Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி இராணுவமுகாம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படையின் தாக்குதல் - குறைந்தது 6 அரசாங்கப்படையினர் மரணம், 13 பேர் காயம்

Featured Replies

சீ ரீ ஆர் ரேடியோவில் கனடா நேரம்இரவு6.55 மணிக்கு விசேட செய்தியில் இதுபற்ரி கூறியிருந்தார்கள்

பின்னர் இரவு 9 மணிக்கு விசேட கலந்துரையாடல் நடைபெற்ரது அதில்கலந்துகொண்ட நேயர்கள் கூறியவிடயங்கள் இந்தவிடயங்களை கூறியநேயர்கள் யாழ்ப்பாணம் வடமராச்சி போன்றஇடங்களுக்கு ரெலிபோனில் தமது உறவுகளுடன் கதைத்து அந்தஉறவுகள் கூறியவிடயங்கள்

பிளேன் ஒன்று போன சத்தம் கேட்டது

பலாலி படைத்தளத்திலிருந்து பலத்தவெடிஓசைகள் கேட்டன

வெடிஓசைகள் பலமணிநேரம் கேட்டுக்கொண்டேயிருந்தது

பலாலி படைத்தளத்திலிருந்து நெருப்பு சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருந்தது

இவைஅனைத்துமே குடிசார்தகவல்கள்

எனவே புலிகள் பிளேன்மூலம் குண்டுபோட்டதென்பது உண்மை

அரசாங்கம் அண்டாவில் போட்டும் புசணிக்காயை மறைக்கமுடியாது

தற்போதைய செய்திகளின்படி கொழும்பிலிருந்து மேலதிகாரிகள் குழு ஒன்று பலாலி சென்றுள்ளதாகதகவல்

  • Replies 137
  • Views 30.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சி.என்.எனில் 6 பேர் இறப்பு என்று சொல்லி இருந்தது தெரிந்ததே. ஆனால் பி.பி.ஸியில் 6 பேர் காயம் என்று இராணுவத்தரப்புச் செய்திகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

Tamil Tigers bomb military base

Sri Lanka's Tamil Tiger rebels have launched an air attack on a government military base, injuring at least six soldiers, the military has confirmed.

The attack is thought to be only the second time the Tigers have used air power to hit Sri Lankan targets.

An army spokesman said ground fire forced one plane to turn away before it hit its intended target - the main military base on the Jaffna peninsula.

But rebels said two aircraft were involved and insisted the base was hit.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6586283.stm

புதினம் இவ்வாறு சொல்கிறது

4 ஆம் இணைப்பு) பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத் தளம் மீது வான்புலிகள் அதிரடித் தாக்குதல்: ஆயுதக் கிடங்கு அழிப்பு- 6 இராணுவத்தினர் படுகாயம்

[செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007, 04:33 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] []

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை திகைப்பூட்டும் வகையில் தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலாலி தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டது. 6 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

பலாலி கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் 6 பேர் பலி 6 பேர் காயம்.

விடுதலைப்புலிகள் இன்று அதிகாலை 1.20 மணியளவில் யாழ் பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப்புலிகள் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இதில் 6 பேர் பலியாகியுள்ளதாக புலிகள் தரப்பு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் இரண்டாவது வான் தாக்குதலினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். என விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

அதே வேளை இனந்தெரியாத்ச் விமானமொன்று யாழ் வான்பரப்பில் உலாவியதை அவதானித்த இராணுவத்தினர் தம்மிடமிருக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இராணுவ தளப்பதி மேஜர் ஜெனரல் சரத பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இன்று காலை பலாலி முன்னரங்கங்கள் மீது நடாத்திய தாக்குதலில் 6 படையினர் பலியானதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று நடத்திய தாக்குதலையடுத்து பாலாலி கூட்டுப்படை தளத்தை புகை மூட்டத்தினை புலிகளின் விமான ஓட்டிகள் அவதானித்துள்ளதுடன் சுமார் 10க்கும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக புலிகள் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

-Virakesari-

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இத்தாக்குதல் நடக்கவில்லை என்று அரசாங்கம் மறுத்தாலும், பிறகு இத்தாக்குதல் நடந்ததாக அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது.

The Tamil Tigers said the air raid was carried out at night.

The rebels' military spokesman, Rasiah Ilanthiriyan, said two aircraft flew over the Palaly military base and dropped bombs, targeting the runway and storage areas.

According to the rebels, the pilots returned safely and reported that their attack had left fires burning on the ground.

At first the military denied any such incident but later a spokesman, Lieutenant Commander Rohan Joseph, said a single aircraft had been spotted flying towards the base.

He said anti-aircraft batteries on the ground fired and the plane turned away.

Lt Joseph said as the aircraft returned to Tiger-held areas it dropped two bombs on the front lines between the two sides, wounding a number of soldiers.

Palaly military base acts as headquarters for operations against the rebels in the north. It is also the supply base for tens of thousands of soldiers stationed in the region.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6586283.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜந்த டீ மெல் சன் சொன்னதாக சன் நியூஸிலும் சூரியன் குஆ லும் சொன்ன செய்தி: புலிகள் கைக்குண்டுத்தாக்குதல் நடாத்தியதாகவும் வேறு எந்த தாக்குதல்களும் நடக்கவில்லையென்றும். கைக்குண்டு தாக்குதல் நடத்துகிற அளவுக்கு பலாலி முகாம் சின்னனோ. கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கெகலியவும் புளுகுவான். பாவம் சிங்கள மக்கள் .

பலாலி இராணுவத் தளத்தின் ஆயுதக் களஞ்சியக் கிடங்குள் மீது வான்புலிகள் தாக்குதல்

தமிழீழ வான்படைகளுக்கு (TAF) சொந்தமான வான்கலங்கள் பலாலி கூட்டுப் படைத்தளம் மீது மூர்க்கமான வான் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பலாலி கூட்டுப்படைத் தளத்தின் ஆயுதக் களஞ்சியக் கிடங்குள் மீது மூர்க்கமான வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இருவிமானத்தில் சென்ற வான்புலிகள் 10 குண்டுகளை வீசியுள்ளனர். வான்புலிகளின் வான் தாக்குதலில் சிறீலங்காவின் ஆயுதங்களஞ்சியக் கிடங்குகள் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளன.

இன்றைய விமானத் தாக்குதலில் பலாலி ஆயுதக் களஞ்சியக் கிடங்குகள் மீது பலத்த தேசங்கள் ஏற்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

வன்னி நோக்கிய படையெடுப்புக்கான முன்னேற்பாடுகளில் சிறீலங்காப் படைகள் அண்மை நாட்களில் ஈடுபட்டிருக்கும் வேளையில் பலாலி கூட்டுப்படைத் தளத்தின் முக்கிய இலங்குகள் மீதே வான்புலிகள் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

கட்டுநாயக்க விமானத் தளம் மீதான வான்புலிகளின் வான் தாக்குதலையடுத்து யாழ் குடாநாட்டின் முக்கிய இராணுவ மையங்கள் மீது விமான எதிர்ப்பு கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலையில் வான்புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

-பதிவு (மேலதிக இணைப்பு)

இப்போது மூன்றாவது வான் கலமும் கலத்தில் இறங்கியுள்ளது போல் தெரிகின்றது காரணம் இரண்டுவான் கலங்கள் என்றால் 8 குண்டுகள் தான் போட்டு இருப்பார்கள் அல்லது வேறு விதமான வான் கலங்களாக இருக்கலாம் ஆனால் இம்முறை 10 குண்டுகள் என்று எமது இராணுவ பேச்சாளர் சொன்னதால் மூன்றாவது வான் கலமும் கலத்தில் இறங்கி இருக்கின்றதோ? சிந்திக்க வேண்டித்தான் உள்ளது!!!!!!!!!!!!!!!!!

நம்புங்கள் தமிழன் தமிழீழம் காணும் வரை ஓயமாட்டார்கள்!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜந்த டீ மெல் சன் சொன்னதாக சன் நியூஸிலும் சூரியன் குஆ லும் சொன்ன செய்தி: புலிகள் கைக்குண்டுத்தாக்குதல் நடாத்தியதாகவும் வேறு எந்த தாக்குதல்களும் நடக்கவில்லையென்றும். கைக்குண்டு தாக்குதல் நடத்துகிற அளவுக்கு பலாலி முகாம் சின்னனோ. கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கெகலியவும் புளுகுவான். பாவம் சிங்கள மக்கள் .

கிகிகி

பலாலி முகாம் சுற்றுவட்டாரத்தில 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சிங்களத்து கொலைவெறி பிடிச்சவங்களைத் தவிர வேறு யாருமே இல்லாத சூனியப்பிரதேசம். புலி 2கிலோ மீட்டருக்கு கை;ககுண்டு தாக்கியிருக்கு என்றால் பாராட்ட வேண்டிய ஒண்டு தான்.

ஒரு கைக்குண்டுத் தாக்குதலுக்காக, யாழ்பாணத்தில எல்லா தொலைபேசியையும் நிப்பாட்டி வைச்சிருக்கினமோ?

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தின் 4வது இணைப்பில் இருந்து

இத்தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாவது:

பலாலி வான்படைத்தளம் மற்றும் இராணுவக் களஞ்சியம் ஆகியவற்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் இரு வானூர்திகள் தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக எமது தளத்துக்குத் திரும்பியுள்ளனர்.

இதில் சிறிலங்கா இராணுவத்துக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த வானூர்தியில் இருந்த எமது வானோடி ஒருவரை தொடர்பு கொண்டபோது பலாலித் தளம் தீப்பற்றி எரிந்தததை தாம் பார்த்ததாகக் கூறினார்.

இத்தாக்குதல் தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பான ஊடக மையத்தின் பேச்சாளர் கூறியதாவது:

எமது இராணுவத்தினர் இலகு ரக வானூர்தி ஒன்றைப் பார்த்துள்ளனர். அது பருத்தித்துறையிலிருந்து பலாலி நோக்கி வந்துள்ளது. எமது படையினர் 50 கலிபர் துப்பாக்கிகள் மூலம் அந்த வானூர்தியை நோக்கி தாக்குதல் நடத்திய போதும், அவர்கள் இராணுவ பதுங்கு குழிகள் மீது 2 குண்டுகளை வீசிச் சென்றனர். இத்தாக்குதலில் 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்றார்.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தனது இணையத் தளத்தில் பதிவு செய்துள்ள செய்தி:

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்தி உள்நுழைய முயன்றது. அதனை இராணுவத்தினர் முறியடித்தனர்.

பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்து அந்த வானூர்திகள், பலாலிக்கு வந்தன. பாதுகாப்பு எச்சரிக்கை சாதனங்கள் உடனே இயக்கப்பட்டன. தாக்குதல் வானூர்திகளை நோக்கி வானூர்தி எதிர்ப்பு தளபாடங்கள் நிறுத்தப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் தாக்குதல் ஏதும் நடத்தாமல் தாக்குதல் வானூர்தி திரும்பியுள்ளது.

இருப்பினும் திரும்பிச் செல்லுகையில் மயிலிட்டி கடற்பரப்பில் வெடிபொருட்களை வீசிச் சென்றுள்ளனர்.

இதனிடையே பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31525

இனி ரம்புக்கல, இந்தியா வழங்கிய ராடர்கள் வேலை செய்யவில்லை என்று இந்தியா மீது குற்றம் சொன்னாலும் சொல்லுவார்.

இல்லை இல்லை இலங்கை இறந்து போன இராணுவத்துக்கென்று இப்பொழுது இந்தியாவிடம் வாங்கினால் போதாது என்று பாக்கிஸ்த்தான் சீனா ஐரோப்பா நாடுகளில் இன்னும் அமெரிக்காக்காரனிடமும் அல்லவா வாங்கினவ ஆதலாம் இனி புலிகளிடம் தான் ஆயுதம் வாங்கி அடுக்க வேண்டும்!!!!!!!!!!!!!!!!

புதினத்தின் 4வது இணைப்பில் இருந்து

எமது இராணுவத்தினர் இலகு ரக வானூர்தி ஒன்றைப் பார்த்துள்ளனர். அது பருத்தித்துறையிலிருந்து பலாலி நோக்கி வந்துள்ளது. எமது படையினர் 50 கலிபர் துப்பாக்கிகள் மூலம் அந்த வானூர்தியை நோக்கி தாக்குதல் நடத்திய போதும், அவர்கள் இராணுவ பதுங்கு குழிகள் மீது 2 குண்டுகளை வீசிச் சென்றனர். இத்தாக்குதலில் 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்றார்.

http://www.eelampage.com/?cn=31525

ஹி! ஹி!! ஹி!!! அப்ப இராணுவத்தினர் பதுங்கு குழிகளுக்குள் தான் நித்திரை கொள்ளினம் போல இருக்கு.

அட என்ன ஒரு இனிப்பான செய்தி, வானவில் தூங்கி எழும்புற நேரத்தில் இவளவும் நடந்திச்சுதா...........?

  • கருத்துக்கள உறவுகள்

வான்புலிகளின் தாக்குதலில் ஆறு படையினர் பலி - சி.என்.என்

வான்புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டும், 13பேர் காயமடைந்துமுள்ளதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள மயிலிட்டியில் சிங்களப் படைகளின் பொறியியற்பிரிவைச் சேர்ந்த படையினர் நிலை கொண்டிருந்த படைமுகாமே தாக்குலுக்கு உள்ளானதாக சி.என்.என் தெரிவித்துள்ளது.

இதேவேளை பலாலி கூட்டுப்படைத் தளம் மீதான வான்புலிகளின் தாக்குதலை முதலில் மறுத்த சிங்கள அரசும் அதன் படைத்தரப்பும் தற்போது தாக்குதல் நடந்ததனை ஏற்றுக் கொள்கின்றபோதும் பலாலிப் பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லையெனத் தெரிவித்து வருகிறது.

http://www.sankathi.net/index.php?option=c...74&Itemid=6

Edited by கந்தப்பு

தற்போது கைத்தொலைபேசிகள் வேலை செய்கின்றன எல்லோரும் உங்களுடைய உறவினர்களை அழைத்து புதினங்களை கேட்கலாம்.

Edited by யாழ்வினோ

புலி பதுங்குது பதுங்குது எண்டு கேலி செய்தவர்களுக்கெல்லாம் ஒரு சிறந்த அடி, புலி பதுங்குறது கூட பாயத்தான் எங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத முழு முட்டாளகள் நிறைந்ததுதான் இலங்கை அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் எழுந்தவுடன் நல்ல செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் எழுந்தவுடன் நல்ல செய்தி

ரீயைக் குடிச்சுக் கொண்டு லண்டனில இருந்து இப்படியான செய்தி வாசிக்கிறது போல சொர்க்கம் எங்க இருக்குது..என்ன கறுப்பி அக்கா..!

அவனவன் நித்திரை முழிச்சு.. எவ்வளவோ றிஸ்க் எடுத்து ஆக்கிரமிப்புப் படையின்ர அடுத்த கட்ட நகர்வை தடுக்க முயலேக்க.. நாங்க என்னடான்னா... ஊருக்க ஆமியை வர விட்டதும் இல்லாம.. ஊரை விட்டு ஓடி வந்து பொய் திருகுதாளம் செய்து அகதியாய் குந்தி இருந்து குதர்க்கம் பேச செய்தி..பார்த்துக் கொண்டிருக்கிறது போல கேவலம் கோழைத்தனம்..எதுவுமில்ல உலகில்..!

எதிரியின் வளங்களை நோக்கி தாக்குதல் நடத்திய மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்..! வருவோம் இணைவோம்.. நீங்கள் தொடருங்கள்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாண் புலிகளுக்கு வாழத்துக்கள்

எதிரியின் வளங்களை நோக்கி தாக்குதல் நடத்திய மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.

வழ்த்துக்கள் வருங்காலம் நமக்கே சொந்தம்

அட நான் யாழுக்கு வரமுன்னம் இவ்வளவும் நடந்து முடிந்துசா,கேட்கவே சந்தோசமாக இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழ்த்துக்கள் வருங்காலம் நமக்கே சொந்தம்

தற்சமையம் தாக்குதலால் ஏற்ப்பட்ட இழப்பவிட மீண்டும் ஒரு மாதம் அவகாசம் கொடுத்து விமான எதிர்ப்பு ஆயுதங்கள் ராடர்கள் எல்லாம் வாங்க விட்டு விட்டு துனிந்து அடித்து இருக்கிறார்கள் என்றால்?????

இந்த வெற்றியை இலங்கை அனியினி வெற்றியில் பங்கு கொள்ளூம் எமது முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு நல்ல உதாரணம் :P :P

இந்த தாக்குதல் முலம் என்ன சொல்லி இருக்கிறார்கள்??????

தமிழனாக பிறந்ததுக்கு கவலைப்பட்டகாலம் போய் பெருமைபட வைத்த எங்கள் தலைவரின் காலத்தில் நானும் ஒரு முலையில் வாழ்கிறேன் என்பதே இந்த பிறவியில் நான் பெற்ற வரம்........

சரி செய்தி வாசிது விட்டு பின்னேரம் இலங்கை அணிக்கு ஆதர்வாக கைதட்ட ரெடியோ?

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதல்: பலாலியில் குண்டு மழை - 6 பேர் பலி

ஏப்ரல் 24, 2007

யாழ்ப்பாணம்: விடுதலைப் புலிகள் மீண்டும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். பலாலி விமான தளம் மீது விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்கள் சரமாரியாக குண்டுகளைப் பொழிந்து நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் இலங்கை படையினருடன் போராடி வந்த விடுதலைப் புலிகள் தற்போது வான் பலத்தையும் பெற்றுள்ளனர். கடந்த மாதம் 26ம் தேதி கொழும்பு அருகே உள்ள காட்டுநாயகே விமானப்படை தளம் மீது அதிகாலையில் நடத்திய விமானத் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

உலக அளவில் வேறு எந்த போராளி அமைப்பிடமோ அல்லது தீவிரவாத அமைப்பிடமோ விமான பலம் இல்லை என்பதால் புலிகளின் இந்த புதிய பலம் அனைவரையும் அதிர வைத்தது.

கொழும்பு தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்தே இலங்கை அரசு இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஒரு விமான தாக்குதலை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பலாலி விமானப்படை தளத்தில் இன்று அதிகாலை புலிகள் தங்களது இலகு ரக விமானத்தால் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரமாரியாக குண்டு மழை பொழிந்து இந்த விமானங்கள் நடத்திய தாக்குதலால் விமானப்படை தளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் நிலை குலைந்தனர்.

புலிகளின் தாக்குதலில் 7 பேர் பலியானதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 17 பேர் காயமடைந்தனர். வான் வழித் தாக்குதலின்போது பீரங்கித் தாக்குதலையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் விமான படைத் தளத்தில் உள்ள ராணுவ முகாம் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விமானப் படைத்தளத்திலும் கணிசமான அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் இந்த இரண்டாவது விமானத் தாக்குதல் இலங்கையில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

- தற்ஸ் தமிழ்

50ற்கும் அதிகமான தடவைகள் கொழும்பில் அன்புலன்ஸ் ரத்மலானைக்கும் கொழும்பிற்கும் இடையே ஓடடியதாக தமிழ்நெட்டின் பிந்திய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50ற்கும் அதிகமான தடவைகள் கொழும்பில் அன்புலன்ஸ் ரத்மலானைக்கும் கொழும்பிற்கும் இடையே ஓடடியதாக தமிழ்நெட்டின் பிந்திய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஓட்டத்திற்க்கு இரண்டு விக்கட் என்று பார்த்தாலும் விக்கட் இருக்கணுமே ஹாஸ்பிட்டல :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50ற்கும் அதிகமான தடவைகள் கொழும்பில் அன்புலன்ஸ் ரத்மலானைக்கும் கொழும்பிற்கும் இடையே ஓடடியதாக தமிழ்நெட்டின் பிந்திய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது ஒன்றும் இல்லை அண்ணா ரகசிய சந்திப்புக்கு போன இராணுவதளபதிமாரும் ரகசியமாக அன்புலன்ஸில் வந்து இருப்பார்கள்...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.