Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளை வான் கலாசாரத்தை நாமே ஒழித்தோம்: பிரதமர்

Featured Replies

இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி கட்டியெழுப்பப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.

ஜனநாயக்கத்தை வலுப்படுத்தி முன்னோக்கி செல்வதுடன், புதிய கருத்துகளுடன் கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் இன்று கூட்டணி அரசியல் தோற்றம் பெற்றுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக மூன்று கூட்டணிகள் உருவாக்கப்படும் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவளை, இன்று நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி வெள்ளை வான் கலாசாரத்தை இல்லாது செய்துள்ளதாக தெரிவித்த பிரதமர், அதன் காரணமாகவே இன்று அரசாங்கத்தின் மீது தொலைக்காட்சி விவாதங்களில் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வெள்ளை-வான்-கலாசாரத்தை-நாமே-ஒழித்தோம்-பிரதமர்/150-236483

  • தொடங்கியவர்

இலங்கை வெள்ளை வான் கலாச்சாரம், அதன் 'பெருமை' க்கு மெருகு சேர்க்கும் அதி உன்னத கலாச்சாரங்களில் ஒன்று, இதை ஏன் இந்த நாட்டின் கலாச்சார அமைச்சர் கொண்டாடுவதில்லை என்பது ஒரு கவலைக்குரிய விடயம் 🙄

 

வெள்ளை வான் படுகொலைகள்

வெள்ளை வான் படுகொலைகள் அல்லது கடத்தல்கள் என்பது இலங்கையில் வெள்ளை வான் வாகனம் ஒன்றில் வந்து நபர்களை கடத்திச் சென்று படுகொலை செய்தல் அல்லது காணாமல் போகச் செய்தல் ஆகும். ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் எனப் பல தரப்பட்டோர் இவ்வாறு படுகொலை செய்யப்படுகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்கள், அல்லது காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவார். இதுவரை இலங்கைக் காவல்துறை யாரையும் இக் குற்றங்களுக்காக கைது செய்யவில்லை.

வெள்ளைவான் குழு இலங்கை இராணுவத்தின் இரகசியப் பிரிவாகும்.

இது பெரும்பாலும் தமிழர்களைப் பொதுவாக வர்த்தகர்களையும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையும் கடத்தி கப்பம் வாங்குவதற்கும் படுகொலைகளைப் புரிதல் போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பிரிவாகும். இவ்வகை வாகனங்களிற்கு இலக்கத் தகடுகள் ஏதும் கிடையாது. இப்பிரிவில் இருந்து தப்புவதற்கு பெரும்பாலும் வீதி வளைவுகளில் அவதானமாக இருத்தல் வேண்டும். 

யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இவர்களின் செயற்பாடு கூடுதலாக உள்ளது. திருகோணமலையில் இவர்களின் செயற்பாடு அவதானிக்கப்பட்டபோதும் தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளைப் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து கிடைத்ததால் பின்னர் திருகோணமலையில் செயற்பாடுகளை இடைநிறுத்தி விட்டனர். கொழும்பிலும் இவர்களது செயற்பாடு காணக் கிடைக்கின்றது. கொழும்பில் பொதுவாக இரவு நேரத்தில் தமிழர்களின் வீடுகளிற்குச் சென்று கடத்தி வருகின்றனர். கொழும்புத் தமிழர்கள் இரவு நேரத்தில் அநாவசியமாகக் கதவுகளை அறிமுகம் இல்லாத ஆண்களிடம் திறக்கக் கூடாது எனும் பயம் நிலவுகிறது.

இந்த வெள்ளைவான் குழு பல்வேறு காரணங்களுக்காக சில சிங்களவர்களையும் கடத்திச் சென்றுள்ளது. இக்குழுவால் கடத்திச் செல்பவர்கள் பெரும்பாலும் திரும்பிவருவதில்லை. இக்குழுவின் செயல்கள் பற்றி இலங்கை இராணுவம் கூறுகையில் இது ரணில் விக்கிரமசிங்கேயின் தூண்டுதலின் பேரில் நடக்கிறது என்பது போன்ற பரப்புரைகளை மேற்கொண்டுவருகிறது. இலங்கையில் பல்வேறு அரசியல்வாதிகளும் தங்களுக்கு வெள்ளைவான் குழுவினால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளனர். இக்குழுக்களின் செயல்கள் பற்றி பல்வேறு சர்வதேச ஊடங்களில் செய்திகள் வந்திருக்கின்றன. 

நன்றி: விக்கி 
https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_ஆட்கடத்தல்களும்_காணாமல்_போதல்களும்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

வெள்ளை வான் படுகொலைகள்

பெயர் மாறியிருக்கிறதே தவிர கலாச்சாரம் மாறியதாக தெரியவில்லை.

வெள்ளைவான் கலாச்சார கொள்ளையர்களையும் கொலைகாரர்களையும் அதன் தலைவன் பயங்கரவாதி கோட்டாபயவையும் நீங்கள் தான் பாதுகாத்து வருகிறீர்கள் என்பதுவும் எங்களுக்குத் தெரியும்!

அந்தப் பயங்கரவாதி கோட்டாபயவுடன் ஒப்பந்தம் செய்து தனக்குப்பின் ஐக்கிய தேசிய கட்சிப் பயங்கரவாதத்தைதையும் பயங்கரவாதி கோட்டாபயவிடம் கையளிக்க ரணில் சதி செய்துவருவதாக தெரிகிறது.

அதனாலேயே தன்னால் வெல்லமுடியாது என்று தெரிந்தும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று ரணில் களத்தில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

கலாபோகஸ்வெவ : வவுனியா வடக்கில் நடக்கும் சிங்கள குடியேற்றத்தை ஆதரப்படுத்தும் வரைபடம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படிதான் கதைப்பீர்கள்..!

"2020 Toyota Hiace Super Grandia"

ஆனால் ரோல்ப்பின் மாடலில் புது ரிசைன் வரத்தான் போகுது..! 😢

On 8/9/2019 at 9:33 AM, ampanai said:

வெள்ளை வான் கலாசாரத்தை நாமே ஒழித்தோம்: பிரதமர்

அதை எங்கை ஒழிச்சு வைச்சிருக்கீங்க?

எப்ப மீண்டும் அவிட்டு விடுவீங்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.