Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி நடந்து வரும் போராட்டத்தில் அரச தரப்பு பிரதிநிதியாக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

அதேபோன்றதொரு சம்பவம் அங்கு சென்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கும் (கருணா) இடம்பெற்றுள்ளது. எனினும், போராட்ட ஏற்பாட்டாளர்கள், விநாயகமூர்த்தி முரளிதரனின் பாதுகாவலர் அணி அந்த விடயத்தை, வெளியில் கசிய விடாமல் அமுக்கி விட்டது.

கடந்த 19ம் திகதி கல்முனை போராட்டக்களத்திற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் சென்றிருந்தார். போராட்ட ஏற்பாட்டு தரப்பில் முரளிதரன் தரப்பும் இருந்ததால், முரளிதரன் அங்கு சென்றிருந்தார்.

அவர் உண்ணாவிரதிகளிற்கு அருகில் சென்றபோது, திடீரென இளைஞன் ஒருவர் எழுந்து எதிர்ப்பை வெளியிட்டார். முரளிதரனை ஒருமையில் விளித்து எதிர்ப்பு தெரிவித்தார்.

“எமது தலைவரை காட்டிக் கொடுத்த துரோகி நீ. எதற்காக இங்கு வந்தாய்? கல்முனையை தரமுயர்த்தும்படி எத்தனை வருடமாக போராடிக் கொண்டிருக்கிறோம். அரசிலிருந்தபோதும், பின்னரும் ஒருமுறைகூட வாய் திறக்காமல் இருந்துவிட்டு, இப்பொழுது எதற்காக இங்கு வருகிறீர்கள்? எங்களை வைத்து அரசியல் செய்ய முயலாதீர்கள்“ என அவர் உரத்த குரலில் எதிர்ப்பை வெளியிட ஆரம்பிக்க, முரளிதரனின் மெய்ப்பாதுகாவலர்கள் மற்றும் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்களில் நின்ற கருணா அணியினர் அந்த இளைஞனை வலுக்கட்டாயமாக அங்கிருந்து பின்னால் அழைத்து சென்றனர்.

உண்ணாவிரத மேடைக்கு பின்னால் அழைத்து சென்று அவருடன் பேசி சமரசம் செய்து, எதிர்ப்பை இல்லாமலாக்கினர். பின்னர், அது தொடர்பில் தகவல் வெளியிட்ட ஏற்பாட்டாளர்கள், அவர் மதுபோதையில் இருந்தார் என்றார்கள்.

நற்பிட்டிமுனையை சேர்ந்த இளைஞன் ஒருவரே எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

http://www.pagetamil.com/61376/

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,இந்த செய்தி உண்மையாயிருந்தால் சுமத்திரன் அடி வாங்கின செய்தி வெளி வரேக்கு முன் இந்த செய்தி வந்து இருக்குக்கோணும் அல்லவா?

பேஜ் தமிழ் எப்பவும் சுமத்திரனுக்கு துதி பாடும் இணையத்தளம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது{நீங்கள் உட்பட}

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

பெருமாள்,இந்த செய்தி உண்மையாயிருந்தால் சுமத்திரன் அடி வாங்கின செய்தி வெளி வரேக்கு முன் இந்த செய்தி வந்து இருக்குக்கோணும் அல்லவா?

பேஜ் தமிழ் எப்பவும் சுமத்திரனுக்கு துதி பாடும் இணையத்தளம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது{நீங்கள் உட்பட}

மூடி மறைத்த ஏற்பாட்டாளர்கள் என்று போட்டு இருக்கினம் .

தமிழ் பேஜ் இணையம்  போல் நிறைய வந்து காணாமல் போகின்றன  

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

மூடி மறைத்த ஏற்பாட்டாளர்கள் என்று போட்டு இருக்கினம் .

தமிழ் பேஜ் இணையம்  போல் நிறைய வந்து காணாமல் போகின்றன  

கமான் பெருமாள் நீங்களுமா?...சுத்தி எவ்வளவு பேர் அந்த உண்ணா விரதம் நடக்கும் இடத்தில் இருக்கினம் ...அங்கு கூட்டமைப்பினர் மேல்  எவ்வளவு வெறுப்பில் இருக்கினம் என்று தெரியுமா?...அவர்களது கையால் உண்ணா  விரதத்தை  முடிக்க கூடாது என்பதற்காத தானே பிக்கு கையால் முடித்தவர்கள் ...

மூடி மறைத்த ஏற்பாட்டாளர்கள் சுமத்திரன் அடி வாங்கின பிறகு வெளியால விட்டவர்களாக்கும் 😂

கருணா அம்மான் நல்லவர்...

* அம்மான் யுத்த நிறுத்த காலத்தில் புலிகளோடு இருந்த காலத்தில், அம்மானுக்கு அந்த அழகிய சிஐஏ பயிற்சி பெற்ற பெண் ஊடகவியாளரை அறிமுகப்படுக்தி, அம்மானுடன் இரு நாள் அம்முகாமிலேயே தங்கியிருந்து, படுக்கையை பகிர்ந்து ... மன்னிக்கவும் ... பேட்டியெடுத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவில் உள்வாங்கப்பட்டவைகளை கொண்டு ... புலிகளின் தலைமைமைகள் பிழையானவை ... என அறிக்கை விட அம்மான் முற்படுத்தப்பட்டதும் இதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம்தான்!
* புலி அடிக்கத்தொடங்க, தப்பி ஓடிய அம்மானை, பத்திரமாக அழைத்துச்சென்று பாதுகாப்பான தங்கிமிடத்தில் தங்க வைத்து, பல சிங்கள பெண்களை அம்மானுக்கு இன்றுவரை இரையாக்கும் வேலைகளில் ஈடுபட்டதும், அதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம் தான்!
* மேலாக, இன்றுவரை அம்மானின் ஊடக செயலாளர், நேற்றுவரை அமைச்சராக இருந்த, அதே முஸ்லீம் அரசியல்வாதியின் சகோதரரே!
* ...

அம்மான் நல்லவர் ... முஸ்லீங்களுக்கு எதிரானவர் ...

அம்மானுக்கு பின் தமிழ் மக்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nellaiyan said:

கருணா அம்மான் நல்லவர்...

* அம்மான் யுத்த நிறுத்த காலத்தில் புலிகளோடு இருந்த காலத்தில், அம்மானுக்கு அந்த அழகிய சிஐஏ பயிற்சி பெற்ற பெண் ஊடகவியாளரை அறிமுகப்படுக்தி, அம்மானுடன் இரு நாள் அம்முகாமிலேயே தங்கியிருந்து, படுக்கையை பகிர்ந்து ... மன்னிக்கவும் ... 

… …
.… …

, பல சிங்கள பெண்களை அம்மானுக்கு இன்றுவரை

இப்படி பொறாமை படலாமா?  தேவைப்பட்டால் உங்களுக்கும் ஏற்பாடு செய்து தருவார்கன் தானே? 😮😜

5 minutes ago, Jude said:

இப்படி பொறாமை படலாமா?  தேவைப்பட்டால் உங்களுக்கும் ஏற்பாடு செய்து தருவார்கன் தானே? 😮😜

நல்ல மனுஷர் பொறாமைப்படவோ, தங்களுக்கும் அப்பிடி வேணும் என்டு அடம்பிடிக்கவோ மாட்டாங்கள், கண்டியளோ!

😂😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nellaiyan said:

கருணா அம்மான் நல்லவர்...

* அம்மான் யுத்த நிறுத்த காலத்தில் புலிகளோடு இருந்த காலத்தில், அம்மானுக்கு அந்த அழகிய சிஐஏ பயிற்சி பெற்ற பெண் ஊடகவியாளரை அறிமுகப்படுக்தி, அம்மானுடன் இரு நாள் அம்முகாமிலேயே தங்கியிருந்து, படுக்கையை பகிர்ந்து ... மன்னிக்கவும் ... பேட்டியெடுத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவில் உள்வாங்கப்பட்டவைகளை கொண்டு ... புலிகளின் தலைமைமைகள் பிழையானவை ... என அறிக்கை விட அம்மான் முற்படுத்தப்பட்டதும் இதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம்தான்!
* புலி அடிக்கத்தொடங்க, தப்பி ஓடிய அம்மானை, பத்திரமாக அழைத்துச்சென்று பாதுகாப்பான தங்கிமிடத்தில் தங்க வைத்து, பல சிங்கள பெண்களை அம்மானுக்கு இன்றுவரை இரையாக்கும் வேலைகளில் ஈடுபட்டதும், அதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம் தான்!
* மேலாக, இன்றுவரை அம்மானின் ஊடக செயலாளர், நேற்றுவரை அமைச்சராக இருந்த, அதே முஸ்லீம் அரசியல்வாதியின் சகோதரரே!
* ...

அம்மான் நல்லவர் ... முஸ்லீங்களுக்கு எதிரானவர் ...

அம்மானுக்கு பின் தமிழ் மக்கள்?

வாங்கோ நெல்லையன் நித்திரையால முழிச்சிட்டீங்களோ...என்னும் எத்தினை நாலைக்குத் தான் இதே ஒப்பாரியை பாடப் போறீங்கள்...சுமத்திரனுக்கு அடி  காணுமாமோ?...உங்களுக்கு கவலையாத தான் இருக்கும்...இனி மேலாவது உருப்படியாய் ஏதாவது செய்ய சொல்லுங்கோ...அட்லீஸ்ட் கல்முனையாவது மீட்டு கொடுக்கச் சொல்லுங்கோ பார்ப்பம்  
சுமத்திரனுக்கு அடி விழுந்தால் ஏன் கருணாவோட பாயுறீங்கள்...அவர் காத்துப் போன பலூனாச்சே...கூட்டமைப்பினரும் திருந்தப் போவதில்லை...நீங்களும் மாற போவதில்லை...இப்படியே ஒப்பாரி வைச்சிட்டு இருங்கோ 

ரதி, ... நித்திரையோ, முழிப்போ ... இங்கிருந்து ஒப்பாரிதான் அதிகப்பட்சமாக பாட முடியும். அதற்கு மேல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா?

சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் ..????

கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ...??? ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை!

கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை.  எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன? இன்றும் கிழக்கில் இருட்டில்! 

கூட்டமைப்பினை விட மிக மோசமான  பொறுக்கி தான் இந்த  கருணா இல்லை முரளி .....கருணா என்று  எங்கள்  தலைவர் வைத்த பெயருக்கு தகுதி இல்லாத ஆள் தான் இந்த கருணா .....

On 6/24/2019 at 4:10 AM, Jude said:

இப்படி பொறாமை படலாமா?  தேவைப்பட்டால் உங்களுக்கும் ஏற்பாடு செய்து தருவார்கன் தானே? 😮😜

அவர் எழுதிய அவ்வளவு கருத்துகளுக்குமிடையில் உங்களுக்கு அது மட்டும் தான் தெரிந்தது என்றால் நீங்கள் தான் பொறாமைப்படுகிறீர்கள் போல. 😂

On 6/23/2019 at 9:00 AM, பெருமாள் said:

கடந்த 19ம் திகதி கல்முனை போராட்டக்களத்திற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் சென்றிருந்தார். போராட்ட ஏற்பாட்டு தரப்பில் முரளிதரன் தரப்பும் இருந்ததால், முரளிதரன் அங்கு சென்றிருந்தார்.

சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த மக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்று கேட்டவர் கருணா. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nellaiyan said:

ரதி, ... நித்திரையோ, முழிப்போ ... இங்கிருந்து ஒப்பாரிதான் அதிகப்பட்சமாக பாட முடியும். அதற்கு மேல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா?

சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் ..????

கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ...??? ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை!

கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை.  எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன? இன்றும் கிழக்கில் இருட்டில்! 

நீங்கள் கூட்டமைப்பின்,சுமத்திரனின் ஆள் என்று தெரியும்...ஆனால் பாருங்கோ இப்பவும் கருணாவும்,பிள்ளையானும் தான் செய்யோணும் என்று நினைக்கிறீங்கள் பாருங்கோ...அங்க தான் நீங்கள் நிக்கிறீங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/24/2019 at 3:14 AM, Nellaiyan said:

கருணா அம்மான் நல்லவர்...

* அம்மான் யுத்த நிறுத்த காலத்தில் புலிகளோடு இருந்த காலத்தில், அம்மானுக்கு அந்த அழகிய சிஐஏ பயிற்சி பெற்ற பெண் ஊடகவியாளரை அறிமுகப்படுக்தி, அம்மானுடன் இரு நாள் அம்முகாமிலேயே தங்கியிருந்து, படுக்கையை பகிர்ந்து ... மன்னிக்கவும் ... பேட்டியெடுத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவில் உள்வாங்கப்பட்டவைகளை கொண்டு ... புலிகளின் தலைமைமைகள் பிழையானவை ... என அறிக்கை விட அம்மான் முற்படுத்தப்பட்டதும் இதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம்தான்!
* புலி அடிக்கத்தொடங்க, தப்பி ஓடிய அம்மானை, பத்திரமாக அழைத்துச்சென்று பாதுகாப்பான தங்கிமிடத்தில் தங்க வைத்து, பல சிங்கள பெண்களை அம்மானுக்கு இன்றுவரை இரையாக்கும் வேலைகளில் ஈடுபட்டதும், அதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம் தான்!
* மேலாக, இன்றுவரை அம்மானின் ஊடக செயலாளர், நேற்றுவரை அமைச்சராக இருந்த, அதே முஸ்லீம் அரசியல்வாதியின் சகோதரரே!
* ...

அம்மான் நல்லவர் ... முஸ்லீங்களுக்கு எதிரானவர் ...

அம்மானுக்கு பின் தமிழ் மக்கள்?

நான் கிழக்கு அதுவும் கல்முனைக்கு பக்கம் சம்பவம் நடந்த இடத்தில் நின்றேன் சுமந்திரன் ஆஜர் ஆகும் போது முதலில்  ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது வரவேண்டாம் என்று கூச்சல் விடப்பட்டது மக்கள் ஆக்ரோஷமான கட்டினார்கள் கூட்டமைப்பினர் வேண்டாம் என்று சொல்லி.

ஆனாலும் சபையில் நின்ற பெரியோர்களால் என்ன சொல்லுகிறார் எனக் கேட்போம் என சொல்லப்பட்டது அரச பேச்சாளர் மூன்று மாதம் ஒப்பந்த காலக்கேடு கொண்டு வந்தார்    இதனிடையே இந்த தீர்வு தேவையில்லை நீங்கள் செல்லலாம் என சொல்லி மக்கள் கூச்சல் இட்டார்கள்    செருப்பு வீசப்பட்டது கதிரைகள் வீசப்பட்டது ஆள் ஓட்டம் பிடிச்சார்

கர்ணா பிள்ளையானை குற்றம் சொல்லும் நீங்கள் இதுவரை கூட்டமைப்பிர் செய்து கிழிச்சது என்ன என்றும் சொல்லவேண்டும் கிழக்கு மக்கள் தேர்தலில் செய்தி சொல்வார்கள் வெளிநாட்டிலிருந்து கருத்து சொல்வது போல் ஆகிவிடாது 

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் பல பேருக்கும் , கர்ணா அமைச்சராக இருக்கும் போது பலருக்கும் தொழில் வாய்ப்பு , மண்முனை பாலம் ,மட்டக்களப்பு வாசிக சாலை ,மட்டுநகர் பஸ்தரிப்பு நிலையம், பல போராளிகளுக்கு (இறந்த) வீடுகள்  இன்றுவரைக்கும் இலங்கையில் பெரிய வாசிகசாலை என கட்டப்படாமல் இருக்கிறது கட்டப்பட்டால் அது பிள்ளையான் பெயர் சொல்லும் என்ற காரணத்தினால் )  வீதிகள் குறிப்பாக பல கிராமங்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் கர்ணா மீது குற்றம் இருந்தாலும் கூட்டமைப்பினர் மீது பல ஆயீரம் குற்றங்கள் கிழக்கை கொடுத்து  இணைந்த அரசியல் செய்வோம் என்று தாரை வார்த்த இவர்களால் கல்முனை மக்களின் உரிமையை கூட வென்று கொடுக்க முடியாத போது இவர்கள் கிழக்கில் தேவையா இன்று தேரர்கள் தமிழ் மக்களுக்கு ஹீரோவாக தெரிகிறார்கள் இவர்கள் சீரோவாக தெரிகிரார்கள் ஆனால் தேரர்கள் தீர்வு  வாங்கி கொடுப்பார்கள் என்று நம்பிக்கை இல்லை  இருந்தாலும் கூட்டமைப்பினரை விட தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுகிறார்கள் .

நிந்தவூர் வரைக்கும் தெரிந்த உங்களுக்கு அம்பாறையில் ஒரு எம்பியை வைத்து ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது எல்லாம் அவர்கள் அரசியல் பலம் இப்படி இருக்க அம்பாறை மக்களுக்கு எதிரிய வச்சும் தங்கள் காரியத்தை வென்றெடுக்க வேண்டிய நிலை இதை விட்டுட்டு கூட்டமைப்பு செம்படிதென்றால் ஒரு ஓரமாக இருந்து செம்படிங்கள்.

கோடிஸ்வரனிடமும் சரியாக  மக்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்  நீங்கள் கூட்டமைப்பில் இருந்து  விலக வேண்டும் கூட்டமைப்பில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது என்றும் அதற்கு அவரோ நேரம் வரும் போது விலகுவேன்  வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பெற்றுக்கொடுக்க முயற்ச்சி செய்வேன் முடியாது போனால் முடிவு  அறிவிக்கப்படும் என்று சொன்னார் இந்த பேச்சிலாவது புரிந்து கொண்டால் சரி  குரு(கூ)ட்டமைப்பு கிழக்குக்கு தேவையில்லை . வேண்டுமென்றால் வடக்குக்கு வைத்து அழகு பாருங்கள்.

மட்டக்களப்பு சிறிநேசன் ,துரை, யோகேஸ்வரன்  ........................................................................  ????  

Edited by தனிக்காட்டு ராஜா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.