Jump to content

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது - மைத்திரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 Min Read
September 29, 2019
Maithri-Mahinda.jpg?zoom=1.2100000262260
 

நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என ராஜபக்ஸக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ, கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் என்னை சந்தித்து பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பில் கலந்துரையாடினார்கள். அதன் போது பரந்துபட்ட கூட்டணியாக கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் என்றாலும், கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுத்து ஆதரவளிக்க தயாரில்லை என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் பிரதான கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாத்திரமே மக்களின் பிரச்சினைகள் குறித்து சிந்தித்து செயற்படுகின்றது. எனவே கட்சியின் தனித்துவத்தை காட்டிக் கொடுத்து தாம் யாருக்கும் ஆதவளிக்கப் போவதில்லை. ஆனால் நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின் சுதந்திர கட்சி இன்றி இந்த நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா மைத்திரியின் தாயாரின் சின்னம் என்ன? 😂

நல்ல எழுதுறாங்கையா தலைப்பு😂

Link to comment
Share on other sites

58 minutes ago, goshan_che said:

ஆமா மைத்திரியின் தாயாரின் சின்னம் என்ன? 😂

நல்ல எழுதுறாங்கையா தலைப்பு😂

தலைப்பு கூறுவது மைத்திரியின் தாயார் பற்றி அல்ல. தாயார் கட்சி (தாய்க்கட்சி) என கூறப்படுவது சுதந்திரக்கட்சியை.

இந்த சின்னம் பற்றிய பிரச்சினை நீண்டகாலமாக போய்க்கொண்டிருக்கிறது. கீழுள்ள இணைப்புகளில் சென்று வாசித்து பாருங்கள். புரியும்.

https://yarl.com/forum3/topic/231806-‘மொட்டு’-சின்னத்தை-கைவிட-முடியாது-–-கோத்தா/

https://yarl.com/forum3/topic/231905-மோடிக்கும்-மொட்டுக்கும்-முடிச்சுப்-போட்டுப்-பார்க்கும்-சிங்கள-வாக்காளர்கள்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Lara said:

தலைப்பு கூறுவது மைத்திரியின் தாயார் பற்றி அல்ல. தாயார் கட்சி (தாய்க்கட்சி) என கூறப்படுவது சுதந்திரக்கட்சியை.

இந்த சின்னம் பற்றிய பிரச்சினை நீண்டகாலமாக போய்க்கொண்டிருக்கிறது. கீழுள்ள இணைப்புகளில் சென்று வாசித்து பாருங்கள். புரியும்.

https://yarl.com/forum3/topic/231806-‘மொட்டு’-சின்னத்தை-கைவிட-முடியாது-–-கோத்தா/

https://yarl.com/forum3/topic/231905-மோடிக்கும்-மொட்டுக்கும்-முடிச்சுப்-போட்டுப்-பார்க்கும்-சிங்கள-வாக்காளர்கள்/

 

இல்லை லாரா,

தலைப்பு இப்படி இருந்திருக்க வேண்டும்.

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தயார். ஆனால் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது - மைத்திரி.

நீங்கள் சொல்லும் சொல் தாய்கட்சி (இதில் இடையே “க்” வராது என்று நினைக்கிறேன்.

தாயார், என்பதில் ஆர் விகுதி, இடை சொல்லாக வரும் போது அது ஒரு இயற்பெயரை அல்லவா குறிக்கும்?

தாயார் கட்சி என்பதன் அர்தம் mother’s party.

தாய்கட்சி என்பது mother-party. Motherland போல.

தமிழிலும் தாய்நாடுதானே? தாயார்நாடு அல்லவே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த விடயதானத்தை (context) ஆராய்ந்தால் தாயார் என்ற சொல்லின் பொருத்தமின்மை துலங்கும்.

மைத்திரி சுக வின் கை சின்னத்தை விட்டுக்கொடுக்க எப்போதும், இப்போதும் தயார். கையும் இல்லாமல், மொட்டும் இல்லாமல் ஒரு பொது சின்னத்தில் கோட்டா இறங்க வேண்டும் என்பதே மைதிரியின் கோரிக்கை. ஆகவே இங்கே “தாயார்-கட்சியின்” சின்னத்தை விட்டுக்கொடுத்தல் என்ற பேச்சே எழ வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

12 minutes ago, goshan_che said:

இல்லை லாரா,

தலைப்பு இப்படி இருந்திருக்க வேண்டும்.

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தயார். ஆனால் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது - மைத்திரி.

நீங்கள் கூறுவது போல் தயார் என்பதை தான் தாயார் என எழுதியுள்ளார்கள் போலிருக்கு.

நீங்கள் முதலில் மைத்திரியின் தாயாரின் சின்னம் என எழுதியதால் நான் “தாயார்” கோணத்தில் வாசித்து பதிலளித்து விட்டேன்.

17 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்லும் சொல் தாய்கட்சி (இதில் இடையே “க்” வராது என்று நினைக்கிறேன்.

தாய் கட்சி என இடையில் இடைவெளி விட்டு எழுதும் போது இடையில் “க்” வராது. இடைவெளி விடாமல் சேர்த்து எழுதும் போது இடையில் “க்” வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

நீங்கள் கூறுவது போல் தயார் என்பதை தான் தாயார் என எழுதியுள்ளார்கள் போலிருக்கு.

நீங்கள் முதலில் மைத்திரியின் தாயாரின் சின்னம் என எழுதியதால் நான் “தாயார்” கோணத்தில் வாசித்து பதிலளித்து விட்டேன்.

தாய் கட்சி என இடையில் இடைவெளி விட்டு எழுதும் போது இடையில் “க்” வராது. இடைவெளி விடாமல் சேர்த்து எழுதும் போது இடையில் “க்” வரும்.

நன்றி.

எனக்கு தெரிந்த தமிழ் புணர்ச்சி விதிகளின் படி, தாய்கட்சி என்றே வரும். 

என்னை விட பெரிய புணர்சி நிபுணர்கள் (தமிழ்புணர்ச்சியை சொன்னேன்) இங்கே இருக்கிறார்கள். பார்க்கலாம் யாராவது ஆதாரத்தோடு வருக்கிறார்களா என.

பிகு: கணணித் தமிழில் புணர்ச்சி விதிகளை கடைப்பிடிப்பது மிகவும் கடினம். குறிப்பாக, ரோமனைஸ்ட் முறையில் எழுதும் போது.

Link to comment
Share on other sites

34 minutes ago, goshan_che said:

தாயார், என்பதில் ஆர் விகுதி, இடை சொல்லாக வரும் போது அது ஒரு இயற்பெயரை அல்லவா குறிக்கும்?

தாயார் கட்சி என்பதன் அர்தம் mother’s party.

தாயார் கட்சி என்பதை இரு வகையில் பார்க்கலாம்.

1) தாயாரின் கட்சி

2) தாய் கட்சி 

தாயார் என்பது தாய் எனவும் அர்த்தம் கொள்ளலாம்.

எனது தாயார் - எனது தாய்

தாயார் பாடல்கள் - தாய்ப்பாடல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Lara said:

தாயார் கட்சி என்பதை இரு வகையில் பார்க்கலாம்.

1) தாயாரின் கட்சி

2) தாய் கட்சி 

தாயார் என்பது தாய் எனவும் அர்த்தம் கொள்ளலாம்.

எனது தாயார் - எனது தாய்

தாயார் பாடல்கள் - தாய்ப்பாடல்கள்

இல்லை மீரா,

எனது தாயார், என்பதில் ஆர் விகுதியை இடைச்சொல்லாக சேர்க்கும் போது, அது இயற்பெயரை மட்டுமே குறிக்கும். அதாவது “எனது தாயார்”  (my mother) என்ற அர்தத்தை மட்டுமே தரும்.  

தாய்கட்சி என்பது பொதுப்பெயர் (இயற்பெயர் அல்ல) எனவே இங்கே தாய்கட்சி (mother-party) எனும் அர்த்தத்தில்  தாயார்கட்சி என்ற சொல்லை பாவிக்க முடியாது.

சுருங்கச் சொல்லின், அனுர, சுனேத்திரா, சந்திரிகா மட்டுமே SLFP யை “தாயார்கட்சி” எனலாம். ஏனையோர்கு அது “தாய்கட்சி” மட்டுமே.

Link to comment
Share on other sites

46 minutes ago, goshan_che said:

நன்றி.

எனக்கு தெரிந்த தமிழ் புணர்ச்சி விதிகளின் படி, தாய்கட்சி என்றே வரும். 

தாய் கட்சி - தாய்க்கட்சி

தாய் பாசம் - தாய்ப்பாசம்

தாய் பால் - தாய்ப்பால்

வாய் சொல் - வாய்ச்சொல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Lara said:

தாய் கட்சி - தாய்க்கட்சி

தாய் பாசம் - தாய்ப்பாசம்

தாய் பால் - தாய்ப்பால்

வாய் சொல் - வாய்ச்சொல்

இங்கே: கவனிக்க வேண்டியது நிலைச்சொல் என்ன எழுத்தில் முடிகிறது என்பதும், வரும் சொல்லின் முதல் உயிர்-மெய் வேர் எழுத்து என்ன என்பதும்.

1. நான் இது ஒரு இயல்புப்புணர்சி தாய்கட்சி என்கிறேன்.

2. நீங்கள் இல்லை இது ஒரு தோன்றல் விகாரம் (க் சேர்வதால்). தாய்க்கட்சி என்கிறீர்கள்.

நிலைச் சொல் ய் இல் முடிந்து, வரும் சொல் க் இல் தொடங்கினால் தோன்றல் விகாரம் இல்லை என நான் படித்த ஞாபகம்.

கீழே உள்ள பட்டியலும் அதை உறுதி செய்கிறது. ஆனால் இதன் நம்பகம் தெரியவில்லை.

நீங்கள் மேற்கோள் காட்டிய சொற்களும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறன என்பதும் மறுப்பதற்கில்லை.

large.BC2B38C4-BC13-404C-868F-2FF4C408973A.jpeg.066ad9d6d69858bd146da628dd7e5de9.jpeg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு: தமிழிலக்கணத்தை நான் முறையாக கற்கவில்லை. சும்மா அங்கே இங்கே வாசித்த அரைகுறை அறிவுதான். உங்களின் தமிழ்ப் புலமையின் பின்புலம் எனக்குத் தெரியாது. சிலவேளை நீங்கள் தமிழ் எம் ஏ ஆக இருக்க நான் உங்களுடன் முட்டி மோதுகிறேனோ தெரியவில்லை. 😂

இங்கே வேறு ஏதும் விதிகள், அல்லது விதி விலக்குகள் செயல்பாட்டில் இருக்க கூடும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:
1 Min Read
September 29, 2019
Maithri-Mahinda.jpg?zoom=1.2100000262260
 

நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என ராஜபக்ஸக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ, கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் என்னை சந்தித்து பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பில் கலந்துரையாடினார்கள். அதன் போது பரந்துபட்ட கூட்டணியாக கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் என்றாலும், கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுத்து ஆதரவளிக்க தயாரில்லை என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் பிரதான கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாத்திரமே மக்களின் பிரச்சினைகள் குறித்து சிந்தித்து செயற்படுகின்றது. எனவே கட்சியின் தனித்துவத்தை காட்டிக் கொடுத்து தாம் யாருக்கும் ஆதவளிக்கப் போவதில்லை. ஆனால் நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின் சுதந்திர கட்சி இன்றி இந்த நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

ஹல்லோ மிஸ்டர் பிழம்பு
இந்தச் செய்தியின் மூலம் எது  என அறியத்  தாருங்கள்
இல்லையேல் மட்டுறுத்தினர்கள்   தயார் நிலையில் உள்ளார்கள் 😂😂

தாயா தாயாரை    தயாரா  தாமரை ஒரே குழப்பமாக உள்ளது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாத்தியார் said:

ஹல்லோ மிஸ்டர் பிழம்பு
இந்தச் செய்தியின் மூலம் எது  என அறியத்  தாருங்கள்
இல்லையேல் மட்டுறுத்தினர்கள்   தயார் நிலையில் உள்ளார்கள் 😂😂

தாயா தாயாரை    தயாரா  தாமரை ஒரே குழப்பமாக உள்ளது 😂

 வாத்தியாரையே குழப்பீட்டமா? விளங்கின மாரித்தான் 😂

Link to comment
Share on other sites

49 minutes ago, வாத்தியார் said:

ஹல்லோ மிஸ்டர் பிழம்பு
இந்தச் செய்தியின் மூலம் எது  என அறியத்  தாருங்கள்
இல்லையேல் மட்டுறுத்தினர்கள்   தயார் நிலையில் உள்ளார்கள் 😂😂

தாயா தாயாரை    தயாரா  தாமரை ஒரே குழப்பமாக உள்ளது 😂

அவர் அவசரமாக கள்ளுக் கடை பக்கம் ஒதுங்கும் போது பதிந்த செய்தியாம்...மூலம் குறிப்பிட தவறி விட்டாராம், உது தான் மூலமாம் என்று வட்ஸப் இல் தகவல் அனுப்பியுள்ளார். 

மூலம்

http://globaltamilnews.net/2019/131387/

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

இங்கே: கவனிக்க வேண்டியது நிலைச்சொல் என்ன எழுத்தில் முடிகிறது என்பதும், வரும் சொல்லின் முதல் உயிர்-மெய் வேர் எழுத்து என்ன என்பதும்.

1. நான் இது ஒரு இயல்புப்புணர்சி தாய்கட்சி என்கிறேன்.

2. நீங்கள் இல்லை இது ஒரு தோன்றல் விகாரம் (க் சேர்வதால்). தாய்க்கட்சி என்கிறீர்கள்.

நிலைச் சொல் ய் இல் முடிந்து, வரும் சொல் க் இல் தொடங்கினால் தோன்றல் விகாரம் இல்லை என நான் படித்த ஞாபகம்.

கீழே உள்ள பட்டியலும் அதை உறுதி செய்கிறது. ஆனால் இதன் நம்பகம் தெரியவில்லை.

நீங்கள் இணைத்த அட்டவணையில் ய் இல் முடிந்து க் இல் தொடங்குவது மட்டுமல்ல, ச், த், ப் என எவற்றில் தொடங்குவதற்கும் உதாரணம் காட்டப்படவில்லை. 

பேய் காற்று - பேய்க்காற்று

செவ்வாய் கிழமை - செவ்வாய்க்கிழமை 

இவை ய் இல் முடிந்து க் இல் ஆரம்பிப்பவை.

பி.கு: நானும் தமிழ் இலக்கணத்தை முறையாக கற்றதில்லை. ஏதோ தெரிந்தவற்றை வைத்து எழுதுகிறேன்.

1 hour ago, goshan_che said:

இல்லை மீரா,

நான் மீரா அல்ல, லாரா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

நீங்கள் இணைத்த அட்டவணையில் ய் இல் முடிந்து க் இல் தொடங்குவது மட்டுமல்ல, ச், த், ப் என எவற்றில் தொடங்குவதற்கும் உதாரணம் காட்டப்படவில்லை. 

பேய் காற்று - பேய்க்காற்று

செவ்வாய் கிழமை - செவ்வாய்க்கிழமை 

இவை ய் இல் முடிந்து க் இல் ஆரம்பிப்பவை.

பி.கு: நானும் தமிழ் இலக்கணத்தை முறையாக கற்றதில்லை. ஏதோ தெரிந்தவற்றை வைத்து எழுதுகிறேன்.

நான் மீரா அல்ல, லாரா. 😊

ம்... அது முழுமை அடையாத பட்டியல் போலும்.

யோசிச்சு பார்க்க நீங்கள் சொல்வதுதான் சரி போல படுகிறது.

இந்த குழப்பத்தில் எனக்கு லாரா, மீராவும் குழம்பிவிட்டது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ம்... அது முழுமை அடையாத பட்டியல் போலும்.

யோசிச்சு பார்க்க நீங்கள் சொல்வதுதான் சரி போல படுகிறது.

இந்த குழப்பத்தில் எனக்கு லாரா, மீராவும் குழம்பிவிட்டது 😂

லாரா மீரா யாராக இருந்தாலும் எல்லோரும் என்னுடைய தமிழ் படிப்போம் திரியை கவனிக்கவில்லை என்று நினைக்கின்றேன்

கோஷான் நான் பல திரிகளிலும் உங்களுடன் தான்

உங்களின் கருத்துக்களை எதிர்க்கவென்றே சில பேர் தயாராக இருக்கின்றார்கள்

கவனிக்க
தாயாராக  அல்ல    
தயாராக  😎

26 minutes ago, நிழலி said:

அவர் அவசரமாக கள்ளுக் கடை பக்கம் ஒதுங்கும் போது பதிந்த செய்தியாம்...மூலம் குறிப்பிட தவறி விட்டாராம், உது தான் மூலமாம் என்று வட்ஸப் இல் தகவல் அனுப்பியுள்ளார். 

மூலம்

http://globaltamilnews.net/2019/131387/

சரி சரி
பிழம்பரை விசாரித்ததாகச் சொல்லவும்  😁

Link to comment
Share on other sites

20 minutes ago, வாத்தியார் said:

லாரா மீரா யாராக இருந்தாலும் எல்லோரும் என்னுடைய தமிழ் படிப்போம் திரியை கவனிக்கவில்லை என்று நினைக்கின்றேன்

இணைப்பு தாருங்கள்.

Link to comment
Share on other sites

21 minutes ago, வாத்தியார் said:

கோஷான் நான் பல திரிகளிலும் உங்களுடன் தான்

உங்களின் கருத்துக்களை எதிர்க்கவென்றே சில பேர் தயாராக இருக்கின்றார்கள்

இதில் என்னையும் சேர்த்தா கூறுகிறீர்கள்? நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல. :grin:

தாய் கட்சி என்பது இடையில் இடைவெளி விட்டு தானே எழுதப்பட வேண்டும்?

இடைவெளி விடாமல் எழுதும் போது இடையில் க் சேர்க்கப்பட வேண்டும் தானே? (அது தோன்றல் விகாரமா அல்லது வேறு வழிமுறையா என்பது அடுத்த பிரச்சினை).

இதற்கு பதில் தாருங்கள். ப்ளீஸ்.

Link to comment
Share on other sites

வாத்தியாரிடம் கேள்வி கேட்டேன். அவர் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா தான் யாழுக்கு வருவார் போல. 😀

இவை சில இணையத்தளங்களில் உள்ள செய்திகளில் பார்த்தவை.

தாய் கட்சி என இடையில் இடைவெளி விட்டு எழுதப்படுதல்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டோரில், 16 பேர் தாய் கட்சி திரும்ப பச்சைக்கொடி.

https://m.dinamalar.com/detail.php?id=2037798

நாட்டில் 70-க்கும் மேற்பட்ட கட்சிகளை உருவாக்கிய தாய் கட்சி காங்கிரஸ்.

https://www.dailythanthi.com/amp/News/India/2019/05/13173225/congress-breakaways-and-how-theyve-performed-in-the.vpf

தாய்க்கட்சி என இடையில் இடைவெளி இல்லாமல் க் சேர்த்து எழுதப்படுதல்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாய்க்கட்சி.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமிழர்களின்-பிரச்சினையை-ஜக்கிய-நாடுகள்-வரை-கொண்டு-செல்ல-சுயேற்சைக்கு-முடியுமா/73-210247

கோஷான் எழுதிய தாய்கட்சி என்ற இடையில் இடைவெளியும் இல்லாத க் உம் இல்லாத ஒரு சொல்லை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

வாத்தியாரிடம் கேள்வி கேட்டேன். அவர் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா தான் யாழுக்கு வருவார் போல. 😀

இவை சில இணையத்தளங்களில் உள்ள செய்திகளில் பார்த்தவை.

தாய் கட்சி என இடையில் இடைவெளி விட்டு எழுதப்படுதல்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டோரில், 16 பேர் தாய் கட்சி திரும்ப பச்சைக்கொடி.

https://m.dinamalar.com/detail.php?id=2037798

நாட்டில் 70-க்கும் மேற்பட்ட கட்சிகளை உருவாக்கிய தாய் கட்சி காங்கிரஸ்.

https://www.dailythanthi.com/amp/News/India/2019/05/13173225/congress-breakaways-and-how-theyve-performed-in-the.vpf

தாய்க்கட்சி என இடையில் இடைவெளி இல்லாமல் க் சேர்த்து எழுதப்படுதல்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாய்க்கட்சி.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமிழர்களின்-பிரச்சினையை-ஜக்கிய-நாடுகள்-வரை-கொண்டு-செல்ல-சுயேற்சைக்கு-முடியுமா/73-210247

கோஷான் எழுதிய தாய்கட்சி என்ற இடையில் இடைவெளியும் இல்லாத க் உம் இல்லாத ஒரு சொல்லை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

லாரா,

நீங்கள் சுட்டிய 3 தளங்களில் எழுதுபவர்களுக்கும் தமிழறிவு எங்களை விட மோசம் 😂 ஆகவே அவர்கள் எழுதுவது சரி என சொல்ல முடியாது.

இந்த இணைப்பைப் பாருங்கள். முகபுத்தகம்தான் ஆனால் தெளிவான விளக்கமாகத் தெரிகிறது.

வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்களை பற்றிய விதிகளை பார்க்கவும்.

குறிப்பாக வல்லினம் மிகா இடங்கள் - விதி/எடுத்துக்காட்டு 12.

https://m.facebook.com/notes/தமிழ்-tamil/புணர்ச்சி-விதிகள்-தமிழ்-இலக்கணம்/424480224709/ 

large.4E145826-62EF-4830-B591-8DDC3B3042BD.jpeg.cc2498fc2bb4376390e96f5e4dc2bc57.jpeg

பிகு: தமிழ் புணர்ச்சியில், சொற்கள் எப்போதும், புணர்ச்சியின் பின் சேர்த்து எழுதப்படும் என்பதும் இல்லை.

எனவே நான் நினைக்கிறேன். 

தாய்+ கட்சி = தாய் கட்சி.

தாய்க்கட்சி அல்லது தாய்கட்சி என எழுதுவது வழுவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 3:11 PM, goshan_che said:

நன்றி.

எனக்கு தெரிந்த தமிழ் புணர்ச்சி விதிகளின் படி, தாய்கட்சி என்றே வரும். 

என்னை விட பெரிய புணர்சி நிபுணர்கள் (தமிழ்புணர்ச்சியை சொன்னேன்) இங்கே இருக்கிறார்கள். பார்க்கலாம் யாராவது ஆதாரத்தோடு வருக்கிறார்களா என.

பிகு: கணணித் தமிழில் புணர்ச்சி விதிகளை கடைப்பிடிப்பது மிகவும் கடினம். குறிப்பாக, ரோமனைஸ்ட் முறையில் எழுதும் போது.

சகி + கலா = ஷக்கீலா 
என்றுதான் சேரநாட்டுப்பக்கம் வருகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

சகி + கலா = ஷக்கீலா 
என்றுதான் சேரநாட்டுப்பக்கம் வருகிறது 

 

ஏன் லேட்? 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.