Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்குத் தெரியாமல் வைத்தியர் ஷாபியால் கருத்தடை சிகிச்சை செய்ய முடியாது - 69 தாதியர்கள் வாக்கு மூலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே,  வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது பலோப்பியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம்  ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் - சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர். 

 doctor-kurunagal.jpg

சிசேரியன் சிகிச்சைகளின்போது அங்கு இருக்கும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தெரியாமல் இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் நிலையில், அவர் தற்போது சி.ஐ.டி. பிடியில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இந் நிலையில் வைத்தியர் ஷாபியுடன் சத்திர சிகிச்சைகளின் போது சத்திர சிகிச்சை கூடங்களில் இருந்தவர்கள் என  சி.ஐ.டி.யினர் 70  சத்திர சிகிச்சைக் கூட தாதியர்களை அடையாளம் கண்டனர். அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுகயீனம் காரணமாக சிகிச்சைப் பெறும் நிலையில் ஏனைய 69 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளபோதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். 

https://www.virakesari.lk/article/58279

  • கருத்துக்கள உறவுகள்

இதை முதலிலேயே எழுத நினைத்து ஏன் எங்கள் ஆட்களின் excitement ஐக் குறைப்பான் என்று எழுதாமல் விட்டு விட்டேன்! முறைப்பாடு செய்த பெண்கள் சர்ஜரிக்குப் பிறகு கவனிக்காத படி செய்திருக்க வேண்டுமெனில் பலோப்பியன் குழாயைத் தான் வெட்டியிருக்க வேண்டும்! இரத்தப் போக்குக் கட்டுப் பாடு, மயக்க மருந்து என்று ஒரு குழுவே சேர்ந்து செய்யும் சத்திர சிகிச்சை அது! இந்தக் கள்ள வேலையெல்லாம் இலங்கையில் சாத்தியமில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இதை முதலிலேயே எழுத நினைத்து ஏன் எங்கள் ஆட்களின் excitement ஐக் குறைப்பான் என்று எழுதாமல் விட்டு விட்டேன்! முறைப்பாடு செய்த பெண்கள் சர்ஜரிக்குப் பிறகு கவனிக்காத படி செய்திருக்க வேண்டுமெனில் பலோப்பியன் குழாயைத் தான் வெட்டியிருக்க வேண்டும்! இரத்தப் போக்குக் கட்டுப் பாடு, மயக்க மருந்து என்று ஒரு குழுவே சேர்ந்து செய்யும் சத்திர சிகிச்சை அது! இந்தக் கள்ள வேலையெல்லாம் இலங்கையில் சாத்தியமில்லை! 

வேறு  எங்காவது  சாத்தியம்????

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

வேறு  எங்காவது  சாத்தியம்????

ஒழுங்கான மருத்துவத் தகுதியே இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்கும் இந்தியாவில் சாத்தியம்! தகுதி பெற்ற வைத்தியர்களே ஒழுங்காகக் கண்காணிக்கப் படாமல் செயற்படும் நிலையும் இந்தியாவில் இருக்கிறது. வைத்தியர் சேட்டை விட்டாலும் விசில் ஊதி விடும் தாதியர்களும் மருத்துவ நிர்வாகிகளும் இலங்கையில் இந்தியாவை விட அதிகம் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

ஒழுங்கான மருத்துவத் தகுதியே இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்கும் இந்தியாவில் சாத்தியம்! தகுதி பெற்ற வைத்தியர்களே ஒழுங்காகக் கண்காணிக்கப் படாமல் செயற்படும் நிலையும் இந்தியாவில் இருக்கிறது. வைத்தியர் சேட்டை விட்டாலும் விசில் ஊதி விடும் தாதியர்களும் மருத்துவ நிர்வாகிகளும் இலங்கையில் இந்தியாவை விட அதிகம் இருக்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

ஒழுங்கான மருத்துவத் தகுதியே இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்கும் இந்தியாவில் சாத்தியம்! தகுதி பெற்ற வைத்தியர்களே ஒழுங்காகக் கண்காணிக்கப் படாமல் செயற்படும் நிலையும் இந்தியாவில் இருக்கிறது. வைத்தியர் சேட்டை விட்டாலும் விசில் ஊதி விடும் தாதியர்களும் மருத்துவ நிர்வாகிகளும் இலங்கையில் இந்தியாவை விட அதிகம் இருக்கிறார்கள்.

உண்மைதான்

வைத்தியம்  அதிலும்  பிரசவம்

அதிலும் அரச வைத்தியசாலையில் (போதனா வைத்தியசாலை -  குருநாகல)

ஒரு  கூட்டு  முறையில் தான் நடைபெற  வாய்ப்புள்ளது

ஆயிரக்கணக்கான  பெண்களுக்கு ......???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

உண்மைதான்

வைத்தியம்  அதிலும்  பிரசவம்

அதிலும் அரச வைத்தியசாலையில் (போதனா வைத்தியசாலை -  குருநாகல)

ஒரு  கூட்டு  முறையில் தான் நடைபெற  வாய்ப்புள்ளது

ஆயிரக்கணக்கான  பெண்களுக்கு ......???

எல்லாவற்றிற்கும் அடிப்படையான விடயங்களை விளங்கிக் கொள்ளாமல் fake news மூலம் பீதியைக் கிளப்பும் இணைய செய்திகள் தான் காரணம். இதே போன்ற இன்னொரு போலிச் செய்தி தான் ஆண்களை மலடாக்கும் மருந்துகளை முஸ்லிம்கள் உணவில் கலந்திருக்கக் கூடும் என்ற செய்தி. அப்படியொரு மருந்து இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

எல்லாவற்றிற்கும் அடிப்படையான விடயங்களை விளங்கிக் கொள்ளாமல் fake news மூலம் பீதியைக் கிளப்பும் இணைய செய்திகள் தான் காரணம். இதே போன்ற இன்னொரு போலிச் செய்தி தான் ஆண்களை மலடாக்கும் மருந்துகளை முஸ்லிம்கள் உணவில் கலந்திருக்கக் கூடும் என்ற செய்தி. அப்படியொரு மருந்து இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை! 

இதுக்குத்தான் நாங்க  யாழுக்க  கிடக்கிறம்...😍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இதை முதலிலேயே எழுத நினைத்து ஏன் எங்கள் ஆட்களின் excitement ஐக் குறைப்பான் என்று எழுதாமல் விட்டு விட்டேன்! முறைப்பாடு செய்த பெண்கள் சர்ஜரிக்குப் பிறகு கவனிக்காத படி செய்திருக்க வேண்டுமெனில் பலோப்பியன் குழாயைத் தான் வெட்டியிருக்க வேண்டும்! இரத்தப் போக்குக் கட்டுப் பாடு, மயக்க மருந்து என்று ஒரு குழுவே சேர்ந்து செய்யும் சத்திர சிகிச்சை அது! இந்தக் கள்ள வேலையெல்லாம் இலங்கையில் சாத்தியமில்லை! 

ஜஸ்டின்,நான் இந்த டொக்டர் இப்படி செய்தாரா,இல்லையா என்று கருத்து எழுத விரும்பவில்லை...ஆனால் ஊரில் இருக்கின்ற பிரசவம் பார்க்கின்ற வைத்தியர்கள் சிலர் சிசேரியரின் போது கருந் துளையினுடாக ஊசி போடுவதன் மூலம் இது சாத்தியம் என்று சொல்கிறார்கள்...இது பற்றிய உங்கள் கருத்து என்ன?...பக்கத்தில் இருப்பவர்கள் பார்ப்பதற்கு முன்னர் இவ்வாறு குறுகிய நேரத்தில் ஊசி போடலாம் என்று சொல்கிறார்கள் 


அவரோடு வேலை செய்த டாக்டர்கள் சிலர் அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று சொல்கிறார்கள்...ஆனால் எதற்காக 1000க் கணக்கான பெண்கள் இவருக்கு எதிராக காலத்தில் இறங்கினார்கள்?...இவரை மாதிரி எத்தனையோ முஸ்லீம் டொக்டர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள் அல்லவா?...அவர்கள் மேல் காட்டப் படாத துவேசம் இவர் எல் காட்டப் படுவதன் நோக்கம் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே,  வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது பலோப்பியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம்  ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் - சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர். 

மெத்தச் சரி. வைகாசிமாதம் இந்த வைத்தியர்மேல் புகார் கூறப்பட்டது. அச்சமயம் இது பொய்யென உடன் வாக்குமூலம் அளிக்க முன்வராத இந்தத் தாதிகள் ஒருமாதம் கடந்தபின் வைத்தியருக்குச் சார்பாக சாட்சிசொல்ல முன்வந்த காரணம் என்ன......???? எந்தப் புற்றில் எந்தப் பாம்போ....! நாங்களும் பால் ஊற்றுவோம்.!! 🤔 

15 minutes ago, Paanch said:

மெத்தச் சரி. வைகாசிமாதம் இந்த வைத்தியர்மேல் புகார் கூறப்பட்டது. அச்சமயம் இது பொய்யென உடன் வாக்குமூலம் அளிக்க முன்வராத இந்தத் தாதிகள் ஒருமாதம் கடந்தபின் வைத்தியருக்குச் சார்பாக சாட்சிசொல்ல முன்வந்த காரணம் என்ன......???? எந்தப் புற்றில் எந்தப் பாம்போ....! நாங்களும் பால் ஊற்றுவோம்.!! 🤔 

எங்கே போய் வாக்கு மூலம் அளித்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? கும்பலாக போய்  மீடியாவை கூப்பிட்டு சொல்லியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்களா?

இவர்களை இப்ப தான் சி.ஐ.டி கூப்பிட்டு விசாரிக்கின்றது. அவர்களும் தகுந்த இடத்தில் தான் தம் வாக்குமூலங்களை கொடுத்து இருக்கின்றனர். இதுதான் சரியான முறையும் கூட.

இவ் மருத்துவரை குற்றம் சாட்டிய பெண்களை அரசு தன் செலவிலேயே மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்து தெளிவான விளக்கத்தை பெற முடியும். அதை விட்டுட்டு பிரச்சனையை தீவிரமாக்குவதன் மூலம் குறுகிய அரசியல் லாபத்தை பெறத்தான் அரசு முயல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஜஸ்டின்,நான் இந்த டொக்டர் இப்படி செய்தாரா,இல்லையா என்று கருத்து எழுத விரும்பவில்லை...ஆனால் ஊரில் இருக்கின்ற பிரசவம் பார்க்கின்ற வைத்தியர்கள் சிலர் சிசேரியரின் போது கருந் துளையினுடாக ஊசி போடுவதன் மூலம் இது சாத்தியம் என்று சொல்கிறார்கள்...இது பற்றிய உங்கள் கருத்து என்ன?...பக்கத்தில் இருப்பவர்கள் பார்ப்பதற்கு முன்னர் இவ்வாறு குறுகிய நேரத்தில் ஊசி போடலாம் என்று சொல்கிறார்கள் 


அவரோடு வேலை செய்த டாக்டர்கள் சிலர் அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று சொல்கிறார்கள்...ஆனால் எதற்காக 1000க் கணக்கான பெண்கள் இவருக்கு எதிராக காலத்தில் இறங்கினார்கள்?...இவரை மாதிரி எத்தனையோ முஸ்லீம் டொக்டர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள் அல்லவா?...அவர்கள் மேல் காட்டப் படாத துவேசம் இவர் எல் காட்டப் படுவதன் நோக்கம் என்ன ?

ரதி, கருப்பையில் என்ன பெயருடைய ஊசியைப் போட்டால் கருத்தடை நிகழும் என்று அந்த ஊரில் இருக்கும் டாக்டர்கள் சொன்னார்களா? தெரிந்தால் அந்த ஊசி மருந்தின் பெயரை இங்கே குறிப்பிடுங்கள், தேடிப் பார்க்கலாம். எனது ஊகிப்பின் படி நீண்டகாலம் கருத்தரிப்பைத் தடுக்கக் கூடிய intrauterine device (IUD) எனப்படும் சிறிய குச்சி மாதிரியான உபகரணத்தை கருப்பையின் உள்ளே வைப்பதால் தான் தொடர்ந்த மலடாக்கலைச் செய்ய முடியும். ஆனால் IUD இருந்தால் மாதவிடாய் வராது, அது கருப்பையினுள் இருப்பதும் பெண்ணுக்கு உணர முடியும். எல்லாவற்றையும் விட மேலாக IUD வைக்கப் பட முடியாது என நான் நம்புவதன் காரணம், டாக்டர் தன் பொக்கற்றில் எடுத்துச் சென்று மற்றவர் காணாமல் சொருகி விடும் அளவுக்கு சத்திர சிகிச்சை கூடங்களின் செயற்பாடு சந்தைக் கடை மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொரு பணிக்கும் ஒரு உதவியாளர் இருப்பார், எல்லாம் பதிவு செய்யப் பட்டு சைன் இன் சைன் அவுற் என்று தான் சத்திர சிகிச்சைக் கூடம் வேலை செய்கிறது. இதையெல்லாம் அறியாதவர்கள் இப்படி பயப் பிராந்தி கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். 

29 minutes ago, Paanch said:

மெத்தச் சரி. வைகாசிமாதம் இந்த வைத்தியர்மேல் புகார் கூறப்பட்டது. அச்சமயம் இது பொய்யென உடன் வாக்குமூலம் அளிக்க முன்வராத இந்தத் தாதிகள் ஒருமாதம் கடந்தபின் வைத்தியருக்குச் சார்பாக சாட்சிசொல்ல முன்வந்த காரணம் என்ன......???? எந்தப் புற்றில் எந்தப் பாம்போ....! நாங்களும் பால் ஊற்றுவோம்.!! 🤔 

நீங்கள் பால் ஊற்றுங்கள் பாம்பை வளர்த்தெடுங்கள்! அந்த அரசியலில் எனக்கு உடன்பாடில்லா விட்டாலும் அது உங்கள் செயல் உங்கள் உரிமை!  ஆனால் விஞ்ஞானத்தை மருத்துவ அடிப்படையை fake news இனால் மூடி மறைக்கிற வேலையைச் செய்யாதிருங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டரின் வருமானம் திடிரேன அதிகரித்த விடயம் சமபந்தமாக முதலில் விசாரணை நடக்க தொடங்கியது என நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

இவர்களை இப்ப தான் சி.ஐ.டி கூப்பிட்டு விசாரிக்கின்றது.

 

14 hours ago, Justin said:

நீங்கள் பால் ஊற்றுங்கள் பாம்பை வளர்த்தெடுங்கள்! அந்த அரசியலில் எனக்கு உடன்பாடில்லா விட்டாலும் அது உங்கள் செயல் உங்கள் உரிமை!  ஆனால் விஞ்ஞானத்தை மருத்துவ அடிப்படையை fake news இனால் மூடி மறைக்கிற வேலையைச் செய்யாதிருங்கள்! 

உடனே விசாரித்தால் எப்படி.? மூடி மறைக்கிற வேலைகளை எப்படிச் செய்ய முடியும். ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.