Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது - மைத்திரி

Featured Replies

பத்திரிகைத் துறையில் வேலை செய்ய தமிழ் அறிவு முக்கியம். அதற்கான பயிற்சி தமிழ்பாடத்திலேயே உள்ளது. ஒரு செய்தியை எழுதி அதற்கு பொருத்தமான தலைப்பை வைப்பதற்கே புள்ளிகள் உண்டு. தலையங்கம்   செய்தியின் சாராம்சத்தை அப்படியே சொல்லும். தலைப்புக்கும் உள்ளே உள்ள செய்திக்கும் சம்பந்தமே இல்லாமலேயே தற்போதைய இணைய ஊடகங்கள் இயங்குகின்றன. பாரவையாளரை உள்ளே வரப்பண்ண வேண்டும் என்பதற்காகவே செய்திக்கு எந்த தொடர்பும் அற்ற தலையங்கங்கள் வேண்டுமென்றே கொடுக்கப்படுகின்றன.

முன்பு என்றால் ஒரு சிறந்த பத்திரிகைக்கு முன்மாதிரியாக வீரகேசரியை கூறலாம். இப்போது கழுதை  தேய்ந்து கட்டெறும்பான கதையாக வீரகேசரியும் தனது தரத்தை தானே தாழ்ததிவிட்டது.  தற்போதைய நிலையில் இலங்கை தமிழ் பத்திரிகைத் துறைக்கு வழிகாட்டியே இல்லாத நிலையை உருவாகி உள்ளது. இந்நிலையில் தொழில் சார் பத்திரிகை நிபுணத்துவத்தை தமிழர்கள்  பெற பிற மொழி பத்திரிகைகளை நாட வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

விடுதலையை வேண்டி போராடும்  ஒரு இனம் அதற்கு இன்றியமையாத பத்திரிகை நிபுணத்துவத்தையே சுயமாக பெற்றுக்கொள்ள முடியாமல் தெருவில் சுவர்களில் எழுதுவது  போல எழுதும் மூன்றாம் தர  ஊடகங்களால்  நிரம்பி வழிகிறது. 

Edited by tulpen

10 hours ago, goshan_che said:

லாரா,

நீங்கள் சுட்டிய 3 தளங்களில் எழுதுபவர்களுக்கும் தமிழறிவு எங்களை விட மோசம் 😂 ஆகவே அவர்கள் எழுதுவது சரி என சொல்ல முடியாது.

இந்த இணைப்பைப் பாருங்கள். முகபுத்தகம்தான் ஆனால் தெளிவான விளக்கமாகத் தெரிகிறது.

வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்களை பற்றிய விதிகளை பார்க்கவும்.

குறிப்பாக வல்லினம் மிகா இடங்கள் - விதி/எடுத்துக்காட்டு 12.

https://m.facebook.com/notes/தமிழ்-tamil/புணர்ச்சி-விதிகள்-தமிழ்-இலக்கணம்/424480224709/ 

large.4E145826-62EF-4830-B591-8DDC3B3042BD.jpeg.cc2498fc2bb4376390e96f5e4dc2bc57.jpeg

பிகு: தமிழ் புணர்ச்சியில், சொற்கள் எப்போதும், புணர்ச்சியின் பின் சேர்த்து எழுதப்படும் என்பதும் இல்லை.

எனவே நான் நினைக்கிறேன். 

தாய்+ கட்சி = தாய் கட்சி.

தாய்க்கட்சி அல்லது தாய்கட்சி என எழுதுவது வழுவானது.

நன்றி.

12 இல் கூறப்படுவதன் படி பொதுப்பெயர், உயர்திணைப்பெயர்கள் நிலைமொழியாக உள்ள போது வருமொழியின் முதலெழுத்து வல்லினமாக இருந்தால் அது இயல்பு புணர்ச்சி.

கண்டாள், சீறினாள் போன்றன வினைச்சொற்கள். ஆனால் ஏனையவற்றிற்கும் அதே விதிமுறையாக இருக்கலாம்.

அதன்படி தாய் + கட்சி இயல்பு புணர்ச்சி.

இவ்வாறு பார்க்கப்போனால் தாய் + பறவை இயல்பு புணர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் அது தாய்ப்பறவை என தோன்றல் விகாரமடைகிறதே.

இங்கும் ஏதும் விதிவிலக்குகள் உள்ளனவா?

A/L இல் தமிழை ஒரு பாடமாக எடுத்தவர்கள் தமிழ் இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன். என் பாடு திண்டாட்டம் தான். 😊

Edited by Lara

On 9/29/2019 at 10:58 PM, goshan_che said:

எனது தாயார், என்பதில் ஆர் விகுதியை இடைச்சொல்லாக சேர்க்கும் போது, அது இயற்பெயரை மட்டுமே குறிக்கும். அதாவது “எனது தாயார்”  (my mother) என்ற அர்தத்தை மட்டுமே தரும்.  

தாய்கட்சி என்பது பொதுப்பெயர் (இயற்பெயர் அல்ல) எனவே இங்கே தாய்கட்சி (mother-party) எனும் அர்த்தத்தில்  தாயார்கட்சி என்ற சொல்லை பாவிக்க முடியாது.

சுருங்கச் சொல்லின், அனுர, சுனேத்திரா, சந்திரிகா மட்டுமே SLFP யை “தாயார்கட்சி” எனலாம். ஏனையோர்கு அது “தாய்கட்சி” மட்டுமே.

எனது தாயார் என்பது my mother. அதை தான் எனது தாய் என எழுதியிருந்தேன். My mother என்பதை எனது தாய் எனவும் தமிழில் கூறுவதன் அடிப்படையில்.

அது போக,

தாயார் என்பதில் ஆர் விகுதியை இடைச்சொல்லாக சேர்க்கும் போது அது இயற்பெயரை மட்டும் குறிக்கும், பொதுப்பெயரை குறிக்காது என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

தாயார் என்ற சொல் லக்‌ஷ்மி (லட்சுமி) என்ற தெய்வத்தை குறிக்கும் போது அங்கு அது பொதுப்பெயராக தானே பயன்படுத்தப்படுகிறது. 😊

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Lara said:

நன்றி.

12 இல் கூறப்படுவதன் படி பொதுப்பெயர், உயர்திணைப்பெயர்கள் நிலைமொழியாக உள்ள போது வருமொழியின் முதலெழுத்து வல்லினமாக இருந்தால் அது இயல்பு புணர்ச்சி.

கண்டாள், சீறினாள் போன்றன வினைச்சொற்கள். ஆனால் ஏனையவற்றிற்கும் அதே விதிமுறையாக இருக்கலாம்.

அதன்படி தாய் + கட்சி இயல்பு புணர்ச்சி.

இவ்வாறு பார்க்கப்போனால் தாய் + பறவை இயல்பு புணர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் அது தாய்ப்பறவை என தோன்றல் விகாரமடைகிறதே.

இங்கும் ஏதும் விதிவிலக்குகள் உள்ளனவா?

A/L இல் தமிழை ஒரு பாடமாக எடுத்தவர்கள் தமிழ் இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன். என் பாடு திண்டாட்டம் தான். 😊

எனக்கும் இதில் பெரிய அறிவு இல்லை. ஓஎல் தமிழ்தான்( D👳‍♂️😂). பிறகு மேம்போக்கான நுனிப்புல்.

ஆனால் “குழப்பம், விளக்கம் தரலால், குழப்பம் உயிரிலும் ஓம்பப்படும்” எனும் லொள்ளுவதில் நம்பிக்கை இருக்கிறது.

பார்க்கலாம் யாராவது வந்து கேள்விக்கு-அப்பாலான விளக்கம் தருவார்களா?

1 hour ago, tulpen said:

பத்திரிகைத் துறையில் வேலை செய்ய தமிழ் அறிவு முக்கியம். அதற்கான பயிற்சி தமிழ்பாடத்திலேயே உள்ளது. ஒரு செய்தியை எழுதி அதற்கு பொருத்தமான தலைப்பை வைப்பதற்கே புள்ளிகள் உண்டு. தலையங்கம்   செய்தியின் சாராம்சத்தை அப்படியே சொல்லும். தலைப்புக்கும் உள்ளே உள்ள செய்திக்கும் சம்பந்தமே இல்லாமலேயே தற்போதைய இணைய ஊடகங்கள் இயங்குகின்றன. பாரவையாளரை உள்ளே வரப்பண்ண வேண்டும் என்பதற்காகவே செய்திக்கு எந்த தொடர்பும் அற்ற தலையங்கங்கள் வேண்டுமென்றே கொடுக்கப்படுகின்றன.

முன்பு என்றால் ஒரு சிறந்த பத்திரிகைக்கு முன்மாதிரியாக வீரகேசரியை கூறலாம். இப்போது கழுதை  தேய்ந்து கட்டெறும்பான கதையாக வீரகேசரியும் தனது தரத்தை தானே தாழ்ததிவிட்டது.  தற்போதைய நிலையில் இலங்கை தமிழ் பத்திரிகைத் துறைக்கு வழிகாட்டியே இல்லாத நிலையை உருவாகி உள்ளது. இந்நிலையில் தொழில் சார் பத்திரிகை நிபுணத்துவத்தை தமிழர்கள்  பெற பிற மொழி பத்திரிகைகளை நாட வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

விடுதலையை வேண்டி போராடும்  ஒரு இனம் அதற்கு இன்றியமையாத பத்திரிகை நிபுணத்துவத்தையே சுயமாக பெற்றுக்கொள்ள முடியாமல் தெருவில் சுவர்களில் எழுதுவது  போல எழுதும் மூன்றாம் தர  ஊடகங்களால்  நிரம்பி வழிகிறது. 

நாய் பார்க்கும் வேலையை குதிரை பார்ப்பதில் நம்மை அடிக்க ஆளில்லை. பெரும்பாலான ஊடகவியளார்கள், ஊடகவியலில் ஒரு டிப்ளோமா கற்கை கூட செய்யாதவர்கள். மிகச் சிலரே தமிழை ஓஎல் தாண்டி முறையாக கற்றவர்கள். ஊடகவியலும் தெரியாமல், தமிழும் தெரியாமல் - ஊடகவியலாளர் ஆகி, நம்மை சாவடிகிறார்கள்😂.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 4:48 PM, பிழம்பு said:

அதன் போது பரந்துபட்ட கூட்டணியாக கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் என்றாலும், கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுத்து ஆதரவளிக்க தயாரில்லை என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு எழுத்துப்பிழையை வைத்து திரியை நல்லாத்தான் ஓட்டுகின்றார்கள்🥵

  • கருத்துக்கள உறவுகள்

 

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார்; கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது - மைத்திரி

https://www.virakesari.lk/article/65845

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 4:58 PM, goshan_che said:

இல்லை மீரா,

எனது தாயார், என்பதில் ஆர் விகுதியை இடைச்சொல்லாக சேர்க்கும் போது, அது இயற்பெயரை மட்டுமே குறிக்கும். அதாவது “எனது தாயார்”  (my mother) என்ற அர்தத்தை மட்டுமே தரும்.  

தாய்கட்சி என்பது பொதுப்பெயர் (இயற்பெயர் அல்ல) எனவே இங்கே தாய்கட்சி (mother-party) எனும் அர்த்தத்தில்  தாயார்கட்சி என்ற சொல்லை பாவிக்க முடியாது.

சுருங்கச் சொல்லின், அனுர, சுனேத்திரா, சந்திரிகா மட்டுமே SLFP யை “தாயார்கட்சி” எனலாம். ஏனையோர்கு அது “தாய்கட்சி” மட்டுமே.

Lara became Meera 😮 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஒரு எழுத்துப்பிழையை வைத்து திரியை நல்லாத்தான் ஓட்டுகின்றார்கள்🥵

விடுங்க ஜி, 

அட்லீஸ் வெட்டி ஒட்டி பக்கத்தை நிரப்பேல்ல எண்டு சந்தோசப் படுங்க 🤪

50 minutes ago, Sasi_varnam said:

Lara became Meera 😮 

காக்கா,

இந்த கேஸ் ஓடி முடிஞ்சி. நீங்க இப்ப வந்து பாத்திமா அலிக்கி என்ன மொறன்னு கேக்க வாணாம்😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.