Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி... ஒப்புக் கொண்டது மத்திய அரசு?

Featured Replies

நாகாலாந்து மாநிலத்துக்கு தனி பாஸ்போர்ட் மற்றும் தனி கொடி பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாகாலிம் அல்லது அகன்ற நாகாலாந்து கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்- மூய்வா) பிரிவுடன் மத்திய அரசு 2015-ம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இந்தியா-நாகாலாந்து இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.

1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம்

2) நாகாலாந்து தனிக்கொடி

3) நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட்,

4) ஐநாவில் நிரந்தர பிரதிநிதி 5) கூட்டான வெளியுறவு கொள்கை

6) கூட்டான ராணுவ பயிற்சி நடவடிக்கை

7) நாகா ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது  நாகா இன மக்கள் வசிக்கும் பகுதிகளை நிர்வகிக்கும் அரசு

ஆகியவற்றை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

https://tamil.oneindia.com/news/india/centre-approves-separate-passport-flag-for-nagaland-355581.html

  • கருத்துக்கள உறவுகள்

இது தானா மாநில சுயாட்சி?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இது தானா மாநில சுயாட்சி?

இது தனிநாடு போலல்லவா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திக்கான ஆங்கில பதிவுகள் கூகுளில் எங்கும் காணோம்🧐.

இது உண்மைக் கதைதானா? அவ்வளவு நல்லவைங்களா இந்திய-பிராமணிய ஆதிக்க வர்க்கம்?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

இந்த செய்திக்கான ஆங்கில பதிவுகள் கூகுளில் எங்கும் காணோம்🧐.

இது உண்மைக் கதைதானா? அவ்வளவு நல்லவைங்களா இந்திய-பிராமணிய ஆதிக்க வர்க்கம்?

https://www.nagalandenglish.com/goi-approves-separate-passport-and-flag-for-nagas/

1975 களில் அவர்களின் காட்டு அடியை தாங்காமல் இந்திராகாந்தி கையை தூக்கினவ வழமைபோல் பின்பு ஆயுத களைவு அப்படி இப்படி என்று இழுத்து கொண்டுவந்து இப்ப குடுக்கினம் இந்தியன் அமைதி வல்லூறு படையின் ஆயுத களைவு வேண்டுகோளுக்கு முன் உதராணமாக நாகலாந்து புரட்சி குழுவை காட்டினவை ஆனால் இந்திய சுதந்திர பொழுது நாகலாந்து ஆங்கிலேயேர்களின் காலத்துக்கு முன் எப்படி சுத்திரமாய் இருந்தார்களோ அப்படியே தங்களின் சுயநிர்ணய உரிமையை கேட்க்க பிரிட்டன் இந்தியாவுடன் இணைத்துவிட்டு சோலி முடிந்தது என்று கையை வீசிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் கடுப்பில் இந்திய தேர்தல்களை ஒட்டுமொத்தமாய் பகிஸ்கரித்தார்கள் இந்த விடயத்தில் இந்திய ஊடகங்கள் பூசி மெழுகி கொண்டன செய்திகள் வெளியாகவண்ணம் . அவர்கள் வெற்றிக்கு ஒற்றுமைதான் காரணம் அன்றி வேறில்லை ஏனென்றால் பத்துக்கு மேற்பட்ட பழமைவாத குழுக்கள் அங்கு இருந்தும் ஒற்றுமையாக ஓரணியில் நின்றார்கள் .

ஆனாலும் நடைமுறை சாத்தியம் எப்படி என்பதை போக போகத்தான் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இது தானா மாநில சுயாட்சி?

இது உண்மையானால், கூட்டாட்சிக்கும் (confederation), சுய ஆட்சிக்கும் (federation ) இடைப்பட்ட, நெகிழ்வுடைய இறையாண்மை கொண்டது.

ஆயினும், இதில் உள்ள வாசகங்களை உற்று நோக்கினால், இது ஓர் ஒப்புதல் (approval) அளவிலான நெகிழ்வுடைய விட்டுக்கொடுப்பு.

இவ்வுரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இது தனிநாடு போலல்லவா இருக்கு.

 

3 hours ago, ampanai said:

 

1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம்

2) நாகாலாந்து தனிக்கொடி

3) நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட்,

4) ஐநாவில் நிரந்தர பிரதிநிதி 5) கூட்டான வெளியுறவு கொள்கை

6) கூட்டான ராணுவ பயிற்சி நடவடிக்கை

7) நாகா ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது  நாகா இன மக்கள் வசிக்கும் பகுதிகளை நிர்வகிக்கும் அரசு

ஆகியவற்றை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

https://tamil.oneindia.com/news/india/centre-approves-separate-passport-flag-for-nagaland-355581.html

சீனாவுடன் இணைந்துள்ள ஹொங்கொங் மற்றும் மக்காவோ ஆகியவை இவ்வாறான உரிமைகளை கொண்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

 

சீனாவுடன் இணைந்துள்ள ஹொங்கொங் மற்றும் மக்காவோ ஆகியவை இவ்வாறான உரிமைகளை கொண்டுள்ளன.

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

நாகாலாந்து மாநிலத்துக்கு தனி பாஸ்போர்ட் மற்றும் தனி கொடி பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாகாலிம் அல்லது அகன்ற நாகாலாந்து கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்- மூய்வா) பிரிவுடன் மத்திய அரசு 2015-ம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இந்தியா-நாகாலாந்து இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.

1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம்

2) நாகாலாந்து தனிக்கொடி

3) நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட்,

4) ஐநாவில் நிரந்தர பிரதிநிதி 5) கூட்டான வெளியுறவு கொள்கை

6) கூட்டான ராணுவ பயிற்சி நடவடிக்கை

7) நாகா ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது  நாகா இன மக்கள் வசிக்கும் பகுதிகளை நிர்வகிக்கும் அரசு

ஆகியவற்றை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

https://tamil.oneindia.com/news/india/centre-approves-separate-passport-flag-for-nagaland-355581.html

என்னால் இன்னும் 1,4,5,6(!) என்பனவற்றுக்கு இந்தியா அதுவும் மோடியின் இந்தியா ஒத்து கொண்டிருக்கும் என நம்ப முடியவில்லை.

இதுவரை நாகலாந்துக்கு காசுமீரம் போல சிறப்பு அந்தஸ்தும் கூட இல்லை என நினக்கிரேன். தமிழ்நாடு போல ஒரு மாநிலம்தான்.

இப்படி ஒரேயடியாக பல்டி அடிப்பார்களா?

செய்தி உண்மை என்றால் சந்தோசம்தான். நாளைக்கு இதே கேள்வியை தமிழ்நாட்டிலும் எழுப்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் செய்வதில் அளவீடு சிறியதாக  உள்ளப்படியால் தமிழ்"நாட்டை " அவையளே கொடுத்தாலும் திராவிட சிப்ஸ்கள் ஒத்துக்கொள்ள மாட்டினம்.. பரந்து பட்ட பாரத திருநாட்டில் பரவலாக உரம், 2G , என்டு பக்கவா கொள்ளை அடிக்க . கிந்தியவே கதி..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்படி ஒரேயடியாக பல்டி அடிப்பார்களா?

உண்மையாயின், எது காரணம் என்று உங்களின் ஊகம்?

சீனப் பூதம் அன்றி வேறு எது காரணமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

உண்மையாயின், எது காரணம் என்று உங்களின் ஊகம்?

சீனப் பூதம் அன்றி வேறு எது காரணமாக இருக்கும்.

இப்போ ஒரு 3 மணி நேரமா நாகலாந்தை பற்றித்தான் தேடிக் கொண்டிருந்தேன். ரொம்ப சுவாரசியமான வரலாறு.

இதன் ஒரு எல்லை அருணாச்சல பிரதேசமாம். அதை ஏலவே தன் பகுதி என்று பாஸ்போர்ட் இல்லாமல் சீனா வரலாம் என்று சீனா அறிவித்தமை நாமறிந்தத்தே.

அந்த பயமாக இருக்க கூடும். ஆனாலும் தனிநாடாக இருந்த சிக்கிம் மை கூட மாநில அந்தஸ்தோடுதான் இந்தியா தன்னுள் சேர்த்தது.

எந்த பெரிய இந்திய ஊடகத்திலும் இந்த நாளானது பற்றிய செய்தி இல்லை. 

எனக்கு என்னமோ சந்தேகம்தான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

இப்போ ஒரு 3 மணி நேரமா நாகலாந்தை பற்றித்தான் தேடிக் கொண்டிருந்தேன். ரொம்ப சுவாரசியமான வரலாறு.

இதன் ஒரு எல்லை அருணாச்சல பிரதேசமாம். அதை ஏலவே தன் பகுதி என்று பாஸ்போர்ட் இல்லாமல் சீனா வரலாம் என்று சீனா அறிவித்தமை நாமறிந்தத்தே.

அந்த பயமாக இருக்க கூடும். ஆனாலும் தனிநாடாக இருந்த சிக்கிம் மை கூட மாநில அந்தஸ்தோடுதான் இந்தியா தன்னுள் சேர்த்தது.

எந்த பெரிய இந்திய ஊடகத்திலும் இந்த நாளானது பற்றிய செய்தி இல்லை. 

எனக்கு என்னமோ சந்தேகம்தான்.

இதென்னங்க 300 மரத்தை சாய்த்து விட்டு 300 தீவிரவாதி அழிகத்த கதை போல இல்லையே நாகலாந்து போன்று உள்ள மற்றைய மாநில காரர்களும் நாகலாந்தை பின்தொடர்வார்கள் மோடியின் புகழ் அடிவாங்க கூடாது அது முக்கியம் அல்லவா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.