Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும்

உயிர்த்த ஞாயிறு  தினத்தன்று (ஏப்ரல் 21-2019) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக 31ஆம் நாள் அஞ்சலியும்,  திருப்பலியும் ஆத்ம சாந்திப் பூசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த. சிவநாதன் அறிவித்துள்ளார்.

Batticaloa.JPG

ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில் உயிர்நீத்த உறவுகளின் குடும்பத்தார்கள், அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Batti_zion_Church.JPG

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் நண்பகல் 12.00 மணியளவில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசையும் நடைபெறவுள்ளது.

அத்துடன் அன்னதானமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/56308

 

ஒரு கேள்வி

ஆண்டகை சீயோன் தேவாலயத்துக்கோ அல்லது மட்டக்களப்புக்கோ குண்டு வெடித்த பின் வந்தவரா? ஆருக்காவது இது தொடர்பாக தெரியுமா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஒரு கேள்வி

ஆண்டகை சீயோன் தேவாலயத்துக்கோ அல்லது மட்டக்களப்புக்கோ குண்டு வெடித்த பின் வந்தவரா? ஆருக்காவது இது தொடர்பாக தெரியுமா

இதுவரைக்கும் ரணில்,மைத்திரி,நாமல்  மூன்று பேரும் போயிருந்தார்கள் ...மெதடிஸ்த ஆலய தாக்குதலுக்கு ஏன் கத்தோலிக்க மதகுரு போக வேண்டும் ?

 

On 5/20/2019 at 12:46 PM, ரதி said:

இதுவரைக்கும் ரணில்,மைத்திரி,நாமல்  மூன்று பேரும் போயிருந்தார்கள் ...மெதடிஸ்த ஆலய தாக்குதலுக்கு ஏன் கத்தோலிக்க மதகுரு போக வேண்டும் ?

 

நன்றி ரதி

உண்மையில் இந்த தேவாலயம் மெதடிஸ் தேவாலயம் என்பதை பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

அத்துடன் மெதடிஸ் தேவாலயம் என்றால் ஏன் கத்தோலிக்க தலைவர் போகக் கூடாது என்றும் விளங்கவில்லை. எல்லாரும் மனுசர்கள் தானே...?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎22‎/‎2019 at 2:28 AM, நிழலி said:

நன்றி ரதி

உண்மையில் இந்த தேவாலயம் மெதடிஸ் தேவாலயம் என்பதை பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

அத்துடன் மெதடிஸ் தேவாலயம் என்றால் ஏன் கத்தோலிக்க தலைவர் போகக் கூடாது என்றும் விளங்கவில்லை. எல்லாரும் மனுசர்கள் தானே...?

அவர்,நீர்கொழும்பு சேர்ச்சை போய்ப் பார்த்தவரா?..தன் மதத்தில் இருந்து பிரிந்த ஒரு மதப் பிரிவினரை ஏன் பார்க்கப் போகோணும் என்று நினைத்திருக்கலாம்...அவர் முஸ்லீம் மக்களுக்கு மட்டும் நல்லவர் 

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் நடந்த நினைவு கூரலில் ஒரு முஸ்லீம் மக்கள் கூட கலந்து கொள்ளவில்லை என்றும்,ஒன்றும் நடவாத மாதிரி கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும் கேள்விப் பட்டேன்...குறைந்த பட்சம் தங்களுடைய மசூதிகளிலாவது ஒரு அஞ்சலி நிகழ்வை நடத்தி தாங்களும் மனிதாபிமானவர்கள் என்று காட்டி இருக்கலாம் ...சிங்களவன் அடிச்ச பிறகு சேர்ந்து வெசாக் கொண்டாடினம் தங்கட இருப்பை தக்க வைக்க ...தமிழன் ஒரு மடப் பயல் எப்படியும் அவனை ஏமாத்தலாம் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கு...இதற்கு பிறகும் இவர்களது கடையில் பொருட்களை வாங்கும் தமிழரை சொல்ல வேண்டும்  

  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2019 at 7:41 PM, நிழலி said:

ஒரு கேள்வி

ஆண்டகை சீயோன் தேவாலயத்துக்கோ அல்லது மட்டக்களப்புக்கோ குண்டு வெடித்த பின் வந்தவரா? ஆருக்காவது இது தொடர்பாக தெரியுமா

கன பேரிடம்  நானும் ஏன் செல்லவில்லை என கேட்டேன்   அவர்கள் சொன்னது அவர்கள் வேற வேதம் என்று  அவர்களுக்குள்ளும் கன பிரிவுகள் (இந்த சேர்ஜ் ஆட்கள் இடையில் மதம் மாறினவர்களாம் )  

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கன பேரிடம்  நானும் ஏன் செல்லவில்லை என கேட்டேன்   அவர்கள் சொன்னது அவர்கள் வேற வேதம் என்று  அவர்களுக்குள்ளும் கன பிரிவுகள் (இந்த சேர்ஜ் ஆட்கள் இடையில் மதம் மாறினவர்களாம் )  

சைவ மதத்தில் இருந்தா, ஏன் என்றால் இவர்கள் பலரது பெயர்கள் சுத்தமான சைவ சமய பெயர்களாக. இருந்தன;  பரம்பரை கிறிஸ்த்தவர்களுக்கு தமிழ் பெயர் இருக்கும் ஆனால் சுத்தமான சைவ பெயர் இருக்காது ....!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அல்லேலுயா (?) போல் தென்படுகிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.