Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னிடம் பல திட்டங்கள் உள்ளன ; கோட்டா

Featured Replies

நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செலுத்தக் கூடிய நடைமுறைக்குச் சாத்தியமான செயற்திட்டம் தன்னிடம் உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அம்பலந்தோட்டை பிரதேசத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஆற்றிய உரையில் கூறியது போன்றே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய, நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூடிய, அபிவிருத்தியைத் துரிதப்படுத்தக் கூடிய செயற்பாட்டுத் திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/126225

  • தொடங்கியவர்

கோட்டாபயவுக்கு அமெரிக்கா வைத்தது ஆப்பு? வன்னியிலிருந்து விடுக்கப்படும் எச்சரிக்கை!

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை.

இந்த நாட்டின் ஆட்சிக்கு கொடூரர்கள் மீண்டும் வருவார்களானால் மீண்டும் படையிரின் கைகள் கட்டவிழ்த்துவிடப்படும். வீதிகளில் சாரைசாரையாக படையினர் படையெடுத்து திரிவர்.

சரத் பொன்சேகா விரைவில் எம்முடன் இணைந்து செயற்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களின் நலன்கருதி விசேட பாதுகாப்பு இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்ளும் படைவீரர்களது குடும்பங்களுக்கு எவ்வித கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது என இராணுவம் அறிவித்துள்ளது.

மடு திருத்தலத்தின் ஆவணி மாத பெருந்திருவிழா திருப்பலி நேற்று வியாழக்கிழமை (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இது போன்ற செய்திகளோடு இன்றைய காலைநேர செய்திகள் அமைகின்றது.

 

https://www.ibctamil.com/srilanka/80/126178?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, போல் said:

கோட்டாபயவுக்கு அமெரிக்கா வைத்தது ஆப்பு? வன்னியிலிருந்து விடுக்கப்படும் எச்சரிக்கை!

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை.

கோத்தபாயா... இலேசில், இவ்வளவு கெதியில்... 
அமெரிக்க குடியுரிமையை, ரத்து செய்து விட்டு வரமுடியாது.
அதற்குரிய  விளக்கங்களை,  கால அவகாசங்கங்களை கொடுத்து பதில் வர நீண்ட காலம் எடுக்கும்.

2 hours ago, தமிழ் சிறி said:

கோத்தபாயா... இலேசில், இவ்வளவு கெதியில்... 
அமெரிக்க குடியுரிமையை, ரத்து செய்து விட்டு வரமுடியாது.
அதற்குரிய  விளக்கங்களை,  கால அவகாசங்கங்களை கொடுத்து பதில் வர நீண்ட காலம் எடுக்கும்.

அதான் எனக்கும் புரியவில்லை; இரட்டை குடியுரிமை இழக்காமல் எப்படி ஜனாதிபதியாக முடியும்? ஏன் மகிந்த இவரை வேட்பாளர் ஆக்கினார்....????

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Dash said:

அதான் எனக்கும் புரியவில்லை; இரட்டை குடியுரிமை இழக்காமல் எப்படி ஜனாதிபதியாக முடியும்? ஏன் மகிந்த இவரை வேட்பாளர் ஆக்கினார்....????

எதிர் கட்சிகளை.... குழப்பத்தில் வைத்திருக்க,
மகிந்த,  கோத்தாவை.... அறிவித்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
கடைசி நேரத்தில்... ஜனாதிபதி வேட்பாளார்  மாறலாம் என்றே  கருதுகின்றேன்.

"குழம்பிய குட்டையில்.... மின் பிடிப்பது இலகு." என்று நினைக்கின்றார்கள் போலுள்ளது.   

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

அதான் எனக்கும் புரியவில்லை; இரட்டை குடியுரிமை இழக்காமல் எப்படி ஜனாதிபதியாக முடியும்? ஏன் மகிந்த இவரை வேட்பாளர் ஆக்கினார்....????

 

2 hours ago, தமிழ் சிறி said:

எதிர் கட்சிகளை.... குழப்பத்தில் வைத்திருக்க,
மகிந்த,  கோத்தாவை.... அறிவித்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
கடைசி நேரத்தில்... ஜனாதிபதி வேட்பாளார்  மாறலாம் என்றே  கருதுகின்றேன்.

"குழம்பிய குட்டையில்.... மின் பிடிப்பது இலகு." என்று நினைக்கின்றார்கள் போலுள்ளது.   

ரணில் தனது கூட்டணியில் யாரை வேட்பாளராகக் களம் இறக்குகின்றாரோ அந்த வேட்பாளர் தான்  கோத்தபாய அவர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பார்.
ஒருவர்  நாட்டின் அரசியலில் பிரதானியாக வரும் பட்ஷத்தில் அவர் தனது இரண்டாவது குடியுரிமையை அதன் பின்னரும் திறக்கலாம் என நினைக்கின்றேன்.
மக்கள் யாரை வேண்டாம் என நிராகரிக்கின்றார்களோ
அவர்கள் தான் இப்போது  வெற்றியடைகின்றனர்.
இதுதான் இன்றைய அரசியல்

4 hours ago, Dash said:

அதான் எனக்கும் புரியவில்லை; இரட்டை குடியுரிமை இழக்காமல் எப்படி ஜனாதிபதியாக முடியும்? ஏன் மகிந்த இவரை வேட்பாளர் ஆக்கினார்....????

கோத்தா அமெரிக்க குடியுரிமையை துறந்தமைக்கான ஆவணம் மே மாதமே கிடைத்து விட்டதாக தான் முன்பிலிருந்தே கூறப்படுகிறது.

பெயர் பட்டியலில் இவர் பெயரை போடாமல் இரகசியமாக வைத்திருக்கிறார்களோ என தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த மட்டில், 

ஒருவர் இரெட்டை குடியுரிமை வைத்திருக்கிறார் என்ற அடிப்படையில் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரை தேர்தலில் இருந்து விலக்க முடியாதாம்.

தேர்தலில் வென்ற பின் தேர்வு செல்லாது என அறிவிக்கலாமாம். அதன் பின் அவர்கள் இதை எதிர்த்து நீதிமன்று போகலாமாம்.

இந்த இடைவெளியில் சட்டத்தை மாற்றிவிடலாம் என நினைக்கிறார்களோ தெரியாது.

அல்லது அடுத்த காலாண்டுக்கு பட்டியலில் பெயர் வரவும் கூடும்.

கடைச்சி நேரத்தில் வேட்பாளரை மாற்றுவது பல குழப்பங்களை தரும். எனவே இப்படி ஒரு திட்டம் இருக்க சாத்தியமில்லை. ஆனால் இலங்கை அரசியலில் எதுவும் சாத்தியமே/

  • தொடங்கியவர்
18 hours ago, தமிழ் சிறி said:

எதிர் கட்சிகளை.... குழப்பத்தில் வைத்திருக்க,
மகிந்த,  கோத்தாவை.... அறிவித்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
கடைசி நேரத்தில்... ஜனாதிபதி வேட்பாளார்  மாறலாம் என்றே  கருதுகின்றேன்.

"குழம்பிய குட்டையில்.... மின் பிடிப்பது இலகு." என்று நினைக்கின்றார்கள் போலுள்ளது.   

நிச்சயமாக இல்லை!

மகிந்த ராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பது, அதற்காக நாய்படாதபாடாக அலைந்து திரிவதன் முக்கிய காரணங்கள் இரண்டு.

ஒன்று, தாங்கள் கொள்ளையடித்த சொத்துக்களை தமது நிரந்தர சொத்துக்களாக உறுதி செய்வது.

மற்றது தாங்கள் செய்த படுகொலைக்களுக்கான, சட்டவிரோத செயல்களுக்கான ஆதாரங்களை பூரணமாக அழித்து, தம்மை சர்வதேச சட்டங்களின் பிடிகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வது.

கடந்த வருடம் செப்டம்பரில் இருந்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மகிந்த ராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் முயலுவதன் பிரதான நோக்கம் இது  தான்.

இவற்றை செயற்படுத்த தமது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு எவரையும் நம்பமுடியாத நிலையில் தான், மகிந்த ராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் வேறு வழிகளின்றி பல்வேறு திருகுதாளங்கைச் செய்து, சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் ஆதரவுள்ள  பயங்கரவாதி கோட்டாபயவை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

On 8/17/2019 at 10:07 AM, போல் said:

நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செலுத்தக் கூடிய நடைமுறைக்குச் சாத்தியமான செயற்திட்டம் தன்னிடம் உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அந்த திட்டங்களை எல்லாம் விலாவாரியா மக்களிட்டை சொல்லக் கூடாதோ?
அல்லது மக்களெல்லாம் படிப்பறிவில்லாத ஜீவன்கள் என்டு சொல்லாமல் சொல்றாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Rajesh said:

அந்த திட்டங்களை எல்லாம் விலாவாரியா மக்களிட்டை சொல்லக் கூடாதோ?
அல்லது மக்களெல்லாம் படிப்பறிவில்லாத ஜீவன்கள் என்டு சொல்லாமல் சொல்றாரோ?

திட்டம் 1

நாட்டில் வெள்ளை நிற வான்களுக்கான கேள்வியை அதிகரித்து, அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது.

இப்படி பல திட்டம் கைசவம் இருக்கு. 

#சொல்லாமலே

On 8/17/2019 at 7:40 AM, வாத்தியார் said:

மக்கள் யாரை வேண்டாம் என நிராகரிக்கின்றார்களோ
அவர்கள் தான் இப்போது  வெற்றியடைகின்றனர்.
இதுதான் இன்றைய அரசியல்

தாயக  தமிழ் உறவுகள் இவ்வாறான ஒரு நிலையை கோத்தபாய விடயத்தில் எடுக்க கூடும்,

2006 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரியை விரும்பாதவர்கள் ட்ரம்பிற்கு வாக்களித்தார்கள் என்றும் அதனாலேயே அவர் வென்றார் எனவும் கூறுபவர்கள் உள்ளனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.