Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமை­தி­யான தேச­மொன்று உரு­வாக நல்­லூர்க்­கந்­தனை பிரார்த்­திக்­கிறேன் - பிர­தமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமை­தி­யான தேச­மொன்று உரு­வாக  நல்­லூர்க்­கந்­தனை பிரார்த்­திக்­கிறேன் - பிர­தமர்

நல்லூர்க் கந்­தனை தரி­சிப்­ப­தற்கும் இர­தோற்­ச­வத்தில் பங்­கேற்­ப­தற்­கு­மென ஒன்­றி­ணையும் பெறு­ம­தி­யான காலப்­ப­கு­தியில் பேதங்­களை மறந்­த­வர்­க­ளாக ஒற்­று­மைப்­பட்­டி­ருப்­பதை தொடர்ந்தும் பேணிச் செல்­வது நமது பொறுப்­பாகும். ஐக்­கியம், சக­வாழ்வு, சகோ­த­ரத்­துவம் மிகுந்த அமை­தி­யான தேச­மொன்று உரு­வாக வேண்டும் நல்லூர்க் கந்­தனை பிரார்த்­திப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

ranil.jpg

நல்லூர் கந்தன் இர­தோற்­ச­வத்தை முன்­னிட்டு விடுத்­துள்ள செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அதில் அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

பிர­சித்தி பெற்ற நல்லூர் கந்தன் இர­தோற்­ச­வத்­தினை முன்­னிட்டு எனது செய்­தியை வழங்­கு­வதில் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். நம் நாட்டின் பெரு­மை­மிகு ஆல­யங்­களில் ஒன்­றான நல்­லூர்க் கந்தன் ஆல­ய­மா­னது பூஜை வழி­பா­டு­க­ளுக்கும், வரு­டாந்த திரு­வி­ழாக்­க­ளுக்கும் பெயர் பெற்று விளங்­கு­கி­றது.

நாட்டின் சமா­தானம் மற்றும் நல்­லிணக்­கத்­திற்கு நல்லூர் கோயிலின் வரு­டாந்த இர­தோற்­சவம் சிறந்த முன்­மா­தி­ரி­யாக காணப்­ப­டு­கின்­றது. 

இந்த இர­தோற்­சவக் காலத்தில் மக்கள் பேதங்­களை மறந்து உள்­நாட்­டி­லி­ருந்தும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும் ஒன்­றி­ணைந்து பக்­தி­யுடன் தரி­சித்து இன்­ப­ம­டையும் ஓர் பெறு­ம­தி­யான காலப் ப­கு­தி­யாகும். அந்த ஒற்­று­மையைத் தொட ர்ந்தும் பேணிச் செல்­வது நமது பொறுப்­பாகும்.

ஐக்­கியம், சக­வாழ்வு, சகோ­த­ரத்­துவம் மிகுந்த அமைதியான தேசமொன்று உரு வாக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், நல்லூர்க் கந்தசாமி கோயிலின் வருடாந்த இரதோற்சவத்துக்கு எனது உளப் பூர்வ மான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கி றேன்.

 

https://www.virakesari.lk/article/63605

 

2 hours ago, கிருபன் said:

ஐக்­கியம், சக­வாழ்வு, சகோ­த­ரத்­துவம் மிகுந்த அமை­தி­யான தேச­மொன்று உரு­வாக வேண்டும் நல்லூர்க் கந்­தனை பிரார்த்­திப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அமைதியை குலைத்து தமிழின அழிப்பை மேற்கொள்பவர்கள் அமைதியான தேசம் உருவாக பிரார்த்தனை செய்கிறார்களாம்.

நல்லூர் கந்தனை எப்ப கதிர்காமக்கந்தன் போல் சிங்களக்கந்தன் ஆக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருப்பார் இவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

நல்லூர்க் கந்தசாமி கோயிலின் வருடாந்த இரதோற்சவத்துக்கு எனது உளப் பூர்வ மான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கி றேன்.

தேர்த்திருவிழாவுக்கும் வாழ்த்து தெரிவிக்க வெளிக்கிட்டுட்டாங்கள்.🤣

அமை­தி­யான தேச­மொன்று உரு­வாக  நல்­லூர்க்­கந்­தனை பிரார்த்­திக்­கிறேன் - பிர­தமர் 
இதன் மூலம் சிங்கள தலைவர்கள் சொல்லும் செய்தி -

சிங்கள புத்த மதவாதத்தை தொடர்ந்து முன்னெடுங்கள். 

நல்லூரில் புத்த பிரானை அமர்த்துங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அமை­தி­யான தேச­மொன்று உரு­வாக  நல்­லூர்க்­கந்­தனை பிரார்த்­திக்­கிறேன் - பிர­தமர்

நாடு அமைதியாக இருக்கணுமா இல்லையா என்பதை நீங்க தான் தீர்மானிக்க வேணும்.

கம்முனு இருக்கிற கந்தனிலை பாரத்தை போட்டுவிட்டு தப்பலாமா சார்?

  • கருத்துக்கள உறவுகள்

தி

1 hour ago, ampanai said:

அமை­தி­யான தேச­மொன்று உரு­வாக  நல்­லூர்க்­கந்­தனை பிரார்த்­திக்­கிறேன் - பிர­தமர் 
இதன் மூலம் சிங்கள தலைவர்கள் சொல்லும் செய்தி -

சிங்கள புத்த மதவாதத்தை தொடர்ந்து முன்னெடுங்கள். 

நல்லூரில் புத்த பிரானை அமர்த்துங்கள். 

அதில்  சிங்களவர்கள்  மிக  மிக  கைதேர்ந்தவர்கள்

தமிழர்  அவர்களிடம்  படிக்கவேண்டிய  பாடமிது

இப்படிப்பட்ட பிராத்தனைகள் வீண் வேலை ரணில் சார். நூற்றுக்கணக்கான வருடங்களாக தன்னை தேரில் ஏற்றி வலம் வரும் மக்களின் அழுகுரல்களையே திரும்பிக்கூட பார்க்காத முருகன் உங்கள் பிராத்தனையையா  கண்டுக்க போறார்.   பிரார்தனைகளை விட உங்கள் அரசியல்வாதிகள் அனைவரும்   நாட்டில் வாழும் சக இனத்திற்கு சம கெளரவமதையும் அவர்களின் உரிமைகளையும் அங்கீகரிப்பது எம்மை பாதிக்காது.  மாறாக எமது நிலையையும் நாட்டின் நிலையையும் உயர்த்தும்  என்று சிங்கள மக்களிடம் பிரச்சாரம் செய்வது  சில வேளை பலனளிக்கலாம்.  

Edited by tulpen

On 8/29/2019 at 2:30 PM, குமாரசாமி said:

தேர்த்திருவிழாவுக்கும் வாழ்த்து தெரிவிக்க வெளிக்கிட்டுட்டாங்கள்.🤣

மழைக்காலத்தில் மாரித்தவளைகள் கத்துவதைப் போலவே தேர்தல் காலமென்றபடியால் ரணில் போன்ற அரசியல்வாதிகளும் தேர்த் திருவிழா போற்றவற்றை பயன்படுத்த தவற மாட்டார்கள். அதைப் போலவே மதமாற்ற வெறியர்களும் தங்களை நாத்திகவாதிகளாக காட்டிக்கொண்டு வசை பாடத் தவற மாட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.