற்பனை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நல்ல கற்பனை.

தாக்குதல் பற்றி இந்திய புலனாய்வு விடுத்த எச்சரிக்கையை சிறி லங்கா பாதுகாப்பு துறையும் நல்ல கற்பனை என்று தான் நினைத்து இருக்க வேண்டும்.அல்லாவிட்டால் எச்சரிக்கை ஆவது செய்து இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Jude said:

தாக்குதல் பற்றி இந்திய புலனாய்வு விடுத்த எச்சரிக்கையை சிறி லங்கா பாதுகாப்பு துறையும் நல்ல கற்பனை என்று தான் நினைத்து இருக்க வேண்டும்.அல்லாவிட்டால் எச்சரிக்கை ஆவது செய்து இருப்பார்கள். 

இலங்கை அரசியல், இனமுரண்பாடுகள் எப்படி இருந்தாலும், மகிந்தாவும், சகோதரர்களும் பதவிக்கு வர முடியாது என்பதை மேற்கு உறுதி செய்யும். 

ஜஎஸ் இயங்கும் இடமெங்கும் மேற்கு புகுந்து கொள்ளும். FBI, இன்ரபோல், வந்தே விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை அழிக்கமுயலும் இந்தியனைவிடவும், இந்தியனுக்கு ஆதரவுகொடுக்கும் அமெரிக்கனைவிடவும், சீனா கேவலமானதா....? சீன, தமிழர் உறவுபற்றி சரித்திரங்களும் உயர்வாகத் தெரிவிக்கின்றனவே...!! 

  • தொடங்கியவர்

அதிகார ஆசையிலேயே மகிந்தவுக்கு குறி! சம்பந்தன் சாட்டை!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள் ? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவா?என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இப்போதும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் இந்த சம்பவங்களை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே நினைக்கின்றீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் சரியாகும் என நினைக்கின்றீர்கள். அவ்வாறு இருக்காது, முதலில் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.ibctamil.com/srilanka/80/118556

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/23/2019 at 7:33 PM, Jude said:

கோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI  ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.

mi07xh.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 4/24/2019 at 3:15 AM, போல் said:

எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதுதான் திருடனுக்கு தேள் கொட்டுவது என்பதாக்கும் குண்டுவெடிப்புக்கு பின் ஆட்சி மாறும் என்று பார்த்திருக்க .  இந்த நாசமாய் போன இண்டர்போலும்  fbi குருப் குருபாய் வந்து இறங்கி நிக்கிறாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான்  மொக்கு உனக்கு  தமிழரும் தலைவரும்  1000  தடவை  சொன்னார்கள்

 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.