Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவா, சஜித்தா? – சனியன்று சுதந்திரக் கட்சி முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவா,  சஜித்தா? – சனியன்று சுதந்திரக் கட்சி முடிவு

கி.தவசீலன்Oct 02, 2019 | 5:01
by in செய்திகள்

Dayasiri-Jayasekara-300x200.jpg

வரும் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து, சனிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணியை அமைப்பது குறித்த பேச்சுக்கள் வரும் 5ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் விடுத்த அழைப்பை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கடந்த திங்கட்கிழமை கூடி, பரிசீலித்தது.

சனிக்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் பொதுஜன  பெரமுனவிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காவிடின், ஐதேகவிடம் இருந்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பை பரிசீலிப்பதை விட எமக்கு வேறு தெரிவு இல்லை.

சனிக்கிழமைக்கு முன்னர் சாதகமான பதில் கிடைக்கும் என்றும், பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியம் உள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம்.

பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஒரு தம்மால் பெரும்பான்மையை அல்லது, 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற  முடியும் என்று கற்பனையில் மிதக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் முக்கியமானதாக இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

 

http://www.puthinappalakai.net/2019/10/02/news/40307

 

சிறுபான்மை மக்கள் அவர்களின் கட்சிகள் போன்று பெரும்பான்மை மக்களின் முக்கிய, முன்னர் ஆண்ட கட்சியும் இந்த நிலைக்குள் வந்துள்ளது. 

"50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் முக்கியமானதாக இருக்கும்”

சுதந்திர கட்சி தனது இறுதி அத்தியாத்திக்குள் நுழைந்து விட்டது.  

On 10/2/2019 at 8:33 AM, கிருபன் said:

சனிக்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் பொதுஜன  பெரமுனவிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காவிடின், ஐதேகவிடம் இருந்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பை பரிசீலிப்பதை விட எமக்கு வேறு தெரிவு இல்லை.

சனிக்கிழமையும் மொட்டு சின்னத்தை வைத்து பிரச்சினைப்படப் போகிறார்கள். 😀

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவிற்கு ஆதரவளிக்க சுதந்திரக்கட்சி முடிவு...

மைத்திரி எந்த வேட்பாளருக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலை வகிக்கவுள்ளார் என தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

ரோகண லக்ஸ்மன் பியதாச SLFP இன் acting Chairman ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, சுதந்திரக்கட்சி தனது ஆதரவை பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்குவதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Lara said:

சுதந்திரக்கட்சி தனது ஆதரவை பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்குவதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

 

52 minutes ago, Lara said:

மைத்திரி எந்த வேட்பாளருக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலை வகிக்கவுள்ளார்

மைத்திரியும் ஆதரவு, மைத்திரி சொல்லாமல், கட்சி சொல்கிறது.

கோத்தா அதிபர் எனபது ஏறத்தாழ உறுதி, இல்லையா?

 

 

 

12 minutes ago, Kadancha said:

மைத்திரியும் ஆதரவு, மைத்திரி சொல்லாமல், கட்சி சொல்கிறது.

மைத்திரி மறைமுகமாக ஆதரவு என்றே நினைக்கிறேன். வெளிப்படையாக ஆதரவில்லை.

அதற்காக தான் தேர்தல் முடியும் வரைக்கும் என ரோகண லக்ஸ்மன் பியதாச SLFP இன் acting Chairman ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

37 minutes ago, Kadancha said:

கோத்தா அதிபர் எனபது ஏறத்தாழ உறுதி, இல்லையா?

இத்தேர்தலில் கோத்தா வெல்வார் என்று தான் நான் “வெல்லப்போவது யார்” திரியில் முன்னர் எழுதியிருந்தேன்.

கூட்டமைப்பு தனது முடிவை இன்னும் கூறவில்லை. 

யாரும் 50% வாக்குகளுக்கு மேல் பெறாவிட்டால் கூடிய வாக்குகளை பெற்ற முதல் இரு வேட்பாளர்களை தவிர ஏனையோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளில் இரண்டாம் விருப்பத்தெரிவில் இவ் இரு வேட்பாளர்களில் ஒருவர் பெயர் இருந்தால் அதை சேர்ப்பார்கள், இரண்டாம் விருப்ப தெரிவில் நீக்கப்பட்ட வேறு யாரினதும் பெயரை ஏதும் வாக்காளர்கள் இட்டிருந்தால் அவர்களது மூன்றாம் விருப்ப தெரிவில் இவ்விரு வேட்பாளர்களில் ஒருவரின் பெயர் இருந்தால் அதை சேர்ப்பார்கள். அதன் மூலம் இறுதி முடிவெடுக்கப்படும்.

அநுர தனக்கு வாக்களிப்போரை இரண்டாம் விருப்ப தெரிவை சஜித்துக்கு இடுமாறு கூறியதாக கேள்வி.

எனவே முதலாம் சுற்றிலேயே கோத்தா 50% இற்கு மேல் வாக்குகளை பெறும் நிலை இருந்தால் வெற்றி இலகு. இரண்டாம் சுற்றுக்கு சென்றால் கடினம் என நினைக்கிறேன்.

2 hours ago, Lara said:

மைத்திரி மறைமுகமாக ஆதரவு என்றே நினைக்கிறேன். வெளிப்படையாக ஆதரவில்லை.

அதற்காக தான் தேர்தல் முடியும் வரைக்கும் என ரோகண லக்ஸ்மன் பியதாச SLFP இன் acting Chairman ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலதிக தகவல்களை இத்திரியில் வாசிக்கலாம்.

https://yarl.com/forum3/topic/232798-அதிபர்-தேர்தலில்-நடுநிலை-வகிக்க-மைத்திரி-முடிவு/

 

சுதந்திரக்கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2 hours ago, Lara said:

சுதந்திரக்கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சி வெளிப்படையாக ஐ.தே.க. வை ஆதரிக்க முடியாது. காரணம், அவர்களின் எதிரியாகவே அவர்கள் வளர்ந்தவர்கள். எனவே, இந்த தேர்தலில் அவர்கள் மகிந்த அண்ட் கோவை ஆதரிப்பது மூலம் மட்டுமே தமது இருப்பை கொஞ்சமேனும் தக்கவைக்கலாம். ஆகவே, இது எதிர்பார்த்த முடிவாக உள்ளது. 

ஆனால், சில சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தம்மிடம் இருந்து பிரிந்த மகிந்தாவை ஆதரிக்க முடியாத நிலையில் சஜித்திருக்கு (ஐ.தே.க.) ஆதரவை வழங்குவர். இதனால், இவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படலாம். 

எதுவாயினும், மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சியின் எதிர்காலம் கேள்விகுறியே. அவர்களின் முக்கிய வெளிவிவகார கொள்கையாக இருந்த 'அணிசேரா கொள்கையும்' முடிந்தே விட்டது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.