Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை…

September 1, 2019

பல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தும் அல்லது அவ்வாறான செயற்பாட்டுடன் தொடர்புபடும் மாணவர்களையும், இந்தச் செயற்பாட்டிற்கு ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் யாராக இருப்பினும் அவர்களையும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும், இதற்கான ஒத்துழைப்புக்களை காவற்துறை ஆணைக்குழுவினர் மற்றும் காவற்துறை  மா அதிபர் ஆகியோர் வழங்குவதாக உறுதியளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/129822/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாணவனுக்கு.... 10 வருட சிறைத் தண்டனை என்பது, மிக அதிகம்.
என்றாலும்... சிலர் செய்யும் கொடூர பகிடி வதைகளால்... 
சிலர் தற்கொலை வரை சென்றதையும், படிப்பை... இடை நிறுத்தியவர்களும்  உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மாணவனுக்கு.... 10 வருட சிறைத் தண்டனை என்பது, மிக அதிகம்.
என்றாலும்... சிலர் செய்யும் கொடூர பகிடி வதைகளால்... 
சிலர் தற்கொலை வரை சென்றதையும், படிப்பை... இடை நிறுத்தியவர்களும்  உண்டு.

லூசு நாட்டிலை இதெல்லாம் நோர்மல்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மாணவனுக்கு.... 10 வருட சிறைத் தண்டனை என்பது, மிக அதிகம்.
என்றாலும்... சிலர் செய்யும் கொடூர பகிடி வதைகளால்... 
சிலர் தற்கொலை வரை சென்றதையும், படிப்பை... இடை நிறுத்தியவர்களும்  உண்டு.

கொடூர பகிடி வதைகளை தடுக்க பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பதே பொருத்தமாக இருக்கும். அந்த தண்டனை பற்றி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியில் நன்கு பிரச்சாரம் செய்வதும் முக்கியமானது. ஒரு மாணவனுக்கு தண்டனை கொடுத்தும் இதற்கு பயப்படாமல் செய்பவர்களுக்கு இந்த தண்டனை கொடுப்பது பொருத்தமானதே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கொடூர பகிடிவதை

இதென்ன சாதா தோசை ,  மசால் தோசை போல கிடக்கு.. 🤔 மொத்தமாக தடை செய்குக.. 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதென்ன சாதா தோசை ,  மசால் தோசை போல கிடக்கு.. 🤔 மொத்தமாக தடை செய்குக.. 👍

மாணவர்கள் கூச்சம், தயக்கம், வேறுபாடுகளின்றி நட்புடன் பழகுவதற்கு இந்தநிகழ்வு அவசியம் தேவை.!எதற்காகப் பகிடிவதை என்று அழைக்கவேண்டும்... அறிமுகவிழா என்று அழகாகப் பெயரிட்டு, பெயருக்கேற்ப நிகழ்வைக் கொண்டாடலாமே....!! 😄  

இலங்கையில் பகிடிவதை என்ற பெயரில் தற்போது காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபடுபவர்களே உள்ளனர். இவர்களால் பாதிக்கப்படுபவர்கள் பலர். சில விடயங்களே வெளிப்படுகின்றன.

அண்மையில் தெற்கில் ருகுணை பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனை பாலியல் கொடுமைகளுக்கு உற்படுத்திய 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்த இருவர் தற்கொலைக்கு முயன்றனர்.

கடந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட பொறியியல் பீடத்தில் படிக்கும் யாழ் இந்துக்கல்லூரி மற்றும் ஹாட்லிக் கல்லூரி மாணவ காடையர்களைப் பற்றி சமூகவலைத் தளங்களில் செய்திகள் வந்திருந்தது.

பேராதனை, யாழ், ருகுணை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கையாலாகாத பேர்வழிகள் என்பது ஏற்கனவே நிரூபணமான ஒன்று.

பகிடிவதை என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடும் காடையர்களுக்கு 10 வருட சிறைத் தண்டனையுடன், பட்டம் வழங்காமல் இருப்பதுடன், அரச வேலைவாய்ப்பு போன்ற வரப்பிரசாதங்களை தடையும் வேண்டும்.  

அதைப் போலவே பேராதனை, யாழ், ருகுணை பல்கலைக்கழக கையாலாகாத துணைவேந்தர்களையும் சிறைகளில் அடைக்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.