Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை கைது செய்ய காங். கோரிக்கை

Featured Replies

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளாகியும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து தமிழகத்திற்குக் கொண்டு வர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேட்டார்.

சட்டசபையில், நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் பிரபாகரனை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்து 16 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் பிரபாகரனை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

பிரபாகரனுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டும் 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதை செயல்படுத்த தமிழக காவல்துறை இந்த காலகட்டங்களில் எடுத்த நடவடிக்கை என்ன?

சட்டம் செயலிழந்து கிடக்கிறது என்பதையே இது காட்டுகிறது. மத்திய அரசு உடனடியாக இன்டர்போல் உதவியுடன் பிரபாகரனை நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்கு அவரை உட்படுத்த வேண்டும்.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐயும் தூங்கிக் கொண்டிருக்கிறது. முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது.

முதல்வர் கருணாநிதி, பிரபாகரனுக்கு எதிராக நிலுவையில் உள்ள பிடிவாரண்ட்டை செயல்படுத்த முனைய வேண்டும்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் கடந்த 3 மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது பல இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் அலுமினிய குண்டுகள், இரும்பு உருளைகள் மற்றும் டெட்டனேட்டர்கள், ஏ.கே.56 துப்பாக்கி, கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், மனித வெடிகுண்டு ஜாக்கெட் உள்ளிட்டவை பிடிபட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் தொடர்புடைய 17 சம்பவங்கள் நடந்துள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தை தங்களது தளமாக புலிகள் பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

புலிகள் அமைப்புக்கு உதவும், ஆதரவு தரும் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மீது தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், தடை விதிக்க வேண்டும்.

புலிகள் அமைப்புக்கு ஆதரவு தருவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2007/04/26/congress.html

யோவ் ஞானசேகரா, என்னப்பா இது சின்னப்புள்ளத் தனமா இருக்கே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிப்பு சிரிப்பாக வருகிறது. இது நாளைய லங்காதீப திவயின டெய்லி எரர் இனவாத ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறும். தினமலர் இதனைப் பற்றி ஏதும் எழுதியிருக்கிறதா?

ஜெயலலிதா, கோமாளி சோ இற்கு அடுத்ததாக இன்னொரு பூச்சாண்டி ஒன்று தமிழ்னாட்டில் இருந்து

புறப்பட்டு இருக்கு....

சோனியா அம்மையாரே அமைதியாக இருக்கிறார், இது ஒன்று ஓவராக குரைத்து ஊளையிடுது....

பின் ஊக்கல் யாரும் இருக்கலாம்....

தமிழ் பெயரை வைத்துள்ள ஆரியனோ..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தில் இருக்கும் சந்திரனை பிடித்து வந்து ஞானசேகரன் ஜயாவின்ரை கோடிக்குள்ளை வை என்ற மாதிரியெல்லோ இந்தச் செய்தி இருக்கிறது. இவரெல்லாம் ஒரு அரசியல்வாதி, ஜயா நீங்கள் எந்த பிரபாகரனைச் சொல்லுகிறீர்கள், அதை முதலில் தெளிவாக்குங்கள் ஏனென்றால் எனக்கு அதிலை தான் சந்தேகம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

அவர்பேச்சில எண்டாலும் சொல்லிப்பார்ப்போம் என விழைகிறார்

அடுத்தமுறை தேர்தலில் இடம் கேட்கும் எண்ணமிருக்கலாம்.

ஆனால் என்னாலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.....

தொட்டு விளையாட எங்கள்

பிரபாகரன் தீயில்லையடா

பிரளயம்

அட நம்ம வடிவேலுக்கு அண்ணனா இருப்பரு போகிருக்குது.

தமிழ்ல அவர் பேர் "அஞ்ஞானசேகர்"

காங்கிரஸ் காரர்களுக்கு நேரு குடும்பத்தில இருந்து ஒருவர் தான் காலம் புராவும் ஆட்சி செய்யனும் என்று ஆசை முடியுமா? இல்லை இந்திய மாணிலங்களும் தான் ஆட்ட்சி செய்ய ஆசை

நடக்குறதை பேசுங்கப்பா........

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தன்:

ஆகாயத்தில் இருக்கும் சந்திரனை பிடித்து வந்து ஞானசேகரன் ஜயாவின்ரை கோடிக்குள்ளை வை என்ற மாதிரியெல்லோ இந்தச் செய்தி இருக்கிறது. இவரெல்லாம் ஒரு அரசியல்வாதிஇ ஜயா நீங்கள் எந்த பிரபாகரனைச் சொல்லுகிறீர்கள்இ அதை முதலில் தெளிவாக்குங்கள் ஏனென்றால் எனக்கு அதிலை தான் சந்தேகம் இருக்கிறது

சந்திரனல்ல நண்பரே சூரியனைப் பிடித்துத்தரச் சொல்கிறார் அந்த அனுமார். டெல்லிஜமானர்களிடம் நல்ல பேயர் வாங்குவதற்காக தமிழ்நாட்டில் இப்படிச்சிலர் பொறுக்கித்தனம் பண்ணுவது பெரிய விடயமில்லை. தமிழ் நாட்டுத் தமிழரைப்பற்றியே இவர்களுக்கு எவ்வித கவலையுமில்லை. ஈழத்தமிழரைப்பற்றியா சிந்திக்கப்போகிறார்கள். தமிழ்நாட்டில் இவர்களைப்போல சந்ததிச்சுவடு இல்லாத கனபேர் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் தமிழரல்லாத இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம் நாம் பெரிய ஆதரவை, பொறுப்புணர்வை எப்படி எதிர்பார்ப்பது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுசு புதுசாய் வாற நாயெளெல்லாம் எங்கடை சந்திரனை பார்த்து குலைச்சுட்டுப் போகுதுகள் அவ்வளவுதான்(நிலவைப் பார்த்து நாய் குரைத்ததாம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட அண்ணா சந்திரன் இல்லை அவர் சூரியன் நம்பியவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பார் மற்றவர்களை எரித்து விடுவார்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆச்சர்யப்படுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஏனென்றால் தமிழ் நாட்டுக்காங்கிரஸ்காரர்களில

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் தன்னைதானே கோமாளியாக காட்டிக்கொள்கிறார்கள்

ஞானசேகரனா? ஞானசூனியமா? உலக உருண்டையில் தமிழீழ விடுதலைப்புகளின் பங்கு ஓரு காட்டமான பங்கு இருக்கும் போது இந்த ஞானசூனியத்திற்கு என்னவாயிற்று. சிரிக்க வேண்டிய விடயந்தான். ஆனால் என்னால் வாயாற் சிரிக்க முடியவில்லை. ???????????

ம்ம்ம் பிரபலமாக இப்படியும் ஒரு வழியா??

சுப்ரமணியம்சுவாமிகள், தினமலர்கள் போன்றவற்றிற்கு ஸ்ரீலங்கா அரசு கொடுக்கும் மானியங்கள் போல தனக்கும் ஏதாவது கிடைக்கும் என்று ஞானசேகரன் எதிர்பார்க்கிறார் போல் இருக்கிறது. பாவம் ஞானசேகரனுக்கு என்ன பொருளாதாரா பிரச்சினையோ? யாருக்கு தெரியும்?

ஆனாலும் பணத்திற்காக தாய் மொழிக்கும் இனத்திற்கும் துரோகம் செய்து வயிறு வளர்க்கும் ஈனப்பிறவியாய் இருப்பதை விட தூக்கு மாட்டி தொங்கி விடுவது மேல் ஞானசேகரன்களே!!!.

அன்று இனத்தின் மானம் காக்க தூக்கு கயிற்றை முத்தமிட்ட கட்டபொம்மன் புகழ் தான் சரித்திரத்தில் இன்னும் வாழ்கிறது. இப்போது கூட துரோகிகளை மக்கள் எட்டப்பன் என்றே அழைத்து கொண்டிருக்கிறார்கள். நாளை உங்கள் பரம்பரைகளும் இப்படித்தான் அழைக்கப்படுவார்கள் சுப்பிரமணியம்சுவாமிகளே! ஞானசேகரன்களே!!.

பாஞ்ஜாலங் குறிச்சிக்குள் படைகள் அனுப்பிய பிரிட்டிஷ்சார் பயங்கரவாதிகளா? ஆக்கிரமிக்க வந்த அந்நியரை

எதிர்த்து போராடிய கட்டபொம்மன் பயங்கரவாதியா?

அமைதிப்படை என்று வேடமிட்டு வந்து அட்டகாசம் செய்தால் என்ன செய்வது? செய்தாருக்கு செய்த வினை. உங்களை போன்றவர்களின் பூச்சாண்டிகள் எல்லாம் நிறையவே பார்த்தாகிவிட்டது ஞான(மற்ற)சேகரன்களே!!!

Edited by vettri-vel

காமடி செய்வதற்க்கு காங்கிரஸ் காரங்களை மிஞ்ச அளே கிடையாது.

காங்கிரஸ் காரர்களுக்கு காமடி செய்யவில்லை என்றால் தூக்கம் வராது. ஒன்று இப்படி சொல்வார்கள் அல்லது தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி காங்கிரஸ் ஆட்சியென்று அறிக்கை விட்டு சிரிப்பலையை கிளப்புவர். எவனெல்லாம் இந்திய ஒற்றுமை, பற்று என்று பேசுகிறானோ அவனெல்லாம் தான் இந்த நாட்டை கிடைத்த விலைக்கு விற்றுள்ளான். இதில் பெரும் பங்கு காங்கிரசுக்கு உண்டு. முதலில் 1989ல் சொந்த நாட்டு பாதுகாப்புக்கு பீரங்கி வாங்கியதில் ஊழல் செய்து ஆட்சியைவிட்டு தூக்கி எறியப்பட்ட ராசீவின் கூட்டாளி கொட்டரோச்சியை அர்ஜெந்தினாவில் இருந்து இந்திய கொண்டுவரட்டும் அதன் பின் காற்றை கைது செய்வது எப்படி என்று கனவு காணட்டும் இந்த காங்கிரசு கோமாளிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.