Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிருசுவில் படுகொலை – படை அதிகாரியின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவில் படுகொலை – படை அதிகாரியின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

sunil-rathnayake2-300x198.jpgமிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் நாள், மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர்.

அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து சிறிலங்கா படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள், ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏனைய நான்கு சிறிலங்கா படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு முன்னாள் தலைமை நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களும் அறிவித்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்ட மகேஸ்வரன் என்பவரின் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பை உறுதி செய்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2019/05/21/news/38083

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

மிருசுவில் படுகொலை – படை அதிகாரியின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

sunil-rathnayake2-300x198.jpgமிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் நாள், மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர்.

எட்டுப் பொதுமக்களை கொன்ற, இந்த சிங்கள இராணுவத்தினனுக்கு,
உண்மையிலேயே... மரணதண்டனை வழங்கப் படுமா?
படுகொலை நடந்து, 19 வருடமாகியும்... வழக்கு இன்னும் முடியவில்லையா...?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

எட்டுப் பொதுமக்களை கொன்ற, இந்த சிங்கள இராணுவத்தினனுக்கு,
உண்மையிலேயே... மரணதண்டனை வழங்கப் படுமா?
படுகொலை நடந்து, 19 வருடமாகியும்... வழக்கு இன்னும் முடியவில்லையா...?

2010 தரவுகளின் அடிப்படையில்  குற்றம் சாட்டப்பட்டதில் இருந்து மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு சராசரியாக15 வருடங்கள் எடுக்கிறதாம் ( அமெரிக்க புள்ளி விபரம் என நினைக்கின்றேன் ) .

 

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை வேண்டாமே.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

மரணதண்டனை வேண்டாமே.

நீஙக வேற, பவுடர் கோஸ்டிகளுக்கே இல்லை. தமிழர் கொலையாளிக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

மரணதண்டனை வேண்டாமே.

மரணம் விளைவிப்பது வாழ்வியலின் ஒரு அடிப்படையான அம்சம்  தானே;  ஏன் அதனுடன் அராத்துப் படப் போவான் ।  ஒரு தகவலுக்காக கேட்கிறேன் நீங்கள் தொடர்ச்சியாக  உயிர்வாழ்வனவிற்கு  மரணத்தை விளைவித்துக் கொண்டிருக்கவில்லை என நம்புகிறீர்களா ?

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சாமானியன் said:

மரணம் விளைவிப்பது வாழ்வியலின் ஒரு அடிப்படையான அம்சம்  தானே;  ஏன் அதனுடன் அராத்துப் படப் போவான் ।  ஒரு தகவலுக்காக கேட்கிறேன் நீங்கள் தொடர்ச்சியாக  உயிர்வாழ்வனவிற்கு  மரணத்தை விளைவித்துக் கொண்டிருக்கவில்லை என நம்புகிறீர்களா ?

 

நான் என்ன சமண துறவியா?!

  • கருத்துக்கள உறவுகள்

8 தமிழ் மக்களைக் கொன்றவருக்கு மரண தண்டனை உறுதி.

அப்படின்னா.. 80,000 மக்களைக் கொன்ற மகிந்த.. கோத்தா.. பொன்சேக்காவுக்கு..

நவாலி.. புதுக்குடியிருப்பு.. மடு மாதா.. யாழ் பெரிய தேவாலயம் தாக்குதல்களில் சுமார் 500 பொதுமக்களைக் கொன்ற சந்திரிக்காவுக்கு..

சுமார் 500 பேர் வரை கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம்.. என்ற.. செம்மணிப் படுகொலைகளின் நாயகன்... பொன்சேகாவுக்கு...

83 ஜூலை கலவரத்தின் போது கொல்லப்ப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் ஜே ஆர்.. ரணில்.. பிரேமதாச... காமினி.. லலித் போன்றவர்களுக்கு...

5000 பொதுமக்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்திக்கு...

என்ன தண்டனை..????!

பிகு: இதில் திட்டமிட்டு.. பொதுமக்களைக் கொன்றவர்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனர். போர் நடவடிக்கையின் போது.. கொல்லப்பட்டவர்கள் அல்ல. அதாவது இராணுவம்.. போராளிகள். 

 

On 5/21/2019 at 3:34 PM, nedukkalapoovan said:

8 தமிழ் மக்களைக் கொன்றவருக்கு மரண தண்டனை உறுதி.

அப்படின்னா.. 80,000 மக்களைக் கொன்ற மகிந்த.. கோத்தா.. பொன்சேக்காவுக்கு..

நவாலி.. புதுக்குடியிருப்பு.. மடு மாதா.. யாழ் பெரிய தேவாலயம் தாக்குதல்களில் சுமார் 500 பொதுமக்களைக் கொன்ற சந்திரிக்காவுக்கு..

சுமார் 500 பேர் வரை கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம்.. என்ற.. செம்மணிப் படுகொலைகளின் நாயகன்... பொன்சேகாவுக்கு...

83 ஜூலை கலவரத்தின் போது கொல்லப்ப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் ஜே ஆர்.. ரணில்.. பிரேமதாச... காமினி.. லலித் போன்றவர்களுக்கு...

5000 பொதுமக்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்திக்கு...

என்ன தண்டனை..????!

பிகு: இதில் திட்டமிட்டு.. பொதுமக்களைக் கொன்றவர்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனர். போர் நடவடிக்கையின் போது.. கொல்லப்பட்டவர்கள் அல்ல. அதாவது இராணுவம்.. போராளிகள்.

இவை அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும் போது தான் அங்கு ஓரளவு நீதி நிலவுவதாக கருத முடியும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.